Thursday, April 25, 2024
Homeநிகழ்வுகள்14வது வருட முஹ்யித்தீன் இப்னு றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

14வது வருட முஹ்யித்தீன் இப்னு றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூருல் அப்ஹர், அல்கிப்ரீதுல் அஹ்மர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 07.02.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பி.ப 05:00 மணியளவில் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும்  இஷா தொழுகையின் பின் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ், தொடர்ந்து அன்னாரின் சிறப்புக்களை எடுத்துரைத்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் உரையாற்றினார்கள். இறுதியில் துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் செய்யப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
– அல்ஹம்துலில்லாஹ் –

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments