Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 13

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருட்கரங்கள் கொண்டு அருள் பெறுதல்

அண்ணலெம் பெருமானின் உமிழ் நீர் கொண்டு மாத்திரமல்ல அவர்களின் கரங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் தலையில் தடவினார்கள். மேற்சொல்லப்பட்ட ஹதீஸ் அதற்கு சான்றாகும்.
عَنْ عِكْرِمَةَ
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا مَسَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ رَأْسِيْ وَدَعَالِيْ بِالْحِكْمَةِ.
அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறியதாக இக்ரிமா றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறினார்கள்.
நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனது தலையைத் தடவி, தத்துவம் கொண்டு எனக்குப் பிராத்தித்தார்கள்.
ஸியறு அஃலாமின் நுபலா
பக்கம் – 1083
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவர்களின் தலையில் தடவினார்களெனில் அது ஒரு வீணான செயலல்ல. மாறாக தத்துவ மிக்க செயல். அவர்களின் கரங்கள் சாதாரணமானவையல்ல. ஆன்மீக மணம் கொண்டவை. தெய்வீக சக்தி வாய்ந்தவை. தனதருள் தனது தோழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற அண்ணலின் பெருந்தன்மை. தனதருளை பல வழிகளிலும் தனது தோழர்களுக்கு அள்ளி வழங்கினார்கள். காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்களின் தலையில் தடவியது போன்று அவர்களின் அருட் கரங்களை அவர்களின் நெஞ்சிலும் வைத்தார்கள். அதனருளையும் பெற்றார்கள் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள்.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ
اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَدَهُ
عَلَى صَدْرِهِ. فَوَجَدَ عَبْدُ اللهِ بَرْدَهَا فِى صَدْرِهِ. ثُمَّ قَالَ  اَلَّلهُمَّ احْشُ جَوْفَهُ عِلْمًا وَحِلْمًا.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் கையை தனது நெஞ்சின் மீது வைத்ததாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறினார்கள். அதன் குளிரை அப்துல்லாஹ் அவர்கள் தங்களின் நெஞ்சில் பெற்றுக் கொண்டார்கள். பின்பு “இறைவா! இவரினுள்ளே கல்வியையும், பொறுமையையும் நிரப்புவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.
மஜ்மஉஸ்
ஸவாயித் – 15517
عَنْ مَيْمُوْنِ بْنِ مِهْرَانْ عَنْ عَبْدِ
اللهِ بْنِ الْعَبَّاسِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِ عَبْدِ اللهِ بْنِ الْعَبَّاسِ رَضِيَ
اللهُ عَنْهُ. فَقَالَ اَلَّلهُمَّ أَعْطِهِ الْحِكْمَةَ وَعَلِّمْهُ التّأْوِيْلَ
وَوَضَعَ يَدَهُ عَلَى صَدْرِهِ. فَوَجَدَ عَبْدُ اللهِ بْنُ الْعَبَّاسِ رَضِيَ
اللهُ عَنْهُ بَرْدَهَا فِيْ ظَهْرِهِ. ثُمَّ قَالَ اَللَّهُمَّ احْشُ جَوْفَهُ حُكْمًا
وَعِلْمًا.
அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக மைமூன் இப்னு மிஹ்றான் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி 
வஸல்லம் அன்னவர்கள் தங்களின் கரத்தை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தலை மீது வைத்து “இறைவா இவருக்கு தத்துவத்தைக் கொடுப்பாயாக. இன்னும் இவருக்கு வலிந்துரையையும் கற்றுக் கொடுப்பாயாக.” என்று கூறினார்கள். இன்னும் அவர்களின் கரத்தை அவரின் நெஞ்சின் மீது வைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அதன் குளிரை அவர்களின் முதுகில் பெற்றுக் கொண்டார்கள். பின்பு “இறைவா இவரினுள்ளே சட்டத்தையும், கல்வியையும் நிரப்புவாயாக என்று சொன்னார்கள்.”
அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ 10585
ஹில்யதுல் அவ்லியா 1119
மேற் கூறப்பட்டவற்றின் மூலம் அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தலையிலும், நெஞ்சிலும் அவர்களின் அருட்கரங்களை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அருள் நபீயின் அருட் கரங்களின் குளிரை தங்களில் பெற்றார்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் நெஞ்சில் தனது கையை வைக்கும் போது அக்கரத்தின் குளிரை நெஞ்சில் அல்லது முதுகில் உணர முடியாது. அருள் நபீயல்லவா அண்ணலவர்கள். அவர்கள் எங்களைப் போன்ற சாதாரணமானவர்களல்லர். அவர்கள் இறையொளியின் வெளிப்பாடு அவர்களைப் போன்ற ஒருவரை இறைவன் வெளிப்படுத்தவுமில்லை, வெளிப்படுத்தப் போவதுமில்லை. அண்ணலின் அருள் பெற்ற ஸஹாபஹ் –தோழர்கள் பாக்கியவான்கள்.
அண்ணலெம் பெருமானின் உமழ் நீரின், கரங்களின் அருளைப் பெற்றது போல் அண்ணலின் பிரார்த்தனையின் அருளையும் பெற்றார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
وَعَنِ ابْنَ عَبَّاسٍ
رَضِيَ اللهُ عَنْهُمَا َدعَالِيْ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاْلحِكْمَةِ
مَرَّتَيْنِ.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தத்துவம் கொண்டு இரண்டு தடவைகள் எனக்குப் பிரார்த்தனை செய்தார்கள். என இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறினார்கள்.
ஸியறு
அஃலாமின் நுபலா – பக்கம் – 1084
عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنِ بْنِ عَبَّاسٍ
رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَ كُنْتُ فِيْ بَيْتِ مَيْمُوْنَةَ بِنْتِ الْحَارِثِ رَضِيَ
اللهُ عَنْهَا. فَوَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوْءً.
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وَضَعَ هَذَا؟ فَقَالَتْ
مَيْمُوْنَةُ وَضَعَهُ عَبْدُ اللهِ. فَقَالَ اَللَّهُمَّ عَلِّمْهُ التَّأْوِيْلَ
وَفَقِّهْهُ فِى الدِّيْنِ.
இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறியதாக ஸயீதுப்னு ஜுபைர் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் ஹாரிதுடைய மகள் மைமூனா றழியல்லாஹூ தஆலா அன்ஹா அன்னவர்களின் வீட்டிலிருந்தேன். அப்பொழுது நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வுழூச் செய்வதற்காக நீரை வைத்தேன். அப்பொழுது நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதை வைத்தது யார்? எனக் கேட்டார்கள். 
அப்துல்லாஹ்தான் இதை வைத்தார் என மைமூனா றழியல்லாஹ் தஆலா அன்ஹா அன்னவர்கள் கூறினார்கள். அப்பொழுது நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “இறைவா! இவருக்கு வலிந்துரையைக் கற்றுக்கொடுப்பாயாக
மார்க்கத்தில் இவருக்கு விளக்கத்தை ஏற்படுத்துவாயாக” எனப்
பிரார்த்தனை செய்தார்கள்.
அல்
முஃஜமுல் கபீர் லித்தபராணீ – 10587
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ وَضَعْتُ
لِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوْءً فَقَالَ اَللَّهُمَّ فَقِّهْهُ
فِى الدِّيْنِ وَعَلِّمْهُ التَّأْوِيْلَ.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு வுழூச் செய்வதற்கு நீரை வைத்தேன். அப்பொழுது அவர்கள் இறைவா! இவருக்கு மார்க்கத்தில்
விளக்கத்தை ஏற்படுத்துவாயாக. இன்னும் இவருக்கு வலிந்துரையையும்
கற்றுக்கொடுப்பாயாக என்று பிரார்தனை செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.
ஸியறு அஃலாமின் நுபலா – பக்கம் – 1084
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் உமிழ்நீரின் அருளை, கரங்களின் அருளை பிரார்த்தனையின் அருளைப் பெற்ற ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் அதன் பலனை தங்கள் வாழ்வில் பெற்றார்கள். இவர்கள் மீது நேசம் கொண்ட அண்ணலவர்கள் தங்களுடன் அவர்களையணைத்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அதனருளையும் பெற்றார்கள். இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள்.
عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللهُ عَنْهُمْ قَالَ ضَمِّنِيْ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ
فَقَالَ اَللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ.
நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் 
தங்களளவில் என்னை அனணத்து, இறைவா! இவருக்கு தத்துவத்தைக் கற்றுக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக இக்ரிமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்முஃஜமுல் கபீர் லித்தபரானீ – 10588
ஸுனனுத் திர்மிதீ – 3824
ஹில்யதுல் அவ்லியா – 1113
عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللهُ عَنْهُمْ قَالَ ضَمِّنِيْ النَّبِيُّ صَلًّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى
صَدْرِهِ  وَقَالَ  اَللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ.
நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் நெஞ்சுடன் என்னை அனணத்து, இறைவா! இவருக்கு தத்துவத்தைக் கற்றுக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள். என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக இக்ரிமா றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹுல்
புஹாரீ – 3756
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மூலம் பல வகைகளில் அருள் பெற்ற ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவுக்கடலாக விளங்கினார்கள். அண்ணலெம் பெருமானின் அருள் அவர்களில் பிரதிபலித்தது. அல்குர்ஆனுக்கு விளக்கமெழுதும் தகுதியைப் பெற்றார்கள். நபித்தோழர்கள் மத்தியில் அவர்களுக்கு தனிச் சிறப்பிருந்தது. அவர்களை ஸஹாபஹ் – தோழர்கள் கண்ணியம் செய்தார்கள்.
இவர்கள் பற்றி ஸெய்யிதுனா அமீறுல் முஃமினீன் உமர் இப்னுல் ஹத்தாப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறும் போது “அல்குர்ஆனின் மொழி பெயர்ப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் சிறந்தவராகி விட்டார்.” என்று கூறுவார்கள். ஸுறதுன் நஸ்ரில் வந்த ஓர் ஆயத்துக்கு ஸஹாபஹ்களிடம் விளக்கம் கேட்டார்கள் ஸெய்யிதுனா உமர் இப்னுல் ஹத்தாப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். அவர்களில் சிலர் அதற்கு பதிலளித்தனர் சிலர் மௌனமாயிருந்தனர். ஆனால் அந்த பதில்கள் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அதன் பின்னர் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்னவர்களிடம் அது பற்றி வினவினார்கள். அவர்கள் அளித்த பதில் அவர்களுக்கு திருப்தியைக் கொடுத்த்து.
தொடரும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments