Saturday, May 4, 2024
Homeஎழுத்தாக்கங்கள்படைப்புகளை அல்லாஹ்வாகப் பார்!

படைப்புகளை அல்லாஹ்வாகப் பார்!

தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
காணும் பொருளையெல்லாம்
கர்த்தன் “மள்ஹர்” என்று
பேணி ஷுஹூது செய்து
பிலப்படுவதெக்காலம்!?
 
ஒரு மனிதன் தான் காணும் பொருளையெல்லாம் ஹக்காக – அதாவது அல்லாஹ்வாகப் பார்க்க வேண்டும். அந்தப் பார்வைதான் சரியான பார்வை. ஒருவன் அவற்றையெல்லாம் அல்லாஹ்வுக்கு வேறானவையாகப் பார்த்தானாயின் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாகிவிடுவான். இதுவே ஸூபிஸம். ஸூபிஸம் மட்டுமல்ல. இதுவே எதார்த்தம்.

மனிதர்களை வழிநடத்திக் கொண்டிருந்த அறிஞர்களிற் பலரும், ஷெய்குமார்களிற் சிலரும், வஹ்ஹாபிகள் அனைவரும் “ஷரீஆ” வழியில் மட்டும் வழி நடாத்தினார்களே தவிர தரீகா, ஹகீகா, மஃரிபா வழிகளில் வழி நடாத்த தவறிவிட்டார்கள். தவறிக் கொண்டும் இருக்கின்றார்கள். இவர்களில் வஹ்ஹாபீகள் “ஷரீஆ” வழியில் கூட வழி நடாத்தவில்லை என்றே கூற வேண்டும்.
 
படைப்பு இறைவனின் “மள்ஹர்” என்று ஷெய்குமார் – குருமார் சொல்லி வந்ததாலும் , தற்போது சொல்லிக் கொண்டிருப்பதினாலுமே மக்கள் புரியாமல் எது ஈமானோ அதை “குப்ர்” என்றும், எது “குப்ரோ” அதை ஈமான் என்றும் தலை கீழாய் விளங்கிக் கொண்டனர்.
 
படைப்பு இறைவனின் “மள்ஹர்” என்பது சரியென்றும், அது இறைவன் என்பது “ஷிர்க்” என்றும் மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். இதற்குக் காரணம் அறபுச் சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்யாமல் அறபுச் சொற்களாகவே பயன்படுத்தி வந்ததேயாகும். இதனால் மக்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை.
 
இன்று நாள் வரை இந்நிலை நீடித்துக் கொண்டே செல்கிறது. எல்லாம் அல்லாஹ் என்பது பிழையென்றும், எல்லாம் அவனின் வெளிப்பாடு என்பதே சரியென்றும் கூறும் ஸூபிஸம் தெரியாத ஸூபீகளும் உள்ளனர். இவர்களின் எண்ணத்தில் இவர்கள் ஸூபீகளாக இருக்கலாம். ஆயினும் இவர்கள் ஸூபிஸத்தின் எதிரிகளாவர்.
 
(ளாஹிர், மள்ஹர்)
 
“ளாஹிர்” என்ற அறபுச் சொல்லுக்கு வெளியானதென்றும், “மள்ஹர்” என்ற சொல்லுக்கு வெளியாகுமிடம் என்றும் பொருள் வரும்.
இவ்விரண்டும் ஒன்றை விட்டும் மற்றது பிரிந்ததுமல்ல, சேர்ந்ததுமல்ல. ஏனெனில் சேர்தல், பிரிதல் என்பதற்கு இரண்டு அம்சங்கள் வேண்டும். ஒரேயொரு அம்சத்தை வைத்துக் கொண்டு சேர்தல், பிரிதல் கதைக்க முடியாது.
 
உதாரணங்கள் மூலம் இவ்விவகாரத்தை ஆய்வு செய்து பார்ப்போம்.
بِذِكْرِ الْأَمْثِلَةِ تَتَبَيَّنُ الْأَشْيَاءُ
உதாரணங்கள் கூறுவதன் மூலம் விஷயங்கள் தெளிவாகும்.
 
மோதிரம் என்பது தங்கத்தின் வெளிப்பாடு. மோதிரத்துடன் தங்கம் சேரவுமில்லை, தங்கத்துடன் மோதிரம் சேரவுமில்லை. மோதிரத்தை விட்டும் தங்கம் பிரியவுமில்லை. தங்கத்தை விட்டும் மோதிரம் பிரியவுமில்லை. சேர்வதற்கும், பிரிவதற்கும் இரண்டு சாமான்களே இல்லை. மோதிரம் தங்கம்தான் என்று மட்டுமே சொல்ல வேண்டும். உள்ளது தங்கம் மட்டும்தான் மோதிரம் அல்ல. சொல்வதாயின் தங்கம் மோதிர வடிவில் தோற்றுகிறது என்று மட்டுமே சொல்லலாம். மோதிரத்தின் வடிவில் தங்கமே உள்ளது. இருப்பது தங்கமேயன்றி மோதிரம் அல்ல. இங்கு அத்வைதமே உள்ளது. துவிதம் அல்ல.
 
தங்கம் “ளாஹிர்” என்றும், மோதிரம் “மள்ஹர்” என்றும் சொல்லப்படும். தங்கமும், மோதிரமும் என்று சொன்னால் பெயரில் இரண்டு வஸ்த்து என்று விளங்கப்பட்டாலும் கூட வஸ்த்து ஒன்றுதான் உள்ளது. அதுதான் தங்கம். தங்கத்திற்கு வுஜூத் உண்டு. மோதிரத்திற்கு அது இல்லை.
 
இன்னுமோர் உதாரணம் எழுதுகிறேன். ஆணி என்பது இரும்பின் வெளிப்பாடு. ஆணியுடன் இரும்பு சேரவுமில்லை. இரும்புடன் ஆணி சேரவுமில்லை. ஆணியை விட்டும் இரும்பு பிரியவுமில்லை. இரும்பை விட்டு ஆணி பிரியவுமில்லை. ஆணி என்றும், இரும்பு என்றும் பெயரளவில்தான் இரண்டு வஸ்த்துக்கள் சொல்லப்படுகின்றதேயன்றி எதார்த்தத்தில் இரண்டே இல்லை. ஒன்றுதான்.
 
காணும் பொருட்களெல்லாம் கர்த்தன் “மள்ஹர்” என்பது சரியென்றும், அவை கர்த்தன் என்பது பிழையென்றும் சொல்வோர் ஆணியென்பது இரும்பின் மள்ஹர் என்பதே சரியென்றும், அது இரும்பு என்பது பிழையென்றும் சொல்ல வேண்டும். இவ்வாறு சொன்னவர் மருத்துவமனைதான் செல்ல வேண்டும்.
 
மகா கனம் தங்கிய ஷெய்கு நாயகமவர்கள் படைப்புக்கள் யாவும் அல்லாஹ்வின் “மள்ஹர்” என்று முரீதுகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். அதே நேரம் படைப்புக்கள் அல்லாஹ் அல்ல என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஏன் இந்த நாடகமோ புரியவில்லை?
 
இவ்வாறு மறுத்துரைக்கும் மகான்கள், “பைஅத்” வழங்கும் ஷெய்குமார் ஆரபீன்களால் எழுதப்பட்ட நூல்களை வாசிக்கவில்லையா? “அல்இன்ஸானுல் காமில்” நூலாசிரியர் இமாமுனா அப்துல் கரீம் அல்ஜீலீ, “அந்நாதிறாதுல் ஐனிய்யா” விரிவுரை நூலாசிரியர் இமாமுனா அப்துல் ஙனீ அந்நாபலஸீ றஹமஹுமல்லாஹ் ஆகியோர் பின்வரும் பாடல்களில் சொல்வதென்ன?
 
وَمَا الخلق في التِّمْثَالِ اِلَّا كَثَلْجَةٍ
وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعٌ
وَمَا الثَّلْجُ فِي تَحْقِيْقِنَا غَيْرَ مَائِهِ
وَغَيْرَانِ فِي حُكْمٍ دَعَتْهُ الشَّرَائِعُ
وَلَكِنْ بِذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ
وَيُوْضَعُ حُكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعٌ
تَجَمَّعَتِ الْأَضْدَادُ فِي وَاحِدِ الْبَهَا
وَفِيْهِ تَلَاشَتْ فَهُوَ عَنْهُنَّ سَاطِعٌ
படைப்புக்கு உதாரணம் ஐஸ் கட்டியாகும். இறைவனுக்கு உதாரணம் ஐஸ்கட்டியான நீராகும். ஐஸ்கட்டி நீரேதான் என்பது ஸூபீகளின் கருத்தாகும். அது வேறு, இது வேறு என்பது உயிரில்லா பொம்மைகளின் கருத்தாகும். ஐஸ் கட்டி கரைந்தால் நீரன்றி வேறென்ன? ஒன்றுக்கு மற்றது எதிரான இரண்டும் அல்லாஹ்வில் ஒன்று சேர்ந்துள்ளன.
 
“வஹ்ததுல் வுஜூத்” “குப்ர்” என்று கூறிய மகான்களே!
 
உலகில் இவ்வாறு ஞானம் பேசியோர் பல்லாயிரம் பேர் வாழ்ந்து மறைந்துள்ளனர். இவர்களுக்கு தர்ஹாக்கள் உண்டு. தினமும் பல்லாயிரம் பேர் இவர்களைத் தரிசித்து அருள் பெறுகிறார்கள். இந்நாட்டிலும் இத்தத்துவத்தை சொன்ன மகான்கள், ஷெய்குமார்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். உங்கள் கூற்றின்படி இவர்கள் காபிர் என்றால் ஏன் இவர்களின் ஸியாறங்களை விட்டு வைத்துள்ளீர்கள்? விட்டு வைத்திருப்பது அநீதியல்லவா? தம்பி ரிஸ்வீ கோடரியை தோள் மீது சுமந்து வரட்டும். பத்வாக்குழு மண்வெட்டி, பிக்காசிகளுடன் நடந்து வரட்டும். தரிசிக்கப்பட்டு வருகின்ற அனைத்தையும் உடைத்தெறியுங்கள். இதே கருத்து எழுதப்பட்ட கிதாபுகள் உள்ளன. அவற்றையெல்லாம் பொது மைதானமொன்றில் குவித்து எரித்துச் சாம்பலாக்குங்கள்.
 
வித்ரிய்யா பாடலில் மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹ் காதிரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்,
يَدُ الْمَاحِيْ هَلْ كَانَتْ يَدَ اللهِ قُلْ نَعَمْ
وَقُــلْ وَكَذَا الْمَوْلَى رَمَى اِذْ رَمَى رَمْيَا
பெருமானாரின் கை அல்லாஹ்வின் கையா? என்று கேட்ட மாதிஹுர் றஸூல், ஆம் என்று சொல்லுங்கள் என்றும், எதிரிகளுக்கு மண்ணை எறிந்தவன் அல்லாஹ்தானேயன்றி நபீ அல்ல என்றும் சொல்கிறார்களே இவர்களின் ஸியாறம் பக்கத்து நாடான தமிழ் நாட்டிலேயே இருக்கிறது. அங்கும் செல்லுங்கள். எங்கும் செல்லுங்கள். கொல்லுங்கள். கொழுத்துங்கள். எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று காடையர்களை “பத்வா” மூலம் தூண்டிய நீங்கள் ஏன் இதைச் செய்யாமல் உள்ளீர்கள்? உங்கள் “புத்வா” அமுல் செய்ய முடியாத “புத்வா”வா?
 
அறிஞர் மர்ஹூம் சித்தி லெப்பை அவர்களும் இதே வஹ்ததுல் வுஜூத் ஞானம் பேசியவர் மட்டுமல்ல. எழுதியவரும்தான். அவர் நமது நாட்டில்தான் சமாதி கொண்டுள்ளார். எங்கே உங்கள் தலைவர்? அவர் தலைமையில் சென்று அதையும் உடையுங்கள். ஷஷமுர்தத்|| என்று பத்வா வழங்கிவிட்டு ஏன் மௌனிகளாயுள்ளீர்கள்? உங்கள் பத்வா எழுத்தில் மட்டும்தானா? செயலில் இல்லையா?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments