
தொடர்ச்சியாக ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையைத் தொடர்ந்து ஹதீஸ்களை வாசிக்கும் மஜ்லிஸ் ஆரம்பமாகி இஷா தொழுகை வரை நடைபெறும். இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து அன்று வாசிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு விளக்கத்தையும், விரிவுரைகளையும் கண்ணியமிக்க உலமாக்களால் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும்.
நடைமுறை வாழ்க்கைக்குப் பயன் தரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன் மொழிகளை வாசித்தும், கேட்டும் தங்கள் வாழ்க்கையிலும் அதை எடுத்து நடப்பதற்கு இப்புனித மஜ்லிஸ் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கி்ன்றோம்.
காத்தான்குடி பிரதேசத்தில் இருக்கின்ற பிரபல்யமாக பள்ளிவாயல்களில் வருடா வருடம் நடைபெறும் புகாரீ மஜ்லிஸ்கள் இம்முறையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.