
சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 72வது பிறந்த தினமன்று நடைபெற்ற காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், துஆப் பிரார்த்தனை நிகழ்வும்
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் அதிசங்கைக்குரிய ஆன்மீகத் தந்தை அல் ஆரிப்பில்லாஹ் மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்கள் 05.02.2016 அன்று தங்களின் 72வது வயதினைப் பூர்த்தி செய்ததை முன்னிட்டு, அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றை எமது காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சுன்னத்
Read More31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.01.2016 – 31.01.2016 வரை 3 தினங்கள் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்னார் பேரிலான திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸ், குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸ், சங்கைக்குரிய உலமாக்களால் சன்மார்க்க சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதித் தினமான கந்தூரி தினத்தன்று பெரிய துஆ ஓதப்பட்டு
Read Moreபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2015
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாறஸூலல்லாஹ் அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ் அஹதவனின் தூதாய், காதமுன் நபீயாய், காரிருள் நீக்க வந்த இறை ஜோதியாய் அவனியில் அவதரித்த அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த பொன் நேரத்தை வரவேற்கும் நன்நோக்கில் 24.12.2015 (வியாழக்கிழமை) அன்று காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருமுடிகள் தரிசன நிகழ்வும், சங்கை நபீகளார் மீது ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும், ஈத்
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸின் இறுதி நாள் நிகழ்வுகள்
அகிலத்தாருக்கு அருளாய் அவனியி்ல் அவதரித்த அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் நடைபெற்ற மௌலித் மஜிலிஸின் இறுதி நாள் நிகழ்வுகள்… மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ல் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான கேடயங்கள் வழங்கும் நிகழ்வு தீன்நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் நடைபெற்ற மாகந்தூரி நிகழ்வுகள்
Read Moreமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது
மனிதகுல மாணிக்கம் மன்னர் நபீகள் அவதரித்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யபட்ட மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் 19.12.2015 (சனிக்கிழமை) காத்தான்குடி-06 தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. எம்மால் நிர்ணயிக்கப்பட்ட 08 போட்டி நிகழ்வுக்காக விண்ணப்பித்த 70ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். ஒவ்வொரு போட்டியில் இருந்தும் ஒரு வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டார். வெற்றிபெற்ற
Read Moreதிருமுடிகள் தரிசன நிகழ்வு தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயலில்…
அருள் மணம் வீச அவனியில் அவதரித்த ஆருயிர் நாதர், நற்குணத்தின் வேந்தர், நபீகள் கோமான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளையும், வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் திருமுடிகளையும் தரிசித்து அருள் பெற்று மனம் மகிழும் இனிய நிகழ்வு றபீஉனில் அவ்வல் பிறை 06 வியாழக்கிழமை இரவு (17.12.2015) அன்று காத்தான்குடி-06 தீன் நகரில் தௌஹீதின் கோட்டையாய் திகழும் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்
காரிருள் நீக்க வந்த காருண்ய நாயகம் முஹம்மதுர் றஸூல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக 12.12.2015 சனிக்கிழமை அன்று, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கிவரும் நான்கு ஸ்தாபனங்களில் ஆரம்பமான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு…. காத்தான்குடி – 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்… தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில்… நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்வில்… ஜென்னத் மாவத்தை
Read More19வது வருட தங்கள் வாப்பா அன்னவர்களின் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் அருள்மிகு கந்தூரி 06.12.2015 அன்று பி.ப 04:45 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் நிகழ்வுகளின் தொகுப்பு…
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்
மனிதகுல வழிகாட்டி, மதீனத்து முத்து, ஈருலகின் முழுமதி முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பி்க்கும் முகமாக மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதில் 39வது வருடமாக வெகு சிறப்பாக நடைபெறவிருக்கும் மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம் 30.11.2015 (திங்கட்கிழமை) அன்று மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயலில் நடைபெற்றது. இக்கூட்டம் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதின் தலைவரின் முஹம்மத் ஹகீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வி்ல் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் மௌலவீ
Read Moreநபீ புகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்
ஸபர் மாத தலைப்பிறை பிறந்து விட்டாலே நாம் அடையும் சந்தோசத்திற்கு அளவேயில்லை… ஏனெனில் அகிலத்தின் அருள் ஜோதி, மதீனத்து மாநபீ முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பமாவதாலேயே… அந்த வகையில் இவ்வருடமும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நபீபுகழ் காப்பியம் புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 13.11.2015 வெள்ளிக்கிழைமை அன்று இஷாத் தொழுகையின் பின் ஆரம்பமானது. இவ்வருடம் ஸபர் மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இரவுகளில் இஷாத்
Read More