Thursday, May 2, 2024
Homeநிகழ்வுகள்37வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா-2023 (முதலாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)

37வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா-2023 (முதலாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)

அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும், நினைவாக 17.05.2023 புதன்கிழமை புனித திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமான 37வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா-2023 புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பானது.

இப்பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஹாஜா நாயகம் பேரிலான புனித திருக்கொடியேற்ற நிகழ்வில் இலங்கைத் திருநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நீங்கவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடரிலிருந்து நாடு மீண்டு வரவும், செல்வம் செழித்தோங்கவும், நாட்டின் சமாதானம், சகவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காகவும் விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments