Sunday, May 5, 2024
Homeநிகழ்வுகள்46வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி-2023

46வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி-2023

பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலினதும், அல் மத்றஸதுர் றப்பானிய்யஹ்வினதும் மூல ஸ்தாபகரும், அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் அருட்தந்தையுமான அல் ஆலிமுல் பாழில், அல் வலிய்யுல் காமில், அல் ஆரிபுல் வாஸில் அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 46வது வருட அருள் மிகு கந்தூரி 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பி.ப 5.30 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மஸார் நிகழ்வும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்கள் பேரில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய “அல்கஸீததுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதில் ஜவாதிய்யஹ்” மௌலிதும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MJM.ஜஹானீ றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. தொடரந்து பாடகர் MFM. பிஹாம் அவர்களினால் இரட்சிப்பு கீதம் பாடப்பட்டு இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments