தொகுப்பு – சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons.) அவர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
கலிமா வசனத்தில் அதன் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் தத்துவச்செழுமையுடன் அல்லாஹ் தஆலா அமைத்து வைத்துள்ளான்.
ஆனால் கலிமாவில் வந்துள்ள “இலாஹுன்” என்ற இஸ்முல் ஜின்ஸ் (General Noun- பொதுச்சொல்) சுட்டிக்காட்டுவது உண்மையான வணக்கத்துக்குரிய ஒருவனை மாத்திரம்தான் என சிலர் மட்டிட்டு அர்த்தம் கற்பிக்கின்றனர். அது மிகத்தவறாகும்.
யதார்த்தத்தில் வணக்கத்திற்கு தகுதியான ஒருவனான அல்லாஹ்தான் உண்மையான இலாஹு ஆவான். மனிதர்களால் வணங்கப்படக்கூடிய ஏனையவை உண்மையான இலாஹ் அல்ல. இருப்பினும் அல்லாஹ்வை தவிர்த்து ஏனைய வணங்கப்படக்கூடியவை அதனை வணங்குபவர்கள் மத்தியில் இலாஹ் என்றே பெயர் பெறுகிறது.
யதார்த்தமான அடிப்படையில் தன்னை இலாஹ் என்று அழைத்த இறைவன், பேச்சுவழக்கின் அடிப்படையில் ஏனைய வணக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுபவை மற்றும் வழிப்பட்டு (அடிபணிந்து) நடப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுபவை யாவற்றையும் “இலாஹ்” என்ற பெயராலேயே சுட்டிக்காட்டி குறிப்பிடுகிறான்.
அதாவது யதார்த்தமான அடிப்படையில் அல்லாஹ், இலாஹ் என்ற பெயரை ஏற்பதுபோல் பேச்சுவழக்கின் அடிப்படையில் சிருஷ்டியும் இலாஹ் என்ற பெயரை ஏற்கும் அமைப்பிலேயே உள்ளது.
இந்நிலையில், கலிமா வசனத்தில் வரும் “தப்ரிய்யாவுடைய லா” விற்குப்பின்னால் இடம்பெற்றிருக்கும் “இலாஹ” எனும் சொல் “நகிரா”வான (Indefinite Article- எதனையுமே சுட்டிக்காட்டக்கூடிய) சொல்லமைப்பில் அமைந்துள்ளது.
அதாவது ‘இலாஹ்’ எனும் பொதுவான பரந்த அர்த்தத்தை உடைய சொல்; அதன்கீழ் உள்ளடங்கும் சகல வர்க்கங்களையும் பிரிவுகளையும் உள்ளடக்கக்கூடியதாக இருக்கும்.
உண்மையான இலாஹு, போலியான இலாஹு, வணங்கப்படக்கூடியவை, வழிப்படக்கூடியவை, வேண்டப்படுபவை, தேவை ஆக்கப்படுபவை என அனைத்து பிரிவுகளின் கீழ் வரும் வஸ்துக்கள் யாவுமே இலாஹ் என்ற சொல்லினுள் உள்ளடங்கக்கூடியதாக இருக்கும்.
இலாஹுன் எனும் இப்பொதுப்படையான சொல்லினுள் معبود ‘மஃபூதுன்’ (வணங்கப்படுபவை/ வழிப்படப்படுபவை / அடிபணியப்படுபவை) என்ற அடிப்படையில் வணக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடியவை யாவும் உள்ளடங்குவதுபோல் வழிப்படப் படுபவையும் (அடிபணியப் படுபவையும்) உள்ளடங்கும்.
மனிதன், தன்னுடைய கீழான மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடப்பதன் மூலம் மனோ இச்சையை அவனுடைய இலாஹ் ஆக ஆக்கிவிட்டதாக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
அதாவது வழிப்படப்படும் (அடிபணியப்படும்) ஒன்றை இறைவன் ‘இலாஹ்’ என்ற பெயரால் சுட்டிக்காட்டுகின்றான் என்பது இங்கு கவனிக்கவேண்டிய விடயமாகும்.
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ [الفرقان: 43]
தன் (இழிவான) மனோ இச்சையையே தன் இலாஹாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (25:43)
என்று அல்லாஹ் தஆலா கேட்க்கின்றான்.
இத்திரு வசனத்தில் மனோ இச்சை மனிதனால் வணங்கப்படாவிட்டாலும் அது மனிதனால் வழிப்படப்படும் அதாவது மனிதன் அதன் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் ஒரு ‘இலாஹ்’ ஆகும் என அல்லாஹ் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.
ஆனால், இத்திருவசனத்தை சரியாக புரிந்துகொள்ளாத சிலர் ‘ஹவா’ எனும் மனோ இச்சை ஒரு ‘இலாஹ்’ அல்ல! எனவும் அந்த மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு எது வணங்கப்படுகிறதோ அதுவே ‘இலாஹ்’ ஆகும் எனவும் இறைவன் கூறுவதாக தமது புரிதலுக்கு ஏற்றவாறு திருவசனத்தின் அர்தத்தை வளைத்து கருத்துச்சொல்லி வாதிக்கின்றனர். இது மிகவும் தவறாகும்.
மனோ இச்சை என்பது மனிதன் அதன் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் முதல் நிலை இலாஹ் என்பதும், அந்த மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வணங்கப்பட்ட படைப்புக்கள் இரண்டாம் நிலை ‘இலாஹ்’ என்பதும் தப்ஸீருடைய உலமாக்களின் கருத்தாக உள்ளது.
அந்த அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட திருவசனத்திற்கு தப்ஸீருடைய உலமாக்கள் கூறியுள்ள விரிவுரைகளை கீழே நோக்குவோம்.
الوجيز للواحدي (ص: 780)
المؤلف: أبو الحسن علي بن أحمد بن محمد بن علي الواحدي، النيسابوري، الشافعي (المتوفى: 468هـ)
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا (43)
{أرأيت من اتخذ إلهه هواه} وهو أنَّهم كانوا يعبدون شيئاً حجراً أو ما كان فإذا رأوا حجراً أحسن طرحوا الأوَّل وعبدوا الأحسن فهم يعبدون ما تهواه أنفسهم
அவர்கள் ஒரு கல்லை வணங்கினார்கள். அதைவிட அழகான கல்லைக்கண்டால் முந்தியதை வீசிவிட்டு அழகான கல்லை வணங்கினார்கள். அவர்கள் தங்களுடைய மனம் ஆசைப்பட்டதை வணங்குவார்கள்.
(அல் வஜீஸ், பக்கம் 780, ஆசிரியர் : அபுல் ஹஸன் அலீ அல் வாஹிதி)
التفسير الوسيط للواحدي (4/ 99)
المؤلف: أبو الحسن علي بن أحمد بن محمد بن علي الواحدي، النيسابوري، الشافعي (المتوفى: 468هـ)
{أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ} [الجاثية: 23]
قال سعيد بن جبير، عن ابن عباس في هذه الآية: كان أحدهم يعبد الحجر، فإذا رأى ما هو أحسن منه، رمى به وعبد الآخر، فهو يعبد ما تهواه نفسه.
அவர்களில் ஒருவர் கல்லை வணங்குவார். அதைவிட அழகானதைக்கண்டால் அதை எறிந்துவிட்டு மற்றதை வணங்குவார். தன்னுடைய மனம் ஆசைப்பட்டதை வணங்குவார்.
وهذا كما يقال: الهوى إله يعبد من دون الله، يعني: أن ذا الهوى يترك أمر الله وطاعته لهواه.
அல் ஹவா- மனோ இச்சை என்பது அல்லாஹ் தவிர அடிபணியப்படும் ஒரு இலாஹ் ஆகும். அதாவது மனோ இச்சை உடையவன் தனது மனோ இச்சைக்காக அல்லாஹ்வின் கட்டளையையும் அவனுக்கு வழிப்படுவதையும் விட்டுவிடுகிறான்.
832 – أَخْبَرَنَا أَبُو بَكْرٍ الْحَارِثِيُّ، أنا أَبُو الشَّيْخِ الْحَافِظُ، نا الْحُسَيْنُ بْنُ عُمَرَ بْنِ أَبِي الْأَحْوَصِ، نا أَحْمَدُ بْنُ يُونُسَ، نا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ دِينَارٍ، عَنِ الْخَصِيبِ بْنِ جَحْدَرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَحْتَ ظِلِّ السَّمَاءِ إِلَهٌ يُعْبَدُ مِنْ دُونِ اللَّهِ أَبْغَضَ إِلَى اللَّهِ مِنْ هَوًى»
வானத்தின் கீழ் அல்லாஹ் தவிர வணங்கப்படும்/அடிபணியப்படும் இலாஹுகளில் அல்லாஹ்வுக்கு மிகக்கோபமானது ஹவா-மனோ இச்சையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
[தப்ஸீருல் வஸீத், பாகம் 04, பக்கம் 99, ஆசிரியர் : அபுல் ஹஸன் அலீ அல் வாஹிதி]
المعجم الكبير للطبراني (8/ 103)
7502 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ أَبُو عُمَرَ الضَّرِيرُ الْكُوفِيُّ، ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ الْحَسَنِ بْنِ دِينَارٍ، عَنِ الْخَصِيبِ بْنِ جَحْدَرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ: «مَا تَحْتَ ظِلِّ السَّمَاءِ مِنْ إِلَهٍ يُعْبَدُ مِنْ دُونِ اللهِ أَعْظَمُ مِنْ عِنْدِ اللهِ مِنْ هَوًى مُتَّبَعٍ»
வானத்தின் கீழ் அல்லாஹ் தவிர வணங்கப்படும்/அடிபணியப்படும் இலாஹுகளில் அல்லாஹ்விடத்தில் மிக வலுப்பமானது ‘பின்பற்றப்படும் மனோ இச்சை’ ஆகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
[முஃஜம் அல் கபீர் அத் தப்றானீ, 7502]
التفسير البسيط (16/ 513)
المؤلف: أبو الحسن علي بن أحمد بن محمد بن علي الواحدي، النيسابوري، الشافعي (المتوفى: 468هـ)
ومعنى الآية: تعجيب النبي -صلى الله عليه وسلم- من نهاية جهلهم حين عبدوا ما دعاهم إليه الهوى، وما يدعو إليه الهوى باطل (7). وهذا القول اختيار الفراء (8).
وفي الآية قول آخر؛ وهو قول الحسن وابن عباس؛ قال ابن عباس: الهوى: إله يعبد من دون الله (1).
وقال الحسن: لا يهوى شيئًا إلا اتبعه (2).
وذكر الزجاج القولين؛ فقال في القول الثاني: أي: أطاع هواه، وركبه فلم يبال عاقبة ذلك (3). وهو اختيار ابن قتيبة؛ قال: يقول: يتَّبع هواه ويدع الحق فهو كالإله (4).
அல் ஹவா- மனோ இச்சை என்பது அல்லாஹ் தவிர அடிபணியப்படும் ஒரு இலாஹ் ஆகும் என இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் ஹஸன் றஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறினார்கள்.
ஒரு வஸ்துவை ஒருவன் ஆசைப்பட்டால் அதை அவன் பின் தொடர்வான் என ஹஸன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.
மனோ இச்சையை பின்பற்றி ஹக்கை விட்டுவிடுவான். அது (மனோ இச்சை) அவனுக்கு இலாஹ் போன்றதாகும் என இப்னு குதைபா (றஹ்) அவர்கள் கூறினார்கள்.
[தப்ஸீருல் பஸீத், பாகம் 16, பக்கம் 513, ஆசிரியர் : அபுல் ஹஸன் அலீ அல் வாஹிதி]
{விபரம்:
மேலே அல் வாஹிதி (றஹ்) அவர்கள் தன்னுடைய அல் வஜீஸ், தப்ஸீருல் வஸீத், தப்ஸீருல் பஸீத் ஆகிய நூல்களில் குறிப்பிட்ட விரிவுரைகளின் அடிப்படையில் நோக்கும்போது, அல் ஹவா- மனோ இச்சை என்பது அல்லாஹ் தவிர அடிபணியப்படும் ஒரு இலாஹ் ஆகும் என்பது தெளிவாகுகின்றது.
எனவே தனது மனோ இச்சை முதல் நிலை இலாஹ் ஆகவும், அந்த மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வணங்கப்பட்ட கல் இரண்டாம் நிலை இலாஹ் ஆகவும் இங்கு குறிப்பிட்டுள்ளார்கள். மாறாக மனோ இச்சை ஒரு இலாஹ் அல்ல என்ற கருத்தை அவர்கள் இங்கு குறிப்பிடவில்லை.}
غريب القرآن لابن قتيبة ت سعيد اللحام (ص: 269)
المؤلف: أبو محمد عبد الله بن مسلم بن قتيبة الدينوري (المتوفى: 276هـ)
– أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ؟ يقول: يتّبع هواه ويدع الحقّ، فهو له كالإله. أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا؟! أي كفيلا. وقيل: حافظا.
மனோ இச்சையை பின்பற்றி ஹக்கை விட்டுவிடுவான். அது (மனோ இச்சை) அவனுக்கு இலாஹ் போன்றதாகும்.
[ஙரீபுல் குர்ஆன், பக்கம்-269, ஆசிரியர்: இப்னு குதைபா (றஹ்)]
تفسير الطبري = جامع البيان ت شاكر (19/ 274)
المؤلف: محمد بن جرير بن يزيد بن كثير بن غالب الآملي، أبو جعفر الطبري (المتوفى: 310هـ)
(أَرَأَيْتَ) يا محمد (مَنِ اتَّخَذَ إِلَهَهُ) شهوته التي يهواها وذلك أن الرجل من المشركين كان يعبد الحجر، فإذا رأى أحسن منه رمى به، وأخذ الآخر يعبده، فكان معبوده وإلهه ما يتخيره لنفسه،
தான் ஆசைப்படும் மனோ இச்சையை இலாஹாக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா? அதாவது முஷ்ரிக்கீன்களில் ஒருவர் கல்லை வணங்குவார். அதைவிட அழகானதைக்கண்டால் அதை எறிந்துவிட்டு மற்றதை வணங்குவார். தனக்கு எதை தேர்ந்தெடுத்துக்கொள்கின்றாரோ அது அவருடைய இலாஹ் ஆகவும் அவரால் வணங்கப்பட்டதாகவும் ஆகிவிட்டது.
تفسير ابن أبي حاتم – محققا (8/ 2700)
المؤلف: أبو محمد عبد الرحمن بن محمد بن إدريس بن المنذر التميمي، الحنظلي، الرازي ابن أبي حاتم (المتوفى: 327هـ)
15201 – حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، ثنا وَكِيعٌ، ثنا مُبَارَكٌ، عَنِ الْحَسَنِ: أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ قَالَ: لَا يَهْوَى شَيْئًا إِلا إتَّبَعَهُ.
ஒரு வஸ்துவை ஒருவன் ஆசைப்பட்டால் அதை அவன் பின்பற்றுவான் என ஹஸன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
تفسير ابن أبي حاتم – محققا (8/ 2700)
– حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أنبأ ابْنُ أَبِي زَائِدَةَ أنبأ ابْنُ الْمُبَارَكِ، عَنِ الْحَسَنِ فِي قَوْلِهِ: أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ قَالَ: ذَلِكَ الْمُنَافِقُ نَصَبَ هَوَاهُ فَمَا هَوَى مِنْ شَيْءٍ رَكِبَهُ.
தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா? என்ற வசனம் முனாபிக் –நயவஞ்சகனைப்பற்றி குறிப்பிடுகின்றது. அவன் தனது மனோ இச்சையை முன்னிறுத்தி அவன் ஆசைப்படும் வஸ்துவில் ஏறிக்கொள்வான்.
تفسير ابن أبي حاتم – محققا (8/ 2700)
15203 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى أَنْبَأَ الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ثنا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ قَوْلُهُ: أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَاللَّهِ لَكُلَّمَا هَوِيَ شَيْئًا رَكِبَهُ وَكُلَّمَا اشْتَهَى شَيْئًا أَتَاهُ لَا يَحْجِزُهُ، عَنْ ذَلِكَ وَرَعٌ وَلا تَقْوَى
தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா? என்ற வசனம் அல்லாஹ் மீது ஆணையாக அவன் ஆசைப்படும்போதெல்லாம் அவன் ஆசைப்படும் வஸ்துவில் ஏறிக்கொள்வான். ஒரு வஸ்துவை ஆசைப்படும்போது அதை அவன் கொண்டு வருவான். அவ்வாறு அவன் செய்வதற்கு பேணுதலோ இறையச்சமோ தடையாக இருக்காது.
[தப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்,
பாகம்-08, பக்கம்: 2700]
{விபரம்:
மேலே இப்னு குதைபா (றஹ்) அவர்கள் தங்களின் ஙரீபுல் குர்ஆன் எனும் நூலிலும், இமாம் தபரீ (றஹ்) அவர்கள் தங்களின் தப்ஸீர் அத்தபரீ எனும் நூலிலும், இப்னு அபீ ஹாத்திம் (றஹ்) அவர்கள் தங்களின் விரிவுரையிலும்; மனோ இச்சையை பின்பற்றி ஹக்கை விடுவதனால் அந்த மனோ இச்சை அவனுக்கு இலாஹ் போன்றது என்றும் மனோ இச்சையை இலாஹ் ஆக்கியதால் தான் தேர்ந்தெடுத்தது தனக்கு இலாஹ் ஆக ஆகிவிட்டது என்றும் தனது மனோ இச்சையை முன்நிறுத்தி அது ஆசைப்படும் வஸ்துவை மனிதன் கொண்டுவருகின்றான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்களின் கூற்றுப்படி மனோ இச்சை முதல் நிலை இலாஹ் ஆகவும், அந்த மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வணங்கப்பட்ட வஸ்துக்கள் இரண்டாம் நிலை இலாஹ் ஆகவும் காணப்படுகின்றன}
மனிதன், தன்னுடைய கீழான மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடப்பதன் மூலம் மனோ இச்சையை அவனுடைய இலாஹ் ஆக ஆக்கிவிட்டதாக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
இது பற்றி இமாம் அப்துல் கரீம் இப்னு ஹவாஸின் அல் குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
لطائف الإشارات = تفسير القشيري (2/ 637)
المؤلف: عبد الكريم بن هوازن بن عبد الملك القشيري (المتوفى: 465هـ)
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلاً (43)
كانوا يعبدون من الأصنام ما يهوون يستبدلون صنما بصنم، وكانوا يجرون على مقتضى ما يقع لهم. والمؤمن بحكم الله لا بحكم نفسه، وبهذا يتضح الفرقان «2» بين رجل وبين رجل.
والذي يعيش على ما يقع له فعابد هواه، وملتحق بالذين ذكرهم الحقّ بالسوء فى هذه الآية.
அவர்கள் தாங்கள் ஆசைப்படும் விக்கிரகங்களை வணங்கினார்கள். ஒரு விக்கிரகத்துக்கு பதிலாக மற்றுமொன்றை மாற்றிக்கொண்டார்கள். தங்களுக்கு ஏற்படும் எண்ணத்தின் படி விக்கிரகங்களை கொண்டுவந்தார்கள். தனக்கு ஏற்படும் எண்ணத்தின் படி வாழக்கூடியவன் தனது மனோ இச்சைக்கு வழிப்படக்கூடியவன் ஆவான்.
[தப்ஸீர் அல் குஸைரீ, பாகம் 02, பக்கம்:637
இமாம் அப்துல் கரீம் இப்னு ஹவாஸின் அல் குஷைரீ (றஹ்)]
تنوير المقباس من تفسير ابن عباس (ص: 303)
ينسب: لعبد الله بن عباس – رضي الله عنهما – (المتوفى: 68هـ)
{أَرَأَيْتَ} يَا مُحَمَّد {مَنِ اتخذ إلهه هَوَاهُ} من عبد إلهه بهوى نَفسه يَعْنِي النَّضر وَأَصْحَابه
“தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா?” என்ற வசனம்; தன்னுடைய மனோ இச்சையைக்கொண்டு தனது இலாஹை வணங்கியவன் என்பதைக்குறிக்கிறது.
[தன்வீருல் மிக்பாஸ் மின் தப்ஸீரி இப்னு அப்பாஸ், பக்கம்: 303]
تفسير الثعلبي = الكشف والبيان عن تفسير القرآن (7/ 139)
المؤلف: أحمد بن محمد بن إبراهيم الثعلبي، أبو إسحاق (المتوفى: 427هـ)
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ وذلك أنّ الرجل من المشركين كان يعبد الحجر أو الصنم، فإن رأى أحسن منه رمى به وأخذ الآخر فعبده، قال ابن عباس: الهوى إله يعبد من دون الله
“தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா?” என்ற வசனத்தின் விபரமென்னவெனில், முஷ்ரிக்கீன்களில் ஒருவர் கல்லை அல்லது விக்கிரகத்தை வணங்குவார். அதைவிட அழகான ஒன்றைக்கண்டால் அதை எறிந்துவிட்டு மற்றதை வணங்குவார்.
“ஹவா எனும் மனோ இச்சை அல்லாஹ் தவிர அடிபணியப்படும் இலாஹ் ஆகும்” என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்.
[தப்ஸீர் அத் தஃலபீ, பாகம் 07, பக்கம் 139
ஆசிரியர்: அஹ்மத் இப்னு முஹம்மத் அத் தஃலபீ (றஹ்]
{விபரம்:
மேலே இமாம் குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் தப்ஸீர் அல் குஸைரீ எனும் விரிவுரையிலும், தன்வீருல் மிக்பாஸ் மின் தப்ஸீரி இப்னு அப்பாஸ் எனும் விரிவுரையிலும், அஹ்மத் இப்னு முஹம்மத் அத் தஃலபீ (றஹ்) அவர்கள் தங்களின் தப்ஸீர் அத் தஃலபீ எனும் விரிவுரையிலும் கூறியுள்ள விபரங்களின் அடிப்படையில் நோக்குகின்றபோது,
தனக்கு ஏற்படும் எண்ணத்தின் படி வாழக்கூடியவன் தனது மனோ இச்சைக்கு வழிப்படக்கூடியவன் என்பதும் தன் மனோ இச்சையைக்கொண்டே இலாஹ் வணங்கப்படுகின்றது என்பதும் மனோ இச்சை ஒரு இலாஹ் என்பதும் தெளிவாக விளங்கக்கூடியதாக உள்ளது.
எனவே இவர்களின் கூற்றுப்படி, மனோ இச்சை முதல் நிலை இலாஹ் ஆகவும், அந்த மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வணங்கப்பட்ட வஸ்துக்கள் இரண்டாம் நிலை இலாஹ் ஆகவும் காணப்படுகின்றன}
تفسير الرازي = مفاتيح الغيب أو التفسير الكبير (24/ 462)
المؤلف: أبو عبد الله محمد بن عمر بن الحسن بن الحسين التيمي الرازي الملقب بفخر الدين الرازي خطيب الري (المتوفى: 606هـ)
قَوْلُهُ تَعَالَى:
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
وَالْمَعْنَى أَنَّهُ سُبْحَانَهُ بَيَّنَ أَنَّ بُلُوغَ هَؤُلَاءِ فِي جَهَالَتِهِمْ وَإِعْرَاضِهِمْ عَنِ الدَّلَائِلِ إِنَّمَا كَانَ لِاسْتِيلَاءِ التَّقْلِيدِ عَلَيْهِمْ وَأَنَّهُمُ اتخذوا أهواءهم آلهة، فكل ما دَعَاهُمُ الْهَوَى إِلَيْهِ انْقَادُوا لَهُ، سَوَاءً مَنَعَ الدليل منه أو لم يمنع،
قَوْلُهُ: اتَّخَذَ إِلهَهُ هَواهُ مَعْنَاهُ اتَّخَذَ إِلَهَهُ مَا يَهْوَاهُ أَوْ إِلَهًا يَهْوَاهُ،
وَقِيلَ هُوَ مَقْلُوبٌ وَمَعْنَاهُ اتَّخَذَ هَوَاهُ إِلَهَهُ وَهَذَا ضَعِيفٌ، لِأَنَّ قَوْلَهُ: اتَّخَذَ إِلهَهُ هَواهُ يُفِيدُ الْحَصْرَ، أَيْ لَمْ يَتَّخِذْ لِنَفْسِهِ إِلَهًا إِلَّا هَوَاهُ، وَهَذَا الْمَعْنَى لَا يَحْصُلُ عِنْدَ الْقَلْبِ.
قَالَ ابْنُ عَبَّاسٍ: الْهَوَى إِلَهٌ يُعْبَدُ، وَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ: كَانَ الرَّجُلُ مِنَ الْمُشْرِكِينَ يَعْبُدُ الصَّنَمَ فَإِذَا رَأَى أَحْسَنَ مِنْهُ رَمَاهُ وَاتَّخَذَ الْآخَرَ وَعَبَدَهُ.
الثَّالِثُ: قَوْلُهُ: أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا أَيْ حَافِظًا تَحْفَظُهُ مِنَ اتِّبَاعِ هَوَاهُ أَيْ لَسْتَ كَذَلِكَ.
அவர்கள், தங்களின் மனோ இச்சைகளை இலாஹுகளாக ஆக்கிக்கொண்டனர். அவர்களை மனோ இச்சை எதன் பக்கம் அழைத்ததோ அதற்கு அவர்கள் சிரம்பணிந்தனர். “தனது மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டான்” எனும் வசனம்; தனக்கு மனோ இச்சையைத்தவிர வேறு இலாஹை ஆக்கிக்கொள்ளவில்லை என்ற கருத்தைத்தருகின்றது.
“ஹவா எனும் மனோ இச்சை என்பது அடிபணியப்படும் இலாஹ் ஆகும்” என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்.
[மபாதீஹுல் ஙெய்ப், பாகம் 24, பக்கம் 462,
ஆசிரியர் : இமாம் பக்ருத்தீன் அர் றாஸீ (றஹ்)]
تفسير القرطبي (13/ 35)
المؤلف: أبو عبد الله محمد بن أحمد بن أبي بكر بن فرح الأنصاري الخزرجي شمس الدين القرطبي (المتوفى: 671هـ)
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلاً (43)
قَوْلُهُ تَعَالَى: (أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ) عَجَّبَ نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِضْمَارِهِمْ عَلَى الشِّرْكِ وَإِصْرَارِهِمْ عَلَيْهِ مَعَ إِقْرَارِهِمْ بِأَنَّهُ خَالِقُهُمْ وَرَازِقُهُمْ، ثُمَّ يَعْمِدُ إِلَى حَجَرٍ يَعْبُدُهُ مِنْ غَيْرِ حُجَّةٍ.
قَالَ الْكَلْبِيُّ وَغَيْرُهُ: كَانَتِ الْعَرَبُ إِذَا هَوِيَ الرَّجُلُ مِنْهُمْ شَيْئًا عَبَدَهُ مِنْ دُونِ اللَّهِ، فَإِذَا رَأَى أَحْسَنَ مِنْهُ تَرَكَ الْأَوَّلَ وَعَبَدَ الْأَحْسَنَ، فَعَلَى هَذَا يَعْنِي: أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ بِهَوَاهُ، فَحُذِفَ الْجَارُّ.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: الْهَوَى إِلَهٌ يُعْبَدُ مِنْ دُونِ اللَّهِ، ثُمَّ تَلَا هذه الآية.
وَقِيلَ:” اتَّخَذَ إِلهَهُ هَواهُ” أَيْ أَطَاعَ هَوَاهُ
“தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா?” என்ற வசனம் தன் மனோ இச்சையைக்கொண்டு இலாஹை ஆக்கிக்கொண்டவனை கண்டீரா! என்ற கருத்தை தருகின்றது.
“ஹவா எனும் மனோ இச்சை அல்லாஹ் தவிர அடிபணியப்படும் ‘இலாஹ்’ ஆகும்” என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்.
மனோ இச்சையை இலாஹாக ஆக்கிக்கொண்டான் என்பது தனது மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடப்பதை குறிக்கின்றது.
[தப்ஸீர் அல் குர்தூபீ, பாகம் 13, பக்கம் 35]
{விபரம்:
மேலே இமாம் பக்ருத்தீன் அர் றாஸீ (றஹ்) அவர்கள் ‘மபாதீஹுல் ஙெய்ப்’, எனும் விரிவுரையிலும், இமாம் குர்தூபி (றஹ்) அவர்கள் தங்களது விரிவுரையிலும்; மனோ இச்சையை அவர்கள் இலாஹாக ஆக்கிக்கொண்டார்கள் எனவும் மனோ இச்சை அடிபணியப்படும் இலாஹ் எனவும் மனோ இச்சையை இலாஹ் ஆக்குதல் என்பது மனோ இச்சைக்கு வழிப்படுதல் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே இவர்களின் கூற்றுப்படி, மனோ இச்சை முதல் நிலை இலாஹ் ஆகவும், அந்த மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வணங்கப்பட்ட வஸ்துக்கள் இரண்டாம் நிலை இலாஹ் ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
التفسير لمحيى الدين بن عربى (3/ 144)
{أرأيت من اتخذ إلهه هواه}
كل محجوب بشيء واقف معه, فهو محبّ له, مجانس لذلك الشيء, فهو في الحقيقة عابد لهواه بعبادته لذلك المحبوب, والباعث لهواه على محبة غير الله هو الشيطان, فمحبّ كل شيء غير الله لا لله وبغير محبة الله عابد له ولهواه وللشيطان متعدد المعبود متفرق الوجهة. أبدَ ذلك {تكون عليه وكيلاً} بدعوته إلى التوحيد وقد كان في غاية البعد محجوباً بظلّ من ظلاله.
ஒரு வஸ்துவைக்கொண்டு திரையிடப்பட்டவன் அந்த வஸ்துவுடன் நிற்கின்றான். அதை ஆசை வைத்தவனாக இருக்கின்றான். யதார்த்தத்தில் அந்த ஆசை வைக்கப்பட்டதை வணங்குவதன் மூலம் தன்னுடைய மனோ இச்சைக்கு வழிப்படுகிறான்.
[தப்ஸீர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, பாகம் 03, பக்கம் 144]
{أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ} [الجاثية: 23]
التفسير لمحيى الدين بن عربى (4/77)
{أفرأيت من اتَّخذ إلهه هواه} الإله- المعبود ولما أطاعوا الهوى فقد عبدوه وجعلوه إلهاً, إذ كل ما يعبد الإنسان بمحبته وطاعته فهو إلهه ولو كان حجراً
“தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா?” என்ற வசனத்தில் குறிப்பிடப்படும் ‘இலாஹ்’ என்பது வணங்கப்படக்கூடியதாகும்/அடிபணியப்படக்கூடியதாகும். அவர்கள் மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடந்தபோது அந்த மனோ இச்சைக்கு வழிப்பட்டு அதை இலாஹாக ஆக்கி விட்டனர்.
மனிதன் தான் அன்புவைத்து வழிப்பட்டு நடக்கும் ஒவ்வொன்றும் அவனது ‘இலாஹ்’ ஆகும். அது கல்லாக இருந்தாலும் சரி.
[தப்ஸீர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, பாகம் 04, பக்கம் 77]
التفسير لمحيى الدين بن عربى (2/ 328)
لأن لكل قوم إلهاً تعبده وهو مطلوبها ومرادها, والنفس تعبد الهوى كقوله: {أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ الههُ هَوَاهُ}
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அவர்கள் வணங்கக்கூடிய ஒரு ‘இலாஹ்’ இருக்கிறது. அதுவே அவர்களால் நாடப்பட்டதும் தேடப்பட்டதும் ஆகும். ஆன்மா; மனோ இச்சையை வணங்குகிறது (அதாவது மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடக்கிறது).
[தப்ஸீர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, பாகம் 02, பக்கம் 328]
الكتاب : الفتوحات المكية
واعلم أنه لولا الهوى ما عبد الله في غيره وأن الهوى أعظم إله متخذ عبد
அறிந்து கொள்! மனோ இச்சை இல்லையானால் அல்லாஹு தஆலா அவன் அல்லாதவற்றில் வணங்கப்பட்டிருக்கமாட்டான். மனோ இச்சை என்பது இலாஹ் ஆக ஆக்கப்பட்டு வணங்கப்பட்டவைகளில்/ அடிபணியப்பட்டவைகளில் மிக வலுப்பமானதாகும்.
[அல் புதுஹாத்துல் மக்கிய்யஹ்,
பாகம் 05 , பக்கம் 89,
அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்)]
تفسير القاسمي = محاسن التأويل (8/ 431)
المؤلف: محمد جمال الدين بن محمد سعيد بن قاسم الحلاق القاسمي (المتوفى: 1332هـ)
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ أي من ترك متابعة الهدى إلى متابعة الهوى، فكأنه يعبده. فجعله إلها تشبيه بليغ أو استعارة.
قال القاشاني: الإله المعبود، ولما أطاعوا الهوى فقد عبدوه وجعلوه إلها. إذ كل ما يعبده الإنسان بمحبته وطاعته، فهو إلهه لو كان حجرا
“தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா?” என்ற வசனத்தில் நேர்வழியை பின்பற்றுவதை விட்டுவிட்டு மனோ இச்சையை பின்பற்றுபவனைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் அந்த மனோ இச்சையை வணங்கியவனைப்போலாவான். அவன் அம் மனோ இச்சையை இரவலான ‘இலாஹ்’ ஆக ஆக்கி விட்டான்.
‘இலாஹ்’ என்பது வணங்கப்படக்கூடியதாகும்/அடிபணியப்படக்கூடியதாகும். அவர்கள் மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடந்தபோது அந்த மனோ இச்சைக்கு வழிப்பட்டு அதை இலாஹாக ஆக்கி விட்டனர்.
மனிதன் தான் அன்புவைத்து வழிப்பட்டு நடக்கும் ஒவ்வொன்றும் அவனது இலாஹ் ஆகும். அது கல்லாக இருந்தாலும் சரி என இமாம் காஷானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
[தப்ஸீர் அல் காஸிமி,
பாகம் 08, பக்கம் 438,
முஹம்மத் ஜமாலுத்தீன் அல் காஸிமி]
الكتاب : فصوص الحكم المتن
و أعظم مجلى عُبِدَ فيه و أعلاه «الهوى» كما قال «أَ فَرَأَيْتَ من اتَّخَذَ إِلهَهُ هَواهُ» و هو أعظم معبود، فإنه لا يعبد شي ء إلا به، و لا يعبد هو إلا بذاته،
شرح الجامي على فصوص الحكم ص 466
الملا عبد الرحمن بن أحمد الملقب بنور الدين الجامي
வணங்கப்பட்ட/அடிபணியப்பட்ட வெளிப்பாடுகளில் மிக உயர்ந்ததும் வலுப்பமானதும் மனோ இச்சை ஆகும். “தன்னுடைய மனோ இச்சையை இலாஹ் ஆக ஆக்கிக்கொண்டவனை நீர் கண்டீரா?” என்ற திருவசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டதன்படி, மனோ இச்சை மிக வலுப்பமான வணங்கப்பட்டதாகும். (அதாவது அடிபணியப்பட்டதாகும்). எந்தவொரு வஸ்துவும் மனோ இச்சையைக்கொண்டே வணங்கப்படுகின்றன. மனோ இச்சையும் அதைக்கொண்டே வணங்கப்படுகின்றது.
புஸூஸுல் ஹிகம்,
அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்
ஷரஹுல் ஜாமீ அலா புஸூஸுல் ஹிகம், பக்கம் 466, அப்துர் றஹ்மான் அல் ஜாமீ றஹிமஹுல்லாஹ்.
{விபரம்:
மேலே அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் தப்ஸீரிலும், புதுஹாத்துல் மக்கிய்யஹ், புஸூஸுல் ஹிகம் ஆகிய நூல்களிலும், முஹம்மத் ஜமாலுத்தீன் அல் காஸிமி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் விரிவுரையிலும் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் மனோ இச்சை; அடிபணியப்படும் இலாஹ் என்பதை தெளிவாக புரியக்கூடியதாக உள்ளது.}
எனவே ஹவா எனும் மனோ இச்சை என்பது முதல் நிலை இலாஹ் ஆக இருக்கின்றது என்பது இதன்மூலம் தெளிவாகின்றது.