<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அறிவித்தல்கள் &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<atom:link href="https://shumsmedia.com/tag/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://shumsmedia.com</link>
	<description>Islamic Tamil Sufi Site in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 09 Jan 2025 21:00:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://shumsmedia.com/wp-content/uploads/2024/10/cropped-006235-32x32.png</url>
	<title>அறிவித்தல்கள் &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<link>https://shumsmedia.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>لَا أَدْرِيْ نِصْفُ الْعِلْمِ، “எனக்குத் தெரியாது” என்பது அறிவின் பாதி.</title>
		<link>https://shumsmedia.com/2023/10/24/%d9%84%d9%8e%d8%a7-%d8%a3%d9%8e%d8%af%d9%92%d8%b1%d9%90%d9%8a%d9%92-%d9%86%d9%90%d8%b5%d9%92%d9%81%d9%8f-%d8%a7%d9%84%d9%92%d8%b9%d9%90%d9%84%d9%92%d9%85%d9%90%d8%8c-%e0%ae%8e%e0%ae%a9/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/24/%d9%84%d9%8e%d8%a7-%d8%a3%d9%8e%d8%af%d9%92%d8%b1%d9%90%d9%8a%d9%92-%d9%86%d9%90%d8%b5%d9%92%d9%81%d9%8f-%d8%a7%d9%84%d9%92%d8%b9%d9%90%d9%84%d9%92%d9%85%d9%90%d8%8c-%e0%ae%8e%e0%ae%a9/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Oct 2023 20:47:22 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20335</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div dir="auto" style="text-align: justify;"><strong>மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>(மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto">
<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">لَا أَدْرِيْ نِصْفُ الْعِلْمِ،</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">“லா அத்ரீ நிஸ்புல் இல்ம்”</div>
</div>
</div>
<p><span id="more-20335"></span></p>
<div dir="auto">
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“எனக்குத் தெரியாது” என்பது அறிவின் பாதி.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இது ஒரு தத்துவம். இதன் சுருக்கம் என்னவெனில், ஒருவனுக்கு எது தெரியாதோ அவன் அது தனக்குத் தெரியாது என்று சொல்வதே அறிவின் பாதி. இவ்வாறு சொல்பவன்தான் உண்மையான அறிஞனாவான். தனக்குத் தெரியாத ஒன்றுக்கு தெரிந்தவன் போல் பிறருக்கு விளக்கம் கூறுபவன் அறிவிலியேயன்றி அவன் அறிஞனல்ல.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒருவன் பெரும் அறிஞன் என்று பிரசித்தி பெற்றிருப்பான். ஊர் மக்கள் அவனை பேரறிஞன், “அல்லாமா”, அறிவுக் கடல், “இமாம்” என்றெல்லாம் போற்றிப் புகழ்வார்கள். இதனால் அவன் தன்னை மிஞ்சிய அறிஞன் இல்லை என்று நினைத்து ஏனைய அறிஞர்களை அறிஞர்களாகப் பார்க்கமாட்டான். அவர்களைக் கண்ணியப்படுத்தவோ, கணக்கெடுக்கவோ மாட்டான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">ஓர் உண்மையான அறிஞன் புகழப்பட வேண்டியவனும், பாராட்டப்பட வேண்டியவனுமேயாவான். இதனால் ஒன்றுமே தெரியாத ஒரு முட்டாளை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டு மா பெரும் அறிஞன் என்று புகழ் மாலை சூடுவதும், கஞ்சனான கோடீஸ்வரனை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டு உலகப் பிரசித்தி பெற்ற கொடை வள்ளல் என்று பாராட்டி பொன்னாடை போர்த்துவதும் அறியாமையாகும்.</div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/24/%d9%84%d9%8e%d8%a7-%d8%a3%d9%8e%d8%af%d9%92%d8%b1%d9%90%d9%8a%d9%92-%d9%86%d9%90%d8%b5%d9%92%d9%81%d9%8f-%d8%a7%d9%84%d9%92%d8%b9%d9%90%d9%84%d9%92%d9%85%d9%90%d8%8c-%e0%ae%8e%e0%ae%a9/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பணப்பரிசு அன்பளிப்பு!</title>
		<link>https://shumsmedia.com/2023/03/14/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
					<comments>https://shumsmedia.com/2023/03/14/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 19:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=18729</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>15 ஆயிரம் இலங்கை ரூபாய் அன்பளிப்பு!</strong></span></p>
<p style="text-align: justify;">பின்வரும் ஐந்து கேள்விகளுக்கும் சரியான விடை எழுதியனுப்பும் முதல் நபருக்கு மட்டும் 15 ஆயிரம் ரூபாயும், இந்தியா &#8211; நாஹூர் ஷரீபில் அடக்கம் பெற்றுள்ள காரணக்கடல் குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் பாதுஷா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித “கப்ர் ஷரீப்” மீது பல மணி நேரங்கள் வைக்கப்பட்டு அருள் பெற்ற இந்தியப் பணம் இருபது ரூபாயும் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்தப் பணம் எவரிடம் உள்ளதோ அவருக்கு ஈருலக நற்பேறும் கிடைக்கும்.<span id="more-18729"></span></p>
<p style="text-align: justify;">கேள்விகள்:</p>
<p style="text-align: justify;">01.<br />أَنَا الْحَقُّ &#8211; “அனல் ஹக்” நானே மெய்ப் பொருள் என்று கூறிய இமாம் மன்சூர் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களைக் கொலை செய்த கொலை காரனின் பெயர் என்ன?</p>
<p style="text-align: justify;">02. இமாம் மன்சூர் ஹல்லாஜ் அவர்கள் கொலைக் களத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அங்கு வைக்கப்பட்டிருந்த வாள், கத்தி, ஆணி போன்றவற்றைப் பார்த்து சிரித்து விட்டு, நான் இரண்டு “றக்அத்” தொழுவதற்கு எனக்கு “முஸல்லா” தருபவர் யார் என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்ட போது அவர்களுக்கு “முஸல்லா” வழங்கியவரின் பெயர் என்ன?</p>
<p style="text-align: justify;">03. இமாம் ஹல்லாஜ் அவர்களைக் கொல்ல வேண்டுமென்று உலமாஉகளால் வழங்கப்பட்ட “பத்வா” மார்க்கத் தீர்ப்பில் கையெழுத்திட 06 தடவைகள் மறுத்துக் கொண்டிருந்த ஒரு மகான் 07ம் தடவையில் கையெழுத்திட்டார். அவரின் பெயர் என்ன?</p>
<p style="text-align: justify;">04. இமாம் ஹல்லாஜ் அவர்களின் உடல் எரிக்கப்பட்ட பின் அதன் சாம்பல் என்ன செய்யப்பட்டது?</p>
<p style="text-align: justify;">05. இமாம் ஹல்லாஜ் அவர்கள் “அனல் ஹக்” நானே மெய்ப் பொருள் என்று சொன்னதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டது சரியா? பிழையா? எதுவாயினும் அதற்கான சுருக்கமான விளக்கம் கூறப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">முக்கிய குறிப்பு: பதில் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். அதில் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விபரமும் குறிப்பிட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">முகவரி:<br />அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை.<br />BJM பில்டிங், BJM வீதி, காத்தான்குடி 06.</p>
<p style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>#வெற்றியாளர்!</strong></span></p>
<p style="text-align: justify;">கேட்கப்பட்ட 05 கேள்விகளுக்கும் பதில் எழுதி அனுப்பிய 46 நபர்களில் 11 பேர் மாத்திரமே சரியான விடைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிபந்தனையின்படி சரியான விடையை எழுதி அனுப்பும் முதல் நபர் தெரிவு செய்யப்படுவார் என்ற அடிப்படையில் பின்வரும் நபர் அதிர்ஷ்டசாலியாக தெரிவு செய்யப்படுகிறார்.</p>
<p style="text-align: justify;">மௌலவீ HM அப்துர் றஷீத் றப்பானீ <br />அல்அமீன் வீதி, புதிய காத்தான்குடி 06.</p>
<p style="text-align: justify;">அவர் எழுதிய சரியான விடைகள்.</p>
<p style="text-align: justify;">01. அபுல் ஹாரித்<br />02. இமாம் அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ்.<br />03. இமாம் ஜுனைத் அல்பக்தாதீ றஹிமஹுல்லாஹ்.<br />04. “தஜ்லா” நதியில் சாம்பலை எறியப்பட்டது.<br />05. கொலை செய்தது பிழையேயாகும். <br /><br />காரணம்: அவர்கள் பேசிய கருத்து சரியா? பிழையா? என்று ஆராயப்பட்டு அதை அவர்கள் என்ன நிலையில் சொன்னார்கள் என்பதை ஆராய்ந்து அறிந்ததன் பிற்பாடே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.</p>


]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/03/14/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், செயலாளர், மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!</title>
		<link>https://shumsmedia.com/2022/03/20/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d%e0%ae%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-5/</link>
					<comments>https://shumsmedia.com/2022/03/20/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d%e0%ae%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-5/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Mar 2022 02:01:24 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=16298</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">“தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் பேசிய எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பல மில்லியன் முஸ்லிம்களுக்கும் நீங்கள் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கினீர்கள். இது நடந்து 42 வருடங்கள் கடந்து விட்டன.</p>
<p style="text-align: justify;">நீங்கள் மேற்கண்டவாறு தீர்வு வழங்கியது “ஷரீஆ”வின் சட்டத்துக்கு முற்றிலும் முரணானதாகும். “பத்வா” வழங்குவதற்கு “ஷரீஆ” சட்டத்தில் பல விதிகள் உள்ளன. அவற்றைப் பேணி நீங்கள் தீர்ப்பு வழங்கவில்லை. அதோடு ஒருவரை மதம் மாற்றி “பத்வா” வழங்குவதற்கு அரசாங்கம் உங்களுக்கு அனுமதி தரவுமில்லை. அரசின் அனுமதியில்லாமலேயே பல மில்லியன் மக்களை கொலை செய்துள்ளீர்கள்.</p>
<p style="text-align: justify;">என்னையும், மற்றவர்களையும் “முர்தத்” என்று “பத்வா” வழங்குவதற்கு நீங்கள் கூறியுள்ள ஆதாரங்களில் ஒன்று கூட நான் குற்றவாளி என்று நிறுவுவதற்கான ஆதாரமில்லை.</p>
<p><span id="more-16298"></span></p>
<p style="text-align: justify;">நீங்கள் கூறியுள்ள ஆதாரங்கள் யாவும் “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கை பிழையென்பதற்கான ஆதாரங்களேயாகும். இந்த வகையில் மட்டும் உங்களின் “பத்வா” சரியானதே! நானும் சுமார் 50 ஆண்டுகளாக குறித்த “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்றே பேசியும், எழுதியும் வந்துள்ளேன். வழிகெட்ட கொள்கையை நீங்கள் பகிரங்கமாக ஆதாரங்களுடன் மறுத்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.</p>
<p style="text-align: justify;">எனினும் வழிகேட்டிற்கு எதிராக நீங்கள் வழங்கிய தீர்ப்பில் “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஸூபீ மகான்கள் கூறிய இறைஞானம் பேசிய எனது பெயரைக் குறிப்பிட்டது முற்றிலும் பிழையாகும்.</p>
<p style="text-align: justify;">நான் பேசிய, பேசியும் வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழையென்று நீங்கள் சொல்வீர்களாயின், இதுதான் உங்களின் கொள்கையுமாயின் அதற்கான ஆதாரங்களுடன் ஒரு “பத்வா” வெளியிட்டு அதில் என் பெயரைக் குறிப்பிடுங்கள். உங்கள் “பத்வா” சரியானதாயின் நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.</p>
<p style="text-align: justify;">நீங்கள் அவ்வாறு ஒரு “பத்வா” வழங்க விரும்பினால் “பத்வா” எழுதும் குழுவில் உங்களின் “முப்தீ”களுடன் நான் தருகின்ற மார்க்க அறிஞர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆய்வு செய்து எடுக்கும் முடிவை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு ஒரு நிபந்தனை நான் கூறுவதற்கான காரணம் என்னவெனில் நான் தருகின்ற மார்க்க அறிஞர்கள் பல்கலைக் கழகங்கள் செல்லாத பண்டிதர்களும், பல்கலை கற்றவர்களும், சுமார் 35 வருடங்களுக்கு மேலாக “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மிக ஆழமாக ஆய்வு செய்த அறிஞர்களுமாவர்.</p>
<p style="text-align: justify;">உங்களின் “பத்வா” குழுவில் திறமையுள்ளவர்கள் இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. எனினும் நான் அறிந்த வகையில் உங்களின் “பத்வா” குழுவில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பான அறிவு ஞானமுள்ள ஒருவர் கூட இல்லை என்பதே எனது கணிப்பும், அபிப்பிராயமுமாகும். இதற்கு ஆதாரம் உங்களின் “பத்வா”தான்.</p>
<p style="text-align: justify;">ஆகையால் அவர்களுடன் நான் தருகின்ற மார்க்க அறிஞர்களும் இணைந்து எடுக்கும் முடிவு نُوْرٌ عَلَى نُوْرٍ “நூறுன் அலா நூர்” ஒளிக்கு மேல் ஒளியாக அமையுமென்று நான் கருதுகிறேன்.</p>
<p style="text-align: justify;">நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” தீர்ப்பு வழங்கி, அத்தீர்ப்பில் அதே கொள்கை பிழையென்று 50 ஆண்டுகளாக பேசியும், எழுதியும் வருகின்ற எனது பெயரைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதனால் படிப்பறிவில்லாத, அது இருந்தும் கூட விபரம் தெரியாத பொது மக்கள் எதைச் சரி காண்பது? எதைப் பிழை காண்பது? என்று தெரியாமல் தடுமாறுகின்றார்கள். அதோடு சமூக நடைமுறைச் சிக்கல்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். பொது மக்களில் நூறு வீதமானோர் உங்கள் “பத்வா”வை சரி கண்டவர்களுமில்லை, அதேபோல் எனது கருத்தைச் சரி கண்டவர்களுமில்லை. ஆயினும் பொது மக்களிலும், படித்தவர்களிலும் ஸூபிஸ தத்துவத்திற்கு ஆதரவானவர்களும், அதை அறிய வேண்டுமென்ற தாகம் உள்ளவர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இதை நீங்களும் அறிவீர்கள். ஏற்றும் கொள்வீர்கள்.</p>
<p style="text-align: justify;">மேற்குறித்த இத்தகையோர் ஸூபிஸ தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு உங்கள் “பத்வா” தடையாக உள்ளது. பொது மக்கள் என்னைச் சந்திப்பதற்கும் தடையாக உள்ளது. பொது மக்களின் சுதந்திரம் உங்கள் “பத்வா”வினால் பாதிக்கப்படுகின்றது. திருமண வீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. “மையித்” வீட்டில் பிரச்சினை தலை தூக்குகிறது. எத்தனையோ திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளன. இன்னும் சில திருமணங்கள் “காழீ” நீதி மன்றில் தவணையில் உள்ளன.</p>
<p style="text-align: justify;">இத்தகைய சீர்கேடுகளுக்கெல்லாம் உங்கள் “பத்வா”தான் காரணமாக உள்ளது. உங்கள் போன்ற அறிவிலிகளை இவ் இலங்கை நாட்டில் தவமிருந்து தேடினாற் கூட எடுக்க முடியாது. உங்களின் “பத்வா”வினால் சங்கடத்திற்குள்ளான பலர் இன்றுவரை கவலைக் கண்ணீர் வடித்து இறை வணக்கத்தின் போது உங்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள். என்றாவதொரு நாள் அவர்களின் சாபம் பலிக்கும் என்பதை எதிர்பார்த்திருங்கள்.</p>
<p style="text-align: justify;">அவசரப்பட்டு தவறாக “பத்வா” வழங்கி தடுமாறும் உங்களுக்கும், உங்களின் தன்மானத்திற்கும் பங்கம் ஏற்படாத வகையில் “பத்வா”வை நீங்கள் வாபஸ் பெற நான் வழி சொல்லித்தருகிறேன். வாருங்கள் என்று உங்களை அழைத்தேன். நீங்கள் வரவில்லை. என் அழைப்பு உங்களின் செவிகளுட் செல்லவில்லை.</p>
<p style="text-align: justify;">உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் தெரியாது. உங்களின் வாழ்நாளை நீங்கள் வீணாக்கிவிட்டீர்கள். என்னிடம் வந்து சில நாட்கள் தங்கியிருங்கள். ஸூபிஸ ஞானம் நான் சொல்லித் தருகிறேன். உங்களுக்கு தங்குமிட வசதியும், மூன்று வேளை உணவும், தேவையானால் போக்குவரத்துச் செலவும் தருகிறேன் என்று கூறி உங்களை அழைத்தேன். எனது இவ் அழைப்பும் கூட உங்கள் செவிகளுட் செல்லவில்லை.</p>
<p style="text-align: justify;">நீங்கள் என் மூலம் இவ் அறிவைக் கற்றுக் கொள்ள விரும்பவில்லையானால் உங்களின் “பத்வா”வுக்கு நீங்கள் ஆதாரமாக எடுத்த கிதாபுகள் &#8211; நூல்களை உங்களிடமே நான் தந்து அவற்றைப் பொது மக்கள் மத்தியில் நீங்களே வாசித்து விளக்கம் சொல்லுங்கள் என்றும் கூறியிருந்தேன். எனது எந்த ஓர் அழைப்பும் உங்களின் செவிகளுட் செல்லவில்லை. ختم الله على قلوبكم وعلى سمعكم وعلى أبصاركم غشاوة</p>
<p style="text-align: justify;">தலைவர் ரிஸ்வி அவர்கள், “நாங்கள் கொடுத்த எந்த ஒரு “பத்வா”வும் வாபஸ் பெறப்பட்டதற்கு வரலாறே இல்லை” என்று மார்தட்டினாரேயன்றி ஸூபிஸ ஞானம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று அவரும் விரும்பவில்லை. நீங்களும் விரும்பவில்லை. <br />قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا، فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا،<br />நான் எனது கூட்டத்தாரை இரவு பகலாக அழைத்தேன். என் அழைப்பு அவர்களை விரண்டோடச் செய்ததேயன்றி வேறில்லை. (திருமறை 71 &#8211; 5, 6)</p>
<p style="text-align: justify;">ஸூபிஸ ஞானத்தில் “நஸீப்” நற்பாக்கியம் இல்லாதவர்கள் தேடியலைந்து பெற வேண்டிய ஸூபிஸ ஞானத்தை சகல வசதிகளும் செய்து தந்து சொல்லித் தருகிறேன் என்று நான் அழைத்தும் கூட நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில் உங்கள் போல் நற்பாக்கியமற்றவர்கள் இந் நாட்டில் இருக்கவேமாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">உலமா சபைகளின் தாய்ச் சங்க உறுப்பினர்களே!</p>
<p style="text-align: justify;">சில நாட்களாக உங்களின் சத்தமே இல்லாமலிருக்கின்றது. ஆயினும் புதிதாக இரு மகான்கள் தோன்றியுள்ளார்கள். ஒருவர் “பத்தாஹீ”, மற்றவர் “ஹஸனீ”. இவ்விரு மகான்களும் உங்களால் நியமிக்கப்பட்டவர்கள் என்று பொது மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். இவர்கள் இருவரும் பல கலைகளில் திறமையுள்ளவர்களாக இருக்கலாம். ஆயினுமிவர்கள் இருவரும் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையில் பேசப்படுகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் “சீறோ”வாகவே உள்ளனர். ஒன்றுமே தெரியாத சிறு பிள்ளைகள் போல் பேசுகிறார்கள். இதுகால வரை நீங்கள் சொல்லாத, ஸூபிஸத்துக்கு மாறான கருத்துக்கள் கூறி மக்களை வழிகேட்டின் பக்கம் திசை திருப்புகிறார்கள். இவர்களை உடனே நிறுத்துங்கள். இவர்களின் முரணான கருத்துக்களுக்கு பின்னால் நான் விளக்கம் எழுதியுள்ளேன். இவர்கள் தமது வழிகேட்டைத் தொடர்ந்தால் இன்னும் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!</p>
<p style="text-align: justify;">&#8216;ஜீலீ&#8217; மகானை தூக்கியெறிந்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஸூபிஸ மகான்களில் ஒருவரும், ஸூபிஸ வானில் மறையாத் தாரகையும், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பெண் மக்கள் வழி வந்த பேரரும், <br />الإنسان الكامل، النادرات العينيّة، المناظر الإلهيّة، الكَهْفُ والرَّقِيْمُ، جنّة المعارف، القاموسُ الأقدَم، قطبُ العجائب، مراتب الوجود، الكمالات الإلهيّة، لوامعُ الفرق،<br />முதலான நூல்களின் ஆசிரியருமான அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் (ஹிஜ்ரீ 767 &#8211; 826) அவர்கள் தங்களின் நூல்களில் “தஷ்பீஹ்” என்ற தனித் தலைப்பிலேயே அது பற்றி எழுதியிருக்கும் நிலையில் அவர்களைத் தூக்கியெறிந்து பேசுகிறார் உங்களால் நியமிக்கப்பட்ட “ஷரீஆ கவுன்ஸில்” ஐ சேர்ந்த இந்த மகான். அந்த மகானைத் தூக்கியெறிய இந்த மகான் யார்?</p>
<p style="text-align: justify;">அந்த மகானின் கொள்கை குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை இந்த மகான் அறிந்து அவருக்கு உரிய இடம் கொடுத்துப் பேச வேண்டும். <br />يرى الجيلي أنّه لا موجودَ فى الكَون لِغَيْر الله تعالى، والإنسانُ جزءٌ منه، أو هو صورةٌ من صُوَرِ الله، واللهُ عينُ الموجودات، وكلُّ ما يفعله الإنسانُ هو فعلُ الله، <br />ஜீலீ அவர்களின் கொள்கை என்னவெனில் அல்லாஹ்வின் படைப்பில் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளமை உண்டு. வேறு எவருக்கும் “வுஜூத்” உள்ளமை கிடையாது. மனிதனும் அந்தப் படைப்புக்களில் ஓர் அங்கமாவான். அல்லது அல்லாஹ்வின் உருவங்களில் ஓர் உருவமாவான். அல்லாஹ் படைப்புக்கள் தானானவனாகவே உள்ளான். மனிதன் செய்கின்ற எச் செயலாயினும் அது அல்லாஹ்வின் செயலே.</p>
<p style="text-align: justify;">உங்களால் நியமிக்கப்பட்ட மகான், அப்துல் கரீம் அல் ஜீலீ அவர்களை தூக்கியெறிந்ததோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை.</p>
<p style="text-align: justify;">இஸ்லாமிய வரலாற்றில் 900க்கும் மேற்பட்ட ஞானக் களஞ்சியங்களையும், அல்புதூஹாதுல் மக்கிய்யா, புஸூஸுல் ஹிகம் முதலான உலக அறிஞர்களையே வியக்க வைத்த நூல்களையும் எழுதியவரும், “அத்தஷ்பீஹ்” என்ற தலைப்பில் பல நூல்களில் எழுதியவருமான அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு (560 &#8211; 638 ஹிஜ்ரீ) அவர்களை நீங்கள் நியமித்த மகான் குத்பு, வலீ, சித்தீக் என்றெல்லாம் ஏற்றுக் கொள்வதுடன் அவர்களின் நூல்களில் ஈமானைப் பறிக்கும் கருத்துக்கள் இருப்பதாக எழுதியுள்ளார். இவர்களும் ஏனைய ஸூபீ மகான்கள் போல் தன்ஸீஹ் &#8211; தஷ்பீஹ் இரண்டையும் பேசியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">“தஷ்பீஹ்” என்று ஒன்றில்லை என்றும், அது தவறானதென்றும் கூறுகின்ற உலமா சபையின் வலது கையான “ஷரீஆ கவுன்ஸில்” ஐ சேர்ந்த மகான் அவர்களுக்கு மகான் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” தொடர்பாகக் கூறியுள்ள கருத்தை இங்கு எழுதிக் காட்டுகிறேன்.</p>
<p style="text-align: justify;">فَإِنْ قُلْتَ بِالتَّنْزِيْهِ كُنْتَ مُقَيِّدًا &#8211; وَإِنْ قُلْتَ بِالتَّشْبِيْهِ كُنْتَ مُحَدِّدًا<br />فَإِنْ قُلْتَ بِالْأَمْرَيْنِ كُنْتَ مُسَدِّدًا &#8211; وَكُنْتَ إِمَامًا فِى الْمَعَارِفِ سَيِّدًا<br />فَمَنْ قَالَ بِالْإِشْفَاعِ قَدْ كَانَ مُشْرِكًا &#8211; وَمَنْ قَالَ بِالْإِفْرَادِ كَانَ مُوَحِّدًا<br />وَإِيَّاكَ وَالتَّشْبِيْهَ إِنْ كُنْتَ ثَانِيًا &#8211; وَإِيَّاكَ وَالتَّنْزِيْهَ إِنْ كُنْتَ مُفْرِدًا</p>
<p style="text-align: justify;">“தன்ஸீஹ்” என்பதை மறுத்த மகான் இந்தப் பாடலைக் கவனத்திற் கொண்டு செயல்பட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஆழமறியாமற் கால் வைப்பதையும் தவிர்க்க வேண்டுமென்றும் அவருக்கு ஆலோசனை வழங்குகிறேன்.</p>
<p style="text-align: justify;">ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கண்ட பாடலில் சொல்வதை நாம் கவனிப்போம். குறிப்பாக ஷரீஆ கவுன்ஸில் மகான் கவனிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">“தன்ஸீஹ்” மட்டும்தான் உண்டு என்று நீ சொன்னால் “முத்லக்” கட்டுப்பாடில்லாத பொதுவான நாயனை “தன்ஸீஹ்” என்பதில் நீ மட்டுப் படுத்திவிட்டாய்.</p>
<p style="text-align: justify;">“தஷ்பீஹ்” மட்டும்தான் உண்டு என்று நீ சொன்னாலும் அவனை “தஷ்பீஹ்” என்பதில் மட்டுப் படுத்திவிட்டாய்.</p>
<p style="text-align: justify;">தன்ஸீஹ் &#8211; தஷ்பீஹ் இரண்டும் அவனுக்கு உண்டு என்று நீ சொன்னால் நீ சரியாகச் சொல்லிவிட்டாய். அதோடு ஞானத்தின் தலைவனாகவும் ஆகிவிட்டாய்.</p>
<p style="text-align: justify;">இரண்டு என்று சொன்னவன் &#8211; அதாவது துவிதம் பேசினவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிட்டான். ஒன்று என்று சொன்வன் அதாவது அத்வைதம் பேசினவன் “தவ்ஹீத்” வாதியாகிவிட்டான்.</p>
<p style="text-align: justify;">எனவே, நீ “தன்ஸீஹ்” என்பதில் மட்டும் நின்றுவிடவும் வேண்டாம். “தஷ்பீஹ்” என்பதில் மட்டும் நின்றுவிடவும் வேண்டாம். இரண்டையும் எடுத்து நட. இரண்டையும் நம்பி வாழ்.</p>
<p style="text-align: justify;">அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகிகளே!</p>
<p style="text-align: justify;">உங்கள் “பத்வா”வினால் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும், மனக் கசப்புக்களையும், சண்டை சச்சரவுகளையும் களைந்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நன் நோக்கத்தில் உங்களைப் பல வழிகளைக் கூறி பல முறை அழைத்தேன். என்னிடம் சில நாட்கள் மட்டும் தங்கியிருந்து ஸூபிஸ ஞானத்தைக் கற்றுக் கொள்ள வாருங்கள் என்றும், நீங்கள் என்னுடன் தங்கியிருக்கும் நாட்களில் தங்குவதற்கான வசதிகளும், மூன்று வேளை உணவும், மற்றும் தேனீர், குடிபானங்களும் தருகிறேன் என்றும், உங்களுக்குத் தேவையாயின் போக்குவரத்துக்கான பணமும் தருகிறேன் என்றும் கூறியும் அழைத்தேன். நீங்கள் என் அழைப்பிற்கு செவிசாய்க்காமல் அதைப் புறக்கணித்தீர்கள்.</p>
<p style="text-align: justify;">எனவே, நான் கூறி வரும் இறைஞானத்தில் &#8211; ஸூபிஸ தத்துவத்தில் உங்களுக்கு “நஸீப்” நற்பாக்கியம் இல்லையென்று நான் திட்டமாக அறிந்து கொண்டதால் எனது நேர காலத்தை வீணாக்க விரும்பாத நான் இதன் பிறகு உங்களை அழைப்பதில்லை என்று இன்று முடிவு செய்து விட்டேன். இதன் பிறகு நீங்களாக என் காலடி வந்தாலும் கூட உங்களுக்காக என் கதவு திறக்கப்பட மாட்டாதென்பதையும், நீங்கள் ஸூபிஸத்திற்கும், ஸூபிஸ சமூகத்திற்கும் செய்த அநீதிக்கும், அட்டூழியத்திற்கும் அல்லாஹ்விடம் நியாயம் வேண்டியவனாக முடிக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">குறிப்பு: ஜீலீ அவர்களையும், இப்னு அறபீ அவர்களையும் தரக் குறைவாகக் கணித்த இருவரும் மிக விரைவில் இறைவனின் தண்டனைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">முற்றும்.<br />மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ<br />14.03.2022</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2022/03/20/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d%e0%ae%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-5/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உலமாஉகளே!</title>
		<link>https://shumsmedia.com/2022/03/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%89%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/</link>
					<comments>https://shumsmedia.com/2022/03/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%89%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Mar 2022 04:51:42 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=16058</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">நீங்கள் உங்கள் “பத்வா”வை கெய்ரோ அஸ்ஹர் பல்கலைக் கழகத்திற்கும், இன்னும் பல பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பி அவர்களின் அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.</p>
<p style="text-align: justify;">அவர்கள் அங்கீகாரம் தந்துதான் இருப்பார்கள். அவற்றை விடுங்கள். நான் கூட அங்கீகாரம் தந்துதான் இருப்பேன். ஏனெனில் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு மறுப்பெழுதிவிட்டு அதற்கு அங்கீகாரம் கேட்டால் நிச்சயமாகத் தருவார்கள்.</p>
<p><span id="more-16058"></span></p>
<p style="text-align: justify;">நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு மறுப்பெழுதியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால் தந்திரமாக ஒரு வேலை செய்துள்ளீர்கள். உங்கள் அறபு “பத்வா”வில் ஓர் இடத்தில் கூட எனது பெயர் கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழியாக்கத்தில் பல இடங்களில் எனது பெயரைக் குறிப்பிட்டது மட்டுமன்றி தமிழாக்கம் முதலாம் பக்கத்தில் (காத்தான்குடி றஊப் மௌலவீ போன்றோரின் மார்க்க விரோதக் கருத்துக்கள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய Fபத்வா மார்க்கத்தீர்ப்பு) என்று கட்டம் போட்டு பெரிய எழுத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இது உங்களின் சதியா? இல்லையா? அறபு பத்வாவில் இல்லாதது தமிழ் மொழியாக்கத்தில் எவ்வாறு வந்தது? பொது மக்கள் மத்தியில் என்னைக் குற்றவாளியாக காட்டி எனக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலையை ஏற்படுத்துவதற்காகவும், “முர்தத்” கொலை செய்யப்பட வேண்டுமென்று பத்வா வழங்கிய நீங்கள் இன்னார்தான் அந்த “முர்தத்” என்று எதிரிகளுக்கு அடையாளம் காட்டுவதற்காகவும் என் பெயரை தமிழில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுதானே உங்கள் நோக்கம். நெஞ்சில் விரல் வைத்து கூறுங்கள்.</p>
<p style="text-align: justify;">“ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” வழங்கிவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசியவருக்கு அந்த “பத்வா”வை சுமத்தி இவர்தான் ஆளென்று என்னைக் காட்டிக் கொடுத்து பொது மக்களை என்னைக் கொலை செய்யத் தூண்டிய அநீதியாளர்கள்தான் நீங்கள். உலமாஉகள் இவ்வாறு செய்யலாமா? இது ஹறாமான காரியங்களில் மிகக் கடுமையான ஹறாமானது. இவ்வாறு பகிரங்கமாக ஹறாம் செய்த நீங்கள் வேறு “ஹறாம்”களை செய்யமாட்டீர்களா? அல்லாஹ் மிக அறிந்தவன்.</p>
<p style="text-align: justify;">நீங்கள் உங்களின் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு மறுப்பான “பத்வா”வை வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி அங்கீகாரம் பெற்றதாகச் சொல்கிறீர்கள். இன்ஷா அல்லாஹ்! நான் எழுதி வெளியிடவுள்ள “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை சரியான கொள்கையென்று ஆதாரங்களோடு எழுதியுள்ள நூலை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி அவர்களின் அங்கீகாரம் பெற்றுக் காட்டவா? காட்டினால் என்ன சொல்வீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். பதில் தர தயங்குவீர்கள்.</p>
<p style="text-align: justify;">எந்தவொரு பல்கலைக் கழக “முப்தீ” ஆயினும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பொருத்தமாகவே அவர் பதில் – “பத்வா” கொடுப்பார். இதுவே “முப்தீ”களின் வழக்கம். இந்த உலமாஉகள் “வஹ்ததுல் வுஜூத்” என்று எழுதாமல் “ஹுலூல் – இத்திஹாத்” என்று “பத்வா” எழுதிவிட்டு அதற்கு அங்கீகாரம் கேட்டால் நிச்சயமாக யாரும் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய “பத்வா”வுக்கு நானும் கொடுப்பேன். இந்த அறிஞர்கள் செய்த வேலை என்ன தெரியுமா? “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று பத்வா எழுதிவிட்டு அதில் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரைக் குறிப்பிட்டதாகும். பொது மக்கள் இவர்களின் தில்லுமுல்லை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதை எழுதுகிறேன்.</p>
<p style="text-align: justify;">ஒரு வகையில் நோக்கினால் “பத்வா” வழங்கியவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று சரியாகவே வழங்கியுள்ளார்கள். அதை அச்சிடும் பொறுப்பையும், அதற்கான செலவையும் காத்தான்குடி உலமா சபையிடம் கொடுத்திருப்பார்கள் போலும்.</p>
<p style="text-align: justify;">காத்தான்குடி உலமா சபைதான் எனது பெயரை தமிழில் எழுதியிருப்பார்கள் போலும். இதற்கு ஓர் ஆதாரம் என்னிடம் உண்டு.</p>
<p style="text-align: justify;">எனக்கு காத்தான்குடியில் மிக நெருக்கமான ஒரு நண்பர் இருந்தார். மக்கள் அவரை “டபிள் ஏ றாஸிக்” என்றழைப்பார்கள். கொழும்பு பேங்ஷால் வீதியில் கயிற்றுக்கடை என்று அழைக்கப்படும் கட்டிடத்தில் தொழில் செய்து கொண்டிருந்தார். தற்போது அவர் இல்லை. ஒரு நாளிரவு கொழும்பிலுள்ள அவரின் அறையில் நான் அவருடன் தங்கியிருந்த போது விஷயம் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். உங்களுக்கு எதிராக உலமா சபை “பத்வா” கொடுத்துள்ளதாம். அதைப் புத்தகமாக அச்சடிக்க வேண்டும். பண உதவி செய்யுங்கள் என்று கேட்டு வந்தார்கள். தவிர்க்க முடியாத ஒரு சூழலில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன் என்றார். அன்றைய &#8211; 1979ம் ஆண்டின் ஐந்தாயிரம் ரூபாய் இன்று எவ்வளவு இருக்குமென்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இதன் மூலம் “பத்வா” கொடுத்தது கொழும்பு உலமா சபையாயினும் அதை நூலாக அச்சிட்டது காத்தான்குடி உலமா சபையாக இருக்கலாமென்றும், எனது பெயரை முன் பக்கத்தில் பெட்டி வடிவத்தில் கொட்டை எழுத்தில் எழுதியவர்கள் காத்தான்குடி உலமா சபையாக இருக்கலாமென்றும் நான் யோசிக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.</p>
<p style="text-align: justify;">“பத்வா” வழங்கியது கொழும்பு உலமா சபையாயினும் அதை அச்சிட்டு வெளியிட்டவர்கள் காத்தான்குடி உலமாஉகளாயிருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. ஏனெனில் வெளியூர் உலமாஉகளுக்கு என் மீது கோபம் ஏற்படச் சாத்தியமுண்டு. ஆனால் பொறாமை ஏற்படச் சாத்தியம் குறைவு. பொறாமை என்பது எனதூரவர்களுக்கு ஏற்படவே சாத்தியமுண்டு.</p>
<p style="text-align: justify;">قال الجلال السُّيوطي رحمه الله واعلم أنّه &#8216; ما كان كبيرٌ فى عَصـر قطُّ إلّا كان له عدوٌّ من السَّفَلَةِ، إذِ الأشرافُ لم تَزَلْ تُبْتَلَى بِالْأَطْرَافِ &#8216;</p>
<p style="text-align: justify;">நீ புரிந்து கொள்! எந்த ஒரு காலத்திலும் ஒரு பெரிய மனிதன் இருந்தால் அவருக்கு தரம் குறைந்தவர்களில் &#8211; கீழ் சாதிகளில் ஒருவன் பகைவனாகவே இருப்பான். சிறப்புள்ளவர்கள் சிறப்பில்லாதவர்களால் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்) என்று இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">أوحى الله تعالى إلى نبيّه عيسى عليه السلام &#8216; لَا يَفْقِدُ نَبِيٌّ حُرْمَتَهُ إِلَّا فِى بَلَدِهِ &#8216;</p>
<p style="text-align: justify;">அல்லாஹ் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “எந்த ஒரு நபீயும் தனது கண்ணியத்தை தனது ஊரிலேயே இழப்பார்” என்று “வஹீ” அறிவித்தான்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2022/03/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%89%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அன்புப் பொது மக்களே!</title>
		<link>https://shumsmedia.com/2022/03/01/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/</link>
					<comments>https://shumsmedia.com/2022/03/01/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Mar 2022 04:47:42 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=16055</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">“பத்வா” வழங்கிய முல்லாக்கள் தவறு செய்துவிட்டு இப்போது அதை மூடி மறைக்க, அல்லது அது சரியென்று நிறுவ நாயோட்டம் ஓடுகிறார்கள். இவர்கள் “பத்வா” வழங்கிய வேளை இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் என்னவென்று அறிந்திருக்கவில்லை. ஆயினும் ஹுலூல் &#8211; இத்திஹாத் பற்றி அறிந்துதான் இருந்தார்கள். இதனால் நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “ஹுலூல் – இத்திஹாத்” என்று விளங்கி “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்றும், “குப்ர்” என்றும் “பத்வா” வழங்கிவிட்டார்கள். ஆனால் இப்போது அது வேறு, இது வேறு என்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல் தமது கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்ததால் முயல்களுக்கெல்லாம் மூன்று கால்கள்தான் என்று வாதிடுகிறார்கள்.</p>
<p><span id="more-16055"></span></p>
<p style="text-align: justify;">இவர்கள் வழங்கிய அறபு “பத்வா” 32 பக்கங்களில் எந்த ஓர் இடத்திலும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் கூறப்படவே இல்லை. ஆனால் பல இடங்களில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற சொல் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை “ஹுலூல் – இத்திஹாத்” என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று தெளிவாக விளங்குகின்றது.</p>
<p style="text-align: justify;">ஒருவர் வஹ்ஹாபிஸத்தை எதிர்த்து ஒரு “பத்வா” வழங்கினால் அல்லது ஓரு புத்தகம் எழுதினால் அதில் பல இடங்களில் வஹ்ஹாபிஸம் என்ற சொல்லை எழுதுவது வழக்கம். இவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” என்று “பத்வா” வழங்கியதினால்தான் அச்சொல்லை மட்டும் பல இடங்களில் எழுதியுள்ளார்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லை ஓர் இடத்தில் கூட எழுதவில்லை. பொது மக்களாகிய நீங்களும், நான் கூறும் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் உலமாஉகளின் “பத்வா”வை நம்பியிருக்கும் உலமாஉகளும் அவர்களின் அறபு “பத்வா”வை எடுத்துப் பாருங்கள். உண்மை வெளியாகும்.</p>
<p style="text-align: justify;">அன்புப் பொது மக்களே! விஷயம் விளங்காத, அவர்களின் “பத்வா”வை நம்பியுள்ள உலமாஉகளே! நீங்கள் அனைவரும் உலமா சபையின் பிழையான “பத்வா”வை சரியானதென்று நம்பி என்னையும், நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையும் ஏசுகிறீர்கள். அவர்களின் “பத்வா”வில் கூறப்பட்டிருப்பது போல் என்னைக் கொலை செய்யவும் உங்களில் சிலர் நினைக்கிறார்கள். அல்லாஹ் உங்களைக் காப்பாற்ற வேண்டும். நான் கூறும் வஹ்ததுல் வுஜூத் சத்தியக் கொள்கையாகும். அல்லாஹ் அருள் மறையில் சொன்னதாகும். அண்ணலெம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியதாகும். உலகில் தோன்றிய அவ்லியாஉகள் அனைவரும், மற்றும் தரீகாக்களின் தாபகர்களான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் அர் றிபாஈ, கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ, அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அஷ்ஷெய்கு அப்துல் கரீம் ஜீலீ, அஷ்ஷெய்கு ஹாரிதுல் முஹாஸபீ, அஷ்ஷெய்கு இஸ்மாயீல் ஹக்கீ, அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ, அவர்களின் கலீபா அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ, அவர்களின் கலீபா அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ, அஷ்ஷெய்கு ஷுஐப் அபூ மத்யன் அல்மக்ரிபீ மற்றும் ஆரிபீன்கள் (றழியல்லாஹு அன்ஹும்) கூறியதுமாகும்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் எந்த நூலில், எவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்று விபரமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் “வஹ்ததுல் வுஜூத்” சரியான கொள்கையென்று இரண்டாயிரம் பக்கத்தில் “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் ஒரு நூலும் எழுதி தற்போது அதை சரி பிழை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் அச்சிட்டு இலவசமாக வினியோகிப்பேன். அது வெளி வந்தால் உலமாஉகள் உள்ளிட்ட இதய சுத்தியுள்ள அறிஞர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். சிலரின் திரை மறைவில் நின்று அசத்தியத்தை சத்தியமாக்க முயற்சிக்கும் முப்தீகள் அப்போது பொது மக்களால் கரி பூசப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p style="text-align: justify;">ரிஸ்வீ முப்தீ அவர்களே! பத்வா குழுவினரே! இவர்களின் தவறை மறைக்க துணை போகின்றவர்களே! வட்டிலப்ப பார்சலை சுமந்து சென்று இலஞ்சத்துக்கு துணை போனவர்களே!<br /><br />உங்களின் கல்புகளில் அல்லாஹ்வின் அச்சமில்லையா? நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஆதவனை உள்ளங்கையால் மறைக்க முயற்சிக்கும் அறிவிலிகளே! நீங்கள் அனைவரும் பெரும் அநீதியாளர்களே ஆவீர்கள்.</p>
<p style="text-align: justify;">அல்லாஹ்வும், அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின் மூலவர்களாயிருக்கும் நிலையிலும், மேற்கண்ட இமாம்கள், வலீமார், இறைஞானிகள் அதன் விரிவுரையாளர்களாயும் இருக்கும் நிலையில் ஏன் இவ்வாறு பொய் சொல்கிறீர்கள்? உருட்டுப் புரட்டுச் செய்கிறீர்கள்? நீங்கள் எதில் விளையாடினாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் சத்திய இஸ்லாம் கூறும் தத்துவத்தைப் பொய்யாக்குகிறீர்களே இதை எம்மால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">நான் உங்களைப் பல தரம் அழைத்தேன். இப்போதும் அழைக்கிறேன். மேற்கண்ட மகான்கள் எழுதிய கிதாபுகளில் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக் கூறப்பட்டிருப்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். நான் உங்களைப் பயம் காட்டுவதற்காகக் கூறவில்லை. நீங்கள் வாருங்கள். என்னிடமுள்ள நூல்களை உங்களிடமே தந்து நீங்களே பொது மக்களுக்கு விளங்கப்படுத்துமாறு சொல்வேன். அதோடு நானும் சில கேள்விகள் கேட்பேன். அதற்கும் நீங்கள் பதில் கூற வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மீண்டும் சொல்கிறேன். மீண்டும் அழைக்கிறேன். நான் இந்த ஞானத்தில் அல்லாஹ்வின் அருளால் மிகத் தெளிவாக இருக்கிறேன். உங்களுக்கும் கற்றத் தந்து நான் மனம் நிறைவு பெற கொள்ளை ஆசையுடன் உள்ளேன்.</p>
<p style="text-align: justify;">நீங்கள் பிழையை மறைக்க இராப் பகலாக ஓடித்திரிய வேண்டாம். அலையவும் வேண்டாம். பணம் செலவிடவும் வேண்டாம். உங்களில் விளக்கம் குறைந்தவர்களும், மனத்தூய்மையற்றவர்களும் வராமல் திறமையுள்ளவர்களும், மனத் தூய்மையுள்ளவர்களும் வாருங்கள்.</p>
<p style="text-align: justify;">ஒரு மாத காலத்திற்கு முன் என்னிடம் சந்திப்புக்கான நேர காலத்தைப் பெற்றுக் கொண்டு வாருங்கள். திருக்குர்ஆன் கூறும் பகிரங்க சத்தியமொன்றை நீங்கள் பொய்யாக்குவதை என்னால் பொறுக்க முடியாதுள்ளது. நீங்கள் என்னிடம் வந்து இந்த அறிவைக் கற்றுக் கொள்வது இந்த உலகமும், இதிலுள்ளவையும் எனக்குச் சொந்தமாவதை விட அதிகம் சிறந்ததாக நான் கருதுகிறேன்.</p>
<p style="text-align: justify;">உங்களின் சில சூட்சிகளையும், சதிகளையும் எழுதி முடிக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை “குப்ர்” என்று “பத்வா” கொடுத்துவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கு அதைச் சுமத்தியது ஒன்று.</p>
<p style="text-align: justify;">உங்களின் அறபு பத்வாவில் எனது பெயர் எந்த ஓர் இடத்திலும் கூறப்படாதிருக்கும் நிலையில் தமிழ்ப் பகுதியில் மட்டும் என் பெயரை எழுதியது மற்றொன்று.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2022/03/01/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அனைத்து ஆத்மாக்களும் மரணத்தைச் சுவைத்தே தீரும்.</title>
		<link>https://shumsmedia.com/2021/06/16/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3/</link>
					<comments>https://shumsmedia.com/2021/06/16/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jun 2021 11:19:23 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=15424</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ<br />அனைத்து ஆத்மாக்களும் மரணத்தைச் சுவைத்தே தீரும். (திருமறை )</p>
<p style="text-align: justify;">அப்ளலுல் உலமா கலாநிதி அல்ஹாஜ் தைக்கா ஷுஐப் ஆலிம் ஹழ்றத் (MA, PhD, BA Hons) அவர்கள் “தாறுல் பனா”வை விட்டும் “தாறுல் பகா”வை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.</p>
<p style="text-align: justify;"><span id="more-15424"></span>இலங்கைத் திரு நாட்டில் இறை பொருத்தத்தை மட்டுமே நாடி இஸ்லாமிய மார்க்கப்பணி செய்ய வந்த அல் ஆலிமுல் அரூஸ் (மாப்பிள்ளை லெப்பை ஆலிம்) ஸெய்யித் முஹம்மத் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் பரம்பரையில் தோன்றிய தைக்கா ஷுஐப் ஆலிம் ஹழ்றத் (MA, PhD, BA Hons)</p>
<p style="text-align: justify;">(نَوَّرَ اللهُ مَرْقَدَهُ وَعَطَّرَ قَبْرَهُ بِعَطُوْرَاتِ الْعَفْوِ وَالرِّضْوَانِ وَأَسْكَنَهُ الْفِرْدَوْسَ مَعَ أَشْرَفِ الْمَخْلُوْقَاتِ وَأَكْرَمِ الْمَوْجُوْدَاتِ) <br />அவர்களின் பிரிவால் துன்புறும் அன்னாரின் குடும்பத்தினர், முரீதுகள், முஹிப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களின் இழப்பு இலங்கை நாட்டில் மட்டுமன்றி இந்தியாவிலும் கூட ஸுன்னத் வல்ஜமாஅத் சத்தியக் கொள்கை சார்ந்தோருக்கு ஒரு இழப்பாகும்.</p>
<p style="text-align: justify;">مَوْتُ الْعَالِمِ مَوْتُ الْعَالَمِ<br />ஒரு “ஆலிம்” அறிஞனின் மரணம் அது “ஆலம்” அகிலத்தின் மரணமாகும்.</p>
<p style="text-align: justify;"><br />ஸூபிஸ வழி நடக்கும் அன்பர்களே!</p>
<p style="text-align: justify;">اَلْعَارِفُ طَيَّارٌ وَالْعَابِدُ سَيَّارٌ<br />அல்லாஹ்வை அறிந்த ஞானி அவனளவில் பறந்து செல்கிறார். அவனை வணங்கும் வணக்க சாலி நடந்து செல்கிறார் என்ற தத்துவத்தையும்,</p>
<p style="text-align: justify;">مَوْتُ الْوَلِيِّ اِنْتِقَالُهُ مِنْ بَيْتٍ قَدِيْمٍ إِلَى بَيْتٍ جَدِيْدٍ <br />ஒரு வலீயின் மரணம் என்பது அவர் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குச் செல்வதாகும் என்ற தத்துவத்தை மனதில் பதித்து அல்லாஹ்வின் செயலைப் பொருந்திக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகிறேன்.</p>
<p style="text-align: justify;">எல்லாம் வல்ல இறையோன் அன்னாரின் தூய்மையான மாரக்கப்பணிகளை “கபூல்” செய்து அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிமயமாக்குவானாக! ஆமீன்!</p>
<p style="text-align: justify;">என்றும் நித்திய ஜீவன் அல்லாஹ் மாத்திரமே! அவனுக்கு என்றும் மரணமில்லை. மனிதனின் இறப்பும், பிறப்பும் அவன் “தஜல்லீ”யே அன்றி வேறில்லை.</p>
<p style="text-align: justify;">காதிமுல் கவ்மி,<br />மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ<br />16.06.2021</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/06/16/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தற்காலிக இடை நிறுத்தம் பற்றிய அறிவித்தல்</title>
		<link>https://shumsmedia.com/2020/10/27/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b1%e0%ae%aa%e0%af%80%e0%ae%89%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c/</link>
					<comments>https://shumsmedia.com/2020/10/27/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b1%e0%ae%aa%e0%af%80%e0%ae%89%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Oct 2020 13:05:04 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.shumsmedia.com/?p=13318</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;"><br />அன்புப் பொதுமக்களுக்கு,</p>
<p style="text-align: justify;">அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறாகாதுஹு</p>
<p style="text-align: justify;">நாட்டில் தற்போது நிலவும் Covid &#8211; 19 கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு <span id="more-13318"></span>காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ், பாலமுனை ஸூபி மன்ஸில் தைக்கா ஆகிய ஸ்தாபனங்களில் நடைபெற்று வருகின்ற புனித றபீஉனில் அவ்வல் மஜ்லிஸ் நிகழ்வுகளும், எதிர்வரும் 29.10.2020 அன்று நடைபெறவிருந்த கந்தூரி நிகழ்வுகளும், காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் எதிர்வரும் 30.10.2020 அன்று நடைபெறவிருந்த புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.</p>
<p style="text-align: justify;"><br /><span style="font-size: inherit;">நிர்வாகம்</span><br />அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/10/27/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b1%e0%ae%aa%e0%af%80%e0%ae%89%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒரு வேண்டுகோள்.</title>
		<link>https://shumsmedia.com/2020/08/16/%e0%ae%b8%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b8-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
					<comments>https://shumsmedia.com/2020/08/16/%e0%ae%b8%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b8-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Aug 2020 10:56:46 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.shumsmedia.com/?p=12970</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த அன்புக்குரிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்,</p>
<p style="text-align: justify;">அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.</p>
<div class="text_exposed_show">
<p style="text-align: justify;">ஏகனாம் அல்லாஹ் தனது ஹபீப் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொருட்டாலும், இறை நேசர்களாம் அவ்லியாஉகளின் பொருட்டாலும் நம்மனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.<span id="more-12970"></span></p>
<p style="text-align: justify;">நமது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த சிலர், கொள்கையில் நமக்கு எதிரான உலமாஉகள், அரசியல்வாதிகளிற் சிலரின் மனங்கள் வேதனைப்படும் வகையில் சமுக ஊடகங்கள் மூலம் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருவதாக எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன.</p>
<p style="text-align: justify;">நாம் முஸ்லிம்களில் ஸூபிஸ வழி நடக்கும் உன்னதமானவர்களாதலால் எதையும் தாங்கும் இதயங்களுடையவர்களாகவும், பிறர் நமக்குச் செய்யும் குற்றங்களை மன்னிப்பவர்களாகவும், பழிவாங்கல், கிண்டல் செய்தல், இழித்துரைத்தல் போன்ற தீச் செயல்கள் எதையும் செய்யாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். ஸூபீகளான நம் வாழ்வு மற்றவர்களின் வாழ்வுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். வண்டில் பாரம் பூமிக்கு என்று முன்னோர்கள் சொன்னது போல் ஸூபிஸ சமூகத்தவர்களில் தீவிரப் போக்குடையவர்களால் ஏற்படுகின்ற பொருத்தமற்ற எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் தலைமைக்கு தலைவலி ஏற்படுவதால் இன்றிலிருந்து எவரும், எவரையும் எழுத்தாலோ, பேச்சாலோ வேதனைப்படுத்த வேண்டாமென்று அனைவரையும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.</p>
<p style="text-align: justify;">ஸூபீ மகான் அபூபக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு வழியால் சென்றபோது பழம் நிறைந்த மரம் ஒன்று அவர்களை நோக்கி<br />يا شبلي كن مثلي، الناس يرمونني بالأحجار وأنا أرميهم بالأثمار</p>
<p style="text-align: justify;">ஷிப்லீ மகானே! நீங்கள் என்போன்று இருந்து கொள்ளுங்கள். மனிதர்கள் எனக்கு கற்களால் எறிகிறார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு பழங்களால் எறிந்து கொண்டிருக்கிறேன் என்று அறிவுரை வழங்கிய வரலாறையும், ஸூபிஸ ஞானி ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் சிஷ்யர்களோடு ஒரு வழியால் சென்ற நேரம் ஓர் எதிரி அவர்களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் சாடினான். பின்னால் சென்ற சிஷ்யர்கள் நாயகமே! இவன் தங்களை ஏசுகிறான் என்று கூறினார்கள். இப்னு அறபீ நாயகம் அவர்களிடம் அவன் தன்னைத் தான் ஏசுகின்றான் என்னை ஏசவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள் என்ற வரலாறையும் சிந்தனையிற் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்.</p>
<p style="text-align: justify;">அவ்லியாஉகள் செய்த பொறுமை உங்களுக்குப் பாடம் புகட்டாது போனாலும் இதுகாலவரை இந்தப் பாவி செய்த பொறுமையும், தற்போது செய்து வருகின்ற பொறுமையும் உங்களுக்கு ஒரு பாடத்தை புகட்டும். ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும்.</p>
<p style="text-align: justify;">1980களில் எனது நண்பர்கள் பலருடன் காத்தான்குடி ஊர் வீதியால் சென்று கொண்டிருந்தேன். ஹிழ்ரிய்யா பள்ளிவாயலுக்கு முன்னால் எனது நீண்டகால நண்பர் ஒருவர் நின்றிருந்தார். அவருக்கு ஸலாம் சொன்னேன். அவர் வெட்டும் பன்றி போல் என்னைப் பார்த்து பற்களைக் கடித்துக் கொண்டு வணக்கம் என்றார். எனக்குப் பின்னால் என்னைத் தொடர்ந்து வந்த எனது நண்பர்களுக்கு அவர் சொன்ன பதில் கேட்கவில்லை. நானும் அவர்களிடம் சொல்லவுமில்லை. சொல்லியிருந்தால்&#8230;&#8230;</p>
<p style="text-align: center;">பொறுமை போல் ஆலோசனை கூறுபவர்கள் யாருமில்லை. (மௌலானா ரூமீ)</p>
<p style="text-align: center;">பொறுத்திருப்போம் வெற்றி நிச்சயம்.</p>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/08/16/%e0%ae%b8%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b8-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“வஹ்ததுல் வுஜூத்” மெய்ப்பொருள் ஒன்றே!</title>
		<link>https://shumsmedia.com/2020/08/16/%e0%ae%b5%e0%ae%b9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%81%e0%ae%9c%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/</link>
					<comments>https://shumsmedia.com/2020/08/16/%e0%ae%b5%e0%ae%b9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%81%e0%ae%9c%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Aug 2020 10:52:25 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.shumsmedia.com/?p=12966</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பிழை என்றும், “குப்ர்” நிராகரிப்பு என்றும், “ஷிர்க்” இணை வைத்தல் என்றும் கூறி வருகின்ற மார்க்க அ<span class="text_exposed_show">றிஞர்களுக்கான இறைஞான இலவச வகுப்புக்கள்.</span></p>
<div class="text_exposed_show">
<p style="text-align: justify;">“வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்ற இஸ்லாமிய ஸூபிஸ ஞான தத்துவம் பிழை என்றும், “குப்ர்” என்றும் கூறிவருகின்றவர்களுக்கான இலவச ஞான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.<span id="more-12966"></span></p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு மாதமும் முதல் வருகின்ற சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை “தெளிவு” என்ற தலைப்பில் நடைபெறும். தொடராக ஐந்து மாதங்களில் 15 மணித்தியாலங்கள் நடைபெற்று குறித்த அமர்வு நிறைவு பெறும்.</p>
<p style="text-align: justify;">உலமாஉகளில் 50 பேர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். வெளியூர் மௌலவீமாருக்கு மட்டும் பிரயாணச் செலவும், பேரூந்துக் கட்டணமும் வழங்கப்படும்.</p>
<p style="text-align: justify;">கலந்து கொள்வோருக்கான நிபந்தனைகள்:</p>
<p style="text-align: justify;">01. அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அறபுக் கல்லூரிகளில் மௌலவீ தராதரப் பத்திரம் (certificate) பெற்றவர்களாயிருத்தல். விண்ணப்பக் கடிதத்துடன் “மௌலவீ ஷஹாதா” certificate இணைக்கப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">02. யாராவது ஒரு ஞானகுருவிடம் “பைஅத்” பெற்றவராயிருத்தல். அதற்கான ஆதாரமும் இணைக்கப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">03. “காதிரிய்யா தரீகா”வின் தாபகரான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, “ரிபாஇய்யா தரீகா”வின் தாபகரான அஸ் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாயீ, “ஷாதுலிய்யா தரீகா”வின் தாபகரான அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ, “அக்பரிய்யா தரீகா”வின் தாபகரான அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களையும், மற்றும் அஷ்ஷெய்கு ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ, அஷ்ஷெய்கு தாஜுத்தீன் அதாஉல்லாஹ், அஷ்ஷெய்கு அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களையும் இஸ்லாமிய தத்துவ மேதைகள் என்றும் ஏற்றுக் கொண்டவர்களாயிருத்தல்.</p>
<p style="text-align: justify;">மேற்கண்ட மூன்று நிபந்தனைகள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 27.08.2020</p>
<p style="text-align: justify;">அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு<br />(Incorporated by act of parliament 46 of 2009)<br />BJM வீதி, காத்தான்குடி 06.</p>
<p style="text-align: justify;">மேலதிக விபரங்களுக்கு பின்வரும் கைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்க.</p>
<p style="text-align: justify;">077 377 1414, 0773 186 146</p>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/08/16/%e0%ae%b5%e0%ae%b9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%81%e0%ae%9c%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதா? உலமா சபையின் கட்டளைக்கு அடிபணிவதா?</title>
		<link>https://shumsmedia.com/2020/03/18/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85/</link>
					<comments>https://shumsmedia.com/2020/03/18/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2020 14:10:15 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/?p=12602</guid>

					<description><![CDATA[இது ஓர் அவசர சிகிச்சை மட்டும்தான். விரிவான சிகிச்சை இன்னும் சில தினங்களில்… وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ، அன்றியும் அல்லாஹ்வுடைய “மஸ்ஜித்”களில் அவனுடைய பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவர்களை விட மகா அநியாயக்காரன் யார்? ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="6d2mc" data-offset-key="4h9go-0-0">
<p>இது ஓர் அவசர சிகிச்சை மட்டும்தான்.</p>
<p>விரிவான சிகிச்சை இன்னும் சில தினங்களில்…</p>
<p>وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ،</p>
<p>அன்றியும் அல்லாஹ்வுடைய “மஸ்ஜித்”களில் அவனுடைய பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவர்களை விட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு. மறுமையிலோ அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு. (திருக்குர்ஆன் – 02:114)</p>
<p><span id="more-12602"></span></p>
<p>அன்புப் பொதுமக்களுக்கு.</p>
<p>அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.</p>
<p>“கொரோனா வைரஸ்” தாக்கிவிடாமலிருப்பதற்காக அல்லாஹ்வின் இல்லங்களான பள்ளிவாயல்களில் ஐங்காலத் தொழுகை, வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகை, மற்றும் மார்க்க அனுஷ்டானங்கள் நடைபெறக்கூடாதென்று சொல்வதற்கும், முஸ்லிம்களைத் தடை செய்வதற்கும் உலமா சபைக்கு எந்த ஓர் அதிகாரமுமில்லை. இவ்வாறு தடை செய்பவர்கள் அநீதியாளர்களும், அல்லாஹ்வின் கட்டளையை மீறிச் செயல்படுபவர்களுமேயாவர்.</p>
<p>யுத்த களத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கூட தொழ வேண்டுமென்றும், அதற்காக விஷேட அமைப்பிலான “ஸலாதுல் கவ்பி” என்று ஒரு தொழுகை உண்டென்றும் இஸ்லாம் – திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் – கூறிக் கொண்டிருக்கும் நிலையில் “கொரோனா வைரஸ்” தாக்கிவிடுமென்பதற்காக அல்லாஹ்வின் கட்டளையை மீறி புதியதோர் மார்க்கம் கொண்டுவந்துள்ள உலமா சபையினரை – பத்வா குழுவினரை மகா அநீதியாளர்கள் என்று கூறாமல் வேறெவ்வாறு கூறுவது? அல்லாஹ் இவர்களை “அள்லம்” என்ற சொல் கொண்டு மிக அநீதியாளர்கள் என்று வருணித்திருப்பது இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து இவர்கள் யாரென்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.</p>
<p>அல்லாஹ் இவர்களை அநீதியாளர்கள் என்று கூறியிருப்பதால் நாம் இவர்களை நீதியாளர்கள் என்று வருணிப்பது அவனுக்கு மாறு செய்வதாக ஆகிவிடும்.</p>
<p>அநீதியாளர்களே!</p>
<p>இலங்கைத் திரு நாட்டில் கசடறக் கற்ற “ஹஸ்றத்”மார்களும், சட்டக்கலையில் விற்பன்னர்களான “புகஹாஉ” சட்ட மேதைகளும் இருக்கும் நிலையில் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ள ஒரு சிலரை – குறை குடங்களை – மட்டும் வைத்துக் கொண்டு “பத்வா” வழங்கி நாட்டு மக்களிடையே பிளவையும், மனக்கசப்பையும், பிரச்சினையையும் தோற்றுவிக்கும் உங்களை நினைத்துச் சிரிப்பதா? அழுவதா? சிரிப்பதாயினும் சும்மா சிரிக்க முடியாது. கை கொட்டியும், மேளதாளம் அடித்துமே சிரிக்க வேண்டும். அழுவதாயினும் ஊர், உலக மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கியில் ஒப்பாரி வைத்தே அழவேண்டும். உங்களின் அறியாமையை என்னென்பது?</p>
<p>“பத்வா” வழங்கும் அதிகாரமே உங்களுக்கு இல்லாத நிலையில் ஸூபிஸம் பேசிய எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று அந்தகர்கள் போலும், அறிவற்ற முண்டங்கள் போலும் “பத்வா” வழங்கி நாற்பதாண்டுகளாக எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் தீர்ப்புக் கூறி, குண்டிக்குத்துணியற்ற, உண்டிக்கும் உணவற்ற காடையர்களை மார்க்கத்தின் பெயரால் கொலைக்குத் தூண்டியும் வருகிறீர்கள்.</p>
<p>உங்கள் “பத்வா”வின் பின்னணிதான் மௌலவீ MSM. பாறூக் காதிரீ அவர்கள் கொலை செய்யப்பட்டதும், என்னைக் கொலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய ஒன்பது பேர்களைக் கொண்ட குழுவொன்று எனது அலுவலகத்திற்கு வந்து 34 வேட்டுக்கள் வைத்ததும் என்பதை காத்தான்குடியிலுள்ள சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட அனைவரும் அறிவர்.</p>
<p>எனவே, கண்களை மூடிக் கொண்டு “பத்வா” கொடுத்துவிடாமல் ஸுன்னீ உலமாஉகளில் தரமானவர்களையும் அழைத்து ஆலோசனை பெற்றுச் செயல்படுங்கள்.</p>
<p>“கொரோனா வைரஸ்” தாக்கிவிடாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்பது நியாயமானதே. அதற்காக அல்லாஹ்வின் பள்ளியில் வணக்கத்திற்காக அவர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்காமலும், அல்லாஹ்வின் அருள் வீடான பள்ளிவாயலை பாழ் வீடாக பொது மக்களுக்கு ஆக்கும் முயற்சியை கைவிட்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்படாமலிருப்பதற்கான வழிகளை முதலில் கற்றுக் கொடுத்து தொழுகையையும், மார்க்க அனுஷ்டானங்களையும் பள்ளிவாயல்களில் நடத்துவதற்கு வழி காட்டுங்கள்.</p>
<p>உங்களை அல்லாஹ்வின் பயங்கர சோதனை அல்லது தண்டனை தாக்குமுன் “பத்வா”வை வாபஸ் பெற்று “தவ்பா” செய்து கொள்ளுங்கள். பள்ளிவாயல்களைப் பாழாக்கும் வஹ்ஹாபிகளின் திட்டத்திற்கு வழி செய்யாமல் “கொரோனா”வை விட வஹ்ஹாபிஸம் கடுமையான “வைரஸ்” என்பதை புரிந்து செயல்படுங்கள். “கொரோனா”வின் தாக்கத்தால் பீற்றற்றுருத்திதான் அழியும். அது அழிய வேண்டியதுதான். ஆயினும் வஹ்ஹாபிஸம் என்ற “வைரஸ்” ஆன்மீகத்தையே அழித்துவிடும். இது உங்களுக்குத் தெரிந்த விடயம்தான். என்ன செய்வது “துன்யா” ஹால் விழாங்காய்ப் பால்”</p>
<p>لَا تَحْصُلُ الدُّنْيَا إِلَّا بِحِيْلَةٍ</p>
<p>குறிப்பு: இஸ்லாமும், தொற்று நோயும் என்ற பெயரில் எமது விரிவான விளக்கத்தை எதிர்பாருங்கள்.</p>
<p>காதிமுல் கவ்மி,<br />
மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ<br />
தலைவர்: அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா<br />
காத்தான்குடி. 06<br />
கைபேசி: 0777 733 786.<br />
17.03.2020</p>
<p>اَللهم احْفَظْ أَبْنَاءَ هَذِهِ الدَّوْلَةِ سِرِيْلَانْكَا، مِنْ كُرُوْنَا فَايْرَسْ وَمِنْ مَرَضِ السَّرَطَانْ،<br />
اَللهم بَارِكْ فى معيشة العلماء – علماء الآخرة، بركةواسعة، الّذين طهّرُوا قلوبهم من الأخلاق المذمومة، وزكّوها من الأنجاس الحسّيّة والمعنويّة، والأخلاق السّباعيّة، من الكِبر والعُجب والسُّمعة والغيريّة والأنّيّة والأنانيّة والغضب وحبّ الجاه والخيانة، ومِن بَطَرِ الحقّ وغَمط النّاس والحيلة الثعلبيّة،</p>
<p>اللهم لا تبارك فى معيشة علماء هذه الدّنيا الدّنيّة، الّذين ملؤوا قلوبهم بالنّجاسات المذكورة، وخانُوا القائلين بعلم التصوّف وعلم وحدة الوجود، وأفتوهم بالردّة وردّة أتباعهم الّذين صدّقوا أقوالهم وآمنوا بعقائدهم، وأباحوا دمائهم وأموالهم وأفتوا بجواز قتلهم وحرّضوا النّاس والفاسقين على قتلِهم ونهَبِ أموالهم، كما كتبوا فى فتواهم،</p>
<p>اللهم لا تبارك أيضا فى معيشة الوهّابيّين الّذين خالفوا الكتاب والسنّة وخالفوا عقائد أهل السنّة والجماعة، وعقائد أهل التصوّف، وعقائد أهل وحدة الوجود، وهدموا مراقد الأولياء وعتباتهم المقدّسة، ومنعوا النّاس من زيارتهم والتوسّل بهم وتعظيم قبورهم، وفجّروا القنبلات فى الفنادق والكنائس ومعابد أهل هذه الدولة،</p>
<p>اللهم أعْلِ درجات علماء الآخرة عندك، واحفظهم واحفظ من تبعهم واحفظ الصوفية الصافية من الأمراض المخوفة ومن مرض السّرطان ومن موت الفجأة، واحفظهم واحفظ عيالهم وأولادهم من كُرُوْنَا فايرس، وصلّى الله وسلّم على سيّدنا محمد وآله وصحبه أجمعين، والحمد لله ربّ العالمين،</p>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/03/18/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
