Saturday, May 18, 2024
Homeநிகழ்வுகள்புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அல் மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அல் மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு.

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் புதிய காத்தான்குடி-6 நூறாணிய்யஹ் மாவத்தையில் அமைந்திருக்கும் அல் மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல் தொழுகை மற்றும் மார்க்க விடயங்களை சிறப்பாக மேற்கொள்வதற்காக புனர் நிர்மாணம் செய்யப்பட்டு 19.09.2022ம் திகதி அன்று காலை 10.00 மணியளவில் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்களின் திருக்கரங்களினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகள், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாகிகள், அல் மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments