Sunday, May 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முஹ்யித்தீன் ஆண்டகை வஹ்ஹாபீயுமல்ல, போலி ஞானியுமல்ல!“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர்களில் அவர்களும் ஒருவர்.

முஹ்யித்தீன் ஆண்டகை வஹ்ஹாபீயுமல்ல, போலி ஞானியுமல்ல!
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர்களில் அவர்களும் ஒருவர்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) 

يقول الشيخ عبد الوهّاب الشعراني رحمه الله فى الجزء الأوّل من كتابه اليواقيت والجواهر: رأيت فى كتاب البهجة المنسوبة لسيّدي الشيخ عبد القادر الجيلي رضي الله عنه، ما نصّه:اعلموا أنّ عباداتكم لا تدخل الأرض، وإنّما تصعد إلى السّماء، قال تعالى ‘ إليه يصعد الكلم الطيّب والعمل الصالح يرفعه ‘
 
فرُبَّما سبحانه وتعالى فى جهة العُلو، الله على العرش استوى، وعلى الْمُلْكِ احتوى، وعلمُه محيط بالأشياء ، بدليل سبع آيات فى القرآن العظيم فى هذا المعنى، لا يمكنني ذكرها لأجل جهل الجاهل ورَعُونَتِه، انتهى،

அல் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.

அஸ்ஸெய்யிதுஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானீ (அல்ஜீலீ) றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படுகின்ற “அல் பஹ்ஜஹ்” என்ற நூலில் பின்வரும் வசனங்களை நான் கண்டேன்.

(அறிந்து கொள்ளுங்கள். உங்களின் “இபாதாத்” வணக்கங்கள் பூமிக்குள் போகாமல் அவை வானத்தளவில் ஏறுகின்றன. தூய வாக்கியங்கள் அவனளவில் மேலேறிச் செல்கின்றன. நல்ல செயலும் அதை அல்லாஹ்வின் பால் உயர்த்துகிறது” (திருக்குர்ஆன்: 35-10)

எங்களின் இரட்சகனான அல்லாஹ் மேல் திசையிலேயே உள்ளான். அல்லாஹ் “அர்ஷ்” எனும் இடத்தில் இருக்கிறான். இன்னும் ஆட்சியின் சொந்தக் காரனாகவும் இருக்கிறான்.

அவனின் அறிவு சகல வஸ்த்துக்களையும் பொதிந்து கொண்டது. இதே கருத்தில் திருக்குர்ஆனில் ஏழு வசனங்கள் உள்ளன. அறிவிலியின் அறியாமைக்காகவும், அவனின் தீமைக்காகவும் அதைக் கூற எனக்குச் சாத்தியமில்லை)

இவ்வாறு குத்பு நாயகம் அவர்களின் நூல் என்று சொல்லப்படுகின்ற “அல்பஹ்ஜஹ்” என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

இது பற்றி இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்யவாகீத்” எனும் நூல் “ஏழாம் ஆய்வு” என்ற தலைப்பில் முதலாம் பாகம் 59ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அதை அவ்வாறே அறபியில் எழுதி விளக்கமும் எழுதுகிறேன்.

يقول الشعراني: فلا أدري أذلك الكلام دُسَّ على الشيخ فى كتابه أم وقع ذلك فى بدايته ورجع عنه لمّا دخل فى الطّريق، فإنّ من المعلوم عند كلّ عارف بالله تعالى أنّه تعالى لا يَتَحَيَّزُ، والشيخ قد شاعت ولايته فى أقطار الأرض، فيَبْعُد من مِثلِه القولُ بالجهة قطعا،
(குத்பு நாயகம் சொன்னதாக கூறப்படுகின்ற இந்தப் பேச்சு அவர்களின் நூலில் எதிரிகளால் ஊடுருவல் செய்யப்பட்டதா? அல்லது அவர்கள் “தரீகா” வழியில் கால் பதிக்கு முன் அவர்களால் எழுதப்பட்டு பின்னர் அதை அவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டார்களா? என்பது எனக்குத் தெரியாது. அனைத்து இறைஞானிகளிடமும் அறியப்பட்ட விடயம் என்னவெனில் அல்லாஹ்வுக்கு இடம் தேவையில்லை என்பதாகும். குத்பு நாயகம் அவர்களின் “விலாயத்” ஒலித்தனம் சர்வதேச மட்டத்தில் அறிந்த விடயமாகும். இத்தகைய ஒரு மகான் அல்லாஹ் இருப்பதற்கு இடம் தேவையென்று சொல்லியிருக்க முடியாது) என்பதாகும்.
ஆதாரம்: அல்யவாகீத், பாகம் – 01, பக்கம் 60
ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ்

இமாம் ஷஃறானீ அவர்களின் மேற்கண்ட அறபு வசனங்கள் மூலம், குத்பு நாயகம் அவர்கள் அல்லாஹ் “அர்ஷ்” இல் இருக்கிறான் என்று ஒருபோதும் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று இமாம் ஷஃறானீ அவர்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

ஏனெனில் இமாம் ஷஃறானீ அவர்கள் என்னையும், இக்கட்டுரையை வாசிக்கும் உங்களையும் விட குத்பு நாயகம் அவர்கள் பற்றி விஷேடமாக அறிந்தவர்களாவர். இமாம் ஷஃறானீ போன்றே நானும் சொல்கிறேன்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற கொள்கை மத மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கையாகும். இது வழிகேடர்களின் இத்துப் போன பிரதான கொள்கையாகும்.

ஹிஜ்ரீ 661ல் பிறந்து 728ல் மரணித்த இப்னு தைமிய்யாவும், ஹிஜ்ரீ 1111ல் பிறந்து 1206ல் மரணித்த வஹ்ஹாபீகளின் தலைவர் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரும் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற வழி கெட்ட கொள்கையுள்ளவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு முன்வாழ்ந்த வழிகேடர்களிற் பலர் இதே கொள்கையுள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

குத்பு நாயகம் அவர்கள் ஹிஜ்ரீ 470ல் பிறந்து 561ல் மரணித்திருந்தாலும் இவர்களுக்கு முன்னுள்ள காலத்திலும் இக் கொள்கையுடையோர் இருந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இதன் மூலம் இப்னு தைமிய்யாதான் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் எனும் கொள்கையை கொண்டு வந்தவர் என்ற கருத்து பிழையென்பது நிரூபணமாகின்றது.

குத்பு நாயகமவர்களின் காலத்திலும் இத்தகைய கொள்கையுள்ளோர் இருந்ததினால்தான் ஷஃறானீ அவர்கள் குத்பு நாயகமவர்களின் குறித்த நூலில் எதிரிகள் அவ்வாறு இடைச் செருகல் செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்கள்.

இமாம் ஷஃறானீ அவர்களின் கூற்றுக்கு சாத்தியமுண்டு. ஏனெனில் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்ற இறைஞானிகள், ஸூபீ மகான்கள் ஆகியோர் எழுதிய நூல்களில் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணான – விரோதமான கருத்துக்களை ஊடுருவல் செய்து – இடைச் செருகல் செய்து அந்த மகான்கள் மீது தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி அவர்களைக் கொலை செய்ய பொது மக்களைத் தூண்டிய வம்பர்கள், அட்டூழியக் காரர்கள் – “பாஸிகீன்”கள் பலர் இருந்துள்ளார்கள்.

இவ்வாறு அநீதி செய்யப்பட்ட மகான்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுத முடியும். கடல்களின் நீரை மையாக்கி எழுதினாற் கூட மைதான் முடிந்து போகுமேயன்றி அவர்களின் வரலாறு முடியாது.

ஸுப்ஹானல்லாஹ்! எத்தனையெத்தனை மகான்கள் கொல்லப்பட்டார்கள்! எத்தனையெத்தனை ஞானிகள் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்! எத்தனையெத்தனை ஸூபீகள் தோலுரித்து கொலை செய்யப்பட்டார்கள்! எத்தனையெத்தனை பேர் நாடு கடத்தப்பட்டார்கள்!

வந்தான் இஸ்லாமிய துரோகி இப்னு அப்தில் வஹ்ஹாப் – ஸூபீகளிலும், இறை ஞானிகளிலும் கை வைத்தான். அவர்களை சித்திரவதை செய்து கொன்றொழித்தான். அவனின் கொள்கைப் பரம்பரை வந்தவர்களும் அவன் செய்த அதே வேலையைச் செய்கிறார்கள். செய்து கொண்டுமிருக்கிறார்கள். இதன் பிறகும் செய்யத்தான் போகிறார்கள். செய்தும் காட்டிவிட்டார்கள்.

இவ்வாறு ஸுன்னீ உலமாஉகளையும், ஸூபீ மகான்களையும் கொன்று குவித்தவர்கள் யார்? யஹூதிகளா? நஸாறாக்களா? இந்துக்களா? பௌத்தர்களா? கிறித்துவர்களா? இல்லை இல்லவே இல்லை. செங்கல் வியாபாரிகளா? மீன் வியாபாரிகளா? இல்லை. இவர்களில் எவருமில்லை.

ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் எதிரிகளான வஹ்ஹாபிகளும், ஸூபிஸ ஞானத்தினதும், தரீகாக்களினதும், இறைஞானத்தினதும், குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தினதும் எதிரிகளான ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த போலி உலமாஉகளும், பொறாமைக் காரர்களுமேயாவர்.

மேற்கண்ட எனது கூற்றுக்கு ஆதாரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்னையும், எனது கருத்தைச் சரிகண்ட இந் நாட்டிலும், வெளி நாடுகளிலும் வாழ்கின்ற பல இலட்சம் ஸூபீகளையும், ஸுன்னீகளையும் “முர்தத்” என்று மதம் மாற்றியும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் முல்லாக்கள் வழங்கிய “பத்வா”வாகும்.

“அனல் ஹக்” நானே அல்லாஹ் என்று கூறிய இறாக் நாட்டைச் சேர்ந்த இறைஞானியை, ஸூபீ மகானை சித்திரவதை செய்தும், துண்டு துண்டுகளாக அரிந்தும் கொன்றொழிப்பதற்கு காரண கர்த்தாக்கள் யார்? யஹூதிகளா? நஸாறாக்களா? இல்லை. அவர்களில்லை. திருக்கலிமாவை தலை கீழாய் விளங்கிய, ஸூபிஸத்தின் எதிரிகளான போலி உலமாஉகளேயாவர்.

அந்தப் போலிகளோ ஒரு வகையில் போற்றப்பட வேண்டியவர்களேயாவர். ஏனெனில் அவர்கள் அவ்வாறு சொன்ன மன்ஸூர் ஹல்லாஜ் அவர்களுக்கு மட்டுமே “முர்தத்” என்றும், அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்றும் “பத்வா” வழங்கினார்கள். அவர்களைச் சரி கண்ட பல்லாயிரம் ஆதரவாளர்களில் எவருக்கும் “பத்வா” வழங்கவில்லை.

ஆனால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவோ எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “ஹோல்சல் பத்வா” வழங்கினார்கள். இவர்கள் போல் கற்றுமறிவற்றவர்கள் உலகில் வேறு யார்தான் இருப்பார்கள்?

இந்த உலமா சபையின் “பத்வா”வின் படி உலகில் வாழும் ஸூபீ கொள்கைவாதிகள் அனைவரும், தரீகாவாதிகள் அனைவரும், மற்றும் மௌலித் ஓதுகின்ற, றாதிப், ஹழ்றா போன்ற மஜ்லிஸ் நடத்துகின்ற, அவற்றில் கலந்து கொள்கின்ற அனைவருமே கொலை செய்யப்பட வேண்டியவர்களேயாவர்.

“முர்தத்” கொலை செய்யப்பட வேண்டுமென்ற உலமாஉகளின் தீர்ப்பின் படி மேலே நான் சுட்டிக் காட்டிய அனைவரும் கொலை செய்யப்பட வேண்டியவர்களேயாவர். ஏனெனில் எந்த ஒரு “தரீகா”வாயினும் அது ஸூபிஸ ஞானத்தை வலியுறுத்தும் “தரீகா”வாகவே இருக்கும். ஆதாரங்கள் வேண்டுமா? தருகிறோம்.

இக்கட்டுரையின் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வுக்கு ஓர் இடமுண்டு, அவன் அங்குதான் இருக்கிறான் என்று நம்புவதும், சொல்வதும் “குப்ர்” எனும் இறை மறுப்பை ஏற்படுத்துமென்பதும், முஹ்யித்தீன் ஆண்டகையோ, அல்லது உலகில் தோன்றிய அவ்லியாஉகளில் எவருமோ அவ்வாறு கூறவில்லையென்பதும், இது வஹ்ஹாபிகளின் கொள்கை என்பதுமாகும்.

ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த போலி உலமாஉகளினதும், வழி கேடர்களினதும் ஊடுருவலே இறைவன் குறித்த ஓர் இடத்தில் இருக்கிறான் என்ற கொள்கையாகும். இக் கொள்கை வழியிலேயே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெற்றி நடை பொடுகிறது…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments