Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பெரிய ஆலிம் அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ்

பெரிய ஆலிம் அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ்

பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ்

பேணுதல் மிகுந்த வலிய்யுல்லாஹ்

அரிய ஆலிம் பரம்பரையில்

அவனியில் தோன்றிய வலிய்யுல்லாஹ்

நாகூர் ஆலிம் பரம்பரையில்

அலியார் ஆலிம் புத்திரராய்

அப்துல் ஜவாத் வலீ ஆலிமென

அழைக்கும் பெரிய வலிய்யுல்லாஹ்

காத்த நகரின் வலிய்யுல்லாஹ்

கல்விக் களஞ்சிய வலிய்யுல்லாஹ்

ஏத்தமாய் எமக்கு இறை கூடம்

என்றும் அருளிய வலிய்யுல்லாஹ்

அஹ்மத் மீரான் வலிய்யுல்லாஹ்

திருக் கரம் பற்றிய வலிய்யுல்லாஹ்

அஹதை அறிந்து அவன் வழியில்

அவனியில் நடந்த வலிய்யுல்லாஹ்

ஹக்கன் காட்சி தினம் கண்டு

ஹக்கில் லயித்த வலிய்யுல்லாஹ்

ஹக்கும் கல்கும் எதுவென்று

காட்டித் தந்த வலிய்யுல்லாஹ்

குல்லிய்யஹ் அறபுக் கலாபீடம்

குவலயம் தந்த வலிய்யுல்லாஹ்

பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ் மஸ்ஜிதையும்

பாருக்களித்த வலிய்யுல்லாஹ்

றமழான் மாதம் முழுவதுமே

நல்லுரை சொல்லிய வலிய்யுல்லாஹ்

றமழான் நோன்பை பக்குவமாய்

காத்து நோற்ற வலிய்யுல்லாஹ்

குணிந்த பார்வை நிமிராது

குதி நிதி பாத அணியோடு

மெதுவாய் நடக்கும் வலிய்யுல்லாஹ்

மேன்மை தங்கிய வலிய்யுல்லாஹ்

வௌ்ளைக் கோட்டுச் சாரனுடன்

பெனியன் சால்வை தொப்பியுடன்

அள்ளிடும் வௌ்ளை தாடியுடன்

அழகாய் ஒளிர்ந்த வலிய்யுல்லாஹ்

கையை பின்னால் கட்டியவர்

காலை மெதுவாய் தூக்கி வைப்பார்

கையை காலை கண்களையும்

ஹக்காய் செலுத்திய வலிய்யுல்லாஹ்

ஸபர் மாதம் முழுவதுமே

சங்கை நபிகள் பெயராலே

வித்ரிய்யஹ் ஓதிய வலிய்யுல்லாஹ்

விரிகடல் ஞான வலிய்யுல்லாஹ்

ஸபர் மாதக் கடைசிப் புதன்

சாந்தம் பெறவே மக்களுக்கு

அஸ்மா இஸ்மை எழுதி நிதம்

அன்பாய் வழங்கிய வலிய்யுல்லாஹ்

றபிஉனில் அவ்வல் வசந்தத்தில்

வசந்தம் பொங்கும் மௌலீதை

நாளும் ஓதி முடிவினிலே

நல் கந்தூரி கொடுத்த வலிய்யுல்லாஹ்

வாரந் தோறும் சனி காலை

வள்ளலிறசூல் புகழ் மாலை

வழங்கும் புர்தஹ் ஷரீபதனை

வழக்கமாய் ஓதிய வலிய்யுல்லாஹ்

வள்ளலிறசூல் பெயராலே

ஓதிய புர்தஹ் ஷரீபுக்கு

பறகத் வேண்டி கந்தூரி

பதமாய் கொடுத்த வலிய்யுல்லாஹ்

அப்துர் றஊப் எனும் அரும் வலீயை

அவனிக்கீந்த வலிய்யுல்லாஹ்

அப்தாய் இருந்து அஹதவனில்

அடங்கிய மாபெரும் வலிய்யுல்லாஹ்

தன்னை ஹக்கில் பனாவாக்கி

தத்துவம் சொல்லி மக்களுக்கு

தன்னை ஒழித்து வாழ்ந்த மகான்

தன்னிகரில்லா வலிய்யுல்லாஹ்

ஹக்கைப் பயந்து நடந்தார்க்கு

இரண்டு சொர்க்கம் உண்டென்று

இனிதாய் உரைத்து வாழ்ந்த மகான்

பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ்

சாந்தம் அளிக்கும் கபுறறைக்கு

பதிலாய் பெறுமதிக் காணியொன்றை

பள்ளியின் பெயரில் எழுத வைத்து

பள்ளி கொண்ட வலிய்யுல்லாஹ் –

– பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ்

சொல்லும் செயலும் ஒன்றாக

சொர்க்கம் இரண்டைப் பெறுவதற்கு

அல்லும் பகலும் இறை திக்ரை

அயராதுரைத்த வலிய்யுல்லாஹ்

வலிமன் காப மகாம றப்பிஹீ ஜன்னதான்

வசனம் கேட்டதும் தானடங்கி

கண்களை மூடிய வலிய்யுல்லாஹ்

காமிலாம் நாயகம் வலிய்யுல்லாஹ்

ஷவ்வால் மாதம் பதினைந்தில்

மறுமையை நோக்கிய வலிய்யுல்லாஹ்

மறைந்தும் மறையாப் பேரொளியாம்

மண்ணில் ஒளிரும் வலிய்யுல்லாஹ்

ஆக்கம்

A.L.A ஜப்பார் (G.S.O.)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments