Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திருமுடிகள் தரிசனம்

திருமுடிகள் தரிசனம்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

பெருமானாரின் புனித திரு முடியையும்
குத்பு நாயகத்தின் புனித திரு முடியையும்
பார்வையிட்டு அருள் கோடிபெறும் இனிய நிகழ்வு

பெருமானார் “மழ்ஹறுல் அதம்” முஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மிகு திரு முடியையும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்றுஹு)அவர்களின் திரு முடியையும் பார்வையிட்டு அருள் பெறும் புனித நிகழ்வு இன்ஷா அல்லாஹ் பின்வரும் விபரப்படி நடைபெற இருக்கி்ன்றது.

இடம் : 
சுன்னத் வல் ஜமாஅதின் ஸூபிஸ தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
காத்தான்குடி-05
காலம் : 
06.02.2015 வெள்ளிக்கிழமை

ஆண்கள் தரிசனம் : காலை 05:30 – காலை 07:00 வரை
                           பி.ப 01:00 – பி.ப 04.30 வரை
பெண்கள் தரிசனம் : காலை 07:00 – மு.ப 11:30 வரை

திருமுடிகளைப் பார்வையிட வருவோர் கடைப்பிடிக்க வேண்டியவை :

  • . வுழூவுடன் சமுகமளித்தல்
  • . மண்டபத்தில் நுழைகையில் அதிகமாக ஸலவாத் ஓதுதல்
  • . தலை மறைத்து நுழைதல்
  • . அனைவரும் அமைதியைப் பேணி நடத்தல்
  • . பணிகளில் ஈடுபடுவோர் சைக்கினை மூலம் செயற்படல்
  • . இந்நிகழ்வு ஜும்அஹ் தினத்தில் நிகழ்வதால் குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்திற்கு முடிவடையும்.

“சுப்ஹ்” தொழுகைக்கே இங்கு சமுகமளித்து வாழ்வில் காண்பதற்கரிய இச்சந்தர்ப்பத்தை தவறாது பயன்படுத்தி பேரருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வஸ்ஸலாம்
அனைவரும் அணி திரள்க!
அருள் கோடி பெறுக!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments