Friday, May 3, 2024
Homeநிகழ்வுகள்32வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் கந்தூரி - 2022 நிகழ்வுகளின் தொகுப்பு

32வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2022 நிகழ்வுகளின் தொகுப்பு

வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், ஸுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் பதீஉத்தீன் ஸிந்தாஷாஹ் மதார் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாக 23.12.2022 தொடக்கம் 25.12.2022ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ NM. பஸ்மில் றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும், இறைஞானப் பாடகர் MFM. பிஹாம் அவர்களினால் இஸ்லாமிய கீதமும் பாடப்பட்டு துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் 1ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

2ம் நாள் நிகழ்வி்ல் பி.ப 5.00 மணிக்கு றிபாஈ நாயகம் மவ்லி்த் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் தலைபாதிஹா மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MSA. ஷாஹ்ஜஹான் றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும், இறைஞானப் பாடகர் MFM. பிஹாம் அவர்களினால் இஸ்லாமிய கீதமும் பாடப்பட்டு துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் 2ம் நாள் நிகழ்வுகளும் நிறைவு பெற்றன.

இறுதித் தினமான 3ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ரிபாஈ நாயகம், ஸிந்தா ஷாஹ் மதார் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும், இன்னிசைப் பாடகர் M. றூஹுல்லாஹ் அவர்களினால் இறைஞான கீதமும் பாடப்பட்டு, விஷேட நிகழ்வாக ஸூபிஸ சமூகத்துடன் மிக நீண்டகாலமாக நல்லுறவைப் பேணி வருகின்ற மதிப்பிற்குரிய பொலிஸ் உத்தியோகத்தர் DA. றஹீம் A.S.P அவர்களையும், மதிப்பிற்குரிய Dr. MSM. ஜாபிர் M.B.B.S,M.S அவர்களையும், மதிப்பிற்குரிய Dr. MH. நூர்தீன் M.B,M.S அவர்களையும், மதிப்பிற்குரிய Dr. SHM. ஸிறாஜ் V.O.G,M.D,F.R.C.O.G அவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்று இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments