Sunday, May 5, 2024
Homeநிகழ்வுகள்”பறாஅத் இரவு” சிறப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

”பறாஅத் இரவு” சிறப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

ஷஃபான் மாதத்தின் பிறை 15ம் இரவான புனித பறாஅத் இரவை சிறப்பிக்கும் முகமாக 07.03.2023 செவ்வாய்க்கிழமையன்று இரவு மஃரிப் தொழுகையின் பின் காத்தான்குடி – 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் பறாஅத் இரவு சிறப்பு நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அல்லாஹ்வின் வழிபாட்டில் வாழ்நாளை நீளமாக்கவும், பலாய், முஸீபத் நோய் நொடியின்றி நிம்மதியான சுக வாழ்வுக்காகவும், வளமான ரிஸ்க் பெற்று யாரிடமும் எந்த தேவைக்காக கையேந்தாமல் வாழ்வதற்கும் “ஸூறா யாஸீன்” ஓதப்பட்டு, பறாஅத் இரவுக்கான விஷேட துஆப் பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

இறுதியாக கலந்து கொண்ட முஹிப்பீன்கள் அனைவருக்கும் ரொட்டி, பழங்கள் என்பன தபர்றுக்காக வழங்கப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments