Thursday, April 18, 2024
Homeநிகழ்வுகள்27வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

27வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 26.01.2018 தொடக்கம் 28.01.2018 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ  KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. Hons அன்னவர்களினது சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று துஆ ஸலவாதுடன் 1ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

2ம் நாள் நிகழ்வி்ல் பி.ப 5.00 மணிக்கு ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லி்தும், மஃரிப் தொழுகையின் பின் தலைபாதிஹா மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MTF.ஸுஹ்தீ றப்பானீ,மிஸ்பாஹீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று துஆ ஸலவாதுடன் 2ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இறுதித் தினமான 3ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆன்மீக சொற்பொழிவும், இறைஞான கீதமும் பாடப்பட்டு இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

விஷேட நிகழ்வாக 05.02.2017 அன்று காதிரிய்யஹ் திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 74வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கின்ற அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வுக்கான” விஷேட அலுவலகம் சங்கைக்குரிய மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments