Thursday, March 28, 2024
Homeநிகழ்வுகள்ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ”நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை”...

ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ”நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வின் தொகுப்பு

அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 73வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2017 ஞாயிற்றுக்கிமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் கௌரவிப்பு நிகழ்வும், அகீததுஸ் ஷூபிய்யஹ் குழுமத்தினால் சகோதரர் MIM. ஜெம்ஸித் (Dip.in NW Eng.) அவர்கள் எழுதிய “மிப்தாஹுல் ஜன்னஹ்-சுவனத்தின் திறவுகோல்” நூல் வெளியீடும், சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. Hons.  அவர்கள் ஆற்றிய உரைகள் அடங்கிய இறுவெட்டு வெளியீடு நிகழ்வும் நடைபெற்றது.

இஷா தொழுகையின் பின் இந்நாளி்ன் கதாநாயகர் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களினால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிஹாம் குழுவினரால் வாழ்த்துப்பாடல் மஜ்லிஸும், காதிரிய்யஹ் திருச்சபையின் செயலாளர் அவர்களினால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடனும், நீடிய ஆயுளுடனும் நலமாக வாழ மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ அவர்களினால் துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு, இந்நிகழ்வுக்காக வருகை தந்திருந்த சுமார் 3000த்திற்கும் அதிகமான மக்களுக்கு சோறும்,கறியும் வழங்கப்பட்டு, இனிதே ஸலாவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments