Friday, April 19, 2024

வஹ்ஹாபிசம்

(سيماهم التحليق)
وكثير من أحاديث النبي صلّى الله عليه وسلّم فيها التّصريح بهذه الفتنة. (فتنة الوهّابية) كقوله صلى الله عليه وسلّم “يخرج اُناس من قبل المشرق يقرئون القرآن لايجاوز تراقيهم يمرقون من الدّين كما يمرق السّهم من الرّميّة سيماهم التّحليق” وهذا الحديث جاء بروايات كثيرة. بعضها في صحيح البخاري وبعضها في غيره. لاحاجة لنا إلى الإطالة بنقل تلك الرّوايات ولالذكر من خرّجها. لأنّها صحيحة مشهورة. ففي قوله سيماهم التّحليق تصريح بهذه الطائفة. لأنّهم كانو يأمرون كلّ من اتّبعهم أن يحلق رأسه. ولم يكن هذا الوصف لأحد من طوائف الخوارج والمبتدعة الذين كانوا قبل زمن هؤلاء. 
(சிரைத்தல் அவர்களின் சின்னம்)
பெருமானார் (ஸல்) அவர்களின் அருள் மொழிகளிற்பல வஹ்ஹாபிஸக் குழப்பத்தை தெளிவாக கூறுகின்றன.

“திரு மதீனாவின் கிழக்குப் பக்கத்திலிருந்து சிலர் வெளியாகுவார்கள். அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவார்கள். அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லில் இருந்து அம்பு வெளியேறுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். அவர்களின் அடையாளம் சிரைத்தல் என்று நபீ (ஸல்) அவர்கள் நவின்றார்கள். 
இந்த நபீ மொழி அதிகமான அறிவிப்புக்களில் வந்துள்ளன. சில அறிவிப்புக்கள் “ஸஹீஹுல் புகாரீ” என்ற நூலிலும், இன்னும் சில வேறு நூல்களிலும் வந்துள்ளன. அவற்றை முழுமையாக எழுதியும் அரிவிப்பாளர்களைக் கூறியும் விரிவாக்கத் தேவையில்லை. ஏனெனில் இந்த நபீ மொழி மிகப் பிரசித்தி பெற்றதும், பலம் கூடியதுமாகும். 
அவர்களின் அடையாளம் சிரைத்தல் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இந்த வஹ்ஹாபிகளையே திட்டவட்டமாக குறிக்கின்றது. 
எனெனில் வஹ்ஹாபிகள் தம்மை பின்பற்றுவோருக்கு தலைமுடியை சிரைத்துவிடுமாறு பணிப்பார்கள். இவர்களுக்கு முன்தோன்றிய எந்த ஒரு வழி கெட்ட கூட்டத்தவர்களும் தலைமுடியை சிரைப்பதை தமது அடையாளமாகக் கொண்டிருக்கவில்லை.
ஆதாரம்:- பித்னதுல் வஹ்ஹாபிய்யா.
ஆசிரியர்:- இமாம் அஸ் ஸெய்யித் அஹ்மத் இப்னு ஸெய்னீ தஹ்லான்.
பக்கம்:- 76
குறிப்பு:- தர்போதுள்ள கொம்பியூட்டர் வஹ்ஹாபிகள் தமது மீசையை சிரைத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிட்த்தக்கது. 
قَصُّ الشَّارِبْ மீசையை கத்தரி கொண்டு கத்தரிப்பதுதான் நபீ வழியே தவிர அதை “ஹல்கு” முழுமையாக சிரைப்பது நபி வழியல்ல.
தாடி வைப்பது நபீ வழியாக இருப்பது போல மீசை வைப்பதும் நபீ வழிதான்.
வஹ்ஹாபிகளுக்கு நபீ வழி தேவை இல்லை. இப்னு அப்தில் வஹ்ஹாபின் வழிதான் நல்வழியாம். ஸுப்ஹானல்லாஹ்! உலகம் போற போக்க பாரு……
(தொடரும்)

***==***==***==***

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments