الله – அல்லாஹ்
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – الله – அல்லாஹ் என்ற பெயர் தெய்வீகத்தன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய யதார்த்தமான உள்ளமைக்குரிய பெயர்.அந்த யதார்த்தமான உள்ளமையாகிய அல்லாஹ்வைத்தவிர உள்ள மற்ற அனைத்து வஸ்துக்களும் சுயமான உள்ளமை அற்றவையாகும். அவை அல்லாஹ்வின் யதார்த்தமான உள்ளமையிலிருந்து உள்ளமையை பெற்றவையாகும். அல்லாஹ் என்பது அவனது 99 திருநாமங்களில் அவனது ذات – உள்ளமைக்குரிய பெயர் மற்றயவை அனைத்தும் அவனது பண்புப்பெயர்கள். அல்லாஹ் என்ற பெயர் அவனுக்கு மாத்திரமே பாவிக்கப்படக்கூடிய பெயர்.இந்த கண்ணியமான பெயரை வேறுயாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும்
Read Moreதமிழ் நாடு ஜமாஅதுல் உலமாவுக்கான பாராட்டுக் கடிதம்
இந்தியா – தமிழ் நாடு ஜமாஅதுல் உலமா சபை வழங்கிய பத்வாவை ஆதரித்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக 05.07.2015 அன்று தமிழ் நாடு ஜமாஅதுல் உலம சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்கடிதத்தை உலமாஉகளின் பார்வைக்காக இங்கு தருகிறோம். الحمد لله الذي نوّر قلوب أنبيائه وأوليائه وعلمائه الربّانيّين بمصابيح العلوم الظاهرة والباطنة، وهدى بهم من
Read Moreஜாக்கிரதை இது வஹ்ஹாபிகளின் ஊடுருவல்
இலங்கைத் திருநாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் நமது உயிரினும் மேலான நற்குணத்தின் தாயகம், “ஷரீஆ”வின் மூலவர், நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா? என்ற தலைப்பில் ஆதாரங்களோடு நான் பேசிய கருத்துக்களில் வஹ்ஹாபிகள் ஊடுருவல் செய்தும் திரிவுபடுத்தியும் மக்கள் மத்தியில் தவறான – பொய்யான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.
Read Moreபத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போரில் கலந்து கொண்ட உத்தம ஸஹாபா பெருமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் நடைபெற்று வரும் நினைவு மஜ்லிஸ் இவ்வருடம் 04.07.2015 (சனிக்கிழமை) றமழான் பிறை 17ல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தறாவீஹ் தொழுகையின் பின் திருக் கொடியேற்றி வைக்கப்பட்டு மௌலிது ஸுஹதாயில் பத்ரிய்யீனும், ஸஹாபாக்களின் திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடும் நிகழ்வும் மஜ்லிஸ் நிகழ்வுகளில் நடைபெற்றது. அதன்
Read Moreஅகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்
தமிழ் நாடு “ஜமாஅதுல் உலமா” – உலமா சபை – பீ.ஜே என்பவருக்கு எதிராக வழங்கியுள்ள “பத்வா” மார்க்கத் தீர்ப்பை காத்தான்குடியில் இயங்கிவரும் “அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா” முழுமையாகச் சரிகண்டு செயல்படுத்துகிறது. இதேபோல் “அல்ஜாமிஉல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தை தனது இதயமாகக் கொண்ட மிஸ்ர் – கெய்ரோ – நாட்டின் மத விவகார அமைச்சு, வஹ்ஹாபிகளின் தலைவர்களான இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு பாஸ் ஆகியோர் எழுதிய அறபு மொழியிலான நூல்களையும்,
Read Moreகதிரையில் அமர்ந்து தொழுவது கூடுமா?
ஆக்கம் – மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ +++++++++++++++++++++++++++++++++ கதிரையில் அமர்ந்து கொண்டு தொழும் தொழுகை கூடுமா? அல்லது கூடாதா? என்று அதிகமான கேள்விகள் மக்கள் மத்தியிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணத்தினால் இது சம்பந்தமான விபரங்களை எல்லோரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாக்கத்தை நாம் இங்கு பதிவு செய்கிறோம். சுருக்கமான பதில் – அதிகமான கால்மூட்டு வலி காரணமாகவோ அல்லது இடுப்பு வலி காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு காரணமாகவோ
Read Moreஸம்ஹான், ஸக்றான் உரையாடல்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ ஸம்ஹான் – தம்பி ஸக்றான் நீ எங்கே செல்கிறாய்? ஸக்றான் – கொழும்பு சென்று தரமான மார்க்க அறிஞர் ஒருவரிடம் மார்க்க விளக்கம் கேட்டுவரச் செல்கிறேன். ஸம்ஹான் – எது பற்றிய விளக்கம் என்று சொல்ல முடியுமா? ஸக்றான் – ஆம். சொல்லலாம். தற்போது றமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது. “தறாவீஹ்” தொழ வேண்டும். சில பள்ளிவாயல்களில் இருபது “றக்அத்” தொழுகின்றார்கள். இன்னும் சில இடங்களில் எட்டு “றக்அத்” தொழுகின்றார்கள். எது சரி
Read Moreபள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்
றமழான் மாத இரவுகளில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில் “தறாவீஹ்” தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்கு “நோன்பின் நிய்யத்” சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள். பள்ளிவாயலில் இரவு 10 மணிக்கு நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு வீடு சென்றவர்கள் “ஸஹர்” முடியும் வரை – “ஸுப்ஹ்” தொழுகைக்கான
Read Moreநின்று வணங்குதல் என்றால் என்ன?
قال النّبيّ صلّى الله عليه وسلّم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدّم من ذنبه. றமழான் மாதம் பூரண “ஈமான்” விசுவாசத்தோடும், நன்மையை நாடியும் ஒருவன் நின்று வணங்கினால் அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். இந்த நபீ மொழி பலமானதும், பல “ஹதீது” நூல்களில் இடம் பெற்றதுமாகும். இந்த நபீ மொழியில் “றமழான்” என்று மாதத்தின் பெயர்
Read More“றமழான்” என்றால் பொருள் என்ன?
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ இது ஒரு மாதத்தின் பெயராகும். ஒன்றுக்கு முதலில் பெயர் வைப்பவன் எந்த மொழியுடையவனாயினும் அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெயரையே வைப்பான். “ஷஃபான்” மாதத்தை அடுத்து வருகின்ற, “ஷவ்வால்” மாதத்திற்கு முன்னுள்ள மாதம் றமழான் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இம்மாதத்திற்கு பெயர் சூட்டினவன் அல்லாஹ்தான். இதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரம் உண்டு. விறிவையஞ்சி கூறவில்லை. ஏதாவது ஒரு வஸ்த்துக்கு அல்லாஹ் பெயர் வைத்தான் என்றால் அது ஆழமான தத்துவங்களை
Read More