Saturday, May 4, 2024
Homeநிகழ்வுகள்றமழான் 27ம் இரவு புனித "லைலதுல் கத்ர்” சிறப்பு நிகழ்வு-2023

றமழான் 27ம் இரவு புனித “லைலதுல் கத்ர்” சிறப்பு நிகழ்வு-2023

புண்ணியம் பூக்கும் கண்ணிய மாதமான சங்கைமிகு றமழான் மாதத்தின் 27ம் இரவான புனித “லைலதுல் கத்ர்” இரவை சிறப்பிக்கும் முகமாக 18.04.2023 செவ்வாய் பி.ப புதனிரவு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித “லைலதுல் கத்ர்” சிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இரவு 8.15 மணி – 8.45 மணி வரை புனித ஸலவாத் சொல்லல் நிகழ்வும், இரவு 8.45 மணி – 9.00 மணி வரை இஷா தொழுகையும், இரவு 9.00 மணி – 10.00 மணி வரையும் தறாவீஹ் தொழுகையும் இரவு 10.00மணி – 10.30 மணி வரையும் தேநீர் இடைவெளியும் வழங்கப்பட்டது.

இடைவேளையைத் தொடர்ந்து இரவு 10.30 மணி – 11.30 மணி வரை சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அவர்களால் விஷேட சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 11.30 மணி – 12.00 மணி வரை தஸ்பீஹ் தொழுகையும் அதனைத் தொடர்ந்து இரவு 12.00 மணியிலிருந்து வித்ர் தொழுகை, திக்ர், பிக்ர், தௌபா, துஆ, ஹிஸ்பு மஜ்லிஸ் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்று புனித லைலதுல் கத்ர் சிறப்பு நிகழ்வுகள்  இனிதே ஸலவாத்துடன் முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments