Thursday, May 2, 2024
Homeநிகழ்வுகள்அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குர்ஆன் மத்றஸாவின் புதிய கட்டிட திறப்பு விழாவும், 72வது வருட ஷாஹுல்...

அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குர்ஆன் மத்றஸாவின் புதிய கட்டிட திறப்பு விழாவும், 72வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வும்

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் நிறுவனமான அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப் & குர்ஆன் மத்றஸாவின் புதிய கட்டிட திறப்பு விழா அதிசங்கை்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் 13.02.2020 அன்று இஷா தொழுகையின் திறந்து வைக்கப்பட்டது.

அதே வேளை குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 72வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 14.02.2020 தொடக்கம் 16.02.2020ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக 14.02.2020 வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு இரு நாதாக்கள் பேரிலான திருக்கொடிகளேற்றமும், பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் ஸியாறத்திற்கு போர்வை போர்த்தும் நிகழ்வும், கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் மீரான் ஸாஹிப் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந் இறைஞானப் பாடகர்களான MFM.பிஹாம், MH. ஹபீஸ் ஹக்கானீ ஆகியோரினால் இஸ்லாமிய கீதம் இசைக்கப்பட்டு, துஆ, தபர்றுக் விநியோகத்துடன் 1ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்களின் மௌலித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் தலைபாதிஹா மஜ்லிஸும், இஷா தொகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ AS. குலாம் முஹம்மத் அறூஸீ அன்னவர்களின் மார்க்க உபன்னியாசமும், MJ. ஜாஸி ஹமாம் அவர்களின் இஸ்லாமிய கீதமும், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் 2ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இறுதித் தினமான கந்தூரி தினத்தன்று பி.ப 5.00 மணிக்கு ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம், அம்பா நாயகம் மௌலித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MYM. ஜீலானீ றப்பானீ அன்னவர்களின் விஷேட சொற்பொழிவும், HA. றஹீம் அவர்களினால் இறைஞான கீத நிகழ்வும், பெரிய துஆவும் ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் கந்தூரி நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments