Saturday, April 27, 2024
Homeநிகழ்வுகள்முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி

முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி

சத்திய சன்மார்க்கத்தை நிலைநாட்ட இறையோனின் பாதையில் அயராது உழைத்த நிறைநேசச் செல்வர்களான அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரீ (குப்பிகாவத்ததை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (அட்டாளைச்சேனை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் நினைவாக றமழான் பிறை 24ம் இரவன்று (11.07.2015 சனிக்கிழமை) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி நடைபெற்றது.

அன்றைய தினம் தறாவீஹ் தொழுகையின் பின் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும்,அப்துல் காதிர் ஸூபி ஹழ்றத் அன்னவர்களாலும், ஷெய்குனா மிஸ்பாஹீ  நாயகம் அன்னவர்களாலும் யாக்கப்பட்ட புகழ்பாக்கள் பாடப்பட்டன.
இறுதியாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், துஆவும் ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகமும் நடைபெற்று இனிதே ஸலவாதுடன் நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments