Sunday, April 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற கொள்கை தான் சரியான தீன் மார்க்கம்.

“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற கொள்கை தான் சரியான தீன் மார்க்கம்.

وحدةُ الوجود هي الدّينُ الصّحيحُ عند الصُّوفيّة،
يقول الصوفيّة أنّ الإعتقادَ بوحدة الوجود هو الإيمانُ الكامل،
يقول النّابلسي: رُجوعُ الأعيانِ الكثيرةِ إلى العينِ الواحدةِ هو التّوحيدُ الحقيقيُّ، والإيمانُ الكاملُ، (حكم شطح الوليّ للنّابلسي، ص 196)
 
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற கொள்கை தான் சரியான தீன் மார்க்கம்.
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற கொள்கைதான் பூரணமான ஈமான் விசுவாசம் என்று சூபி மகான்கள் கூறுகின்றார்கள்.
 
இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள்.
பல வஸ்துக்கள் ஒரு வஸ்தின்பால் மீழ்வதுதான் உண்மையான “தவ்ஹீத்” ஆகும். இதே போல் அதுவே பூரணமான “ஈமான்” நம்பிக்கையுமாகும்.
ஆதாரம்: ஹுக்மு ஷத்ஹில் வலிய்யி,
ஆசிரியர்: நாபலஸி, பக்கம்:196
இமாம் நாபலஸீ அவர்கள் மிக விரிவாக சொல்ல வேண்டிய ஒரு உண்மையை மிகச் சுருக்கமாக சொல்லியுள்ளார்கள்.
 
இதை சற்று விளக்கமாக சொல்கிறேன்.

“தவ்ஹீத்” என்ற சொல் وَحَّدَ என்ற சொல்லின் “மஸ்தர்” ஆகும். “வஹ்ஹத” என்ற சொல்லுக்கு جَعَلَهُ وَاحِدًا ஒன்றாக ஆக்கினான் என்றும், “தவ்ஹீத்” என்ற சொல்லுக்கு ஒன்றாக்கி வைத்தல் என்றும் பொருள் வரும்.
 
ஒன்றாக்கி வைத்தல் என்றால் பலதை ஒன்றாக்கி வைத்தல் என்று விளங்க வேண்டும். ஒன்றை ஒன்றாக்கி வைத்தல் என்று விளங்கக்கூடாது. அவ்வாறு விளங்கவும் முடியாது. ஏனெனில் ஒன்று ஒன்றுதான். அதை ஒன்றாக்குதல் என்பது அசாத்தியமானதாகும். இதனால் தான்
تَوْحِيْدُ الْكَثْرَةِ مُمْكِنٌ، وَتَوْحِيْدُ الْوَاحِدِ مُحَالٌ،
அதிகத்தை ஒன்றாக்குதல் சாத்தியம் என்றும், ஒன்றை ஒன்றாக்குதல் அசாத்தியம் என்றும் இறைஞான மகான்கள் கூறினார்கள்.
 
உதாரணமாக ஒருவனிடம் ஒரு திறப்பைக் கொடுத்து இந்த திறப்பை ஒன்றாக்கு என்று சொன்னால், அவன் ஒன்றை ஒன்றாக்குவது எவ்வாறு? என்றுதான் கேட்பானேயன்றி அவனால் அதை ஒன்றாக ஆக்குவதற்கு முடியாமல் போய்விடும். ஆயினும் அவனிடம் பல திறப்புகளை கொடுத்து இவற்றை ஒன்றாக ஆக்கு என்று சொன்னால் அவன் மறுகணமே அவற்றை ஒன்றாக ஆக்கிக் காட்டுவான். (அதாவது இந் நான்குமே ஒன்றுதான் – ஒரே மூலத்தின் வெளிப்பாடுதான் என்று புரிந்து கொள்வான். மக்கத்து காபிர்கள், பெருமானார் ﷺ அவர்கள் திருக் கலிமா பிரகடனம் செய்த பொது أَجَعَلَ الْآلِهَةَ إِلهًا وَاحِدًا “இந்த முஹம்மத் எல்லா தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கி விட்டாரா? என்று கேட்டார்கள் – புரிந்தார்கள்)
 
