<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வலீமார்களின் வரலாறுகள் &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<atom:link href="https://shumsmedia.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://shumsmedia.com</link>
	<description>Islamic Tamil Sufi Site in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 16 Mar 2023 16:58:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://shumsmedia.com/wp-content/uploads/2024/10/cropped-006235-32x32.png</url>
	<title>வலீமார்களின் வரலாறுகள் &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<link>https://shumsmedia.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புலவர் சுல்தான் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மனக்குமுறல்.</title>
		<link>https://shumsmedia.com/2023/03/16/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d/</link>
					<comments>https://shumsmedia.com/2023/03/16/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 16:58:37 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=18745</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">(கண்டனம்)</div>
<div dir="auto">இராகம் &#8211; அடானா &#8211; சாப்பு தாளம்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பல்லவி</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மீசையுள்ளாண் பிள்ளைச் சிங்கங்களென் கூட</div>
<div dir="auto">வெளியினில் வாருங்கள் காணும்</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அனு பல்லவி</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நாசி நிரம்பவுமயிர்தா &#8211; னிரண்டுகால்</div>
<div dir="auto">நடுவினு மொரு கூடை மயிர்தான்</div>
<div dir="auto">ரோசங்கெடுவார்களென்கடைமயிர்தான் &#8211; குணங்</div>
<div dir="auto">குடி கொண்டாலென்னுயிர்க் குயிர்தான். (மீசை)</div>
<div dir="auto"> </div>
</div>
<p><span id="more-18745"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">சரணங்கள்</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">படிக்கும் படி நடக்கப் படிக்காலோபிகள் மோஷப்</div>
<div dir="auto">பதமற்றுப் போனாலும் போகட்டும் &#8211; அவர்</div>
<div dir="auto">முடிக்கு முடிதரித்து முடிய முடிய வாழ்ந்து</div>
<div dir="auto">முடிந்து முடி போனாலும் போகட்டும் &#8211; இன்னுங்</div>
<div dir="auto">குடிக்கக் கஞ்சியுமற்றுக் குண்டிக்கும் துணியற்றுக்</div>
<div dir="auto">குருடராய்ப் போனாலும் போகட்டும்</div>
<div dir="auto">அடித்தாலு மெலும்பெலாமொடித்தாலுமவர்க்கஞ்சேன்</div>
<div dir="auto">அடித்தாலடித்துக் கொண்டு போகட்டும்</div>
<div dir="auto">கெடுவார்களென் கடைமயிர்தான் &#8211; குணங்</div>
<div dir="auto">குடி கொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மடையரெல்லாங் கூடிக் கூத்தாடிக் கூத்தாடி</div>
<div dir="auto">வையாளி போட்டாலும் போடட்டும் &#8211; இன்னும்</div>
<div dir="auto">விடிய விடியப் பரத்தையர் மடிகளில்</div>
<div dir="auto">விளையாடினும் விளையாடட்டும் &#8211; கள்ளுக்</div>
<div dir="auto">குடியரெல்லாம் கள்ளைக் குடித்துக் குடித்தவர்கள்</div>
<div dir="auto">குடிகெட்டுப் போனாலும் போகட்டும் &#8211; ஞானம்</div>
<div dir="auto">படியாரெல்லாம் என்னைப் பழித்துப் பழித்துக் கொண்டு</div>
<div dir="auto">பகைத்தால் பகைத்துக் கொண்டு சாகட்டும் &#8211; அந்தக்</div>
<div dir="auto">கெடுவார்களென் கடை மயிர்தான் &#8211; குணங்</div>
<div dir="auto">குடி கொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நெடுமரம் போலோங்கி வளர்ந்தும் அறிவற்றவர்</div>
<div dir="auto">நெருப்புண்ணப் போனாலும் போகட்டும் &#8211; அவர்</div>
<div dir="auto">இடுகுட்டிச் சுவரைப் போல் இருந்தென்ன இறந்தென்ன</div>
<div dir="auto">எப்படிப் போனாலும் போகட்டும் &#8211; இன்னும்</div>
<div dir="auto">கொடும்பு மிடும்பும் வம்புங் குடிகேடுங்குடி கொண்டு</div>
<div dir="auto">கூத்தாடினாலுங் கூத்தாடட்டும் &#8211; என்னை</div>
<div dir="auto">மடியிற்கை போட்டிழுத் தலகினாலடி போட்டு</div>
<div dir="auto">மல்லாடினாலு மல்லாடட்டும் &#8211; அந்தக்</div>
<div dir="auto">கெடுவார்களென் கடைமயிர்தான் &#8211; குணங்</div>
<div dir="auto">குடி கொண்டாலென்னுயிர்க் குயிர்தான். (மீசை)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">கடுநாய்க் குட்டிகளான படு சுட்டி கண் மாமாயைக்</div>
<div dir="auto">கதவிடுக் கினிற்பட்டே சாகட்டும் &#8211; புலிக்</div>
<div dir="auto">கடு நாய்க்குங் கொடிதான படுபோக்கிலிகள் சும்மா</div>
<div dir="auto">கடு நரகில் விழுந்தே வேகட்டும் &#8211; சுற்றக்</div>
<div dir="auto">கெடு பூண்டாக முளைத்த கொடுமாடு பிடுங்கிகள்</div>
<div dir="auto">கெடுபூண்டு களாய்த்தானே போகட்டும் &#8211; இன்னும்</div>
<div dir="auto">நெடுமரம் போற் கொத்த மடவேப்பாக்குடிக்கிகள்</div>
<div dir="auto">நெடுமரம் போற்றானே யாகட்டும் &#8211; அந்தக்</div>
<div dir="auto">கெடுவார்களென் கடைமயிர்தான் &#8211; குணங்</div>
<div dir="auto">குடிகொண்டாலென்னுயிர்க்குயிர்தான். (மீசை)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மேற்கண்ட பாடல் சென்னை ராயபுரத்தில் அடக்கம் பெற்றுள்ள “குணங்குடி மஸ்தான்” என்று பிரசித்தி பெற்ற அதியற்புதம் நிகழ்த்தும் ஸுல்தான் அப்துல் காதிர் ஆலிம் புலவர் அவர்களின் உள்ளக் குமுறலாகும். இதைப் பதிவிட்ட எனது உள்ளக் குமுறல் அல்ல.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவர்கள் தங்களின் திருமணத்தன்று எவருக்கும் தெரியாமல் ஒழித்தோடி மறைந்து இறைஞானமெனும் மதுவருந்தி இறை போதையில் காடுகளிலும், நாடுகளிலும் அலைந்து திரிந்த இறைஞானியாவார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவர்களின் வரலாற்றை அறிய விரும்புவோர் அறிஞர் அப்துர் றஹீம் அவர்களின் “வலீமார்கள் வரலாறு” எனும் நூலில் பார்க்கலாம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பதிவிட்டவர்,</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">காதிமுல் கவ்மி,</div>
<div dir="auto">மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ</div>
<div dir="auto">16.03.2023</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/03/16/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் குத்பு நாயகம், ஷெய்குல் அக்பர் நாயகம் றழியல்லாஹு அன்ஹுமா இருவரின் கந்தூரிகள் (03.12.2021 &#8211; 05.12.2021) ஒரே நேரம் நடைபெறுவதை முன்னிட்டு அவர்களின் நினைவாக இக்கட்டுரை வெளியாகிறது.</title>
		<link>https://shumsmedia.com/2021/12/10/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c/</link>
					<comments>https://shumsmedia.com/2021/12/10/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Dec 2021 04:33:22 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=15958</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</p>
<p style="text-align: justify;">பர்தானிய்யத்திலோ ஸுப்ஹானியெத்தெனப் <br />பகர் பரா மரமதனிலோ<br />பற்பல விதங் கொண்ட அஃயானியத்திலோ<br />பரிபூரணந்தன்னிலோ<br />அரிதான தாத்திலோ அலிபெனுஞ் சுகவாரி<br />யாவும் நுக்தாவதனிலோ<br />அஹ்லுல் உலாவான ஆலமலகூத்திலோ<br />ஆலம் அஸ்பல் தன்னிலோ<br />குறிகுணாத் தீதவட்டாங்கயோகத்திலோ<br />கோடானு கோடி மறையாற்<br />கூறரிய சிவராசயோகத்திலோ வருட் <br />குறையாப் பெருங்கடலிலோ<br />நரலை நிகரருளாளனே நீயிருப்பதிந்<br />நாயினேற் கருள் செய்குவாய்<br />நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு<br />நாதன் முஹ்யித்தீனே!</p>
<p style="text-align: center;"><span id="more-15958"></span>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p style="text-align: justify;">அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்<br />ளடக்கி விளையாட வல்லீர்<br />அகிலமீரேழினையுமாடுங்கறங்கு போ<br />லாட்டி விளையாட வல்லீர்<br />மண்டலத் தண்டரையழைத்தரு கிருத்தியே<br />வைத்து விளையாட வல்லீர்<br />மண்ணகமும், விண்ணகமுமணுவைத்துளைத்ததின்<br />மாட்டி விளையாட வல்லீர்<br />கண்டித்த கடுகிலெழுகடலைப் புகட்டிக்<br />கலக்கி விளையாட வல்லீர்<br />கருதரிய சித்தலாம் வல்ல நீரடிமையென் <br />கண்முன் வருசித்தில்லையோ<br />நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர்<br />நல்லடிக்களாக்கியும்<br />நற்குணங் குடி கொண்ட பாதுஷாவான குரு <br />நாதன் முஹ்யித்தீனே!<br />&#8212;&#8211;</p>
<p style="text-align: justify;">ஐயோ வெனைப் போலுமாபெரும் பாவியிவ்<br />வகிலத்தி லெங்குமிலையே<br />அநியாய மனியாய மென்பெரும் பாதகம்<br />யார் பால் எடுத்தோதுவேன்<br />மையான கண்ணியர் வலைக்குள்ளகப்பட்ட<br />மாபாவி நீ பாவியான்<br />மஹ்பூபு ஸுப்ஹானியான வுமை நாடாத<br />மடமை குடி கொண்ட பாவி<br />பொய்யான வாழ்வதனை மெய்யாக நம்பியுன்<br />பொன்னடி மறந்த பாவி<br />பொல்லார்கள் நேசமேயல்லாது நல்லோர் <br />புறக்கணித்திட்ட பாவி<br />நையுமோர் பொய்யுலகனாகியேயுமதடிமை<br />நாயினுங்கடையாவனோ<br />நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு<br />நாதன் முஹ்யித்தீனே!<br /><br />குணங்குடியில் பிறந்து சென்னை ராயபுரத்தில் அடக்கம் பெற்று வாழ்கின்ற அதி சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாழில் அப்துல் காதிர் ஞானப் புலவர், ஞான மகான், ஆஷிகே முஹ்யித்தீன் அப்துல் காதிர் றஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்கண்ட பாடல்கள் அவர்களின் பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல்களாகும்.</p>
<p style="text-align: justify;">மேற்கண்ட அவர்களின் பாடல்களில் முதலாம் பாடலில் இறைவனைப் புகழ்கிறார்கள். இரண்டாம் பாடலில் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் எனும் தனது ஞானகுருவை விழித்து அவர்களின் வல்லமையை இயம்புகிறார்கள். மூன்றாவது பாடலில் தன்னை இழிவு படுத்திப் பாடியுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">நான் சிறுவனாயிருந்த காலத்திலிருந்தே குணங்குடி மஸ்தான் அவர்கள் மீது எனக்கு ஒருவகை “மஹப்பத்” அன்பு இருந்து வந்தது. சுமார் 70 வருடங்களுக்கு முன் அதாவது 1953ம் ஆண்டளவில் மஸ்தான் அவர்களின் பாடல் புத்தகமொன்று எனது தந்தையின் அலுமாரியில் இருந்து எடுத்து அதை தினமும் படித்துக் கொண்டிருந்தேன்.</p>
<p style="text-align: justify;">ஒரு நாள் நான் பாடிக் கொண்டிருந்த சமயம் என் தந்தை என் தாயை அழைத்து மஸ்தான் ஸாஹிபுவின் பாடல் கேட்கிறதே! யார் பாடுகிறார்? என்று கேட்டபோது உங்கள் மகன்தான் பாடுகிறான் என்றார்கள் என் தாய். தந்தை ஒன்றுமே சொல்லவில்லை. தந்தையின் மௌனம் எனக்கு அனுமதி வழங்கியது போலிருந்தது. அன்று முதல் மஸ்தான் அவர்களின் பாடல்களைப் பாடுவதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன்.</p>
<p style="text-align: justify;">நான் சிறுவனாயிருந்த காலத்தில் மஸ்தான் ஸாஹிபு அவர்களின் பாடல் புத்தகத்தை வயோதிபர்கள் மட்டுமே வாசிப்பார்கள். பாடுவார்கள். அப்பாடல் நூலை இளைஞர்கள் பார்க்காமல் முதியவர்கள் அவர்களைத் தடை செய்வார்கள். தொடர்ந்து அவர்களின் நூலை &#8211; பாடலைப் பாடி வருபவர்கள் உலகைத் துறந்து துறவியாகிவிடுவார்கள் என்ற ஓர் அபிப்பிராயம் அக்காலத்தில் இருந்து வந்தது.</p>
<p style="text-align: justify;">மஸ்தான் அப்பா அவர்கள் மேற்கண்ட அவர்களின் இரண்டாவது பாடலில் குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அவர்களின் வல்லமைகள் பற்றிக் கூறியுள்ளார்கள். அவர்கள் எவ்வாறு சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்போம்.</p>
<p style="text-align: justify;">அண்ட கோடிகள் அனைத்தையும் அதாவது சகல படைப்புக்களையும் பந்துபோல் தங்களின் கைக்குள்ளடக்கி விளையாடும் சக்தியுள்ளவர்கள் என்று அவர்களைப் புகழ்கிறார்கள். இவ்வாறு புகழ்வதற்குத் தகுதியுள்ளவன் அல்லாஹ் மட்டுமேயாவான். வேறு எவராலும் அவ்வாறு செய்ய முடியாது. அல்லாஹ்வினால் மட்டும் செய்யக் கூடிய ஒரு விடயத்தை அவனின் படைப்புடன் சேர்த்துச் சொல்வது விசுவாசத்திற்கு முரணானதுமாகும். அது மட்டுமல்ல. இவ்வாறு சொல்வது கொள்கை அடிப்படையில் முற்றிலும் பிழையானதாகும். ஏனெனில் அல்லாஹ் தவிர வேறு எவராலும் சர்வ சிருட்டிகளையும் பந்து போல் கைக்குள்ளடக்க முடியாது. இப்படியொரு சக்தி மனிதனுக்கு உண்டு என்று சொல்வது “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்தும் சொல்லாகும். மஸ்தான் அவர்கள் குத்பு நாயகமவர்களை அவ்வாறு புகழவில்லை என்றாலும் கூட குத்பு நாயகம் அவர்கள் தன்னைப் பற்றிச் சொல்வதைக் கவனியுங்கள்.</p>
<p style="text-align: right;">بِلَادُ اللهِ مُلْكِيْ تَحْتَ حُكْمِيْ &#8211; وَوَقْتِيْ قَبْلَ قَبْلِيْ قَدْ صَفَا لِيْ</p>
<p style="text-align: justify;">அல்லாஹ்வின் தேசங்கள் எனது சொத்தாகும். அவை எனது ஆட்சியின் கீழ் உள்ளன. எனது நேரம் நான் தோன்றுவதற்கு முன்னேயே எனக்குத் தெளிவாகிவிட்டது.</p>
<p style="text-align: right;">نَظَرْتُ إِلَى بِلَادِ اللهِ طُرًّا (جَمْعًا) &#8211; كَخَرْدَلَةٍ عَلَى حُكْمِ اتِّصَالِيْ</p>
<p style="text-align: justify;">நான் இறைவனுடன் ஒன்றித்த தீர்ப்பின் படி சகல ஊர்களையும், தேசங்களையும் ஒரு கடுகைப் பார்ப்பது போல் பார்க்கிறேன்.</p>
<p style="text-align: justify;">மேற்கண்டவாறு குத்பு நாயகம் சொல்லியுள்ளார்கள். இவ்வாறு அல்லாஹ்வால் மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில் இவ்வாறு செய்யும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.</p>
<p style="text-align: justify;">அல்லாஹ்வால் மட்டும் செய்யக் கூடிய வேலைகளை என்னால் செய்ய முடியும் என்று ஒருவர் சொன்னால் அவர் யார்? இதற்கு எவ்வாறு “பத்வா” கொடுக்க வேண்டும்?</p>
<p style="text-align: justify;">இவ்வாறு சொன்னதை மற்றவர்கள் பாடுகிறார்களே இவர்களுக்கு எவ்வாறு “பத்வா” கொடுக்க வேண்டும்? எல்லாம் அல்லாஹ் என்று சொன்னவனும், அவ்வாறு நம்பினவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றால் மேற்கண்டவாறு சொன்ன குத்பு நாயகம் அவர்களும், அவர்களின் “தரீகா” வழி நடப்பவர்களும் யார்?</p>
<p style="text-align: justify;">மஸ்தான் அப்பா மேற்கண்டவாறு சொல்லிவிட்டு அதையடுத்து என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.</p>
<p style="text-align: justify;">அகிலமீரேழினையும் ஆடுங்கறங்கு போல் ஆட்டி விளையாட வல்லீர் என்று புகழ்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">ஈரேழு &#8211; பதினாலு உலகங்களையும் ஆடும் விசிறி போல் ஆட்டி விளையாடும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அவ் ஆற்றல் தனக்கு இருப்பதாக அல்லது இன்னொருவருக்கு இருப்பதாக ஒருவன் சொன்னால் அவனுக்கு எவ்வாறு “பத்வா” வழங்க வேண்டும்? அவன் சொன்னதைச் சரிகண்டவர்களுக்கும் எவ்வாறு “பத்வா” வழங்க வேண்டும்?</p>
<p style="text-align: justify;">இதையடுத்து மஸ்தான் அப்பா என்ன சொன்னார்கள் என்பதை கவனிப்போம்.</p>
<p style="text-align: justify;">மண்டலங்கள் அனைத்தையும் அழைத்து அவற்றுடன் விளையாடும் ஆற்றல் கொண்டவர்கள் என்று குத்பு நாயகம் அவர்களை மஸ்தான் வர்ணிக்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">மண்டலங்களை அழைத்து அவற்றுடன் விளையாடும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. வேறு எவருக்கும் இது சாத்தியமானதன்று. இந்நிலை, இவ் ஆற்றல் குத்பு நாயகமவர்களுக்கு உண்டு என்று சொன்னவன் யார்? அவனுக்கு என்ன “பத்வா”?</p>
<p style="text-align: justify;">மண்ணகம், விண்ணகம் இரண்டையும் ஓர் அணுவைத்துளைத்து அதனுள் செலுத்தி விளையாடும் வல்லமையுண்டு என்று மஸ்தான் குத்பு நாயகமவர்களை வர்ணிக்கின்றார்கள். இது அல்லாஹ்வால் மட்டுமே முடியும். அல்லாஹ்வால் மட்டும் முடியுமான ஒன்று ஒரு படைப்பாலும் முடிந்ததே என்று சொன்னவனுக்கு எவ்வாறு “பத்வா” வழங்க வேண்டும்?</p>
<p style="text-align: justify;">சிறிய கடுகு ஒன்றில் ஏழு கடல்களையும் செலுத்தி அதைக் கலக்கி விளையாடும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. இத்தன்மை படைப்புக்கு உண்டு என்று சொன்னவன் யார்? அவனுக்கு எவ்வாறு “பத்வா” வழங்கலாம்?</p>
<p style="text-align: justify;">எல்லா சித்தும் செய்வதற்கு சக்தி பெற்ற குத்பே முஹ்யித்தீனே என் கண்முன் காட்சி தாருங்களேன். வருவீர்களா?</p>
<p style="text-align: justify;">நண்டளக்கும் நேரமாகிவிடுமோ இப்பாக்கியம் நான் பெறுவதற்கு? எவராலும் நண்டை அளந்து கொண்டே இருக்கலாம். அதை அளந்து முடிக்க இயலாது. என்னை நல்லடிக்களாக்கி அருள்புரியுங்கள் முஹ்யித்தீனே! என்று பாடலை முடித்துள்ளார் மஸ்தான் அவர்கள்.</p>
<p style="text-align: justify;">மஸ்தான் சொல்வது சரிதான். அதில் பிழையொன்றுமில்லை என்று “பத்வா” வியாபாரிகள் கூறுவார்களாயின் அவர்களின் கூற்றுப்படி எல்லா வல்லமையும் எல்லாருக்குமுண்டு என்று முடிவு செய்து இதற்கு மாறாக சட்டம் சொல்லும் நூல்களையெல்லாம் ஒன்று சேர்த்து “பத்வா” வியாபாரிகள் பார்க்க எரித்துச் சாம்பலாக்குவோம்.</p>
<p style="text-align: justify;">இல்லை. அல்லாஹ்வால் மட்டும் செய்யக் கூடியதை வேறு எவராலும் செய்ய முடியாதென்றும், அவ்வாறு சொன்னவனும், நம்பினவனும் “காபிர்”கள் என்று “பத்வா” வழங்குவார்களாயின் குத்பு நாயகத்தை அவ்வாறு வர்ணித்த மஸ்தானும், அவர் சொன்னதை நம்பி அவ்வாறு குத்பு நாயகமவர்களை அறபு மொழியிலோ, வேறெந்த மொழியிலோ சொன்னோர் அனைவரும் “காபிர்”கள் என்று முடிவு செய்வோம்.</p>
<p style="text-align: justify;">குத்பு நாயகமவர்களின் காதிரிய்யா தரீகாவைச் சேர்ந்த அனைவரும் “காபிர்”கள் என்று அவர்களே பகிரங்கமாக “பத்வா” வழங்கட்டும்.</p>
<p style="text-align: justify;">குத்பு நாயகம் மட்டும் மேற்கண்ட வல்லமை பெற்றவர்கள் என்று “தரீகா”வாதிகள் நம்பவில்லை. அனைத்து “தரீகா”வின் ஷெய்குமார், தாபகர்கள் அனைவரும் அவ்வாறு வல்லமை பெற்றவர்கள் என்றே கூறுகிறார்கள். நம்புகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">எனவே, “தரீகா”காரர்கள் அனைவரும் முர்தத்துகள் தான் என்று அவர்கள் ஒரு “பத்வா” கொடுத்துவிட்டார்களாயின் இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை குறைந்துவிடும். நம் நாட்டில் முஸ்லிம்களின் சனத் தொகையை குறைப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்யலாகாதென்று அரசு சட்டம் கொண்டு வரத் தேவையில்லை. ஒரு “பத்வா’வின் மூலமே முஸ்லிம்களின் சனத் தொகையை குறைத்துவிடலாம்.</p>
<p style="text-align: justify;">இதேபோல் அறவே தொழாதவர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டுமென்ற இஸ்லாமிய சட்டத்தை கருத்திற் கொண்டு “பத்வா” வியாபாரிகள் அவ்வாறு ஒரு “பத்வா” வழங்கினால் எந்த ஒரு சிரமுமின்றியும், செலவின்றியும் முஸ்லிம்களின் சனத்தொகையை குறைத்தும் விடலாம். யஹூதிகளின் திட்டமும் இதுவேதான்.</p>
<p style="text-align: center;">முற்றும்</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/12/10/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குணங்குடி மஸ்தான் அப்துல் காதிர் ஆலிம் புலவர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய பாடல்.</title>
		<link>https://shumsmedia.com/2021/11/15/%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2/</link>
					<comments>https://shumsmedia.com/2021/11/15/%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 21:41:32 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=15910</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>தொடர் &#8211; 1</strong></span><br /><br />தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)<br /><br />இராகம்: கேதார கௌளம், ஆதிதணம்.</p>
<p style="text-align: justify;">(பல்லவி)<br />சூத்திரப் பாவை கயிறற்று விழுமுன்<br />சூக்ஷக் கயிற்றினைப் பாரடா &#8211; அதி<br />சூக்ஷக் கயிற்றினைப் பாரடா</p>
<p style="text-align: justify;">(அனு பல்லவி)<br />நேத்திரம் ரண்டினும் நேரேயிலங்கிய<br />நீடொளி போன்றது தேடரிதாகிய<br />காத்திரமுள்ளது யாவும் பொதிந்தது<br />கையிலுங் காலிலு மெட்டப் படாததோர் (சூத்திரப்)<span id="more-15910"></span></p>
<p style="text-align: justify;">(சரணங்கள்)<br />சாத்திரவேதஞ் சதகோடி கற்றாலும்<br />சமயநெறிகளி னாசாரம் பெற்றாலும்<br />பாத்திரமேந்திப் புறத்திலலைந்தாலும்<br />பாவனை யாலுட லுள்ளமுலைந்தாலும்<br />மாத்திரையேனு மெமன்வரு மப்போது<br />மற்றொன் றுதவா துதவாதுதவாது<br />சூத்திரமாகிய தோணி கவிழுமுன் <br />சுக்கானை நேர் படுத் திக்கணமே சொன்னேன் (சூத்திரப்)</p>
<p style="text-align: justify;">உற்றுற வின்முறை யார் சூழ்ந்திருந்தென்ன<br />ஊருட் சனங்களெல் லாரும் பணிந்தென்ன<br />பெற்றாரும் பெண்டீரும் பிள்ளையிருந்தென்ன<br />பேணும் பெருஞ்செவ்வ வாணவத் தாலென்ன<br />கத்தன் பிரிந்திடிற் செத்த சவமாச்சு<br />காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு<br />எத்தனை பேர் நின்று கூக்குரலிட்டாலும்<br />எட்டாமற் போய்விடுங் கட்டையல்லோ விந்தச் (சூத்திரப்)</p>
<p style="text-align: justify;">மாயாப் பிறவி வளையை யடைந்திட <br />மாறாத்தியான மனத்தி னினைத்திடக்<br />காயா புரிக்கோட்டை கைக்கு ளகப்படக்<br />காணு மணிச்சுடர் தானே விளங்கிட <br />ஆயுமறிவுடன் யோகத்தினா லெளும்<br />ஆனந்தத் தேனையுண் டன் புடனே தொழும்<br />தாயா யுலகத்தை யீன்ற குணங்குடித்<br />தற்பரனைக் கொண்டு வப்புடனே சென்று (சூத்திரப்)</p>
<p style="text-align: justify;">குணங்குடி மஸ்தான் ஸாஹிப் (1792 &#8211; 1838: சென்னை) ஓர் இஸ்லாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.</p>
<p style="text-align: justify;">குணங்குடி மஸ்தான் ஸாஹிப் இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் “சுல்தான் அப்துல் காதிர்” என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து “ஆலிம்” (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.</p>
<p style="text-align: justify;">பற்றறுத்த உள்ளத்துடனும், தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை சென்று அங்கு “தைக்காசாஹிபு” என்று அழைக்கப்பட்ட ஷெய்கு அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் “கல்வத்” எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய் மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.</p>
<p style="text-align: justify;">இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார். குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை “மஸ்தான்” என அழைக்கலாயினர். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை “மஸ்தான்” என அழைப்பது மரபு)</p>
<p style="text-align: justify;">ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார். இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம். அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள “மஸ்ஜிதே மஃமூர்” என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.</p>
<p style="text-align: justify;">குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர். அவருடைய சீடர்களாக இஸ்லாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.</p>
<p style="text-align: justify;">மஸ்தான் ஸாஹிப் 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜுமாதல் ஊலா 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.</p>
<p style="text-align: justify;">அவரின் அடக்கத்தலம் சென்றபோது&#8230;..</p>
<p style="text-align: justify;">தொடரும்&#8230;.</p>


]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/11/15/%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தீ அஜ்மீரீ றழியல்லாஹு அன்ஹு</title>
		<link>https://shumsmedia.com/2021/11/12/%e0%ae%b9%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%af%80%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/</link>
					<comments>https://shumsmedia.com/2021/11/12/%e0%ae%b9%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%af%80%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Nov 2021 00:19:59 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=15884</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">அப்பாஸியக் கலீபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் மீது தாங்க இயலாத கொடுமைகளை செய்து வந்தனர். பக்தாத்தில் வாழ்ந்து வந்த அவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் இஸ்ஃபஹானில் வந்து குடியேறி வாழ்ந்து வரலாயினர்.</p>
<p><span id="more-15884"></span></p>
<p style="text-align: justify;">அந்நகரில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தைச் சார்ந்த காஜா செய்யிது அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார் செய்யிது கியாஸுத்தீன் அவர்கள் ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவழியில் தோன்றிய செய்யிது தாவூது என்ற பெரியாரின் அருமைத் திருமகள் உம்முல் வரா என்ற செய்யிதா மாஹினூரை மணமுடித்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">அவர்களுக்கு ஹிஜ்ரி 530 ஆம் ஆண்டு ரஜப் பிறை 14 (கி.பி.1116 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள்) வெள்ளிக்கிழமை ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயீனுத்தீன் (இஸ்லாத்தை வலுப் பெறச் செய்தவர்) என்று பெயரிட்டு அருமைபெருமையாக வளர்த்து வந்தனர்.</p>
<p style="text-align: justify;">ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.</p>
<p style="text-align: justify;">இச்சமயத்தில் தார்த்தாரியர் இஸ்ஃபஹான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி, அதனை நாசப்படுத்தி வந்தனர். எனவே செய்யிது கியாஸுத்தீன் ஹஸன் தம் குடும்பத்தினர்களுடன் அந்நகர் விட்டு நீங்கி குராஸானில் குடியேறினார்.</p>
<p style="text-align: justify;">அவரின் அருமை மைந்தர் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அவர்கள் இளமையிலேயே மற்றச் சிறுவர்களை விட்டும் மாறுபட்டவர்களாக விளங்கினர். சின்னஞ்சிறு வயதிலேயே அவர்கள் அன்பு, இரக்கம், தயவு ஆகிய அரும்பெரும் குணங்கள் வாய்க்கப் பெற்றவர்களாக திகழ்ந்தனர்.</p>
<p style="text-align: justify;">இளமையில் மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடச் செல்வதில்லை. மாறாக பள்ளி சென்று கல்வி பயின்றனர். ஒன்பது வயதிற்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்ட அவர்கள், பின்னர் ஃபிக்ஹ் நூல்களையும், ஹதீது நூல்களையும் பயின்று தேர்ச்சியுற்றனர்.</p>
<p style="text-align: justify;">அன்னனாரின் சிறுவயதிலேயே அவர்களின் அன்னை மறைந்து விட்டார்கள். அவர்கள் 15 வயதை எய்தியபோது அன்னாரின் தந்தையும் மறைந்து விட்டார்கள். அவர்களுக்கு தந்தை வழியாகத் தண்ணீர் இறைக்கும் காற்றாடியுடன் கூடிய பழத்தோட்டம் ஒன்று வாரிசு பாத்தியமாக கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு; எளிய முறையில் இனிதே வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">தமக்கு சொந்தமான தோட்டத்தை விற்றுவிட்டு கல்வி தேடி சமர்கந்த், புகாரா நோக்கி பயணமாகி அங்கு மௌலானா ஹிஸ்ஸாமுத்தீனிடமும், ஷைகுல் இஸ்லாம் மௌலானா ஷர்ஃபுத்தீனிடமும் மார்க்கக் கல்விகளை கற்றனர்.</p>
<p style="text-align: justify;">பின்னர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காக பகுதாது சென்றார்கள். கௌதுல் அஃலம் அவர்கள் முயீனுத்தீன் சிஷ்தி நாயகத்திற்கு தாய்வழியில் ஒன்றுவிட்ட மாமாவாக இருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">தம்மைக் காணவந்த அவர்களை தம் சீடர்களிடம் புகழ்ந்துரைத்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் மாபெரும் மகானாக வருவார்கள் என்று வாழ்த்துரைத்தார்கள். அதன்பின் ஹாரூன் என்ற ஊரை அடைந்து அங்கிருந்த ஷைகு உதுமான் ஹாரூனி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து தமக்கு தீட்சை தருமாறு வேண்டினர். அவர்களும் அவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து சிஷ்தியா தரீகாவில் தீட்சை வழங்கினர்.</p>
<p style="text-align: justify;">தம் குருவுடன் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்தபின், தம் குரு ஆணையின்படி பகுதாது வந்து கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை இரண்டாவது முறையும்&gt; ஷைகு அபூநஜீப் சுஹ்ரவர்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றனர்.</p>
<p style="text-align: justify;">இதன்பின் இந்தியாவிற்கு ஹிஜ்ரி 561 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் (கி.பி. 11-11-1165) அவாக்ள் இந்தியாவிலுள்ள மூல்த்தானுக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தார்கள். அதன்பின் லாகூர் சென்று பின் தம் குருநாதர் உதுமான் ஹாரூனி அவர்களை ரேயில் வைத்து சந்தித்து சிலமாதங்கள் கழிந்தபின் ஹிஜ்ரி 562 ஆம் ஆண்டில் ஹஜ்ஜுசெய்வதற்காக மக்கா புறப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">அங்கிருந்து மதீனா சென்று அண்ணலாரின் திருக்கபுர் சரீபை தரிசித்தனர். பின்னர் அவர்கள் இருபது ஆண்டுகள் பற்பல நாடு நகரங்களிலும் சுற்றித் திரிந்து பகுதாது மீண்டனர். அங்கு வைத்து, காஜா அவர்களுக்கு கிலாஃபத் வழங்கிய உதுமான் ஹாரூனி அவர்கள் ‘முயீனுத்தீனே! நான் உம்மை இறைவனளவில் ஒப்படைத்து விட்டேன்’ என்று கூறி அவர்களின் நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட்டனர்.</p>
<p style="text-align: justify;">தமது 52 ஆம் வயதில் சிஷ்திய்யா தரீகாவில் கிலாஃபத் பதவியைப் பெற்ற காஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள் சில நாட்கள் பகுதாதில் தங்கியிருந்து பின்பு ஊஷ் என்ற ஊருக்கு சென்று குத்புத்தீன் பக்தியார் என்பவர்களுக்கு தீட்சை நல்கினர்.</p>
<p style="text-align: justify;">இருவரும் மக்கா சென்று ஹஜ்ஜு செய்து விட்டு மதீனா நகர் சென்று பெருமானாரின் தரிசனத்தை பெற்றுக் கொண்டனர். பல்வேறு காடு, மலைகளை சுற்றித் திரிந்து பல்வேறு இறைநேசர்களை பல்வேறு நிலைகளில் கண்டு அவர்களின் துஆப் பேற்றினைப் பெற்றுக் கொண்டார்கள்.</p>
<p style="text-align: justify;">பின்னர் டில்லி வந்து, அங்கிருந்த மக்களுக்கு இஸ்லாமிய அருள் நெறியைப் போதித்துவிட்டு 700 பேர்களை இஸ்லாத்தில் இணைத்து விட்டு கர்னூல் மாவட்டத்திலுள்ள சூனிபத் என்ற ஊருக்கு வந்து அங்கு அடங்கப்பட்டிருக்கும் ஷைகு நாஸிருத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தில் சில நாட்கள் தங்கி கல்வத்தில் இருந்தார்கள். அவர்கள் கல்வத் இருந்த இடம் இப்போதும் சில்லயே முபாரக் ஹழ்ரத் ஹாஜா கரீப் நவாஸ் என்ற பெயருடன், மரியாதையுடன் அழைக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">அடுத்து அவர்கள் பாட்டியாலாவிலுள்ள நாரனோஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். பின்பு அவர்கள் ஸமானா வழியாக அஜ்மீரை நோக்கிப் பயணமாயினர். ஹிஸ்ரி 588 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் (கி.பி.1192) அவர்களின் புனிதப் பாதங்கள்&gt; அஜ்மீர் மண்ணிலே மிதித்தன. அப்பொழுது காஜா நாயகம் அவர்களுக்கு வயது 57.</p>
<p style="text-align: justify;">இந்நகரமும், அதன் சூழலுமத் பிருதிவிராஜ் என்ற ராஜபுத்திர அரசனின் ஆட்சியில் இருந்தது. அவனுடைய அரண்மனை அதன் அருகிலுள்ள தாராகட் என்ற குன்றின் மீது இருந்தது. அதன் அடிவாரத்திலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். அங்கேயே அவனுடைய குதிரை ஒட்டகை ஆகியவற்றின் தொழுவங்கள் இருந்தன.</p>
<p style="text-align: justify;">அங்கு வந்த காஜா நாயகம் தம் சீடர்களுடன் வெட்ட வெளியில் இளைப்பாற அமர்ந்தனர். அரசரின் ஆட்கள் வந்து நீங்கள் இங்கு தங்க கூடாது. இது அரசரின் ஒட்டகை அடைக்கும் இடம் என்று சொன்னார்கள். அதுகேட்ட காஜா நாயகம் அவர்கள் அரசரின் ஒட்டகை இங்கேயே அடைபட்டுக் கிடக்கட்டும் என்று சொல்லி விட்டு தம் சீடர்களுடன் அருகிலுள்ள அன்னாசாகர் என்ற ஏரிக் கரையில் போய் தங்கினர்.</p>
<p style="text-align: justify;">காலையில் ஒட்டகம் மேய்ப்பவர்கள் வந்து ஒட்டகையை எழுப்ப முற்பட்ட போது அவைகளால் எழும்ப முடியவில்லை. உடனே அவர்களுக்கு நேற்று நடந்த சம்பவம் நினைவுக்கு வரவே காஜா நாயகத்திடம் வந்து மன்னிப்புக் கேட்டனர்.</p>
<p style="text-align: justify;">அவர்களும் மன்னித்து, இது எந்த எசமானுடைய ஆணைக்காக அமர்ந்திருந்ததோ அந்த எசமானுடைய ஆணை மீது அவை எழுந்து நடக்கும் என்று கூறினர். அவ்விதமே ஆயிற்று. அதுகண்டு ஒட்டகம் மேய்ப்பவர்கள் வியந்து அரசனிம் இச்சம்பவம் பற்றி சொன்னார்கள்.</p>
<p style="text-align: justify;">இதைக் கேட்ட அரசன் அதிர்ந்தான். ஏனெனில் மன்னனின் அன்னை வாசவதத்தா சோதிடத்தில் மிகவும் புலமை பெற்று விளங்கினாள். அவள் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே இன்ன இன்ன அடையாளமுள்ள ஒருவர் இங்கு வருவார். அவரின் வரவால் உன் ஆட்சி வீழும் என்று தன் மகனிடம் முன்னறிவிப்பு செய்திருந்தாள்.</p>
<p style="text-align: justify;">அதைக் கேட்ட மன்னன் அப்போது அவர்களின் படத்தை தம்அன்னையிடமே வரைந்து கேட்டு அதன்படிப் பல பிரதிகள் எடுத்து இத்தகு உருவமுடையவர் எவரேனும் தம் நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவரைப் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்.</p>
<p style="text-align: justify;">எனவே இச்செய்தியைக் கேட்டவுடன் அந்த நபர் இவர்களாகத்தான் இருக்குமோ என்று எண்ணி அவர்களை அங்கிருந்து விரட்ட ஆட்களை அனுப்பினான். அரசரின் ஆணையை சிரமேற்றோங்கிச் செயலாற்ற அவனின் பணியாளர்கள் முயன்ற போது&#8230;.</p>
<p style="text-align: justify;">நாயகம் அவர்கள் ஒருபிடி மண்ணை அள்ளி, அதில் ஆயத்துல் குர்ஸீயை ஓதி ஊதி, அவர்கள் மீது வீசி எறிந்தார்கள். அவர்கள் அதனைத் தாங்க இயலாது, பெரும் கூச்சலிட்டுக் கொண்டு வெருண்டோடினர்.</p>
<p style="text-align: justify;">இதனை அறிந்த அரசன் காஜா அவர்களைப் பெரிய மந்திரவாதி என்று எண்ணிக் கொண்டு, மந்திரத்தை மந்திரத்தால் தான் வெற்றி கொள்ள வேண்டுமென்று எண்ணி, சாதுராம் என்ற மாபெரும் மந்திரவாதியைக் காஜா அவர்களிடம் அனுப்பி வைத்தான்.</p>
<p style="text-align: justify;">அவர் காஜா நாயகத்தைப் பார்த்ததும் திடுக்கம் ஏற்பட்டு அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அன்னாரின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவி அவர்களின் ஊழியத்தில் இருந்து கொண்டார். அவருக்கு ஷாதிதேவ்(மகிழ்ச்சியாளர்) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">இதன்பின் காஜா அவர்களை எதிர்த்து, மந்திர ஆற்றலினால் போராடி, அவர்களை அங்கிருந்து விரட்டிவிட ஜெய்ப்பால் என்ற மற்றொரு மந்திரவாதியை அனுப்பி வைத்தான் அரசன். அவர் தம்முடைய 1500 சீடர்களுடன் தம்மை எதிர்க்க வருகிறார் என்பதை அறிந்த காஜா நாயகம் அவர்கள் தம்முடைய கைக்கோலை கொடுத்து, நம்முடைய ஜமாஅத்தினரைச் சுற்றி பூமியில் ஒரு கோடு கிழியும். அதற்குள் நாம் இருக்கும் வரையில், அவர்களால் நமக்கு யாதொரு தீங்கும் செய்ய இயலாது என்று கூறினார்கள். அவ்விதமே அவரும் செய்தார்.</p>
<p style="text-align: justify;">சற்று நேரத்தில் ஜெய்ப்பாலும்,அவரின் சீடர்களும் அங்கு வந்து, அக்கோட்டிற்குள் தம் கால்களை வைத்ததும், அவர்கள் மயங்கிக் கீழே விழுந்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த அவர்கள், தள்ளாடித் தள்ளாடி அன்னாசாகர் ஏரிக்கரையின் ஒரு புறத்தில் சென்றமர்ந்து, அன்னாசாகரின் தண்ணீரைக் காஜா அவர்கள் இருக்கும் பக்கம் செல்லவிடாது தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாயினர்.</p>
<p style="text-align: justify;">இதனைக் கண்ட காஜா நாயகம் அவர்கள் ஷாதிதேவை அழைத்து, அவரின் கரத்தில் ஒரு பாத்திரத்தை கொடுத்து ‘நீர் அன்னாசாகரின் நீரை இந்தப் பாத்திரத்தில் எடுத்து வாரும்’ என்று கூறினர். அவர் சென்று அவ்வாறே நீர் எடுத்து வந்ததும், அந்த ஏரியிலுள்ள அனைத்துத் தண்ணீரும் அப்பாத்திரத்துக்குள் வந்து அந்த ஏரி மட்டுமில்லாது, அதனைச் சூழ இருந்த எல்லாக் கிணறுகளும் வற்றி வரண்டு விட்டன. மக்களும், மாக்களும் நீரின்றி செத்து மடிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு விட்டது.</p>
<p style="text-align: justify;">ஜெய்ப்பால் திடுக்கிற்று காஜா நாயகம் அவர்களிடம் இரங்கி வேண்ட, பாத்திரத்தில் எடுத்த நீரை ஏரியிலேயே கொட்டும்படி பணித்தனர். அவ்வாறே செய்ய ஏரி தண்ணீரால் நிரம்பி தளும்பியது.</p>
<p style="text-align: justify;">இதன்பின்னரும் அறிவு பெறாது, ஜெய்ப்பாலும், அவருடைய சீடர்களும் மந்திங்களை ஜெபிக்கலாயினர். உடனே ஆயிரக்கணக்கான பாம்புகள் காடுகளிலிருந்து படையெடுத்து வந்து நாயகம் இருக்கும் கோட்டு வளையத்திற்குள் தலையை விட்டதும் வெருண்டு பின்வாங்கி ஓடத் துவங்கின. அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை.</p>
<p style="text-align: justify;">ஜெய்ப்பால் முன் வந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரிக்க, உடனே வானிலிருந்து நெருப்பு மழை பெய்து, சுற்றிலும் இருந்த மரங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கியது. எனினும், ஒரு நெருப்புப் பொறிகூட நாயகம் அவர்களும், அவர்களின் சீடர்களும் இருந்து கோட்டு வளையத்திற்குள் வந்து விழவில்லை.</p>
<p style="text-align: justify;">இதுகண்டு பெரிதும் விரக்தியுற்ற ஜெய்ப்பால் மான் தோல் ஒன்றை எடுத்து, அதனை விண்ணை நோக்கி எறிந்து, அதில் பாய்ந்தேறி விண்ணிலே பறந்து, மக்களின் கண்களுக்கு தெரியாமல் மறைந்து விட்டான்.</p>
<p style="text-align: justify;">அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் சீடர்கள் தியானத்திலிருந்த காஜா நாயகம் அவர்களை அணுகி, ஜெய்ப்பாலின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி கூறவும், நாயகம் அவர்கள் தங்கள் காலணியை எடுத்து விண்ணை நோக்கி எறிந்தனர்.</p>
<p style="text-align: justify;">அது விண்ணிலே பறந்து சென்று ஜெய்ப்பாலைக் கண்டுபிடித்து அவரின் தலையில் ஓங்கி, ஓங்கி அடித்தவண்ணம், அவரை பூமிக்கு இறக்கி வந்து, காஜா நாயகம் அவர்களின் திருமுன் கொண்டு வந்து விட்டது. அவர் அழுது சலித்து நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டி அரவணைத்தார்கள் காஜா நாயகம் அவர்கள்.</p>
<p style="text-align: justify;">இதனால் யாது செய்வதென்று அறியாது திகைத்துக் கொண்டிருந்தான். இனியும் பொது இடத்தில் தங்க வேண்டாம் என்று காஜா நாயகம் அவர்களை ஷாதிதேவும், அப்துல்லாஹ்வும் கூறி ஷாதி தேவ்விற்கு சொந்தமான இந்திரகோட்டின் அருகில் உள்ள நிலத்தில் போய் தங்கினர். அவ்விடத்திலேயே அவர்களின் தர்கா இப்பொழுது உள்ளது.</p>
<p style="text-align: justify;">அங்கு காஜா நாயகம் சென்று அமர்ந்ததும், அங்கு தாங்களும், தங்களின் சீடர்களும் தங்குவதற்கான வீட்டு வசதிகளைச் செய்து கொண்டனர். அங்கு ஒரு சமையல் விடுதியும் நிர்மாணிக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தவமடத்தில் அமர்ந்து காஜா நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை தொடங்கினர்.</p>
<p style="text-align: justify;">அவர்களின் மாண்பினைக் கேள்வியுற்ற மக்கள், நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து, அவர்களின் கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினர். நாயகம் அவர்களும் பல்வேறு பகுதிகளில் வாழும் பிரமுகர்களுக்கும், அரசனுக்கும் இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்தனர்.</p>
<p style="text-align: justify;">பிருதிவிராஜன் பல்வேறு முயற்சிகள் செய்தும் காஜா நாயகம் அவர்களை அடிபணிய வைக்க முடியவில்லை. அஜ்மீரை விட்டு 3 நாளில் விலகுமாறு அரசன் பிருதிவிராஜன் காஜா நாயகத்திற்கு கடிதம் ஒன்று கொடுத்திருந்தான்.</p>
<p style="text-align: justify;">அச்சமயத்தில் ஷிஹாபுத்தீன் கோரியின் கனவில் காஜா நாயகம் அவர்கள் இந்தியாவுக்கு படைஎடுக்குமாறு சொன்னார்கள். அவரும் இரண்டாவது தடவையாக தாரவாடியில் பாளையம் இறங்கி பிருத்விராஜனுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்தார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் யுத்தத்திற்கு தயார் என்று அரசன் பிருத்விராஜன் சொன்னதால் தாரவாடியில் போர் மூண்டது. பிருத்விராஜனுக்கு துணையாக வந்த சிற்றரசர்கள், மன்னர்களும் போரில் உயிர் நீத்தனர். பிருத்விராஜன் ஓடிப்போனார். அவனை ஸர்ஸுரி என்ற இடத்தில் கைது செய்தார் ஷிஹாபுத்தீன் கோரி.</p>
<p style="text-align: justify;">வெற்றி பெற்ற பின் கோரி அஜ்மீர் சென்று நாயகத்தை சென்று சந்தித்து காணிக்கைகள் வழங்கினார்.</p>
<p style="text-align: justify;">தம்மைக் காண வந்த பிருத்விராஜனின் தாய், மனைவி மற்றும் மகன்களை அன்போடு வரவேற்ற கோரி அன்னையாரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்சிப் பொறுப்பை பிருத்விராஜனின் மகன் கோலாவிடம் கொடுத்து விட்டு டில்லியில் குத்புதீன் ஐபக் என்பவரிடம் ஆட்சியை ஒப்படைத்து அஜ்மீர் நகரை நிர்வாகிக்க ஸையித் ஹஸன் மஷ்ஹரீ என்பவரை நியமித்து விட்டு கஜ்னி நகர் நோக்கி வெற்றி வீரராக சென்றார்.</p>
<p style="text-align: justify;">அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு சிற்றரசரின் மகளை இஸ்லாத்திலாக்கி அவருக்கு பீபி அமதுல்லாஹ் என்று பெயரும் சூட்டி திருமணம் முடித்துக் கொண்ட நாயகம் அவர்கள் அதன்மூலம் பக்ருத்தீன், ஹிஸாமுத்தீன் என்ற இரண்டு ஆண்மக்களையும், பீபி ஹாபிஸ் ஜமால் என்ற பெண்மகளையும் பெற்றெடுத்தனர்.</p>
<p style="text-align: justify;">டில்லியில் வசித்து வந்த ஆன்மீக சீடர் குத்புத்தீன் பக்தியாரி அவர்களை சந்திப்பதற்காக டில்லி அய்னுத்தீன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தபோது அதைக் கேள்விபட்ட மக்கள் அப்பள்ளிவாசலுக்கு அலைஅலையாய் ஓடிவந்து அவர்களை சந்தித்தனர்.</p>
<p style="text-align: justify;">இதன்பின் மற்றொரு நிகழ்ச்சி டில்லியில் ஏற்பட்டது. ஹிஜ்ரி 611 ஆம் ஆண்டு துல்ஹஜ் பிறை (கி.பி.1215 ஏப்ரல் 2 அன்று) காஜா நாயகம் அவர்களின் ஆன்மீக ஆசான் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மாணவரைக் காண்பதற்காக அங்கு வருகை தந்தனர். ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் தம் ஆசானின் ஆசானின் ஆசானையும் காண்பதற்கு தங்களுக்கு இறைவன் தந்த இரு கண்கள் பற்றாது மூன்றாவது கண்ணும் வேண்டுமென்று டில்லி மாநகர மக்கள் பேசிக் கொண்டார்கள்.</p>
<p style="text-align: justify;">சுல்தான் அல்தமிஷும், தம் அமைச்சர் பெருமக்களுடன் உதுமான் ஹாரூனி அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் நாயகம் அவர்களை நோக்கி ஆன்மீகப் பாதையில் வழிகாட்டும் ஒரு நூலை ஆக்கிக் கொடுக்குமாறு ஆணையிட்டனர்.</p>
<p style="text-align: justify;">அவ்விதமே அவர்கள் ‘கன்ஸுல் அஸ்ரார்’ என்ற பெயருடன் 25 பகுதிகளடங்கிய ஒரு நூலை எழுதி, சுல்தானுக்கு அன்பளிப்புச் செய்தனர்.</p>
<p style="text-align: justify;">ஹிஜ்ரி 615 ல் உதுமான் ஹாரூனி அவர்கள் டில்லியை விட்டு மக்கா நகர் நோக்கி சென்றனர். அதன்பின் சிலகாலம் நாயகம் அவர்கள் டில்லியில் தங்கியிருந்து மன்னருக்கும், மற்றவர்களுக்கும் ஆன்மீக பயிற்சி அளித்துவிட்டு அஜ்மீர் திரும்பி அதையே தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">சிறிது காலத்தில் நாயகம் அவர்களின் அன்பு மனைவி பீபி அமதுல்லாஹ் மறுமை வாழ்வை எய்தப் பெற்றனர்.</p>
<p style="text-align: justify;">தமது 90ஆவது வயதில் ஷியாப் பிரிவைச் சார்ந்த பீபி இஸ்மத்துல்லாஹ்வை இரண்டாவதாக மணமுடித்துக் கொண்டனர். இதன் காரணமாக ஏராளமான ஷீயாக்கள் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு வந்தனர். இந்த திருமணத்தின் மூலம் காஜா நாயகம் அவர்களுக்கு ஜியாவுத்தீன் அபூஸயீத் என்ற மகன் பிறந்தார்.</p>
<p style="text-align: justify;">இரவெல்லாம் கடும் வணக்கம் புரிந்து வந்தனர். சுமார் 70 ஆண்டுகள் தலையணையில் தலைவைத்து படுத்ததில்லை. ஒவ்வோர் இரவும் அவர்கள் மக்கா சென்று வணக்கம் நிகழ்த்தி விட்டு, வைகறைத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அஜ்மீர் திரும்பி விடுவர் என்றும், இந்தியாவிலிருந்து சென்ற யாத்ரிகர்கள் அவர்களைப் பலதடவை கஃபாவை இடம் சுற்றி வரக்கண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">திருக்குர்ஆனை ஓதிவருவதில் மிகவும் இன்புற்றிருப்பார்கள். நான் அவர்களின் ஊழியத்தில் இருபதாண்டுகள் இருந்துள்ளேன். அதில் அவர்கள் ஒருநாள் கூட தமக்கு உடல் நலத்தை வழங்குமாறு கேட்கவில்லை என்று குத்புத்தீன் பக்தியாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தனர். அன்னாரின் அருளுரைகளைக் கூறும் போதெல்லாம் உளம் உருகிக் கண்ணீர் சொரிவார்கள். ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரைகளைக் கூறிய அவர்கள் ‘நியாயத் தீர்ப்பு நாளின்போது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களின் திருவதனத்தைப் பார்க்க நாணமுறுபவனைப் போன்ற கொடிய பாவி எவனுமில்லை. அப்பொழுது நாணமுறுபவன், வேறு எங்கு போய்த்தான் ஒளிந்து கொள்வான்? அவனுக்குப் புகலிடம் தான் ஏது?’ என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதார்கள்.</p>
<p style="text-align: justify;">இறையச்சம் அவர்கள் உள்ளத்தை எப்பொழுதும் ஆட்கொண்டிருந்தது. சிலபொழுது இறையச்சத்தால் நடுங்கவும், தேம்பித் தேம்பி அழவும் செய்வர்.</p>
<p style="text-align: justify;">தம்மைக் கொல்ல வந்தவனை தன் உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட அவர்கள் அதை அவனிடம் சொல்லியதும் அதிர்ந்த அவர் நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். 14 தடவை மக்காவிற்கு நடந்து சென்று ஹஜ்ஜு செய்து அங்கேயே இறப்பெய்தி ஜன்னத்துல் முஅல்லாவில் அடங்கப் பெற்றார்.</p>
<p style="text-align: justify;">தாழ்மையின் உருவாக விளங்கிய அவர்கள் எவருக்கும் அவர்களே முதலில் ஸலாம் கூறுவர். வயோதிகர் எவரும் தம்மைக் காணவரின் அவரைக் கண்டதும் எழுந்து நின்று அவருக்கு முதலில் ஸலாம் உரைத்து வரவேற்று அமரச் செய்வார்கள். தேவையுடையோரின் தேவைகளை ஒவ்வொரு நாளும் காலையில் சென்று விசாரித்து அவற்றை நிறைவேற்றி வைப்பார்கள்.</p>
<p style="text-align: justify;">அவர்களின் உணவும், உடையும் மிக எளிமையாக இருந்தன.நோன்பு நோற்க விலக்கப்பட்ட நாட்களைத் தவிர்த்து மீதி நாட்களில் நோன்பு நோற்றார்கள். எப்பொழுதும் பகீர்களின் உடையை அணிந்து வந்த அவர்கள், அது கிழிந்துவிடின் அதில் ஒட்டுப் போட்டு தைத்து அணிந்து கொள்வார்கள்.</p>
<p style="text-align: justify;">நாயகம் அவர்கள் பேரின்ப இசை நிகழ்ச்சிகளிலும் அதிக ஈடுபாடுடையவர்களாக இருந்தனர். அதில் கலந்து கொண்டு அவர்கள் சொக்கி மகிழ்ந்து தம்மையே மறந்த நிலையிலாகிவிடுவார்கள். அவர்களுடன் ஷைகு ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்தீ, ஷைகு முஹம்மது கிர்மானீ ஷைகு முஹம்மது இஸ்பஹானீ போன்ற இறைநேசச் செல்வர்களெல்லாம் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று அவர்களின் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி காக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆன்மீக செங்கோல் செலுத்தி சுமார் 90 இலட்சம் பேர்களை இஸ்லாத்தில் இணைத்த நாயகம்அவர்கள் 97 வயதானபோது தமக்கு இறப்பு அண்மி விட்டதை அறிந்து தம் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி அவர்களை அஜ்மீர் வருமாறு அழைத்து ‘இன்னும் சின்னாட்களில் நான் மறைவேன்’ என்று சொல்லி தமது பிரதிநியை நியமிக்கும் கிலாஃபத் நாமாவை ஷைகு அலீ சஞ்சரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எழுத்ச் செய்து அவர்களிடம் ஒப்படைத்து, அவர்களை டில்லிக்கு அனுப்பி வைத்து விட்டுத் தாங்கள் உலகிற்கு வந்த பணி நிறைவுற்றதென மனநிறைவுற்றார்கள்.</p>
<p style="text-align: justify;">இதன்பின் சில நாட்கள் உருண்டோடிசர்ன. ஹிஜ்ரி 627 ஆம் ஆண்டு ரஜப் மாதம், ஆறாம் நாள் (கி.பி. 1226 மே 21) திங்கட்கிழமை இரவு இஷா தொழுதபின் ததம் அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தனர். வைகறையில் கதவு தட்டப்பட்டபோது அது திறக்கப்படவில்லை. பிறகு ஒருவாறு கதவை திறந்து சென்று பார்த்தபோது, அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்திருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">அவர்களின் நெற்றியில் ‘ஹாதா ஹபீபுல்லாஹ் – மாத்த பி ஹுப்பில்லாஹ் (இவர் அல்லாஹ்வின் நேசர், அல்லாஹ்வின் நட்பிலேயே உயிர் நீத்தார்) என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களின் வியப்புப் பன்மடங்கு அதிகமாகியது.</p>
<p style="text-align: justify;">விடிந்ததும் அவர்களின் மூத்த மகன் காஜா பக்ருத்தீன் தந்தையின் ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்த பின்னர் அவர்களின் பொன்னுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>
<p style="text-align: justify;">நாயகம் அவர்கள் மறைந்த செய்தி டில்லியிலிருந்த அவர்களின் கலீபா குத்புத்தீன் பக்தியாரி காக்கி அவர்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.</p>
<p style="text-align: justify;">நாயகம் அவர்களின் அடக்கவிடத்தை ஷைகு ஹமீதுத்தீன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியில் தோன்றிய ஷெய்கு ஹுஸைன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பராமரித்து வந்தார்கள். அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் அடக்கவிடத்தின் மீது யாதொரு கட்டிடமும் எழுப்பப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">அரசர் மஹ்மூது கில்ஜி அன்னாரின் மகிமையை உணர்ந்து அவர்களை பல்முறை டில்லிக்கு வருமாறு அழைத்தும் அவர்கள் செல்லவில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியைக் காண வருமாறு அழைத்ததுமே அதைக் காண அங்கு சென்றார்கள்.</p>
<p style="text-align: justify;">சுல்தான் ஷெய்கு ஹுஸைன் நாகூரிக்கு பணமுடிப்பு அளித்தும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தம் மகனாரின் வேண்டுகோளை ஏற்று காஜா நாயகத்தின் அடக்கவிடத்தின் மீது கட்டிடம் கட்டும் எண்ணத்தோடு அப்பணத்தைப் பெற்று அதைக் கொண்டு அவர்களின் கட்டிடம் நிர்ணமானிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">பின்னர் சுல்தான் மஹ்மூது கில்ஜி தர்காவின் அண்மையில் இறைவனைத் தொழுவதற்காக ஒரு பள்ளிவாயிலை நிர்மாணித்தார். அதுவே இப்பொழுது ‘ஸந்தல் மஸ்ஜித்’ என்ற பெயருடன் திகழ்கிறது. அவரே ‘புலந்து தர்வாஸா'(உயரமான வாசல்) என்ற பெயருடன் விளங்கம் வாயிலையும் நிர்மாணித்தார்.</p>
<p style="text-align: justify;">மால்டாவின் மன்னர், மால்தேவை வென்றபின் டில்லி மன்னர் ஷெர்ஷா சூரியும் அஜ்மீர் வந்து காஜா நாயகத்தை தரிசித்து அங்கு நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தை அறிந்து அங்கு தம் பெயரால் ஓர் ஏரியை வெட்ட ஏற்பாடு செய்தார்.</p>
<p style="text-align: justify;">பின்னர் டில்லியை ஆண்ட பேரரசர் அக்பரும் பலதடவை நாயகத்தின் தர்பாருக்கு வருகை தந்துள்ளார். சித்தூரில் வெற்றி கிடைத்தால் கால்நடையாகவே அஜ்மீர் வருவதாக நிய்யத்து செய்து வெற்றி கிடைத்ததும் அதன்படியே செய்து தமது நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டார். அவருக்கு மகன்கள் பிறந்த பின்னரும் பலமுறை அஜ்மீர் வருகை தந்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">சிவப்பு நிறக்கற்களால் ஒரு பள்ளிவாயிலும், காஜா அவர்கள் வாழ்ந்து மறைந்த குளிப்பாட்டப்பட்ட இடத்தில் தர்வேஷ்கள் தங்குவதற்கு ஒரு தங்குமிடமும் ‘ஸஹன் சிராஹ்’ என்ற விளக்கு மண்டபமும் நிர்மாணித்ததோடு, 125 மணங்கு (தபர்ருக்) சோறு சமைக்கக் கூடிய பெரிய செம்பு சட்டி ஒன்றையும் செய்து கொடுத்தார். மேலும் அஜ்மீரைச் சுற்றி பாதுகாப்புச் சுவரும் எழுப்பினார்.</p>
<p style="text-align: justify;">அக்பரின் மகன் சலீம் என்ற ஜஹாங்கீர் பலமுறை அஜ்மீர் தர்காவிற்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள சிறிய செம்பு சட்டி அவர் காணிக்கையாக நல்கியதேயாகும். அதில் ஒரு வேளைக்கு 60 மணங்கு சோறு சமைக்கலாம். இதை காணிக்கையாக வழங்கிய அன்று இதில் சோறு சமைத்து 5000 ஏழைகளுக்கு வழங்கினார் அவர்.</p>
<p style="text-align: justify;">அவரின் மகன் ஷாஜஹானும் இங்கு 5 தடவை வந்து அடக்கவிடத்தை தரிசித்தார். இங்கு வெள்ளை சலவைக் கற்களாலான ஒரு பள்ளிவாயிலையும், நகார்கானாவையும் நிர்மாணித்தார்.</p>
<p style="text-align: justify;">ஷாஜஹான் மகள் ஜஹானரா ஹிஜ்ரி 1503 ஷஃபான் மாதம் 18 ஆம் தேதி காஜா நாயகத்தை தரிசிக்க சென்று ரமலான் மாதம் 7 ஆம் நாள் அஜ்மீர் சென்று அன்னாரின் அடக்கவிடத்தை தரிசித்ததை மிகவும் பாக்கியமாக கருதி தம்முடைய ‘முனிஸுல் அர்வாஹ்’ என்ற நூலில் வரைந்துள்ளார். மேலும் தமக்கு ஊழியம் செய்ய வந்த ஊழியர்கள் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு டில்லி மீண்டார். அந்த ஊழியர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அங்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">ஷாஜஹானுக்குப் பின் அரியணை ஏறிய அவ்ரங்கசீபும் காஜா நாயகம் அவர்களின் தர்பாருக்கு பலமுறை வந்துள்ளார். அஜ்மீருக்கு வரும் ஒவ்வொரு தடவையும் தம் தங்குமிடத்திலேயே ஆயுதங்களை வைத்துவிட்டு கால்நடையாகவே காஜா அவர்களின் அடக்கவிடத்திற்கு வந்து தரிசித்து வந்தார். அப்பொழுது ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் காணிக்கை செலுத்தி வந்தார்.</p>
<p style="text-align: justify;">பிற்காலத்தில் காஜா அவர்களின் அடக்கவிடத்திற்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி மேரி ராணி அம்மையார் ஆப்கான் அமீர் ஹபீபுல்லாஹ் கான், ராம்பூர் நவாப் ஹாமித் அலீகான், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீகான்,தீதா சமஸ்தான மன்னர் மகாராஜா கோபதிசிங்,தோல்பூர் மகாராஜா ராஜா உதயபான் சிங்,மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு, மௌலானா முஹம்மது அலீ ஜவ்ஹர் ஆகியோரும் வந்து தரிசித்து சென்றுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மலேசிய தேர்தலில் வெற்றி பெற்ற துங்கு அப்துர் ரஹ்மான் அமைச்சராக பொறுப்பேற்றதும் அஜ்மீர் வந்து காணிக்கை செலுத்தி சென்றார்.</p>
<p style="text-align: justify;">முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரும் இந்த இடத்தை வந்து தரிசித்து சென்றுள்ளனர். பராக் ஒபாமா நாயகம் அவர்களின் அடக்கவிடத்திற்கு அழகிய போர்வையை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஜாதி,மத பேதமின்றி அனைவரையும் மாட்சிமையுடன் ஆட்சி செய்யும் அஜ்மீர் நாயகம் அவர்களின் மாண்பினைக் கண்டேன் என்று கி.பி. 1902 ஆம் ஆண்டில் அங்கு வருகை தந்த இந்திய வைஸ்ராய் கர்ஸன் பிரபு தர்காவின் நிகழ்ச்சிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/11/12/%e0%ae%b9%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%af%80%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஏர்வாடி வாழும் ஏந்தல் ஸெய்யித் இப்றாஹீம் ஷஹீத் அவர்கள்.</title>
		<link>https://shumsmedia.com/2021/06/15/%e0%ae%8f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%86/</link>
					<comments>https://shumsmedia.com/2021/06/15/%e0%ae%8f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%86/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jun 2021 15:17:27 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=15412</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</p>
<p style="text-align: justify;">அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பதினெட்டாவது தலைமுறையில் தோன்றிய சிலுவைப் போர் வீரர் அப்துல் கபூர் றஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனார், திரு மதீனாவின் ஆளுநர் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் அருந்தவத் திரு மைந்தர்தான் ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள்.</p>
<p><span id="more-15412"></span></p>
<p style="text-align: justify;">ஒரு வெள்ளி இரவு திரு மதீனாவில் “யர்பாத்” என்ற பகுதியில் இருந்த தம் இல்லத்தில் அயர்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது அண்ணலெம் பெருமான் முஹம்மதெங்கள் நபீகள் கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் திருக்காட்சி வழங்கி, மகனே! நீங்கள் இறைவனின் பேரருளைப் பெறுவதற்காக அயல் நாடு சென்று மக்களை அவனுடைய மார்க்கத்தில் இணைக்கும் திருப்பணியில் ஈடுபடுவீர்களாக! அமுத வாய் விண்டு மறைகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">திடுக்கிற்று விழித்தெழுந்த ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் அடுத்த நாளே அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள். அவர்கள் கண்ட கனவைக் கேட்டு வியந்த மக்கள் சாரிசாரியாக வந்து அவர்களின் அணியில் சேரலாயினர். அவ் அணி மூவாயிரம் பேர் அடங்கிய அணியாக உருவாகியது. அப்படை ஹிஜ்ரீ 557ம் ஆண்டில் &#8211; இற்றைக்கு சுமார் 885 வருடங்களுக்கு முன் இறாக், ஈரான் வழியாக இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது.</p>
<p style="text-align: justify;">ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் முதன் முதலாக தமது திருப்பாதத்தை இந்தியாவில் சிந்து மாநிலத்திலேயே வைத்தார்கள். முதன் முதலாக அங்கேயே தமது பணியைத் தொடங்கினார்கள். சிந்து மாநில மக்கள் அவர்களின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு அணியணியாக இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர். சிந்து மாநிலத்தில் பள்ளிவாயல்களும், மத்ரஸாக்களும் உருவாயின.</p>
<p style="text-align: justify;">இதைக் கண்ட அரசன் ஆப்தாம் சிங் சீறியெழுந்து முஸ்லிம்களின் படையை அழித் தொழிக்க தனது படையை திரட்டி போர் தொடுத்தான். அந்தப் போரில் ஸெய்யித் இப்றாஹீம் அவர்களின் வாளுக்கு இரையாகி அவன் இறந்தான்.</p>
<p style="text-align: justify;">அதன் பின் ஆப்தாப் சிங்கின் இளவர் மெஹ்தாப் சிங் முஸ்லிம்களுடன் போர் தொடுத்து அவனும் அப்போரில் உயிர் துறந்தான்.</p>
<p style="text-align: justify;">சிந்துவில் இஸ்லாம் நிலை பெற்றது கண்ட ஏந்தல் ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள், தம் கவனத்தை குஜ்றாத்தின் பக்கம் திருப்பினார்கள். அங்கு பிரச்சாரத்திற்காகச் சென்ற அவர்களை அதன் அரசர் கஜராடாசிங் பெரும் படையுடன் எதிர்த்தான். அவன் போர்க்களத்தில் மாண்டான். இஸ்லாம் குஜ்றாத்திலும் கடும் வேகத்தில் பரவியது. அவ்வேளை அரச குடும்பத்தைச் சேர்ந்த இப்றத் சிங் இஸ்லாத்தில் இணைந்தார். அவர் இஸ்லாத்தில் இணைந்தது கண்டு மக்களும் அணியணியாக இஸ்லாத்தில் இணைந்தனர்.</p>
<p style="text-align: justify;">குஜ்றாத்தில் தம் பணி நிறைவுற்றதைக் கண்ட ஸெய்யித் இபறாஹீம் இரு மாநிலங்களிலும் தமது படையைப் பலப்படுத்திவிட்டு இரண்டு வருடங்களின் பின் ஆயிரம் போர் வீரர்களுடன் மட்டும் தாயகம் திரும்பினர். அந்நேரம் அவர்களுக்கு ஐம்பது வயது.</p>
<p style="text-align: justify;">திரு மதீனா பள்ளிவாயலிலேயே முழு நேரத்தையும் கழித்து வரும் காலத்தில் மீண்டும் பெருமானாரைக் கனவில் கண்டு இந்தியாவில் தமிழகம் சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யுமாறு பணிக்கப்பட்டு ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் பலம் வாய்ந்த படையோடும், தேiவாயன ஆயுதங்களோடும் தமிழகம் வர ஏற்பாடு செய்தார்கள்.</p>
<p style="text-align: justify;">இந்தச் செய்தி அவ்வேளை துருக்கியில் ஆட்சி செய்து கொண்டிருந்த கலீபாவுக்கு கிடைத்தது. அவர் தனது படைத் தளபதி அப்பாஸ் அவர்களையும், படை வீரர்களையும் கொடுத்து உதவினார்.</p>
<p style="text-align: justify;">பெரும் பலம் வாய்ந்த படை உருவாகியது. ஸெய்யித் இப்றாஹீம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 121 பெண்களும் படையணியில் சேர்ந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">மொத்தம் ஐயாயிரம் போர் வீரர்களுடன் ஜித்தாவிலிருந்து கப்பல் மூலம் கண்ணணூர் துறை முகம் வந்து சேர்ந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">அங்கு சில காலம் தங்கியிருந்து பிரச்சாரம் செய்து பல்லாயிரம் பேர்களை இஸ்லாத்தில் இணைத்துவிட்டு தமிழ் நாடு நோக்கி ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் படைகளோடு வந்து சேர்ந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">அப்பொழுது பாண்டிய நாட்டை மூன்று உடன் பிறந்த சகோதரர்கள் பங்கு வைத்துக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். மதுரையையும் அதன் சூழலையும் மூத்தவனான திருப் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட வீர பாண்டியன் ஆண்டு வந்தான். சேது நாட்டை விக்கிரம பாண்டியனும், திருநல்வேலி மாவட்டத்தை குல சேகர பாண்டியனும் ஆண்டு வந்தான்.</p>
<p style="text-align: justify;">முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்குமிடையில் தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் போர்கள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற போர்களில் முஸ்லிம்கள் தரப்பிலும், எதிரிகள் தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். பலர் காயப்பட்டனர். சுமார் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் உயிர் துறந்துள்ளனர். தொடர்ந்து பத்து நாட்கள் போர் நடந்தது.</p>
<p style="text-align: justify;">பத்தாம் நாள் ஸெய்யித் இப்றாஹீம் அவர்களும், திருப் பாண்டியனும் நேருக்கு நேர் எதிர்த்து நின்று போர் செய்தார்கள். அப்பொழுது ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் திருப் பாண்டியனை தம் வேலாயுதத்தினால் குத்த அது அவனின் உடலில் காயத்தை ஏற்படுத்தியது. எனினும் அதை சமாளித்துக் கொண்டு அவன் வாளாயுதத்தை ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் மீது வீச அவர்கள் வெட்டுப் பட்டு கீழே சாய்ந்து உயிர் நீத்தார்கள். இது நிகழ்ந்தது ஹிஜ்ரீ 595ம் ஆண்டு துல் கஃதா மாதம் இருபத்து மூன்றாம் நாளிலாகும்.</p>
<p style="text-align: justify;">ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள்தான் தங்களின் ஊரின் பெயரான “யர்பாத்” என்ற பெயரை அவ்விடத்திற்கு சூட்டினார்கள். அப்பெயர்தான் காலப் போக்கில் ஏர்வாடி என்று மருவியிருக்க இடமுண்டு.</p>
<p style="text-align: justify;">ஏர்வாடியில் நடந்த போரில் முஸ்லிம்களில் இருநூறுக்கும் அதிகமானோர் “ஷஹீத்”களாகி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. எதிரிகளில் இதனைவிட அதிகமானோர் மாண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">ஏர்வாடி கீழக்கரைக்கு அண்மையில் உள்ளது. ஸெய்யித் இப்றாஹீம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “தர்ஹா” கட்டிடத்தில் அவர்களுக்கு அருகிலுள்ள அறையிலேயே ஸெய்யித் அபூ தாஹிர் வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கவிடம் உள்ளது. தர்ஹாவுக்குப் பக்கத்தில் ஜும்ஆப் பள்ளிவாயல் ஒன்றும் உள்ளது. தேனீர், சாப்பாட்டுக் கடைகள், லாட்ஜுகளும் உள்ளன.</p>
<p style="text-align: justify;">எல்லா வகை நோயாளர்களும் ஸெய்யித் இப்றாஹீம் ஷஹீத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்ஹாவுக்கு வந்து நேர்ச்சைகள் செய்து தமது நோய்களிலிருந்து சுகம் பெற்றுச் செல்வார்கள். நான் சுமார் ஏழு வருடங்களுக்கு முன் சுமார் பத்து முறை அங்கு சென்று நாயகம் அவர்களையும், அவர்களோடு இஸ்லாமிய போருக்காக வந்த “ஷஹீத்” களான பலரையும் தரிசித்திருக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">நான் நீண்ட காலமாக எழுதி வந்த தற்போது முடித்து விரைவில் அச்சகம் செல்லவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் “வஹ்ததுல் வுஜூத்” ஞான நூலை &#8211; கையெழுத்துப் பிரதியை அவர்களின் அருளை நாடி அவர்களின் கப்று ஷரீபின் மீது வைத்து எடுப்பதற்காக அங்கு எடுத்துச் சென்ற நேரம் எனக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கீழக்கரைக்கும், ஏர்வாடிக்கும் இடையிலுள்ள ஆயிஷா நகர் அறபுக் கல்லூரியில் தங்கியிருந்தேன். நான் அங்கு செல்ல வாய்ப்பில்லாது போனதால் நான் எழுதிய கையெழுத்துப் பிரதியை என்னுடன் பயணித்த மௌலவீ ALM இஸ்மாயீல் பலாஹீ அவர்களையும், அறபுக் கல்லூரி மெனேஜர், மற்றும் அதிபர் மௌலவீ அப்துர் றஊப் அவர்களையும் இணைத்து அந்தப் பணியை செய்து வருவதற்காக அனுப்பி வைத்தேன்.</p>
<p style="text-align: justify;">அவ்விரு மௌலவீகளும், மெனேஜரும் அங்கு சென்று வந்து என்னைச் சந்தித்த போது அழுதார்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் அவர்களால் என்னுடன் பேச முடியாமற் போயிற்று. பின்னர் விபரத்தைக் கூறினார்கள். அவர்கள் கையெழுத்துப் பிரதியை கப்ர் ஷரீப் மீது வைத்தவுடன் அந்த நூல் மீது மலர்கள் சொரியப்பட்டதாம். அவ்வேளை இவர்கள் தவிர வேறெவரும் அங்கு இருக்கவில்லையாம். இது அவர்களின் “கறாமத்” என்று கூறினார்கள். அல்லாஹ் என்னை அங்கு போகாமலாக்கி அவர்களைப் போக வைத்ததில் இறைவனின் இரகசியம் உண்டு என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் போயிருந்தால் இந்த கறாமத்தை நான்தானே சொல்ல வேண்டும். எழுதிய நானே சொல்வது பொருத்தமற்றதல்லவா?</p>
<p style="text-align: justify;">இக்கையெழுத்துப் பிரதி அஜ்மீர் ஹாஜா அவர்களின் தலையோரமாக இரண்டு இரவுகள் இருந்துள்ளதென்பதும், நாகூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்களின் கப்றின் மீதும் ஓர் இரவு இருந்துள்ளதென்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.</p>
<p style="text-align: justify;">ஸெய்யித் இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் ஓர் அரசராவார்கள். அவர்களுடன் போருக்காக துருக்கி அரசால் அனுப்பி வைக்கப்பட்ட போர் தளபதியும், அமைச்சருமான ஸெய்யித் அப்பாஸ் மந்திரி ஷஹீத் அவர்கள் அங்கிருந்து கடற்கரை செல்லும் வழியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இதேபோல் அவர்களுடன் வந்த டொக்டர் ஒருவரும் ஷஹீதாகி அங்கேயே அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் போல் இன்னும் பல ஷுஹதாஉகள் அடக்கம் பெற்றுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அவர்களின் “கறாமத்”துகள் வித்தியாசமானவையும், விஷேடமானவையுமாகும்.</p>
<p style="text-align: justify;">847 வருடங்களுக்கு முன் ஏர்வாடி நகரில் இஸ்லாமியப் புனிதப் போரில் உயிர் துறந்து “ஷஹீத்” ஆகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டு பக்தர்கள், பக்தைகளின் கண் முன்னே “கறாமத்” எனும் அற்புதங்கள் காட்டி அவர்களை நாடிச் செல்லும் பக்தர்களினதும், பக்தைகளினதும் தேவைகளை நிறைவேற்றி வரும் ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா அவர்களின் வருடாந்த கந்தூரிக்கான கொடியேற்ற வைபவம் 12.06.2021ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானது.</p>
<p style="text-align: justify;"><strong>“கறாமாத்” அற்புதங்கள்:</strong></p>
<p style="text-align: justify;">நான் நேரில் கண்ட அற்புதங்களிற் சிலதை மட்டும் இங்கு எழுதுகிறேன்.</p>
<p style="text-align: justify;">வட நாட்டில் கோடீஸ்வரன் ஒருவரின் படிக்கின்ற மகளுக்கு இடது மார்பில் ஒரு நோய், மார்பு அடிக்கடி வீங்குவதும், வலிப்பதுமாகும். ஆங்கில வைத்தியம் முதல் அனைத்து வைத்தியங்கள் செய்தும் கூட பயன் கிடைக்கவில்லை. சென்னை, மதுரை, டில்லி, மும்பாய் முதலான இடங்களில் பிரசித்தி பெற்ற ஆங்கில டொக்டர்கள், மற்றும் நாட்டு வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் குடும்பத்திலுள்ள படித்தவர்களின் ஆலோசனைப்படி சிங்கப்பூர் அழைத்துச் சென்று வைத்தியம் செய்தும் பயன் கிடைக்கவில்லை.</p>
<p style="text-align: justify;">இறுதியில் வட நாட்டிலுள்ள கோவில் பூசாரி ஒருவரின் ஆலோசனைப்படி ஏர்வாடி ஸுல்தான் இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்களின் தர்ஹாவுக்கு அந்த மாணவி கொண்டு வரப்பட்டு அங்கு தங்கியிருக்கும் போது அந்த மாணவியின் கனவில் தோன்றிய ஸுல்தான் இப்றாஹீம் அவர்கள், ஏர்வாடியிலுள்ள சாதாரண ஆங்கில டொக்டர் ஒருவரின் தோற்றத்தையும், அவரின் வீட்டையும் கனவில் காட்டி அவரிடம் வைத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">அதே இரவு மாணவிக்கு கனவில் காட்டப்பட்ட டொக்டரின் கனவில் தோன்றிய ஸுல்தான் இப்றாஹீம் குறித்த மாணவியின் தோற்றத்தை டொக்டருக்கு காட்டி இவள் காலையில் வருவாள். இவளின் இடது மார்பை வெட்டி அதிலுள்ள அசுத்தங்களை அகற்றி விடவும் என்று கூறியுள்ளார்கள். டொக்டரின் வீட்டுக்கு போகும் வழியையும், வீட்டு இலக்கத்தையும் அந்த மாணவிக்கு கனவில் சொல்லியிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">காலையில் மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததைச் சொன்னதும், அவர்கள் காரியம் வெற்றியாக முடியப் போகிறதென்று மகிழ்ச்சியடைந்தவர்களாக மகளை அழைத்துக் கொண்டு ஏர்வாடியிலுள்ள டொக்டரைத் தேடி வந்து கொண்டிருக்கும் போது அம்மாணவியின் வருகையை எதிர்பார்த்து வெளியே நின்றிருந்தார் டொக்டர். இருவரும் ஒருவரையொருவர் கண்டதும் புரிந்து கொண்டார்கள்.</p>
<p style="text-align: justify;">டொக்டர் மாணவியின் பெற்றோரிடம் நான் MBBS படித்த ஒரு சாதாரண டொக்டர்தான். என்னால் சத்திர சிகிச்சை செய்ய முடியாது. ஆயினும் ஸுல்தான் பாதுஷா அவர்களின் கட்டளையை சிரமேற் கொண்டு அவர்களின் உதவியோடு இதைச் செய்கிறேன் என்று தனது சமையலறையிலிருந்த சாதாரண கத்தியால் மாணவியின் மார்பை கீறினார்.</p>
<p style="text-align: justify;">அவ்வளவுதான். மார்பின் உள்ளே இருந்து பிலேட் துண்டுகளும், ஊசிகளும், கடலில் உள்ள ஊரீகளும், சிப்பிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. உள்ளே இருந்த எல்லாமே வெளி வந்த பிறகு டொக்டர் தனக்குத் தெரிந்தவாறு மருந்து செய்து மாணவியை அனுப்பி வைத்தார்.</p>
<p style="text-align: justify;">சூனியப் பொருட்கள் யாவையும் எடுத்து சுத்தம் செய்தபின் அவற்றைக் கண்ணாடி போத்தல் ஒன்றில் போட்டு வைத்துக் கொண்டார்.</p>
<p style="text-align: justify;">மாணவி மூன்று நாட்கள் மட்டும் தர்ஹாவில் தங்கியிருந்து பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவீ அவர்களிடம் கலிமாச் சொல்லி மூவரும் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டார்கள்.</p>
<p style="text-align: justify;">மார்பிலிருந்து எடுக்கப்பட்ட குறித்த சூனியப் பொருட்களை நானும், என்னுடன் வந்தவர்களும் எங்களின் கண்ணால் கண்டோம்.</p>
<p style="text-align: justify;">இன்னுமோர் அற்புதம். ஒரு நாள் வெள்ளியிரவு ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா நாயகம் அவர்களின் தர்ஹாவில் ஒரு மணியளவில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தேன்.</p>
<p style="text-align: justify;">தர்ஹாவுக்கு முன்னால் பெருங் கூட்டமொன்று கூடி நிற்பதைக் கண்ட நான் எழுந்து சென்று பார்த்தேன். சுமார் 50 பேர் கொண்ட ஒரு கூட்டம் வட்டமாக நிற்கிறது. கூட்டத்தின் நடுவே ஒருவன் சப்பணம் போட்டு அமர்ந்திருக்கிறான். அவனுக்கு எதிரில் ஒரு பெண் அமர்ந்து கொண்டு அவனைத் திட்டுகிறாள், சபிக்கிறாள். தனது கையை நாகப் பாம்பு படம் எடுத்தாடுவது போல் வைத்துக் கொண்டு அவனைத் தனது கையால் பாம்பு கொத்துவது போல் அவனைக் கொத்திக் கொண்டும், கேள்விகளைத் தொடர்ந்து கொண்டுமிருக்கிறாள்.</p>
<p style="text-align: justify;">“அடேய் குடிகாரா! நாகப் பாம்பு வேஷம் போட்டு உன்னைக் கடித்து அழிப்பேன், சூனியத்தை எங்கே வைத்திருக்கிறாய்? சொல்லுடா” இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்கிறாள். சனக் கூட்டத்தில் யாரிடம் விபரம் கெட்பதென்று இருக்கும் வேளை தர்ஹா ஜும்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவீ ஒருவர் நின்றதைக் கண்டேன். அவரை அழைத்து விளக்கம் கேட்டேன்.</p>
<p style="text-align: justify;">அதற்கவர், நடுவில் இருப்பவன் ஒரு சூனியக் காரன். அந்தப் பெண்ணுக்கு சூனியம் செய்துள்ளான். அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா, அவனின் தோற்றத்தை அந்தப் பெண்ணுக்கு கனவில் காட்டி இவன் இன்ன ஊரில், இன்ன தெருவிலுள்ள, இன்ன இலக்கமுடைய வீட்டில் இப்போது யாரோ ஒருவருக்கு சூனியம் செய்து கொண்டிருக்கிறான். இப்போது போனால் அவனைப் பிடிக்கலாம் என்று அவர்கள் சொன்னதையடுத்து தர்ஹாவின் தொண்டர்களிற் சிலர் சென்று அவனைப் பிடித்து வந்துள்ளார்கள். அவனிடம் எங்கே வைத்துள்ளாய் என்று சூனியம் செய்யப்பட்ட பெண் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவன் இப்போது சொல்வான். சொன்னதும் தர்ஹாவின் தொண்டர்கள் அவனையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்று சூனியப் பொருட்களைக் கொண்டு வருவார்கள். அதன் பின் அவன் தண்டிக்கப்படுவான் என்று என்னிடம் சொன்னார். இரவு மூன்று மணியாகிவிட்டதால் நான் தங்குமிடம் போய்விட்டேன். காலையில் வந்த போது பாழடைந்த கிணறொன்றில் அவன் வைத்திருந்ததை எடுத்து வந்து அவனுக்கு தண்டனையும் கொடுத்து விட்டார்கள் என்று மௌலவீ கூறினார்.</p>
<p style="text-align: justify;">இன்னுமொரு அற்புதம். ஏர்வாடியை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனும், மனைவியும் ஆறு வருடங்கள் குழந்தைப் பாக்கியமமின்றி இருந்தார்கள். பண வசதியற்றவர்களாயிருந்ததால் பணம் செலவு செய்து வைத்தியம் செய்ய அவர்களால் முடியாமற் போயிற்று. அவ்விருவரும் வலீமாரின் பக்தர்களாயிருந்ததால் ஒரு நாளிரவு “தர்ஹா”வுக்கு வந்து குழந்தை கிடைப்பதற்கு நேர்ச்சை செய்து “பாதிஹா”வும் ஓதிவிட்டுச் சென்றனர்.</p>
<p style="text-align: justify;">ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா அவர்களின் அருளால் மனைவி கர்ப்பமானாள். எட்டு மாதங்கள் அவளின் எண்ணத்தில் மிகவிரைவாக நகர்ந்து சென்றன. ஒன்பதாம் மாதம் அவருக்கு அழகிய மகன் பிறந்தான். கணவனும், மனைவியும் குழந்தையுடன் தர்ஹா வந்து பிள்ளை வழங்கிய மகான் அவர்களின் இப்றாஹீம் என்ற பெயரையே பிள்ளைக்கும் சூட்டி மகிழ்வோடு சென்றனர்.</p>
<p style="text-align: justify;">ஏந்தல் இப்றாஹீம் பாதுஷா வழங்கிய இப்றாஹீம் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக ஆறு வயதை அல்லது பதினான்கு வயதை அடைந்ததும் காய்ச்சல் ஏற்பட்டு மரணித்துவிட்டார்.</p>
<p style="text-align: justify;">ஒருவரையொருவர் கட்டித் தழுவி கண்ணீர் வடித்தவர்களாக இப்றாஹீமின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யாமல் தந்தவரிடமே கொடுப்போம் என்று முடிவு செய்து ஜனாஸாவை தர்ஹாவுக்கு கொண்டு வந்து, ஸுல்தான் இபறாஹீம் பாதுஷாவே! குழந்தை தந்தது நீங்கள்தான். இப்போது எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு போயினர் பெற்றோர்.</p>
<p style="text-align: justify;">ஜனாஸா தர்ஹா வாசற் படியில் இருக்கிறது. உள்ளூர் வாசிகளும், வெளியூர் வாசிகளும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர். பெற்றோர் போனவர்கள் போனவர்கள்தான். மூன்றாம் நாள் காலை ஜனாஸாவைக் காணவில்லை. செய்தி பரபரப்பானது. யார் வாடிப் போனாலும் ஏர்வாடி வாடாது. இப்றாஹீம் வழங்கிய இப்றாஹீம் தந்தையின் கப்றை முத்திமிட்டவராக நின்றிருந்தார். ஸுப்ஹானல்லாஹ்!</p>
<p style="text-align: justify;">சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஏர்வாடி சென்ற நான் எனக்கு அறிமுகமான ஒருவரின் புத்தகக் கடையொன்றில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அங்கு சுமார் 65-70 வயது மதிக்கத்தக்க, எடையும் சுமார் 200 கிலோ மதிக்கத்தக்க ஒருவர் கோல் ஊன்றியவராக வந்து அமர்ந்தார். கடைக்கார முதலாளி என்னிடம் இவரைத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றேன். இவர் ஸுல்தான் இப்றாஹீம் “கறாமத்”தால் மரணித்து உயிர் வந்த இப்றாஹீம் என்றார். அவரின் கை முத்தி அருள் பெற்றுக் கொண்டேன். நான் சந்தித்த நேரம் அவர் பாதுஷா நாயகத்தின் தென்னந்தோட்டத்தில் காவல் காரனாக இருந்தார்.</p>
<p style="text-align: justify;">அன்பிற்குரிய வலீமாரின் பக்தர்களே! பக்தைகளே! அவர்கள் அருளை நீங்கள் பெற விரும்பினால் அவர்கள் பேரில் ஒரு “யாஸீன்” மட்டுமாவது ஓதுமாறு உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/06/15/%e0%ae%8f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%86/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பக்தாத் நகர் ராஜா “அல்பாஸுல் அஷ்ஹப்” குத்பு நாயகம்.</title>
		<link>https://shumsmedia.com/2021/04/19/%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/</link>
					<comments>https://shumsmedia.com/2021/04/19/%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 11:36:48 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=14104</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
<div dir="auto">தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</div>
<div dir="auto"> </div>
<div dir="auto" style="text-align: justify;">அண்ட கோடிகளையும் பந்தெனக் கைக்குள் அடக்கிய குத்பே! ராஜாளியே!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">பாதுஷா முஹ்யித்தீனே!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு மாத காலம் உங்கள் காலடியில் நான் கிடந்து காலையும், மாலையும், இரவும், பகலும் இடையறாது கேட்டதை தந்துவிட்டீர்கள் நாயகமே! என் தாயகமே!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">நான் வாழும் இலங்கை நாட்டு முஸ்லிம்கள் சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் “யா முஹ்யித்தீன்” என்று அவர்கள் உங்களைத்தான் அழைத்து வந்தார்கள். யா அல்லாஹ்! என்று அவர்கள் அழைத்ததில்லை. அவர்களின் அழைப்பை எங்கிருந்தாலும் செவியேற்று உதவினீர்கள் யா குத்பே!</div>
</div>
<p><span id="more-14104"></span></p>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">يَا فَقِيْرْ مُحْيِ الدِّيْنْ!</div>
<div dir="auto">பகீர் முஹ்யித்தீனே!</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">فقير</div>
<div dir="auto">&#8211; பகீர் என்ற சொல்லுக்கு பாடலில் விளக்கம் சொன்ன பாவலரே! என் காவலரே! என் காதலரே!</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">سُئل الشّيخُ محي الدين عن معنى اسم الفقير فقال: ف &#8211; ق -ي -ر ثمّ أنشد:</div>
<div dir="auto">فَاءُ الْفَقِيْرِ فَنَائُهُ فِى ذَاتِهِ &#8211; وَفَرَاغُهُ مِنْ نَعْتِهِ وَصِفَاتِهِ</div>
<div dir="auto">وَالْقَافُ قُوَّةُ قَلْبِهِ بِحَبِيْبِهِ &#8211; وَقِيَامُهُ للهِ فِى مَرْضَاتِهِ</div>
<div dir="auto">وَالْيَاءُ يَرْجُوْ رَبَّهُ وَيَخَافُهُ &#8211; وَيَقُوْمُ بِالتَّقْوَى بِحَقِّ تُقَاتِهِ</div>
<div dir="auto">وَالرَّاءُ رِقَّةُ قَلْبِهِ وَصَفَائُهُ &#8211; وَرُجُوْعُهُ للهِ عَنْ شَهَوَاتِهِ</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">فقير</div>
<div dir="auto">&#8211; பகீர் என்ற பெயரின் பொருள் என்ன என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அதில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவை பேF, காப்K, யே, றே என்று கூறிய குத்பு நாயகம் மேற்கண்ட பாடலில் நான்கு எழுத்துக்களில் ஒவ்வொன்றும் எதைக்குறிக்கின்றது என்று பாடலில் கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">“பகீர்” என்ற சொல்லில் முதலெழுத்தான “பேF” என்பது فناء – “பனா” என்பதைக் குறிக்கிறது என்று கூறினார்கள். அதாவது “பகீர்” என்பவர் அல்லாஹ்வில் “பனா” ஆனவராகவே இருப்பார். “பனா”வில் மூன்று வகையுண்டு. ஒன்று &#8211; فناء فى الذّات அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் “பனா” ஆவதாகும். “பனா” என்றால் அழிதல். அதாவது அடியான் அல்லாஹ்வின் உள்ளமையில் அழிந்து தானில்லாமற் போதல். தானில்லை என்று உணர்தல். இரண்டு &#8211; فناء فى الأفعال அவனின் செயல்களில் அடியான் அழிந்து போதல். அதாவது அடியான் தனக்கு எச் செயலும் இல்லை என்று உணர்தல். மூன்று &#8211; فناء فى الأسماء &#8211; அல்லாஹ்வின் திருப் பெயர்களில் அடியான் அழிந்து போதல். அதாவது தனது பெயரும், ஏனைய படைப்புக்களின் பெயர்களும் அவனின் பெயர்கள் என்று உணர்தல்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">இம் மூன்று வகையிலும் “பகீர்” என்பவர் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் அழிந்து தானில்லையென்றும், அவன் தவிர வேறொன்றும் இல்லையென்றும் உணர்ந்தவனாயிருப்பார். அதுமட்டுமன்றி அந்த “பகீர்” என்பவன் தனது தன்மைகளை விட்டும் விடுபட்டவனாகவும் இருப்பான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">“பகீர்” என்ற சொல்லில் உள்ள இரண்டாவது எழுத்து “காப்” ஆகும். இந்த “காப்” “பகீர்” என்பவனின் கல்பு &#8211; உள்ளம் அல்லாஹ் என்ற அவனின் காதலனால் மிக சக்தியுள்ளதாகவும், அந்தக் காதலனின் திருப் பொருத்தத்தைக் கொண்டு நிலை பெற்றதாகவும் இருக்கும் என்பதை குறிக்கின்றது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">“பகீர்” என்ற சொல்லின் மூன்றாம் எழுத்து “யே” ஆகும். இது அந்த பகீர் என்பவன் தனது காதலனை ஆதரவு வைக்கிறான் என்பதையும், அவனுக்கு அஞ்சுகிறான் என்பதையும், உரிய முறையில் உண்மையாக அவனை பயந்து நடக்கிறான் என்பதையும் குறிக்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">“பகீர்” என்ற சொல்லில் உள்ள நாலாம் எழுத்து “றே” ஆகும். இது அந்த “பகீர்” என்பவனின் உள்ளம் மென்மையானதாயும், தெளிவானதாயும் இருப்பதைக் குறிப்பதுடன் அவன் தனது மனவெழுச்சியிலிருந்து விடுபட்டவன் என்பதையும் குறிக்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">எனவே, மேற்கண்ட சிறப்பம்சங்களைக் கொண்டவனாக அவன் இருப்பதினால்தான் அவனுக்கு “பகீர்” என்று பெயர் வரலாயிற்று. மேற்கண்ட இத்தன்மைகள் உள்ளவன்தான் எதார்த்தத்தில் “பகீர்” என்ற பட்டம் சூட்டப்படுவதற்கு தகுதி உள்ளவனாவான். இவன்தான் “பகீர்” என்ற பட்டத்திற்கு தகுதியும், அருகதையும் உள்ளவனாகிறான். தவிர “தகறா” அடித்துக் கொண்டும், பெரிய சட்டையும், பெரிய தலைப்பாகையும் அணிந்து யாசகம் செய்து வருகின்றவன் அல்ல.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பாடலில் கூறப்பட்ட தன்மைகளும் தராதரமும் உள்ளவர்களாயிருந்ததினாலேயே “பகீர் முஹ்யித்தீன்” என்று அழைக்கப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">குத்பு நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஆன்மிகப் படித்தரத்திற்கேற்றவாறு பொருத்தமான பல பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">“குத்பு” நாயகம் அவர்களிடம் நீங்கள் “குத்பு” என்று உங்களுக்கு எப்போது தெரியுமென்று கேட்கப்பட்ட போது பின்வருமாறு சொன்னார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">كنت وأنا ابن عشـر سنين فى بلدنا، أخرج مِن دارنا وأذهبُ إلى المَكتَب، فأرى الملائكةَ عليهم السلام تمشـي حَولِي، فإذا وصلتُ إلى المكتب سمعت الملائكة يقولون اِفْسَحُوا لوليّ الله حتّى يجلس، فمرَّ بنا رجلٌ يوما ما عرفتُه يومئذٍ، فسمع الملائكة يقولون ذلك، فقالأحدهم ما هذا الصبيّ، فقال له أحدهم هذا من بيت الأشراف، قال سيكون لهذا شأنٌ عظيم، هذا يعطي فلا يمنع، ويمكّن فلا يحجُب، ويقرِّب فلا يَمْكُرُ به، ثمّ عرفت ذلك الرجل بعد أربعين سنة، فإذا هو من أبدال، ذلك الوقت، (قلائد الجواهر، ص 11)</div>
<div dir="auto">நான் எனதூரில் பத்து வயதுச் சிறுவனாயிருந்த போது எனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்வேன். அப்போது “மலக்” அமரர்கள் என்னைச் சூழ்ந்தவர்களாக வருவார்கள். நான் பாடசாலையை அடைந்ததும் என்னுடன் வந்த மலக்குகள் அல்லாஹ்வின் வலீ அமர்வதற்கு இடம் கொடுங்கள் என்று சொல்வார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அவ்வேளை எனக்குத் தெரியாத ஒருவர் அவ்வழியால் சென்றார். இவருக்கு இடம் கொடுங்கள் என்று மலக்குகள் கூறியதை அவர் செவிமடுத்தார் போலும். அப்போதவர் யார் இச்சிறுவன் என்று அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் அவர் கேட்டார். அதற்கு அங்கு இருந்தவர்களில் ஒருவர் இவர் கண்ணியத்திற்குரிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அதற்கு அந்த மனிதர் இவருக்கு வலுப்பமிகு ஒரு விடயம் பின்னொரு காலத்தில் உண்டு என்று கூறிவிட்டு இவர் கொடுப்பார். இல்லையென்று சொல்லமாட்டார், அனைவரையும் ஆதரிப்பார், எவரையும் தடுக்கமாட்டார் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பின்னர் 40 வருடங்களின் பிறகுதான் அந்த மனிதர் “அப்தால்”களில் ஒருவர் என்று நான் அறிந்து கொண்டேன் என்றார்கள் குத்பு நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">قال الحافظان الذّهبي وابن رَجَب أنّ أباه أبو صالح عبد الله بن جَنْكِيْ دُوْسْتْ، والله أعلم، وأقول وجَنْكِيْ دُوْسْتْ لفظ عجميٌّ، معناه يحبُّ القتال، والله أعلم، وأمّه أمُّ الخير، فاطمة بنت الشّيخ عبد الله الصومعي الحُسينيُّ الزاهد، وكان لها حظٌّ وافر من الخير والصّلاح، نُقِلَ عنها أنّها كانت تقول لمّا وضعت ابني عبد القادر كان لا يرفع ثَديَه فى نهار رمضان، وغُمَّ على النّاس هلال رمضان، فأتوني وسئلوني عنه، فقلت لهم لَمْ يَلْقَمِ الْيَومَ ثديا، ثمّ اتّضَحَ أنّ ذلك اليوم كان من رمضان، واشتهر ذلك بِبِلادِ جِيلان أنّه وُلد للأشراف ولدٌ لا يرضع نهار رمضان،</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">அல்ஹாபிள் தஹபீ, அல் ஹாபிள் இப்னு றஜப் றஹிமஹுமல்லாஹ் இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">குத்பு நாயகம் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயர் அபூ ஸாலிஹ் அப்துல்லாஹ் இப்னு “ஜன்கீ தோஸ்த்” என்பதாகும். “ஜன்கீ தோஸ்த்” என்ற சொல் அறபு மொழியல்ல. பாரசீக மொழியாக இருக்கலாம் என்பது எனது கருத்து. இதன் பொருள் போரை விரும்புகின்றவர் என்பதாகும்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">குத்பு நாயகம் அவர்களின் தாயார் “உம்முல் கைர் பாதிமா” என்பதாகும். இவர்கள் அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் அஸ்ஸவ்மஈ அவர்களின் மகள் ஆவார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">குத்பு நாயகம் அவர்களின் தாயார் பின்வருமாறு கூறுகின்றார்கள். எனது மகன் அப்துல் காதிர் அவர்களை நான் பெற்ற போது றமழான் மாத பகல்களில் மட்டும் அவர்கள் என்னிடம் பால் குடிக்கமாட்டார்கள். ஒரு முறை றமழான் மாத்திற்கான தலைப்பிறை ஊர் மக்களால் அன்று காண முடியாமல் போயிற்று. ஊர் மக்கள் அன்று நோன்புதானா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்காக அன்று பகல் அவர்களின் தாயாரிடம் வந்து குழந்தை இன்று பகல் பால் குடித்ததா என்று கேட்டார்கள். இல்லை என்று தாயார் சொன்னதால் அன்று தலை நோன்பு என்று ஊர் மக்கள் முடிவு செய்தார்கள். இந்தச் செய்தி ஜீலான் நகர் எங்கும் பரவலாயிற்று.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எண்ணிலடங்காத அற்புதக் கடலாக விளங்கினார்கள். அவர்களின் “கறாமாத்” அற்புதங்கள் இவ்வளவுதான் என்று எந்த ஒருவராலும் எழுத முடியாமற் போயிற்று.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வின் நல்லருளாலும், குத்பு நாயகம் அவர்களின் அற்புதத்தாலும் எனக்கும், அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களுக்கும், வெளியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இன்னொருவருக்கும் அவர்களின் தர்ஹாவுக்குப் பக்கத்திலிருந்த ஹோட்டல் ஒன்றில் ஒரு மாதம் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களைத் தினமும் தரிசிப்பதற்கும், நீண்ட நேரம் அங்கு தங்கியிருந்து அவர்களின் அருளைப் பெறுவதற்கும் பெரியதோர் பாக்கியமாயிற்று. அல்ஹம்துலில்லாஹ். </div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">நான் இன்றுவரை ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கு வலீமாரின் ஆசீர்வாதமே காரணம் எனலாம். என் வாழ்வு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">(குத்பு நாயகம் புனித றமழான் மாதம் முதலாம் நாள் அன்று பிறந்ததை நினைவூட்டுவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டது)</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
<div dir="auto" style="text-align: justify;">எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/04/19/%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஸிய்யத்” உபதேசம்.</title>
		<link>https://shumsmedia.com/2021/04/13/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/</link>
					<comments>https://shumsmedia.com/2021/04/13/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Apr 2021 20:57:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=14083</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
<div dir="auto">தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</div>
<div dir="auto"> </div>
<div dir="auto" style="text-align: justify;">وصيّة قطب الأكبر أبي الحسن الشاذلي رضي الله عنه،</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;">الولادة 591 &#8211; الوفاة 656</div>
<div dir="auto" style="text-align: justify;">قال سيّدنا الشّيخ أبو الحسن الشّاذلي رضي الله عنه، كُنْ مُتمسِّكا بهذه الصّفات الحميدة تَفُزْ بسعادة الدارين، لا تَتَّخِذَنْ مِن الكافرين وليّا، ولا مِن المؤمنين عدوّا، وارحلْ بزَادِكَ من التّقوى فى الدنيا، وعُدَّ نفسكَ من المَوتَى، واشهد لله تعالى بالوحدانيّة، ولرسولِه صلّى الله عليه وسلّم بالرِّسالة، وحسْبُك عملٌ صالح وإن قلَّ، وقُلْ آمنتُ بالله وملائكته وكُتُبِه ورُسلِه واليوم الآخر والقدر خيره وشرّه من الله تعالى،</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">فمن كان مُتمسِّكًا بهذه الصِّفات الحميدة ضَمِنَ الله عزّ وجلّ له أربعةً فى الدنيا، الصِّدقَ فى القول، والإخلاصَ فى العمل، والرِّزقَ كالمطر، والوِقايةَ من الشرِّ، وأربعةً فى الآخرة، المغفرةَ العُظمى، والقُربةَ الزُّلفى، ودخولَ جنّة المَأْوَى، واللُّحوقَ بالدّرجة العُليا،</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">وإن أردت الصِّدق فى القول فدَاوِمْ على قراءة &#8216; إنَّا أنزلناه فى ليلة القدر &#8216;، وإن أردت الرِّزقَ كالمطر فداوِمْ على قراءة &#8216; قل أعوذ بربّ الفلق &#8216;، وإن أردت السّلامَةَ من شرِّ النّاس فداوم على قراءة &#8216; قل أعوذ بربّ الناس &#8216; ، وإن أردت جَلْبَ الخَيرِ والرِّزقَ والبركةَ فداوم على قراءة &#8216; بسم الله الرحمن الرحيم المَلِكِ الحقِّ المُبينِ، نِعْمَ المَولَى ونِعمَ النّصير &#8216;، واقرأ سورة الواقعة، وسورة يس، فإنّه يأتيك الرزق كالمطر،</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">وإن أردت أن يجعل الله لك من كلِّ همٍّ فَرَجًا، ومِن كلِّ ضِيْقٍ مَخرجًا، ويرزُقَكَ من حيثُ لا تَحْتَسِبُ فالزَمِ الإستغفار،</div>
<div dir="auto">وإن أردت أن تأمَنَ ممّا يَرُوْعُكَ وَيُفَزِّعُكَ فقُلْ &#8216; أعوذ بكلمات الله التامّات مِن شرِّ غَضَبِه ومِن شرِّ عقابِه، ومن شرِّ هَمَزَاتِ الشّياطينِ وأن يحضرون،</div>
<div dir="auto"><span id="more-14083"></span></div>
<div dir="auto">ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஸிய்யத்” உபதேசம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">தோற்றம்: 591 ஹிஜ்ரீ</div>
<div dir="auto">மறைவு: 656 ஹிஜ்ரீ</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">பின்வரும் புகழப்பட்ட தன்மைகளை நீ இறுகப் பிடித்து வாழ்ந்தால் ஈருலக நற்பாக்கியங்களும் உனக்கு கிடைக்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">காபிர்கiளில் எவரையும் தலைவனாக &#8211; அதிகாரியாக ஆக்கிக் கொள்ளாதே! “முஃமின்”களில் எவரையும் விரோதியாக ஆக்கிக் கொள்ளாதே! இறையச்சம் எனும் சாதத்தை கையில் எடுத்து இவ்வுலகில் பயணம் செய். உன்னை நீ மரணித்தவர்களில் ஒருவனாக கணக்கெடுத்துக் கொள்! அல்லாஹ் ஒருவன் என்று சாட்சி சொல். நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் றஸூல் என்று ஏற்றுக் கொள். குறைவாக இருந்தாலும் நல்லமல் உனக்குப் போதும். “ஆமன்து” என்ற பாடத்தை ஓதிக் கொள். அதாவது அல்லாஹ்வைக் கொண்டும், மலக்குகள் கொண்டும், வேதங்கள் கொண்டும், திருத்தூதர்கள் கொண்டும், மறுமை நாள் கொண்டும், நன்மை, தீமை என்பன அல்லாஹ்வின் ஏற்பாடு என்றும் நம்பிக் கொள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">எவன் மேற்கண்ட புகழப்பட்ட தன்மைகளை இறுகப் பற்றிக் கொண்டானோ அவனுக்கு நான்கு விடயங்களை அல்லாஹ் கொடுக்கின்றான். அவை உண்மை பேசுதல், வணக்கத்தில் “இக்லாஸ்” கலப்பில்லாத தூய்மை, மழை போன்ற ரிஸ்க் &#8211; உணவு, தீமையிலிருந்து பாதுகாப்பு, இந் நான்கு நற்பாக்கியங்களும் அவனுக்கு அல்லாஹ் கொடுப்பான். இந் நான்கும் இவ் உலகில் கிடைப்பவையாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">இவனுக்கு மறுமையில் நான்கு விஷேடங்களை அல்லாஹ் வழங்குகிறான். அவை மகத்தான பாவ மன்னிப்பு, இறை நெருக்கம், “மஃவா” எனும் சுவர்க்கம் செல்லுதல், உயர் பதவி கிடைத்தல், இந் நான்கு பாக்கியங்களையும் மறுமையில் அல்லாஹ் இவனுக்கு வழங்குகிறான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">பேச்சில் நீ உண்மை சொல்வதை நாடினால் “இன்னா அன்ஸல்னாஹு பீ லைலதில் கத்ர்” என்ற அத்தியாயத்தை தொடர்ந்து ஓதி வா!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">உணவு மழை போல் கிடைப்பதற்கு நீ விரும்பினால் “குல்அஊது பிறப்பில் பலக்” என்ற திரு அத்தியாயத்தை தொடராக ஓது. மனிதர்களின் தீமையிலிருந்து பாதுகாப்புப் பெற நீ நாடினால் “குல் அஊது பிறப்பின்னாஸ்” என்ற அத்தியாயத்தை விடாமல் ஓது. நன்மையும், உணவும், “பறகத்” அருளும் கிடைக்க வேண்டுமென்று நீ விரும்பினால் “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீமில் மலிகில் ஹக்கில் முபீன் &#8211; நிஃமல் மவ்லா வநிஃமன் நஸீர்” என்பதையும், “வாகிஆ” அத்தியாயம், யாஸீன் அத்தியாயம் ஆகியவற்றையும் தினமும் ஓதி வா! உணவும், பொருளாதாரமும் மழைபோல் உன் வீட்டில் இறங்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">உனக்கு ஏற்படுகின்ற துக்கத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் நீ விடுபட விரும்பினாலும், அல்லாஹ் நீ நினைக்காமலேயே உனக்கு பொருளாதார வசதி தர வெண்டுமென்று நீ விரும்பினாலும் தவறாமல் “இஸ்திக்பார்” பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்! “அஸ்தஃபிறுல்லாஹல் அளீம்” என்று தொடர்ந்து ஓதி வா!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">உனக்கு திடுக்கிடும் சம்பவங்களும், பயமும் வராதிருக்க நீ விரும்பினால் “அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாதி குல்லிஹா மின் ஷர்ரி ஙழபிஹீ வஇகாபிஹீ, வமின் ஷர்ரி ஹமஸாதிஷ் ஷயாதீனி வஅன் யஹ்ழுறூன்” என்று ஓதிக் கொள்! (தொடரும்)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto"><strong>குறிப்புக்கள்:</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">மேலே தமிழில் எழுதியுள்ள அறபு வசனங்களை &#8211; அறபியில் எழுதியுள்ள வசனங்களோடு சரி பார்த்து மொழிய வேண்டும். சில அறபு எழுத்துக்களுக்கான “மக்றஜ்” உச்சரிப்பை தமிழில் எழுத முடியாதுள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட ஓதல்களையும், அடுத்த தொடரில் நான் பதிவிடவுள்ள ஓதல்களையும் நேமமாக ஓதி வருவது வியாபாரத் தொடர்புள்ளவர்களுக்கு சாத்தியக் குறைவானதாகும். இவர்கள் எல்லா ஓதல்களையும் ஓதாமல் ஓதல்களில் அவர்களுக்கு அவசியமானதை தேவையானதை மட்டும் தெரிவு செய்து ஓதிக் கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">தொழிலுக்குப் போகாத நாட்களில் மட்டும் அனைத்தையும் ஓதிக் கொள்ள வேண்டும். தொழிலின்றி வீட்டிலேயே இருப்பவர்கள் அனைத்தையும் கட்டம் கட்டமாக ஓதி முடிக்கலாம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட தேவைகளுக்கு ஆங்கில வைத்தியர்களிடமோ, நாட்டு வைத்தியர்களிடமோ மருந்து எடுக்க முடியாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக வறுமை நீங்கிப் பொருளாதாரம் பெருகுதல், அச்சமில்லாமற் போதல், துக்கம், கவலை இல்லாமற் போதல் போன்ற நோய்களுக்கு ஆன்மிக மருந்து மட்டுமே பயன் தரும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">சுருக்கம் என்னவெனில் ஒரு முஸ்லிம் ஐந்து நிமிடமாவது “அவ்றாத்” ஓதுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். ஓய்வுள்ள நேரங்களில் ஆண்கள் ஒன்று கூடிக் கொண்டு ஊர் பலாய், வம்புகள் பேசியும், பிறர் பற்றிப் புறம் பேசியும் நேரத்தைக் கழிப்பதை தவிர்த்து “அவ்றாத்” ஓதுவது நூறு வீதம் நன்மை தரக் கூடியதாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">இவ்விடயத்தில் பெண்கள் மிகக் கவனமாயிருந்து கொள்ளுதல் அவசியமாகும். பெண்கள் கூடினால் பேசத் தேவையில்லை. பிறரைப் பற்றிய ஆய்வுகள்தான் நடக்கும். ஆகையால் பெண்கள் தமது ஓய்வுள்ள நேரத்தை வீணாக்கி விடாமல் பயனுள்ளதாக்கி கொள்ளுதல் வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸஹாபா பெண்மணிகள் தமது ஓய்வு நேரத்தை “அவ்றாத்” ஓதுவதில் கழித்துள்ளார்கள் என்பதற்கு பல நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு சமயம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண் அல்லாஹ்வின் றஸூலே! என் வீட்டில் தங்களின் திருப் பாதம் பட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார். நபீயவர்கள் தோழர்களுடன் உள்ளே சென்றபோது பெரிய முடுச்சுகளும், சிறிய முடுச்சுகளும் இருந்தன. அது பற்றி பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வினவிய போது “அவ்றாத்” ஓதும்போது எண்ணிக் கொள்வதற்காக பேரீத்தங் கொட்டைகளை வைத்துள்ளேன் என்று அந்தப் பெண்மணி கூறினார். அப்போது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நான் சொல்லித் தருகின்ற “அவ்றாத்” ஓதலையும் ஓதுங்கள் என்று கூறி சில ஓதல்களைச் சொல்லிக் கொடுத்தார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">قِرَاءَةُ الْأَوْرَادِ دَيْدَانُ الصَّالِحِيْنَ وَالصَّالِحَاتِ</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
<div dir="auto" style="text-align: justify;">“அவ்றாத்” ஓதுதல் நல்லடியார்களான பெண்களினதும், ஆண்களினதும் வழக்கம் என்று ஒரு பழமொழி உண்டு. இவ்வழக்கம் நமது ஆயிஷாக்களிடமும், ஹப்ஸாக்களிடமும் இல்லாதிருப்பது வேதனைக்குரியது.</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/04/13/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மான் குட்டி மஸ்தானும், “ஆலீ” அப்பாவும்.</title>
		<link>https://shumsmedia.com/2021/03/30/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/</link>
					<comments>https://shumsmedia.com/2021/03/30/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 11:17:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=14025</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
<div dir="auto" style="text-align: justify;">தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto"><strong>மான் குட்டி மஸ்தான்.</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">இவர் ஒரு மான் குட்டியோடு காத்தான்குடிக்கு புதிதாக வந்தார். எங்கிருந்து இங்கு வந்தார்? என்பது எவருக்கும் தெரியாது. அவருடன் எவர் பேசினாலும் பேசமாட்டார். சில நேரம் அவர் விரும்பினால் மட்டும் விரும்பியவர்களுடன் பேசுவார்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">இவர் காத்தான்குடி பிரதான வீதி ஆரையம்பதியிலிருந்த காஸிம் ஹாஜியாரின் அரிசி ஆலைக்கு பக்கத்தில் மர முந்திரிகை தோட்டத்தில் தன்னந்தனியாக ஓலைக் குடிசையொன்றில் வாழ்ந்து வந்தார். அங்கு ஒரு மானும் அவர் வளர்த்து வந்தார்.</div>
</div>
<p><span id="more-14025"></span></p>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அக்காலத்தில் வாழ்ந்த இறை வணக்கத்தோடு தொடர்புள்ள காத்தான்குடியைச் சேர்ந்த சில வயோதிபர்கள் அவர் ஞான வழி நடக்கின்ற ஒரு மஸ்தான் என்பதையும், ஒரு ஸூபீ என்பதையும் அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றனர். அவரும் இவர்களை ஆதரித்து இறை ஞானம் பேசத் தொடங்கியதால் இவர்கள் தினமும் “அஸ்ர்” தொழுகையின் பின் சென்று இஷா தொழுகையுடன் திரும்பி வருவார்கள். மஸ்தான் சில நாட்களில் பேசுவார். சில நாட்களில் மௌனியாகிவிடுவார். அவர் ஒரு ஞானி என்று மட்டுமே அவருடன் தொடர்பாயிருந்தவர்கள் அறிந்திருந்தனர். அவர் அதிக நேரம் மௌனியாயிருந்ததால் அவரிடமிருந்து அவரின் மேலதிக விபரங்களை அறிய முடியாமற் போயிற்று.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு நாள் “அஸ்ர்” தொழுகையின் பின் அவர் வெளியே செல்லப் புறப்பட்ட போது அவருடன் தொடர்பானவர்களும் காத்தான்குடியை நோக்கி வந்தார்கள். அவர் முன்னால் வர பின்னால் அவரின் மானும் வந்தது. அவரோடு தொடர்பானவர்களும் வந்தனர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">மஸ்தான் நேராக அஸ்ஸெய்யித் செய்ன் மௌலானா பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள மையவாடியில் அடக்கம் பெற்றுள்ள “ஆலீ அப்பா” தர்ஹாவுக்கு வந்தார். அக்காலத்தில் இவ்விடம் ஓலையால் வேயப்பட்ட சிறிய குடிசையாக இருந்தது. மஸ்தான் மூடிய கண்களைத் திறக்காமல் சிறிது நேரம் நின்ற பின், இங்கு ஓர் ஆலிம் இடுப்பில் சால்வை கட்டிய நிலையில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல்லிவிட்டு மௌனியாகிவிட்டார். அதனால் அவர் மூலம் அடக்கம் பெற்றுள்ளவரின் மேலதிக விபரங்களை அறிய முடியாமற் போயிற்று. மஸ்தான் சொன்ன பிறகுதான் கூடவந்தவர்களுக்கு அவர் ஆலிம் என்பது தெரிய வந்தது.</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அவருடன் சென்றவர்கள் காத்தான்குடி வாசிகளாயிருந்ததால் அங்கு அடக்கம் பெற்றுள்ளவரின் விபரங்களை அறிந்து கொள்வதற்காக அவர்களை விட வயதில் மூத்தவர்களிற் பலரைக் கண்டு அவரின் விபரங்களைத் திரட்டத் தொடங்கினார்கள். அவர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அந்த மனிதர் எங்கிருந்து வந்தார் என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அவரின் பெயர் தெரியவில்லை என்றும், அவர் ஆலிமாக இருந்ததால் மக்கள் அவரை “ஆலிம் அப்பா” என்று அழைத்து வந்தது “ஆலீ அப்பா” என்று மருவி விட்டதென்று அவர்கள் கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto"><strong>ஆலிம் அப்பாவின் வரலாறு</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அதை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">ஆலிம் அப்பா அவர்கள் ஒரு நாள் ஐந்தாம் குறிச்சி ஜாமிஉள்ளாபிரீன் மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையின் பின் மார்க்க உபன்னியாசம் செய்தார். (அக்காலத்தில் இப்பள்ளிவாயல் மீரா பள்ளிவாயல் என்று அழைக்கப்பட்டதென்பதும், தற்போது “ஜாமிஉள்ளாபிரீன்” ஜும்ஆப் பள்ளிவாயல் என்று அழைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அவர் தனது உரையில் “பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அழகிய வாலிபனின் உருவத்தில் தலையில் தங்க கிரீடமும், காலில் தங்கச் சப்பாத்தும் அணிந்தவனாக தனது “றப்”பைக் கண்டார்கள்” என்று கூறினார்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">இதைக் கேட்டுக் கொண்டிருந்த அக்கால உலமாஉகள் சீறி எழுந்து அவர் மீது பாய்ந்து, நீ என்ன சொல்கிறாய்? இவ்வாறு எந்த கிதாபில் உள்ளது என்று கோபம் கொப்பளித்த நிலையிலும், கண்கள் சிவந்த நிலையிலும், உடல் நடுங்கிய நிலையிலும் கேட்டார்கள். அதற்கவர், ஒரு வாரம் தவணை தாருங்கள் என்று கேட்டார். தவணை கொடுத்த உல(க)மாக்கள் அடுத்த வாரம் ஜும்ஆவுக்குப் பிறகு விளக்கம் சொல்ல வேண்டும் என்று எச்சரித்தார்கள். ஒரு வாரம் ஒரு நாள் போல் உருண்டோடியது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">ஆலிம் அப்பா ஒழிக்கவில்லை. சொன்னபடி ஜும்ஆத் தொழுகைக்காக வழமைக்கு மாறாக பெரிய சால்வை போட்டவராக நேர காலத்தோடு பள்ளி வந்தார். அன்று பெரு மழை நாளாயிருந்தும் கூட பள்ளிவாயலில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பொடியன்மார் புழுதி கிளப்பினர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">ஜும்ஆத் தொழுகை முடிந்தபின் ஆலிம் அப்பா எழுந்து “நான் பேசியதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் பேசியது பிழை அல்ல. அதற்கான “கிதாப்” என் கையில் இல்லை. தேடி அலைந்தேன் கிடைக்கவில்லை. கிடைத்தாற்கூட உங்களுக்கு விளக்கி வைக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. எனது இந்த சால்வையை இடுப்பில் கட்டுகிறேன். நான் மரணித்து என்னைக் குளிப்பாட்டும் போது இதை அவிழ்த்துக் குளிப்பாட்டிய பின் மீண்டும் இருந்தது போல் கட்டி விடுங்கள். நான் மறுமையில் அல்லாஹ்வைச் சந்தித்த பிறகுதான் இதை அவிழ்ப்பேன்” என்று சத்தியம் செய்தார்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அங்கு ஒரு சில நல்லவர்கள் இருந்ததால் குழப்பமின்றிக் கூட்டம் அமைதியுடன் கலைந்தது. அல்ஹம்து லில்லாஹ்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">அவர் மரணித்த பின் பொது மக்களால் அவ்வாறே செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு வந்த மான்குட்டி மஸ்தான், இங்கு இடுப்பில் சால்வை கட்டிய நிலையில் ஒருவர் உறங்குகிறார் என்று குறிப்பிட்டது “ஆலிம் அப்பா” அவர்களைத்தான். ஆலிம் அப்பா நல்லடக்கம் செய்யப்பட்டு பல வருடங்களின் பின் வந்தவர்தான் மான்குட்டி மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மகான்கள் என்றும் மகான்கள்தான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">ஆலிம் அப்பாவின் காலத்தில் நான் இருந்திருந்தால் அவருக்கு கை கொடுத்து அவரை ஆதரித்திருப்பேன். அவரை மிரட்டிய உலமாக்களுக்கு வாந்திபேதி மாத்திரை கொடுத்திருப்பேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">இது போன்ற ஒரு நிகழ்வுதான் எனக்கும் நடந்தது. ஆயினும் ஆலிம் அப்பாவின் காலத்திலிருந்த உலமாஉகள் சீறிப் பாய்ந்தது மட்டும்தான். அவருக்கு “முர்தத்” பத்வா கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஹலாலான முறையில் பிறந்தவர்கள். ஹலால் குட்டிகள். ஹறாம் குட்டிகள் அல்லர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">ஆலிம் அப்பா உறங்கும் மையவாடி பொது மையவாடியாயினும் அதை நிர்வகிப்போர் தர்ஹாவை அழகாக அமைத்து அதை “ஹயாத்” ஆக்குவார்களாயின் அவர்கள்</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ</div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">“அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவோர் “தக்வா” உள்ளவர்கள்” என்ற திருக்குர்ஆன் வழிகாட்டலின் படி இறையச்சமுள்ளவர்கள் பட்டியலில் சேர்ந்து கொள்வார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="text-align: justify;">
<div dir="auto">குறிப்பு: மான்குடிட்டி மஸ்தான் எங்கு போனார்? என்ன நடந்தது? என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
<div dir="auto" style="text-align: justify;">ஓர் ஊரில் ஒரு மகான் &#8211; மார்க்க மேதை அடக்கம் பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்தால் அவர்களின் அடக்கவிடத்தை கூட்டித் துப்பரவு செய்து சுத்தமாக வைத்திருப்பதும், அவர்களைத் தரிசிப்பதும், “பர்ழ்” போன்ற கடமை என்றால் மிகையாகாது.</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2021/03/30/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.</title>
		<link>https://shumsmedia.com/2020/12/15/blog-pos-6/</link>
					<comments>https://shumsmedia.com/2020/12/15/blog-pos-6/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Dec 2020 03:49:29 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-pos-6/</guid>

					<description><![CDATA[-சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்- இறை நேசர்களான வலீமார் வரிசையில் தமிழ்நாடு முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்போவா னோடையில் கொலுவீற்றிருந்து “கறாமத்” என்னும் அற்புதம் நிகழ்த்திவரும் “ஷெய்குத்தவா”&#160;ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர். இவர்கள் நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்தவர்கள் என்றும் அக்காலத்தில் தலைசிறந்த வைத்திய மேதையாக இருந்தவர்கள் என்றும் அவர்களைக் கனவில் கண்டுஇவ்விவரத்தை அவர்கள் மூலம் அறிந்தோர் கூறுகின்றனர். இப்பொழுது அவர்களின் புனித உடலைச் ]]></description>
										<content:encoded><![CDATA[<div dir="ltr" style="text-align: left;">
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">-சங்கைக்குரிய ஷெய்குனா</div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-</div>
</div>
<div></div>
<div style="text-align: justify;">இறை நேசர்களான வலீமார் வரிசையில் தமிழ்நாடு முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்போவா னோடையில் கொலுவீற்றிருந்து “கறாமத்” என்னும் அற்புதம் நிகழ்த்திவரும் “ஷெய்குத்தவா”&nbsp;ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்கள் நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்தவர்கள் என்றும் அக்காலத்தில் தலைசிறந்த வைத்திய மேதையாக இருந்தவர்கள் என்றும் அவர்களைக் கனவில் கண்டுஇவ்விவரத்தை அவர்கள் மூலம் அறிந்தோர் கூறுகின்றனர்.</div>
<p><span id="more-162"></span></p>
<div style="text-align: justify;">இப்பொழுது அவர்களின் புனித உடலைச் சுமந்திருக்கும் புண்ணிய பூமி ஜாம்போவானோடை அக்காலத்தில் யானை, சிங்கம், கரடி போன்ற மிருகங்கள் வாழ்ந்த அடர்ந்த காடாக இருந்த்து. யானைகள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் ஓர் அழகிய நதியும் அங்கு ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதி இப்பொழுதும் உண்டு.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">முத்துப்பேட்டைக்கும்,ஜாம்போவானோடைக்கும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உண்டு. அந்நேரம் முத்துப்பேட்டையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் ஜாம்போவானோடையில் விவசாய நிலங்கள் இருந்தன. ஒரு நாள் அங்கு சென்ற ஓர் இந்துமத விவசாயி தனது மண்வெட்டியால்நிலத்தை வெட்டிப்பண்படுத்திக் கொண்டிருந்த பொழுது வெட்டப்பட்ட ஓர் இடத்திலிருந்து இரத்தம் சீறிப்பாய்ந்து அவரின் முகத்தை நனைத்தது. அக்கணமே அவரின் இருகண்களும் பார்வையை இழந்தன அவரும் அவ்விடத்திலேயே மயக்கமுற்று விழுந்து விட்டார். வழமைபோல் அவருக்குப் பகற்சாப்பாடு எடுத்துச்சென்ற அவரின் மனைவி தனது கணவன் விழுந்து கிடந்ததையும் அவரின் அவரின் முகத்தில் இரத்தம் வழிந்தோடி இருந்ததையும் கண்டு பயந்து நடுங்கினவளாய் அவரண்டைசென்று​ அவரின் பெயர் சொல்லி அழைத்தாள். மயக்கம் நீங்கி எழுந்த கணவன் அவளிடம் நடந்தவற்றைக் கூறி கண்ணீர் மல்கி நின்றார். அவர் வெட்டிய இடத்தை அவள் கூர்ந்து கவனித்தாள் அங்​கே ஒரு கால் இரத்தம் தோய்ந்த நிலையில் இருக்கக்கண்டு “ஐயோ கடவுளே”என்று கூறி வியந்தவளாய் அக்காலுக்கு கைகூப்பி நின்றாள். சில நொடிகளில் அவரின் இரு கண்களும் இழந்த பார்வையை மீண்டும்​ பெற்றுக்கொண்டன.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">கணவனும் மனைவியும் சொல்லொணா வியப்புடன் கடவுளின் தத்துவம் நினைத்து வியந்தவர்களாக வீடு வந்து சேர்ந்தனர்</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">அன்றிரவு இருவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் யா​ரோ ஒருவர் கதவை தட்டும் சப்தம் அவர்களுக்கு கேட்டது. கதவை திறந்தவர்கள் நாற்பது முழம் உயரம் மதிக்கத்தக்க அடர்ந்த தாடியுள்ள பச்சை நிறத்தலைப்பாகையும் நீண்ட சட்டையும் அணிந்த ஒருவர் வீட்டு வாயலில் நின்றுகொண்டிருந்தார். அதைக்கண்ட இருவரின் உள்ளத்திலும் அன்று பகல் விவசாய நிலத்தில் நடந்த சம்பவம் நிழலாடத்தொடங்கியது. இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவர்களிடம் அங்கு​ தோன்றிய பெரியார் நான் நபீ மூஸா (அலை)அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஒரு வைத்திய மேதை அவர்களைக்கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட ஒரு விசுவாசி எனது பெயர்​ ஷெய்குதாஊத் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">பயத்தாலும் பக்தியாலும் சிலை​போலான கணவனும் மனைவியும் விடியும் வரை விழித்திருந்து முத்துப்பேட்டை முஸ்லிம்களை அழைத்து தமக்கு நடந்தவற்றை விரிவாகச்சொன்னார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">நபீமார், வலீமார்களின் உடலை மண் சாப்பிடமாட்டாதென்று இஸ்லாமிய தத்துவத்தை ஏற்கனவே அறிந்ததினாலோ என்னவோ முத்துப்பேட்டை முஸ்லிம்கள் ஜாம்போவானோடைக்கு விரைந்தனர். வியர்த்த நிலையிலும் இரத்தம் பீறிட்ட நிலையிலும்ஒருமனிதனின் காலில் இருந்தது கண்டு வியர்ந்தவர்களாக அவ்விடத்தைத்தோண்டி அங்கிருந்த பெரியாரை பக்குவமாகவும், பக்தியுடனும் வெளியே எடுத்தனர் அங்கு நின்ற இந்து மதக்கணவனும், மனைவியும் இவர்தான் நேற்றிரவு எமது வீட்டிற்கு வந்தவர் என்று கூறினர்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">பின்னர் முஸ்லிம்கள் அந்த மகானைக் குளிப்பாட்டிக் கபனிட்டு தொழுகை நடத்திய பின் அவ்விடத்திலே​யே நல்லடக்கம் செய்து விட்டு தென்னை, பனை ஒலைகளினால் ஒரு சிறு குடிசையையும் அமைத்து தினமும் “சியாறத்”தரிசித்து வந்தார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இச்சம்பவம் சுமார் எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அன்று முதல் இன்றுவரை சகலஇன,மத மக்களும் அங்கு சென்று “சியாறத்”தரிசித்தும் அங்கு தங்கியிருந்து தமது நாட்டங்கள் ​தேவைகளைப் பெற்றும், நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற்றும் வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">அன்று சிறு குடிசையாக இருந்தமகான் அவர்களின் “தர்ஹா” அடக்கத்தலம் இன்று வானைத்தொடும் மனாறாக்கள் கொண்ட எழில்மிகு தோற்றத்தில் பிரகாசிக்கின்றது. தினமும் பல மதங்களையுடைய பல்லாயிரம் பக்தர்கள் அங்கு வந்து கைகூப்பி நிற்பதையும் “துஆ” கேட்டு நிற்பதையும் அவர்களைப் புகழ்ந்து கவிபாடி நிற்பதையும் இன்றும் காணலாம். சுமார் எழு நூறு ஆண்டுகளின் முன் அறிமுகமான இந்த தர்ஹாவில் உள்ள விசேடம் என்னவெனில் “சியாறத்” கட்டிடத்தினுள் பெண்கள் பிரவேசிக்க முடியாது. யாராவது ஒருபெண் அத்து மீறி உள்ளே சென்றால் அவள் எரிந்து சாம்பலாய் விடுவாள் அல்லது அவளின் ஆடையேனும் எரிந்து விடும் அதற்குபல சம்பவங்கள் சான்றாக உள்ளன.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இந்த மகானின் தர்ஹா அடக்கவிடத்தில் இப்படி ஒரு வி​ஷேட அம்சம் இருப்பதற்கு ஆன்மீக அடிப்படையில் ஆதார பூர்வமான விளக்கம் உண்டு.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">அதாவது அல்லாஹ்வுக்கு​“ஜலாலிய்யத்” என்றும் “ஜமாலிய்யத்”இரண்டு தன்மைகள் உள்ளன. அவனின் திருநாமங்கள் யாவும் இவ்விரண்டில் ஒன்றைச் சேர்ந்ததாகவே இருக்கும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">“ஜலாலிய்யத்”என்றால் சூடான வேகமான தன்மை என்றும் “ஜமாலிய்யத்”என்றால் குழுமையான சாந்தமான தன்மை என்றும் சொல்லப்படும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம், போன்ற திருநாமங்கள்“ஜலாலிய்யஹ்” என்றும் றஊப், றஹீம், முன்இம் போன்ற திருநாமங்கள் “ஜமாலிய்யஹ்” என்றும் சொல்லப்படும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">வலீமார்களிற் சிலர் அல்லாஹ்வின் “ஜலாலிய்யத்”சூடான தன்மை மிகைத்தவளாயிருப்பர். இவர்கள் அநேக நேரங்களில் சூடானவர்களாயும்,​​ கோபமானவர்களாயும் இருப்பார்கள். இவர்களின்​ பேச்சும் நடவடிக்கையும் சூடானவையாக​வே இருக்கும். சாந்தம் சாந்தியை, இவர்களில் எதிர்பார்க்க முடியாது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">மஹான் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் “ஜலாலிய்யத்”என்ற தன்மை மிகைத்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அவர்களின் அடக்கவிடத்தினுள் பிரவேசிக்கும் பெண்கள் எரிந்து போவதும் இரத்தம் பட்ட விவசாயியின் கண்கள் பார்வை இழந்ததுமாகும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">மஹான் ஷெய்குதாஊத் வலீ அவர்கள் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் அனந்தம் அவற்றில் ஒரு சிலதை மட்டும் இங்கு எழுதுகி​றேன்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">“கஸீதத்துல் வித்ரிய்யஹ்”என்னும் நபீ புகழ்காப்பியத்தை யாத்தவரும் பீர் முஹம்மது வலிய்யுல்லாஹ் அவர்களிடம் அற்புத “பைஅத்” ஞானதீட்சை பெற்றவரும் “ஷரீஅத்புலி”என்று அறிஞர்களால் போற்றிப் புகழப்பட்டவருமான மஹான் “மாதிஹுர் றஸூல்” சதகதுல்லாஹ் அப்பா அவர்களுக்கு ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் மீது ஒரு சந்தேகம் ஏற்பட்டது நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்திலுள்ள ஒருவர் பாரதநாட்டுக்கு எவ்வாறு வந்தார்? அவர் ஒரு வலீயாக இருப்பாரா? இதுவே அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம். ஒரு நாள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் இச் சந்தேகத்துடனே​யே ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்ஹாவுக்கு வந்தார்கள். அங்கு வந்த சதகதுல்லாஹ் அப்பா,ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் ​​பேரில் ஒரு “​யாசீன்” கூட ஓதாமல் தர்ஹா கட்டடத்தின் ஒருபுறம் உறங்கிவிட்டார்கள். அன்றிரவு அப்பா அவர்களின் கனவில் தோன்றிய ஷெய்குதாஊத் வலீ அவர்கள் தங்களின் வேலையாட்களை அழைத்து சதகதுல்லாஹ்அப்பாவைப் பிடித்து இறுக்கமாக அழுத்துமாறு பணித்தார்கள்.வேலையாட்களும் அவ்வாறேசெய்தனர். இதனால் சதகதுல்லாஹ் அப்பா அவர்களின் வயிறு கனவிலேயே வீங்கிப்போய்விட்டது. அப்பா அவர்கள் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ்விடம் என்னை இறுக்கமாக அழுத்துமாறு வேலையாட்களைப் பணித்ததேன்? என்று கேட்டார்கள். அதற்கு மஹான் அவர்கள் நீங்கள் என்மீது சந்தேகம் கொண்டீர்கள். நான் நபீ மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட “தவ்றாத்”​ வேதத்தைப்படித்துள்ளேன். அதில் கூறப்பட்டுள்ள நபீ முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி அறிந்து அவர்களைக்கொண்டும் ஈமான் விசுவாசம் கொண்டுள்​ளேன் என்று சொன்னார்கள் இதைக்கேட்ட அப்பா அவர்கள் மன்னிப்புக்கேட்டு கனவிலேயே ஒரு யாஸீன் ஓதினார்கள் கனவுமுடிவதற்குள் வயிறு சுருண்டு வருத்தமும் நீங்கியது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">சென்னை நகரில்​ ஒரு முஸ்லிமுக்கு ஆங்கில மருந்துக்கடை ஒன்று இருந்தது. நாட்டிலுள்ள டொக்டர்களிற் பலர் அங்கு சென்று மருந்து வாங்குவது வழக்கம் அவர்களில் டொக்டர்​​ ஷெய்குதாஊத் என்பவரும் ஒருவர் அவர் தனது பெயர் ஷெய்குதாஊத் என்றும் தனது ஊர் முத்துப்​​பேட்டை என்றும் முகவரி கொடுத்திருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக அக்கடையில் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். ஒரு நாள் மருந்துக்கடைகார முஸ்லிம்முத்துப்பேட்டையில் உள்ள தனது நண்பன் வீட்டுக்குச்செல்ல விரும்பி சென்னையில் இருந்த தனது குடும்பத்துடன் முத்துப்பேட்டை சென்றார். அவர் நண்பனின் வீட்டில் தங்கியிருந்த போது தனது கடையில் மருந்து எடுக்கும் ஷெய்குதாஊத்டொக்டர் பற்றியும் அவரின் இல்லம் பற்றியும் வினவினார். முத்துப்பேட்டை ஷெய்குதாஊத்என்ற பெயரில் எந்த ஒருடொக்டரும் இல்லை என்று நண்பன் கூறினான். கடைக்காரன்தனது நண்பனிடம் அவர் தனது கடைக்கு 15 வருடங்களாக வந்து போவதாகவும் பெருமளவு மருந்துகள் எடுத்து செல்வதாகவும் தனது முகவரி முத்துப்பேட்டை என்று சொன்னதாகவும்கூறினார். அதற்கு அந்த நண்பன் நான் முத்துப்​பேட்டையில் பல்லாண்டுகளாகஇருக்கி​றேன். இங்கு ஷெய்குதாஊத் என்ற பெயரில் எந்தஒரு டொக்டரும் இல்லை. ஆனால் ஷெய்குதாஊத் வலிய்யுல்லாஹ் என்று ஒரு மஹான் சமாதி கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒரு​ வைத்தியமேதை என்று வரலாறு கூறுகின்றது. அவர்களின் தர்ஹாவுக்கு பல நோயாளர்கள் வந்து கனவிலும் விழிப்பிலும் சிகிச்சை பெற்று செல்வார்கள். உங்களின் கடைக்கு டொக்டர்​வேடத்தில் அவர்கள்வந்திருக்கலாம் என்று கூறினார். இதைக்கேட்ட கடைக்காரன் அக்கணமேஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ்அவர்களின் தர்ஹாவுக்கு விரைந்து சென்று ஸலாம் கூறுமுன் அங்கிருந்து நீ தேடும் ஷெய்குதாஊத் நான் தான் என்று ஓர் அசரீரி கேட்டது. அவ்வளவுதான் கடைக்காரன் அக்கணமே மயக்கமுற்று கீழே விழுந்தான் சில நிமிடங்களின் பின் தெளிவுபெற்று நடத்தை அங்கு கூடி நின்றவர்களிடம் கூறினர்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">​​ ஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ்அவர்கள் அண்மையில் நிகழ்த்திய ஓர் அற்புதத்தை இங்கு தருகி​றேன். அமெரிக்காவில் மிகப்பிரசித்தி பெற்ற மருத்துவமனை யொன்றில் சத்திரசிகிச்சை நிபுணராக வேலை செய்து கெண்டிருந்த ஒரு வெள்ளைக்கார டொக்டரின் முகத்தில் மச்சம் போன்ற கறுப்புப்புள்ளி ஒன்று ஏற்பட்டது. நாட்செல்லச்செல்ல அது படரத்தொடங்கியது. அவரின் அழகிய முகத்தை அது அசிங்கப்படுத்தியது. அவருடன் வேலைசெய்து கொண்டிருந்த ஏனைய டொக்டர்கள் அவரை ஏளனம் செய்யத்தொடங்கினர் இதனால் மனமுடைந்தடொக்டர் தன்னைவிட அனுபவத்திலும் கூடிய வைத்திய நிபுணர்களிடம் மருந்து​​செய்தார்​ சுகம்கிடைக்கவில்லை.​ ஒருநாள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒருவரலாற்று நூலை வாசித்தார் அதில் இந்தியாவில் தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை எனும் கிராமத்தில் தீராதநோய்களை சுகப்படுத்தும் வைத்தியமேதை ஒருவர் இருக்கிறார். என்றகுறிப்பு இருந்தது. இதைக்கண்ட டொக்டர் வியந்தவராக அமெரிக்காவில் இன்னொரு மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நிபுணராக வேலைசெய்து கொண்டிருந்த இந்தியாவின் டில்லி நகரைச்சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு தான்கண்ட குறிப்புபற்றி வினவினார். அதற்கவர் அப்படி ஒரு வைத்தியமேதை இருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் வேறுவிபரம் ஒன்றும் தனக்குத்தெரியாதுஎன்றும்கூறினார். இருவரும் இந்தியாவுக்குச்சென்று அந்த வைத்திய மேதையைக்காண வேண்டுமென்று முடிவு செய்து விமானம் மூலம் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்து வினவினர். அவர்களுக்கு ஷெய்குதாஊத்வலிய்யுல்லாஹ் பற்றிக்கூறப்பட்டது. இருவரும் முத்துப்பேட்டைக்கு வந்து நாயகமவர்களின் தர்ஹாவுக்கு சென்று பணிவோடும் பக்தியோடும் மனமுருகப் பிரார்த்தனைசெய்துவிட்டு அன்றிரவு அங்​கேயே உறங்கினார்கள். அதே இரவு நோயாளியான டொக்டரின் கனவில் தோன்றிய ஷெய்குதாஊத் நாயகமவர்கள் தனது சமாதியில் எரிந்துகெண்டிருக்கும் விளக்கில் உள்ள எண்ணை கொண்டு நோயுள்ள இடத்தில் பூசுமாறு பணித்தார்கள். கண் விழித்த டொக்டர் பணிக்கப்பட்டவாறு செய்தார். அன்று மாலைக்குள் இருந்த இடம்​தெரியாமல் அந்த கறுப்புப்பள்ளி மறைந்து போய்விட்டது. இது கண்டு வியந்து இரு சத்திரசிகிச்சை​​ நிபுணர்களும் நாயகமவர்களின் சமாதியில் விழுந்து முத்தங்கள் சொரிந்து தம்மாலான அன்பளிப்புக்கள் வழங்கிவிட்டு​சென்றனர்.​</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">வலீமார்களுக்கு இத்தகைய “கறாமத்” அற்புதமும் இதைவிட சக்தி மிக்க அற்புதமும் உண்டு. என்பதற்கு திருக்குர்ஆனிலும் நாயகவாக்குகளிலும் அநேக ஆதாரங்கள் உள்ளன.நபீ (ஈஸா) அலை அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களுக்கு மாரிகாலத்தில் கோடைகால உணவும் கோடைகாலத்தில் மாரிகால உணவும் சுவர்க்கத்திலிருந்து கிடைத்த வரலாறும் “அஸ்ஹாபுல் கஹ்பு” குகைவாசிகள் ஊண்,குடிப்பு எதுவுமின்றி 309 ஆண்டுகள் தொடராக உறங்கிவிட்டு எந்த ஒருநோய்நொடியுமின்றி ஆரோக்கியமானவர்களாக கண்விழித்த வரலாறும் வலீமாரின் “கறாமத்”அற்புதத்தை நிரூபித்து நிற்கும் திருக்குர்ஆன் ஆதாரங்களாகும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இறைவன் நபீமார்களிற் சிலரை வேறுசிலரைவிட சிறப்பாக்கி வைத்திருப்பது போல வலீமார்களையும் வைத்துள்ளான். அவர்களிற் சிலர் மறுசிலரைவிட சிறப்பானவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தமது தராதரத்திற்கேட்ப குத்பு, அப்தால், அவ்தாத், நுஜபாஉ, நுகபாஉ,என்றெல்லாம் அழைக்கப்படுவார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">வலீமார்களின் தலைவர்“குத்பு” என்று அழைக்கப்படுவார். இவர்“கவ்து” என்றபெயராலும் அழைக்கப்படுவார். இவர் ஒரே ஒருவர் மட்டுமே இருப்பார் “முக்தாறூன்” என்ற பெயரில் மூன்று பேர்களும்“அவ்தாத்” என்ற பெயரில் நான்கு​​ பேர்களும் “அன்வார்” என்ற பெயரில் ஐவரும் “உறபாஉ” என்ற பெயரில் ஏழு பேர்களும் “நுஜபாஉ” என்ற பெயரில் எழுபதுபேர்களும் “நுகபாஉ” என்ற பெயரில் முன்னூறு பேர்களும் சமகாலத்தில்​இருப்பார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">டொக்டர்களில் ஒவ்வொரு வியாதிக்கும் விஷேட திறமை பெற்ற ஸ்பெஷலி​ஸ்ட் இருப்பது போல் வலீமார்களிலும் இருக்கிறார்கள். இவர்களிற் சிலர் பைத்தியத்திற்கு ​விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு ஏர்வாடியில் சமாதிகொண்டுள்ள ஏந்தல் இப்றாஹீம் ஷஹீத் வலிய்யுல்லாஹ்அவர்களை உதாரணமாகக் கெள்ளலாம். இன்னும் சிலர் சூனியத்தை வெளிப்படுத்தி அதனால் பாதிக்கப்பட்டவர்களைச் சுகப்படுத்துவதில் விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் பாதுஷாஅவர்களை உதாரணமாகக் கெள்ளலாம். இன்னும் சிலர் சகல நோய்களுக்கும் விஷேட திறமை பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு ஹகீம்ஷெய்கு தாஊத் வலீயுல்லாஹ்அவர்களை உதாரணமாகக் கெள்ளலாம்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">வலீமார் என்போர் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்னும் நான்கு கடல்களிலும் குளித்துஉள்ளக்கறைளான பெருமை பொறாமை மமதை அகங்காரம் ஆணவம் ​போன்ற தீக்குணங்கள் மனதைவிட்டு அகற்றி அதைச்சுத்தப்படுத்தி செயல்பட்டவர்களாவர். இதனால்தான் அவர்களுக்கு கறாமத் என்னும் அற்புதம் நிகழ்த்தும் வல்லமை அல்லாஹ்வினால் பரிசாக வழங்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இந்தியா, இலங்கை, பா​கிஸ்தான்,பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும்ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவு தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/12/15/blog-pos-6/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு</title>
		<link>https://shumsmedia.com/2020/12/12/blog-post_19-5/</link>
					<comments>https://shumsmedia.com/2020/12/12/blog-post_19-5/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Dec 2020 05:22:18 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-post_19-5/</guid>

					<description><![CDATA[&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212; ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;   اَلْـوَارِثُ الْمُحَمَّدِيُّ سُلْطَانُ الْعَارِفِـيْنْ اَلشَّـيْخُ الْأَكْبَرْ اَلْـمِسْكُ الْأَذْفَـرْ اَلْكِبْرِيْتُ الْأَحْمَرْ اَلنُّوْرُ الْأَبْهَرْ مُحَمَّدُبْنُ عَلِيْ اَبُوْ عَبْدِ اللهِ مُحْيِ الدِّيْنِ ابْنُ عَرَبِيْ رَضِيَ الله عَنْهُ. அல்வாரிதுல் முஹம்மதிய்யு, ஸுல்தானுல் ஆரிபீன், அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல்மிஸ்குல் அத்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அன்னூறுல் அப்ஹர் முஹம்மத் இப்னு அலீ அபூ அப்தில்லாஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு பெயர் ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="MsoNormal" style="text-align: right;">
<div class="" data-block="true" data-editor="3u509" data-offset-key="36ra4-0-0">
<div class="_1mf _1mj" style="text-align: justify;" data-offset-key="36ra4-0-0">&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="16rro-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="16rro-0-0"><span data-offset-key="16rro-0-0">ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8j0qn-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8j0qn-0-0"><span data-offset-key="8j0qn-0-0">&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6hkgl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6hkgl-0-0"><span data-offset-key="6hkgl-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fglgu-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="fglgu-0-0"><span data-offset-key="fglgu-0-0">اَلْـوَارِثُ الْمُحَمَّدِيُّ سُلْطَانُ الْعَارِفِـيْنْ اَلشَّـيْخُ الْأَكْبَرْ اَلْـمِسْكُ الْأَذْفَـرْ اَلْكِبْرِيْتُ الْأَحْمَرْ اَلنُّوْرُ الْأَبْهَرْ</span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="3u509" data-offset-key="f355b-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="f355b-0-0"><span data-offset-key="f355b-0-0">مُحَمَّدُبْنُ عَلِيْ اَبُوْ عَبْدِ اللهِ مُحْيِ الدِّيْنِ ابْنُ عَرَبِيْ رَضِيَ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="vobs-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="vobs-0-0"><span data-offset-key="vobs-0-0">الله عَنْهُ.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="dajc4-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="dajc4-0-0"><span data-offset-key="dajc4-0-0"><span data-offset-key="dajc4-0-0"><span data-offset-key="dajc4-0-0">அல்வாரிதுல் முஹம்மதிய்யு, ஸுல்தானுல் ஆரிபீன், அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல்மிஸ்குல் அத்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அன்னூறுல் அப்ஹர் முஹம்மத் இப்னு அலீ அபூ அப்தில்லாஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு</span></span></span></div>
<div data-offset-key="dajc4-0-0"></div>
<div data-offset-key="dajc4-0-0"><span id="more-335"></span></div>
<div class="_1mf _1mj" data-offset-key="dajc4-0-0">பெயர் : முஹம்மத்</div>
<div data-offset-key="dajc4-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="hbe2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="hbe2-0-0">தந்தையின் பெயர் : அலீ</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9arp5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9arp5-0-0"><span data-offset-key="9arp5-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="74qn2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="74qn2-0-0"><span data-offset-key="74qn2-0-0">பிறந்த நாடு : ஸ்பெயின்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4mjov-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4mjov-0-0"><span data-offset-key="4mjov-0-0"><br />
</span><span style="text-align: right;">பிறந்த ஹிஜ்ரீ ஆண்டு : 560</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7r35-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7r35-0-0"><span data-offset-key="7r35-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="eqq7q-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="eqq7q-0-0"><span data-offset-key="eqq7q-0-0"><span data-offset-key="eqq7q-0-0">வபாத் ஹிஜ்ரீ ஆண்டு : 638</span></span></div>
<div data-offset-key="eqq7q-0-0"></div>
<div class="_1mf _1mj" data-offset-key="eqq7q-0-0"><span style="font-size: inherit;">மாதமும் நாளும் : றபீஉனில் ஆகிர் பிறை 28 வெள்ளியிரவு</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8b6vf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8b6vf-0-0"><span data-offset-key="8b6vf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6dnob-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6dnob-0-0"><span data-offset-key="6dnob-0-0">வயது : 78</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="3ual4-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="3ual4-0-0"><span data-offset-key="3ual4-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9elo9-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9elo9-0-0"><span data-offset-key="9elo9-0-0">மறைந்த நாடு : சிரியா டமஸ்கஸ்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8j38o-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8j38o-0-0"><span data-offset-key="8j38o-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="f30c0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="f30c0-0-0"><span data-offset-key="f30c0-0-0">அடக்க இடம் : டமஸ்கஸ் தலைநகர்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="dgmp-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="dgmp-0-0"><span data-offset-key="dgmp-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8648p-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8648p-0-0"><span data-offset-key="8648p-0-0">திருமணம் : ஒன்று</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5t785-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5t785-0-0"><span data-offset-key="5t785-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c2ips-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c2ips-0-0"><span data-offset-key="c2ips-0-0">குழந்தைகள் : மூன்று ஆண்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8mjaj-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8mjaj-0-0"><span data-offset-key="8mjaj-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="709sn-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="709sn-0-0"><span data-offset-key="709sn-0-0">எழுதிய நூல்கள் மொத்தம் : 900 (தொள்ளாயிரம்) </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a3mng-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a3mng-0-0"><span data-offset-key="a3mng-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9htbb-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9htbb-0-0"><span data-offset-key="9htbb-0-0">பிறர் படிப்பதற்கு அவர்கள் அனுமதி வழங்கிய நூல்கள் : 400</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6bt1v-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6bt1v-0-0"><span data-offset-key="6bt1v-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a07t5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a07t5-0-0"><span data-offset-key="a07t5-0-0">மிகப் பெரிய நூல் : அத்தப்ஸீருல் கபீர்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="chbrf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="chbrf-0-0"><span data-offset-key="chbrf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6kdbe-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6kdbe-0-0"><span data-offset-key="6kdbe-0-0">பாகம் : வால்யூம் 95</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cmvd6-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cmvd6-0-0"><span data-offset-key="cmvd6-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="di0fc-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="di0fc-0-0"><span data-offset-key="di0fc-0-0">பக்கம் : ஒவ்வொரு பாகமும் 1000 பக்கங்கள் (95000)</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6oef8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6oef8-0-0"><span data-offset-key="6oef8-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9fvob-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9fvob-0-0"><span data-offset-key="9fvob-0-0">இதற்கான துணை நூல்கள்: 0 ஒன்றுமில்லை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c2m6a-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c2m6a-0-0"><span data-offset-key="c2m6a-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8ff95-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8ff95-0-0"><span data-offset-key="8ff95-0-0">திருக்குர்ஆன் 30 பாகங்களுக்குமான தப்ஸீரா? : இல்லை, 15பாகங்களுக்கு மட்டும்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9pidu-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9pidu-0-0"><span data-offset-key="9pidu-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a91pb-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a91pb-0-0"><span data-offset-key="a91pb-0-0">எந்த அத்தியாயம் வரை? : சூறதுல் இஸ்றா(யி) 15ம்பாகம் நடுப்பகுதி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4sib0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4sib0-0-0"><span data-offset-key="4sib0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a9lka-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a9lka-0-0"><span data-offset-key="a9lka-0-0">எந்த வசனங்கள் வரை : وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا “நாங்கள் அவருக்கு எங்களிடமிருந்து அறிவை (ஞானத்தை)க் கற்றுக் கொடுத்தோம்” வரை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fbore-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="fbore-0-0"><span data-offset-key="fbore-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1bbh9-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1bbh9-0-0"><span data-offset-key="1bbh9-0-0">“இல்ம்” என்ற சொல் எந்த அறிவைக் குறிக்கும்? : ஸூபிஸ ஞானத்தை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="28mlt-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="28mlt-0-0"><span data-offset-key="28mlt-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="63ghv-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="63ghv-0-0"><span data-offset-key="63ghv-0-0">“இல்முல் லதுன்னீ” என்றால் எது? ஆசிரியர்கள்,நூல்களின் உதவியின்றி அல்லாஹ்வால் நேரடியாக வழங்கப்படும் அறிவு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="bs1pi-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="bs1pi-0-0"><span data-offset-key="bs1pi-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d4r1p-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="d4r1p-0-0"><span data-offset-key="d4r1p-0-0">“இல்முல்லதுன்னீ” என்ற ஞானிகளின் கலைச் சொல்லுக்கு மூலச்சொல் எது?: لَدُنَّا عِلْمًا (லதுன்னா இல்மன்) </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1l2gg-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1l2gg-0-0"><span data-offset-key="1l2gg-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9600c-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9600c-0-0"><span data-offset-key="9600c-0-0">கேந்திர கணித அறிவில் இவர்களுக்கு நிகரில்லை என்பது உண்மையா? : ஆம். உண்மை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7eib3-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7eib3-0-0"><span data-offset-key="7eib3-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9r654-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9r654-0-0"><span data-offset-key="9r654-0-0">இவர்களின் நூல்களில் அறபு மொழி தவிர வேறு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் உண்டா? எந்த நூல்கள்? எந்த மொழியில்? :</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="dhjg0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="dhjg0-0-0"><span data-offset-key="dhjg0-0-0">அல் புதூஹாதுல் மக்கிய்யஹ், புஸூஸுல் ஹிகம்,ஆங்கில மொழி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cpds0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cpds0-0-0"><span data-offset-key="cpds0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="ehgdf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="ehgdf-0-0"><span data-offset-key="ehgdf-0-0">மொழியாக்கம் செய்தவர் யார்? : வெள்ளைக்காரர்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9vm4f-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9vm4f-0-0"><span data-offset-key="9vm4f-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9aood-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9aood-0-0"><span data-offset-key="9aood-0-0">தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் எவை? யாரால்? : புஸூஸுல் ஹிகம். அறிஞர் RPM. கனி BABL</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2nvcv-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2nvcv-0-0"><span data-offset-key="2nvcv-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5out2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5out2-0-0"><span data-offset-key="5out2-0-0">நூலின் பெயர்? : மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="715m0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="715m0-0-0"><span data-offset-key="715m0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="86uv0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="86uv0-0-0"><span data-offset-key="86uv0-0-0">மேற்கண்ட ஆறு சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட வேறு ஞானி யார்? : </span>ஒருவருமில்லை.</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8gl7-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8gl7-0-0"><span data-offset-key="8gl7-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5amb5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5amb5-0-0"><span data-offset-key="5amb5-0-0">“ஸுல்தானுல் ஆரிபீன்” என்ற சிறப்புப் பெயர் </span>தவிர. இது கொண்டு ரிபாயீ நாயகம் அழைக்கப்பட்டுள்ளார்கள்.</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="81oug-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="81oug-0-0"><span data-offset-key="81oug-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1muek-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1muek-0-0"><span data-offset-key="1muek-0-0">ஸூபிஸ தௌஹீத் ஞானத்தில் </span>இவர்களுக்கு நிகரானவர் யார்? : யாருமில்லை.</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="71l4i-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="71l4i-0-0"><span data-offset-key="71l4i-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7k738-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7k738-0-0"><span data-offset-key="7k738-0-0">இதன் பிறகு யாராவது தோன்றலாமா? : அல்லாஹ் வல்லமையுள்ளவன்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fnj05-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="fnj05-0-0"><span data-offset-key="fnj05-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5lp7n-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5lp7n-0-0"><span data-offset-key="5lp7n-0-0"><span data-offset-key="5lp7n-0-0">இவர்களுக்கு விஷேட அறிவு வழங்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா? ஆதாரம் உண்டா? : உண்மை. ஆதாரம் அவர்களின் பேச்சுதான்.</span></span></div>
<div data-offset-key="5lp7n-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d36gl-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="d36gl-0-0"><span data-offset-key="d36gl-0-0">خُصِّـصْتُ بِـعِلْمٍ لَـمْ يُـخَـصَّ بِـمِـثْـلِـهِ سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِى الْعَرْشِ وَالْكُرْسِيْ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="eufv0-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="eufv0-0-0"><span data-offset-key="eufv0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="3n0c5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="3n0c5-0-0"><span data-offset-key="3n0c5-0-0">இவர்களின் பெயருடன் முஹ்யித்தீன் என்ற பெயர் சேர்க்கப்பட்டதேன்? : இப்னு அறபீ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="ccbln-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="ccbln-0-0"><span data-offset-key="ccbln-0-0">றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெற்றோர் பிள்ளைப் பாக்கியமின்றி பல வருடம் வாழ்ந்தார்கள். ஒருநாள்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="frk0e-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="frk0e-0-0"><span data-offset-key="frk0e-0-0">இப்னு அறபீ அவர்களின் தந்தை கவலையுடன் வீட்டு முற்றத்தில் இருந்தபோது வழியால் சென்ற</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="73idm-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="73idm-0-0"><span data-offset-key="73idm-0-0">ஒருவர் – பகீர் கோலத்திலுள்ளவர் – அவரிடம்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5rkm3-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5rkm3-0-0"><span data-offset-key="5rkm3-0-0">என்ன கவலை? என்று வினவினார்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5vokq-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5vokq-0-0"><span data-offset-key="5vokq-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fkpiv-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="fkpiv-0-0"><span data-offset-key="fkpiv-0-0">குழந்தைப் பாக்கியம் இல்லை என்றார். கவலை வேண்டாம். பக்தாத் சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரைச் சந்தியுங்கள் என்றார். </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8vhus-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8vhus-0-0"><span data-offset-key="8vhus-0-0">தந்தை பக்தாத் வந்து அவர்களைக் கண்டு நடந்ததைக் கூறினார். (நல்ல நேரம் வந்து விட்டீர். எனது முதுகெலும்பில் இன்னும் ஒரு குழந்தை மட்டுமே இருக்கிறது. அதை உங்கள் முதுகெலும்புக்கு மாற்றித் தருகின்றேன். உங்கள் சட்டையை கழட்டி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="52h7c-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="52h7c-0-0"><span data-offset-key="52h7c-0-0">விட்டு உங்கள் முதுகெலும்பை எனது முதுகெலும்புடன் உரசுங்கள் என்றார்கள். அவ்வாறே செய்யப்பட்டது.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cpdf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cpdf-0-0"><span data-offset-key="cpdf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4kge4-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4kge4-0-0"><span data-offset-key="4kge4-0-0">உங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு “முஹ்யித்தீன்” என்று பெயர் சூட்டுங்கள் என்றார்கள். அந்தக்குழந்தைதான் முஹ்யித்தீன்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c9o79-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c9o79-0-0"><span data-offset-key="c9o79-0-0">இப்னு அறபீ ஆவார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="58vng-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="58vng-0-0"><span data-offset-key="58vng-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1r9ot-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1r9ot-0-0"><span data-offset-key="1r9ot-0-0">இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்து நல்லடக்கம் செய்யப்பட்ட பின்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="spif-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="spif-0-0"><span data-offset-key="spif-0-0">அவர்களின் “கப்றை” தோண்டி அவர்களை வெளியே எடுப்பதற்கு எதிரிகள் முயற்சி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4run8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4run8-0-0"><span data-offset-key="4run8-0-0">செய்தது உண்மையா? : ஆம். ஓர் எதிரி முன்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="eiica-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="eiica-0-0"><span data-offset-key="eiica-0-0">வந்தான். ஒருநாள் நடு நிசியில் அவர்களின் கப்றடிக்கு வந்தான் அவ்வளவுதான், பூமி அவனை விழுங்கி விட்டது.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a63lj-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a63lj-0-0"><span data-offset-key="a63lj-0-0">அவனை பூமி விழுங்கிய இடம் இன்றும் அங்கு உண்டு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d1bn8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="d1bn8-0-0"><span data-offset-key="d1bn8-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1947m-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1947m-0-0"><span data-offset-key="1947m-0-0">இப்னு அறபீ அவர்களின் நூலில் ஏதாவது விஷேடங்கள் உண்டா?: ஆம். உண்டு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c1omd-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c1omd-0-0"><span data-offset-key="c1omd-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9rude-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="9rude-0-0"><span data-offset-key="9rude-0-0">قَالَ الْفَيْرُوْزَابَادِيْ صَاحِبُ الْقَامُوْسِ وَاَمَّا كُتُبُهُ رَضِيَ الله عَنْهُ فَهِيَ الْبِحَارُ الزَّوَاخِرُ الَّتِيْ مَاوَضَـعَ الْوَاضِـعُوْنَ مِثْلَهَا. وَمِنْ خَصَائِصِهَا مَاوَاظَبَ اَحَدٌ عَلَى مُطَالَعَتِهَا اِلَّا وَتَـصَدَّرَ لِحَلِّ الْمُشْكِلَاتِ فِى الدِّيْنِ وَمُـعْضَلَاتِ مَسَائِلِهِ. وَهَذَا الشَّأْنُ لَا يُوْجَدُ فِى كُتُبِ غَيْرِهِ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="176g9-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="176g9-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="285ge-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="285ge-0-0"><span data-offset-key="285ge-0-0">இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்கள் அலையெழும்பும் பெருங்கடல்கள். அவர்களின் நூல்கள் போன்று வேறெவரும்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="et5hd-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="et5hd-0-0"><span data-offset-key="et5hd-0-0">எழுதவில்லை. அந்த நூல்களில் உள்ள விஷேடம் என்னவெனில் அவற்றை வாசிக்கும் ஒருவன் மார்க்கத்துடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையாயினும் அதைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றுவிடுவான்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cvuhj-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cvuhj-0-0"><span data-offset-key="cvuhj-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="f90dk-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="f90dk-0-0"><span data-offset-key="f90dk-0-0">இத்தகைய விஷேடம் வேறெவரின் நூலிலும் இல்லை என்று காமூஸ் நூலாசிரியர் இமாம் பைறூஸாபாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="uek9-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="uek9-0-0"><span data-offset-key="uek9-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="43p9a-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="43p9a-0-0"><span data-offset-key="43p9a-0-0">இப்னு அறபீ அவர்களை குறை சொல்வோர் பற்றி ஏதும் தகவல் உண்டா? : ஆம். உண்டு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="e9vbt-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="e9vbt-0-0"><span data-offset-key="e9vbt-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4cm53-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="4cm53-0-0"><span data-offset-key="4cm53-0-0"> كَانَ الشَّـيْـخُ سِـرَاجُ الدِّيْنِ الْمَخْـزُوْمِيْ شَيْخُ الْاِسْلَامِ بِالشَّامِ يَقُوْلُ : اِيَّاكُمْ وَالْاِنْـكَارَ عَلَى شَيْئٍ مِنْ كَلَامِ الشَّيْخِ مُـحْيِ الدِّيْـنِ. فَاِنَّ لُـحُوْمَ الْاَوْلِـيَاءِ مَسْمُوْمَةٌ وَهَـلَاكَ اَدْيَانِ مُـبْـغِـضِـهِـمْ مَـعْـلُوْمَةٌ. وَمَـنْ اَبْغَضَهُمْ تَــنَصَّرَ وَمَاتَ عَلَى ذَلِكَ. وَمَنْ اَطْـلَقَ لِسَانَهُ فِيْهِمْ بِالسَّـبِّ اِبْـتَلَاهُ الله بِمَوْتِ الْقَلْبِ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2pv6f-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="2pv6f-0-0"><span data-offset-key="2pv6f-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="73a9h-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="73a9h-0-0"><span data-offset-key="73a9h-0-0">சிரியாவின் ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் அல்மக்சூமீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="asbf7-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="asbf7-0-0"><span data-offset-key="asbf7-0-0">இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சில் ஒன்றையேனும் நீங்கள் மறுத்துவிடக் கூடாதென்று உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் அவ்லியாக்களின் உடல் நஞ்சூட்டப்பட்டது. அவர்களைக் கோபப்படுத்துவோரின் மார்க்கம்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5mada-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5mada-0-0"><span data-offset-key="5mada-0-0">அழிந்து போகுமென்பது பகிரங்கமானது. அவர்களைக் கோபப்படுத்தினவன் நஸாறா -காபிராகி விடுவான். அவர்களை ஏசினவனின் கல்பு – உள்ளம் செத்துவிடும்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="df39u-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="df39u-0-0"><span data-offset-key="df39u-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6u7n4-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="6u7n4-0-0"><span data-offset-key="6u7n4-0-0"> وَمِمَّنْ أَثْنَى عَلَى الشَّيْخِ – مُحْيِ الدِّيْنِ شَيْخُ الْاِسْلَامِ فَـخْرُ الـدِّيْنِ الرَّازِيْ صَاحِبُ التَّفْسِيْرِالْكَبِيْرِ رَحِمَهُ الله وَقَالَ كَانَ الشَّيْخُ مُحْيِ الدِّيْنِ وَلِيًّا عَظِيْمًا</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8p6fg-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="8p6fg-0-0"><span data-offset-key="8p6fg-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="14joq-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="14joq-0-0"><span data-offset-key="14joq-0-0">“அத்தப்ஸீறுல் கபீர்” என்ற நூலை எழுதிய ஷெய்ஹுல் இஸ்லாம் பக்றுத்தீன் அர்றாஸீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இப்னு</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="3u4v8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="3u4v8-0-0"><span data-offset-key="3u4v8-0-0">அறபீ அவர்களைப் புகழ்ந்து கூறுகையில் அவர்கள் வலுப்பமுள்ள ஒரு வலீ என்று கூறியுள்ளார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4teqa-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4teqa-0-0"><span data-offset-key="4teqa-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="e4711-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="e4711-0-0"><span data-offset-key="e4711-0-0">وَسُئِلَ الْاِمَامُ مُـحْيِ الدِّيْنِ النَّوَوِيْ رَحِمَهُ الله عَنِ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ قَالَ تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ. وَلَكِنِ الَّـذِيْ عِنْدَنَا أَنَّهُ يَحْرُمُ عَلَى كُلِّ عَاقِلٍ اَنْ يُسِيْئَ الظَّنَّ بِاَحَدٍ مِنْ أَوْلِـيَاءِ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="g8nq-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="g8nq-0-0"><span data-offset-key="g8nq-0-0">اللهِ عَزَّوَجَلَّ وَيَجِبُ عَلَيْهِ اَنْ يُـؤَوِّلَ اَقْـوَالَهُمْ وَاَفْعَالَهُمْ مَادَامَ لَمْ يَلْحَقْ بِدَرَجَتِهِمْ. وَلَايَـعْجِزُ عَنْ ذَلِكَ اِلَّا قَلِيْلُ التَّـوْفِيْقِ. قَالَ فِيْ شَرْحِ الْمُهَذَّبِ ثُمَّ اِنْ اُوِّلَ فَلْيُؤَوَّلْ كَلَامُهُمْ اِلَى سَبْعِيْنَ وَجْهًا. وَلَانَقْبَلُ تَأْوِيْلًا وَاحِدًا. مَاذَاكَ اِلَّا تَعَنُّتٌ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="e678a-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="e678a-0-0"><span data-offset-key="e678a-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a1rd2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a1rd2-0-0"><span data-offset-key="a1rd2-0-0">இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இப்னு அறபீ றஹ்மதுல்லாஹி அலைஹி பற்றிக் கேட்கப்பட்ட போது பின்வருமாறு சொன்னார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7rutl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7rutl-0-0"><span data-offset-key="7rutl-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="qnuh-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="qnuh-0-0"><span data-offset-key="qnuh-0-0">(அந்த சமூகம் வாழ்ந்து மரணித்துப் போய்விட்டது. ஆனால் எங்களின் கருத்தென்னவெனில் அவ்லியாக்களில்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="chc8j-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="chc8j-0-0"><span data-offset-key="chc8j-0-0">எவர் பற்றியும் தப்பான எண்ணம் கொள்வது புத்தியுள்ளவனுக்கு “ஹறாம்” ஆகும். அவர்களின் பேச்சுகளுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை கொண்டு நோக்குவது அவன் மீது கடமையாகும். ஆயினும் அவர்களின் தரத்தை அவன் அடைந்திருந்தாலன்றி, அவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் வலிந்துரை கொள்வதாயினும் ஒரு வலிந்துரையோடு மட்டும் நின்று விடாமல் எழுபது வலிந்துரை வரை கொள்ள வேண்டும். ஒரு வலிந்துரையை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஒரு வலிந்துரை மட்டும் கொண்டு அவர்களைக் குற்றவாளிகளாகப்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d15br-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="d15br-0-0"><span data-offset-key="d15br-0-0">படம் பிடித்துக் காட்டுவது மணமுரண்டேயாகும்.)</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2s8sf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2s8sf-0-0"><span data-offset-key="2s8sf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7dijo-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7dijo-0-0"><span data-offset-key="7dijo-0-0">அண்மையில் ஒரு மௌலவீ இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை “அவன்” என்ற கீழ்த்தரமான சொல் கொண்டு சுட்டி ஒரு பிரசுரம் வெளியிட்டிருந்தார். அவருக்குத் தண்டனை கிடைக்குமா? அவர் ஒரு மௌலவீ பொடியன்தான். முத்திப் பழுத்த முழு மனிதல்ல. இவரை மன்னிப்பதும் தண்டிப்பதும்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8i8nl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8i8nl-0-0"><span data-offset-key="8i8nl-0-0">அவர்களைப் பொறுத்தது. மன்னித்தால் மனிதனாகுவார். தண்டித்தால் தடம் புரண்டு போவார்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="37fb1-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="37fb1-0-0"><span data-offset-key="37fb1-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2jb2j-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2jb2j-0-0"><span data-offset-key="2jb2j-0-0">தாங்க முடியாத சோதனைக்குள்ளாவார். மக்கள் அவரைப் பார்த்து ஸுப்ஹானல்லாஹ்! அவ்லியாக்கள் தமது எதிரிகளை இப்படியுமா</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4tvl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4tvl-0-0"><span data-offset-key="4tvl-0-0">சோதிக்கிறார்கள் என்று வியந்து நிற்பர் சிலர். அவ்லியாக்களின் எதிரிக்கு வரத்தான் வேண்டுமென்று கை கொட்டிச் சிரிப்பர் பலர்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4d2st-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4d2st-0-0"><span data-offset-key="4d2st-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9k1ds-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="9k1ds-0-0"><span data-offset-key="9k1ds-0-0">وَاَمَّا الشَّخْصُ الَّـذِيْ اَسَاءَ ظَنَّهُ بِابْنِ عَرَبِيْ وَسَبَّهُ بِكَلِمَةٍ لَايُنَاسِبُ مَقَامَهُ فَهُوَ طِفْلٌ يَمُصُّ ثَدْيَ اُمِّـهِ بِالـنِّسْبَةِ اِلَى عُلُوْمِ الْقَوْمِ وَمَقَامَاتِ الْاَوْلِيَاءِ. وَدَرَجَاتِ الْاَقْطَابِ. وَمَرَاتِبِ الْاَبْدَالِ وَالْاَنْجَابِ. وَمُعَاقَبٌ بِعِقَابٍ لَا يُوْصَفُ بِاَلْفَاظِ الْعَبْدِ. كَمَا وَرَدَ فِى الْحَدِيْثِ الْقُدْسِيِّ مَنْ عَادَى لِيْ وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ. وَمَاذَا جَرَى لِفِرْعَوْنَ عَادَى نَـبِــيَّ اللهِ مُـوْسَـى؟ وَمَاذَا جَرَى لِنَمْرُوْدَ عَادَى نَـبِـيَّ اللهِ اِبْـرَاهِـيْـمَ؟ فَعَلَى الطِّـفْلِ الْمُشَارِ اِلَيْهِ اَنْ يَرْجِعَ عَمَّا قَالَ فِى حَـقِّ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ وَعَنْ اِسَاءَةِ الظَّنِّ بِـه وَبِسَائِرِ الْاَوْلِـيَاءِ. لِأَنَّ لُـحُوْمَ الْأَوْلِيَاءِ مَسْمُوْمَةٌ. مَاتَ مَنْ أَكَلَهَا أَوْ اِبْتَلَاهُ الله بِمَا شَاءَ. وَبِمَا شَاءَ وَلِيُّهُ. وَالله عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ. وَبِالْاِجَابَةِ جَدِيْر.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cfsc4-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="cfsc4-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6r9sf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6r9sf-0-0"><span data-offset-key="6r9sf-0-0">வெளியீடு</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="80ik0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="80ik0-0-0"><span data-offset-key="80ik0-0-0">காதிரிய்யஹ் திருச்சபை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="89i3e-0-0">
<div class="_1mf _1mj" style="text-align: justify;" data-offset-key="89i3e-0-0"><span data-offset-key="89i3e-0-0">காத்தான்குடி-05</span></div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/12/12/blog-post_19-5/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
