இது தான் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்
-மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ –——————————— 01.அவனே வஸ்த்துக்களின் மூலப் பொருளாகும்….. சிருஷ்டிகள் என்ற பெயரில் அவனே இருக்கின்றான்….. உலகம் அவனுடைய உருவமாகும். நூல் – புஸூஸுல் ஹிகம், பக்கம் – 111,இமாம் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் 02.இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள். நாம் சிருஷ்டிகளில் யாரையும் காணவில்லை. உள்ளமையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உண்டா? நூல் – ஈகாழுல் ஹிமம்,பக்கம் – 44,ஆசிரியர் –
Read Moreஅத்வைத மெய்ஞ்ஞானம் மட்டுமே ஒற்றுமைக்கான ஒரே வழி
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே ! நம் நாட்டில் பல்வேறு சமயத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களிடையே, பெரும்பாலும் தீய விளைவையே உண்டாக்கும் வேற்றுமை உணர்வுகளையும், ஒரு சமயத்தவரைப் பற்றி இன்னொரு சமயத்தவர் கூறிவருகின்ற எதிர்மறையான விமர்சனங்கள், கருத்துக்கள், காழ்ப்புணர்வுகளையெல்லாம் வேருடன் பிடுங்கி, களையெடுத்து, நாம் எல்லோரும் ஒரே தாய் தந்தையின் பிள்ளைகளாக, ஒருவருக்கொருவர் சொல்லாலும், செயலாலும் தொல்லைக்கொடுக்காமல் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்தால்தான், நம் நாட்டில் சம தர்ம சமுதாயம் அமையும் ! நம் நாடும் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடையும்.நம்
Read Moreமுராகபஹ்…. முஷாஹதஹ் !
{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ (4)} [الحديد: 4]நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)என்று அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான். இந்த அடிப்டையில் அல்லாஹ் மஈ ! الله معي ! அல்லாஹ் என்னுடன் இருக்கின்றான் ! என்பதன் அர்த்தம் என்ன? ஒரு வெள்ளி மோதிரத்தை சுட்டிக்காட்டி, இந்த வெள்ளி மோதிரத்துடன் வெள்ளி இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம் ? மோதிரம் முழுவதும் வெள்ளியே உள்ளது என்றுதான் அர்த்தம் கொள்வது போல்,
Read Moreகூனூ மஅஸ்ஸாதிகீன்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள் (அல்குர்ஆன் 9:119) கூனூ மஅஸ்ஸாதிகீன் !நீங்கள் உண்மையாளர்களுடன் ஆகியிருங்கள் !ஆகிவிடுங்கள் ! இது, வல்ல அல்லாஹ்வின் ஆணை, கட்டளை !இறைக்கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டவரே நல்லடியார்கள் . இந்த உண்மையாளர்கள் என்றால் யார் ?அரபியில் حق என்னும் சொல் மெய்ப்பொருளான அல்லாஹ்வை குறிக்கும்உண்மை பேசுதலை குறிக்காது !
Read Moreமஸ்ஜித்
அரபு மொழியில் மஸ்ஜித், ஜாமிஉ என்ற மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஏக இறைவனை வணங்கி கூட்டுப் பிரார்த்தனை செய்யக்கூடிய புனித இடத்திற்கு பள்ளி வாசல் ! அல்லது பள்ளிவாயில் ! என நம் ஞானத்தமிழ் முஸ்லிம் முன்னோர்கள் ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் ? என்பதற்கு ஏற்புடைய காரணங்கள் உண்டு ! நம் தாய் மொழித் தமிழில் பள்ளி, பள்ளிக்கூடம் என்ற பதத்திற்கு கல்வி அல்லது ஞானம் கற்கக்கூடிய இடம் என்றும் பள்ளியறை என்பதற்கு துயிலக்கூடிய இடம் என்றும்
Read Moreஉள்ளமை, இருப்பு, وجود ஒன்றே!
உள்ளமை, இருப்பு, وجود ஒன்றே என்பதே உண்மைத் தௌஹீத் ! அல்லது இல்முத் தௌஹீத் எனும் ஏகத்துவ ஞானம் !அத்வைத மெய்ஞானம் ! The existing entity is only One ! It is the real Monism or Non-Dualism ! படைத்தவன், படைப்புக்கள் இரண்டென்பது ஷிர்க்கே ! இணைவைப்பே ! Making another being with Allah is only Dualism அல்லாஹ்வும் இரஸூலும் ஒன்றே……..!
Read More41வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2018
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 41வது வருட அருள் மிகு கந்தூரி 30.06.2018 சனிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்கள் பேரில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2018
இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 02.06.2018 (சனிக்கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன், பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது. இறுதியாக துஆவுடன் தபர்றுக் விநியோகத்துடன்
Read Moreபுனித றமழான் பரிசு
رمضان – றமழான் என்ற அறபுச் சொல் ஐந்து எழுத்துக்களை கொண்டது. இச்சொல்லுக்கு எரித்தல், கரித்தல், சூடு, உஷ்ணம் போன்ற அர்த்தங்கள் உண்டு. இச் சொல் الشُّهُوْرُ القَمَرِيّةசந்திரமாதங்களின் ஒன்பதாம் மாதத்துக்குரிய பெயராகும். شهر رمضان – ஷஹ்று றமழான் (றமழான் மாதம் ) என்று இம்மாதம் அழைக்கப்படும்.
Read More