توحيدُ الواحدِ مُحَالٌ، وَتَوْحِيْدُ الْكَثْرَةِ مُمْكِنٌ،
“ஒன்றை ஒன்றாக ஆக்குதல் என்பது அசாத்தியம் என்றும், பலதை ஒன்றாக ஆக்குதல் சாத்தியம்” எனும் தத்துவம் நான் சொன்னதல்ல. இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய, ஆன்மீக அறிவுத்துறையில் கடல்கள் போன்றும், மாமலைகள் போன்றும் திகழ்ந்த மெய்ஞானிகள் அருளிய தத்துவமாகும்.
 
“தவ்ஹீத்” என்ற சொல் فَعَّلَ يُفَعِّلُ تَفْعِيْلًا என்ற “வஸ்ன்” அமைப்பில் وَحَّدَ يُوَحِّدُ تَوْحِيْدًا என்று வந்ததாகும். இதுபற்றி சொல்லிலக்கணம் கூறும் நுட்பத்தை உலமாஉகளும், அறபுக் கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு சுட்டிக்காட்டுகிறேன். இது பொது மக்களுக்கு விளங்காதாகையால் அவர்கள் விளங்க வேண்டும் என்று விரும்பினால் சொல்லிலக்கணத்தோடு தொடர்புள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
فَعَّلَ: يُنْتَقَلُ الْمُجَرَّدُ الثُّلَاثِيُّ إِلَى وَزْنِ فَعَّلَ لِمَعَانٍ،
1. اَلتَّعْدِيَةُ، نَحْوُ فَضَّلْتُهُ وَفَرَّحْتُهُ، فَإِنَّ مُجَرَّدَهُمَا لَازِمٌ،
2. اَلدَّلَالَةُ عَلَى التَّكْثِيْرِ، نَحْوُ قَطَّعْتُ الْحَبْلَ، أي جَعَلْتُهُ قِطَعًا كَثِيْرَةً،
3. نِسْبَةُ الْمَفْعُوْلِ إِلَى أَصْلِ الْفِعْلِ، نحو كَفَّرْتُهُ، أي نَسَبْتُهُ إِلَى الْكُفْرِ،
4. اَلسَّلْبُ، نحو قَشَّرْتُ الْعُوْدَ، أي نَزَعْتُ قِشْرَهُ،
5. اِتِّحَادُ الْفِعْلِ مِنَ الْاِسْمِ، نحو خَيَّمَ الْقَوْمُ، أي ضَرَبُوْا خِيَامًا، (مزيدات الأفعال)
மேற்கண்ட இவ்விபரங்கள் உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரிகளில் சொல்லிலக்கணம் படிக்கின்ற மாணவர்களுக்கும் மட்டுமே விளங்கும். ஏனையவருக்கு விளங்காது.
 
மேற்கண்ட ஐந்து வகைகளில் – ஐந்து நோக்கங்களில் முதலாவதாக கூறப்பட்ட اَلتَّعْدِيَةُ என்ற நோக்கமே எனது தலைப்புக்கு பொருத்தமானதாகும். இதை மையமாகக் கொண்டு “தவ்ஹீத்” என்ற சொல்லை ஆய்வு செய்தல் பயன் தரும். وَحِّدُوا اللهَ – وَحِّدُوْا رَبَّكُمْ அல்லாஹ்வை ஒருவனாக ஆக்கி வையுங்கள், உங்களின் இரட்சகனை ஒருவனாக ஆக்கி வையுங்கள். ஆக்கி வைத்தல் என்றால் என்ன? அது எவ்வாறு? என்பது اَلتَّعْدِيَةُ என்ற நோக்கத்தை மையமாக வைத்து ஆய்வு செய்தால் புரியும்.
எனினும் اَلْبَلِيْدُ لَا يُفِيْدُهُ التَّطْوِيْلُ، وَلَوْ تُلِيَتْ عَلَيْهِ التَّوْرَاةُ وَالْإِنْجِيْلُ “மந்த புத்தி உள்ளவர்களுக்கு நீண்ட விளக்கம் சொன்னாலும் பயனில்லை, “தவ்றாத், இன்ஜீல்” வேதங்களை ஓதி காட்டினாலும் பயனில்லை என்ற பழமொழி இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
 
“தவ்ஹீத்” என்ற சொல்லின் தாற்பரியம்.
وَحَدَ يَحِدُ وَحْدًا وَوَحْدَةً وَحِدَةً وَوُحُوْدًا،
وَحَدَ يَحِدُ وَحَادَةً وَوُحُوْدَةً،
اِنْفَرَدَ بِنَفْسِهِ، فَهُوَ وَحِيْدٌ،
وَحَّدَ تَوْحِيْدًا (ه) جَعَلَهُ وَاحِدًا،
واللهَ تعالى آمَنَ بِهِ وَحده، قال إنّه واحد أو قال لا إله إلا الله، أَحَّدَ (ه) وَوَحَّدَهُ، أَوْحَدَ إِيْحَادًا (ه) تركه منفردا، (المعجم، ص 86)
ويأتي الواحد أيضا بمعنى الْأَحَدِ، أي المنفرد الّذي لا نظير له، (أو ليس معه غيره)
கற்றறிந்த உலமாஉகளினதும், அறபு மொழி கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களினதும் நலன் கருதி இவ்விபரம் எழுதப்பட்டுள்ளது.
 
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் பேசும் பொருளாக சர்வதேச மட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் இக்கால கட்டம் இத்தத்துவத்தை அறியாதவர்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் அமைத்துத் தந்த அற்புதமான, அரியதொரு சந்தர்ப்பம் ஆகும். இவ் அரிய வாய்ப்பை எவர் பயன்படுத்திக் கொள்ளாது போனாலும் மார்க்க அறிஞர்களான உலமாஉகளும், அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களும், மற்றும் பொது அறிஞர்களும், இத்தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளும், மற்றும் ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களும் “பர்ழ் ஐன்” கட்டாய கடமை எனக் கருதி பயன்படுத்த வேண்டும் என்று “தீன்” மார்க்கத்தின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன்.
 
மார்க்க விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அறிஞர்கள் ஒன்றுகூடி அது தொடர்பாகப் பேசித் தீர்மானிக்க வேண்டுமேயன்றி ஒருவர் மற்றவருக்கு “பத்வா” கொடுப்பது கொண்டும், ஒருவர் மற்றவரை மேடைகளிலும், கூட்டங்களிலும் சாடிப் பேசுவது கொண்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இவ்வாறு செயல்படுவது பிரச்சினையையும், பகைமையையும் வளர்க்குமேயன்றி இது விடிவுக்கு வழி வகுக்காது.
 
இதனால்தான் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் தொடர்பான சந்தேகம் உள்ளவர்கள், தெளிவில்லாதவர்கள் இக்கருத்தைச் சொல்லி வரும் என்னிடம் வந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பல முறை பலரையும், குறிப்பாக உலமாஉகளையும் அழைத்து இருக்கின்றேன். எவரிடமிருந்தும் எத்தகவலும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
 
ஆனால் உலமாஉகளில் சிலர் – சில பொடியன்மார் என்னை இழிவு படுத்தியும், கேவலப்படுத்தியும், பொய்யான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தியும் வருவது மார்க்கமல்ல. மார்க்கம் காட்டிய வழியுமல்ல.
அல்லாஹ் திருக்குர்ஆனில் فاسئلوا أهل الذكر إن كنتم لا تعلمون நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிஞர்களிடம் கேளுங்கள் என்றுதான் அல்லாஹ் சொல்லியுள்ளானேயன்றி மேடையிலேறி ஒழுக்கமின்றியும், கேவலமான பாணியிலும் பேசுங்கள் என்று சொல்லவில்லை.
 
இன்னும் அல்லாஹ் திருக்குர்ஆனில்,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا،
“விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனின் தூதருக்கும் வழிப்படுங்கள். இன்னும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் வழிப்படுங்கள். ஆனால் ஏதாவது ஒரு விடயத்தில் நீங்கள் முரண்பட்டால் – பிணங்கிக் கொண்டால் அதனை அல்லாஹ்விடமும், தூதரிடமும் திருப்பி விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும், மிக அழகான முடிவாகவும் இருக்கும்” (04-59)
மேற்கண்ட திரு வசனத்தின் சுருக்கம் என்னவெனில், மார்க்க விடயத்தில் அல்லது கொள்கை விடயத்தில் முஸ்லிம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தால் அதற்கான சரியான தீர்வை திருக்குர்ஆனிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதாகும்.
 
தற்போது பேசும் பொருளாக உள்ள விடயம் “எல்லாம் அவனே” எனும் “வஹ்ததுல் வுஜூத்” சரியா? பிழையா? என்பதாகும். இதற்கு தீர்வு காண்பதாயின் திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் ஆதாரம் இருக்க வேண்டும்.
இக்காலத்தில் இலங்கை நாட்டில் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் பேசுகின்ற நானும், எனது கருத்தை சரி கண்டு, கொள்கையில் என்னோடு இருக்கும் மௌலவீமாரும் இத்தத்துவம் சரியானது என்று திருக்குர்ஆன் வசனங்கள் கொண்டும், நபீ மொழிகள் கொண்டும் நிறுவிக்கொண்டே இருக்கிறோம். இவ்விரண்டும் போதாதென்று நம்பத் தகுந்த இமாம்கள், வலீமார், இறைஞானிகள், தரீகாவின் மஷாயிகுமார்களின் நூல்களிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறோம்.
 
ஆயினும் குறித்த ஞானத்தை மறுப்போரிலும், எதிர்ப்போரிலும் எவரும் நாங்கள் கூறும் ஆதாரங்களை மறுத்து எந்த ஒரு “பத்வா”வும் இதுவரை வெளியிடவுமில்லை, எந்த ஒரு நூலும் எழுதவுமில்லை, எம்மோடு நேரில் கலந்துரையாடி பேசி தீர்ப்பதற்கு வரவுமில்லை, அல்லது فاسئلوا أهل الذكر إن كنتم لا تعلمون நீங்கள் அறியாதவர்களாயின் அறிஞர்களிடம் கேளுங்கள் என்ற இறை கட்டளைப்படி எம்மிடம் கேட்டு தெரிந்து கொள்ள எவரும் வரவுமில்லை. ஆயினும் நான் இவர்களை என்னிடம் வந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பலமுறை அழைப்பு விடுத்தும் கூட அவர்கள் செவிடர்களாகவே இருந்து வருகிறார்கள். இதற்கு மேல் எம்மால் எதுவுமே செய்ய முடியாது. தொடர்ந்து நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம். இது எங்கள் கடமையும், உரிமையுமாகும்.
 
தலைப்பில் நான் எழுதிய இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் அறபு வசனத்தின் சுருக்கம் என்னவெனில் எமது கண்களுக்கு பலதாய் தோற்றுகின்ற எல்லா வஸ்துக்களும் அல்லாஹ் என்ற மூலப் பொருளின் பல தோற்றங்கள் என்று நம்புவதே சரியான தவ்ஹீதும், சரியான “ஈமான்” விசுவாசமும் என்பதாகும்.
இமாம் நாபலஸீ அவர்களின் ஏனைய பேச்சுக்கள் தொடரும்.
 
தொடரும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments