Tuesday, May 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

 

தொடர்- 03 …

ஷெய்தானின் கொம்பு என்று நபிகளால் பிரகடனம் செய்யப்பட்டவர் வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாபேதான்!

வழிகேடர் நஜ்தி சாகிபுதனது கொள்கைக்கு மாறானவர்களையெல்லாம் இணைவைத்தவர்களென்று கூறி வந்ததால் அவர்களிலொருவனைத் தனது பக்கம் சேர்த்துக் கொள்ளும்போது அவனின் தலைமுடியை சிரைத்துவிடுமாறு பணித்து அது “ஷிர்குடைய காலத்தில் முளைத்த முடி யென்றும் காரணம் சொல்லி வந்தார்.
 
அசல் வஹ்ஹாபிக் குஞ்சுகளிடம் இப்படியொரு கொள்கையும் , திட்டமும் இப்போது இருந்து வருகின்றது.
 
மேலே கூறிய ஹதீஸ்களில் “யத்லுஉ கர்னுஷ்ஷெய்தான்” ஷெய்தானுடைய கொம்பு வெளியாகுமென்று இருப்பது போல் இன்னும் சில ஹதீஸ்களில் “யத்லு உகர்னாஷ் ஷெய்தான்” ஷெய்தானுடைய இரு கொம்புகள் வெளியாகும் என்றும் வந்துள்ளது.
 
அதாவது “கர்னுன்“ என்ற சொல்லின் இருமைச் சொல்லான “கர்னானி” என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஹதீதுக்கு விளக்க மெழுதிய இமாம்கள் இரண்டு கொம்புளென்பது முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்பவரையும், தன்னை நபி என்று வாதிட்ட “முஸைலமதுல் கத்தாப்”என்பவரையும் குறிக்கும் என்று எழுதியுள்ளார்கள்.
 
ஏனெனில், தானொரு நபியென்றுவாதிட்ட “முஸைல மதுல் கத்தாப்” என்பவரும் முஹம்மதுடைய ஊரான “நஜ்து” எனுமூரில் தான் பிறந்தார்.
 
அறிஞர் அல்லாமஹ் அஸ்ஸெய்யித் அலவீ பின் அஹ்மத் பின் ஹஸன் பின் அல் குதுபு அஸ்ஸய்யித் அப்துல்லாஹில் ஹந்தாத் பாஅலவீ (றஹ்) அவர்கள் வழிகேடர் முஹம்மதுக்கு அறபியில் ஒரு மறுப்பு நூல் எழுதினார்கள். அதற்கு “ஜிலா உழ்ழலாம் பிர்றத்தி அலன் நஜ்திய்யில்லதீ அழல்லல் அவாம்” என்று பெயரிட்டார்கள்.
 
இந்த நூலில் இமாம் அவர்கள் பல ஹதீஸ்களை இடம் பெறச் செய்துள்ளனர். அவற்றிலொன்றை மாத்திரம் கீழே எழுதுகிறேன்.
 
“பன்னிரண்டாம் நூற்றான்டில்” வாதீபனீஹனீபா ” எனும் இடத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவன் காளைமாடு போலிருப்பான். அவனுடைய காலத்தில் கொலையும், கொள்ளையும் அதிகப்படும். அவனும் அவனுடைய ஆதரவாளர்களும் முஸ்லிம்களுடைய சொத்துக்களை ஹலாலெனக் கருதி அவற்றை அபகரித்துக் கொள்வார்கள். முஸ்லிம்களைக் கொலைசெய்வதும். ஹலாலெனக்கருதி அவர்களையும் கொலை செய்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் அவர்களால் ரிவாயத் செய்யப்பட்டுள்ளது.
 
மேலே குறித்த ஹதீஸின்படி ஹிஜ்ரி பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்து வாழ்தவர்தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஆவார்.
 
இவர் ஹஜ்ரி 1111ல் பிறந்தார் மேலே குறிப்பிட்ட ஹதீஸும் இந்த வழிகேடரையே குறிக்கின்றது. ஏனெனில் 12ம் நூற்றாண்டில் மார்க்க ரீதியாக ஏற்பட்ட மாபெரும் குழப்பம் இவரால்தான் உண்டானது. இவரைத்தவிர வேறெவராலும் குறித்த நூற்றாண்டில் மார்க்க ரீதியான குழப்பமொன்றும் ஏற்படவில்லை. குறித்த ஆண்டில் அறபு நாட்டில் மார்க்க ரீதியாகத் தோன்றிய புரட்ச்சி இவருடைய புரட்ச்சி மட்டும்தான்.
 
நபி (ஸல்) அவர்கள் தீர்க்கதரிசனமாக முன்கூட்டியே சுட்டிக்காட்டிய வழிகேடர் இந்த முஹம்மது மட்டும்தான் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
 
நபித்தோழர்களில் “துல்குவைஸறா அத்தமீமி” என்றொரு ஸஹாபி இருந்தார். அவர் தமீம் கூட்டத்தைச் சேர்தவர்.
 
ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் இவரைச் சுட்டிக்காட்டி இவருடைய சந்ததிகளில் சிலர் வருவார்கள். அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவார்கள். எனினுமது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு வெளியேறுவது போல் இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள். விக்ரகவாதிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்களையடைந்தால் “ஆத்” கூட்டத்தாரை கொன்றது போல் அவர்களை நான் கொன்று விடுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
நஜ்தில்பிறந்த வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் தமீம் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நபி மொழியிலிருந்து நபி (ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டவர் வழிகேடர் முஹம்மத் என்பது தெளிவாகிவட்டது.
 
“ கடைசி காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். நீங்களும் உங்கள் பெற்றோர்களும் கேட்டிராத விஷயங்ளையெல்லாம் அவர்கள் சொல்வார்கள். எனவே, அவர்களைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கின்றேன். அவர்கள் உங்களை வழி கெடுக்கவும் வேண்டாம். உங்களைக் குழப்பத்திலாக்கி விடவும் வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
ஆதாரம்:மிஸ்காத், முஸ்லிம்
அறிவிப்பு: அபூ ஹுரைரா (றழி)
 
இந்த ஹதீஸில் குறிப்பிட்ட கூட்டம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் கூட்டமென்பது அறிவுள்ளவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தெளிவாகப்புரியும்.
 
ஏனெனில், இவரும் இவரின் கூலியாட்களும்தான் வஸீலா, மெளலித், தல்கீன், கத்தம், பாத்திஹா, கந்தூரி போன்ற வற்றையும் மறுக்கின்றார்கள். இவர்களுக்கு முன் இவற்றை யாரும் மறுத்ததற்கு ஆதாரமில்லை.
 
தமீம் கூட்டத்தாரைப்பற்றி திருக்குர்ஆனிலும் சில வசனங்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரிலுள்ள தங்களுடைய வீட்டிலிருந்த சமயம் அவர்களைச் சந்திப்பதற்காக வருபவர்கள் அவர்கள் வெளியேவரும்வரை காத்திருப்பது வழக்கம்.
 
ஒரு சமயம் தமீம் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்தார்கள். அந்நேரம் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள்ளே இருந்தார்கள்.
 
வந்தவர்கள் நபி (ஸல்) அவர்கள் வரும்வரை காத்திருக்காமல் வெளியே நின்ற வண்ணம் நபி (ஸல்) அவர்களின் பெயரைச் சொல்லி அவர்களை அழைத்தனர்.
 
அப்பொழுது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கொண்டு வந்தார்கள். “இன்னல்லதீன யுனாதூனக மின்வறாயில் ஹுஜுறாதி அக்தறுஹும் லா யஃகிலூன்”
 
உங்களுடைய வீட்டுக்கு வெளியே நின்று உங்களை அழைப்பவர்களில் அநேகர் உங்ளைப் புரியாதவர்களாகவே உள்ளனர்.
(அல்குர்ஆன்: 49-04)
 
இத்திருவசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களின் பெயர் கொண்டு அவர்களை அழைக்கக் கூடாதென்பதும், நபி (ஸல்) அவர்களை மரியாதைக் குறைவாக அழைத்தவர்கள் “தமீம்” கூட்டத்தவர்கள் என்பதும், அவர்களில் அநேகர் ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், நபி (ஸல்) அவர்களைப் புரியாத வர்களென்றும் அல்லாஹ் அவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளான் என்பது தெளிவாகிவிட்டது.
 
“தமீம்” கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களைத் தரக்குறைவாக கணித்திருப்பதினாலும், நபி (ஸல்) அவர்களைத்தரக்குறைவாக பேசியுள்ள வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் அதே கூட்டத்தைச் சேர்ந்தவராகயிருப்பதினாலும் “தமீம்”கூட்டத்தார் தொன்று தொட்டு நபியைக் கண்ணியப் படுத்தாமல் வந்தவர்களென்பதும் விளங்கிவிட்டது.
 
நபி (ஸல்) அவர்களைக் காணவந்த தமீம் கூட்டத்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயர் கொண்டு அவர்களைழைத்தது மட்டும் குற்றமில்லை. வீட்டினுள்ளேயிருந்த நபிகளாரை வெளியே நின்று கொண்டு அழைத்ததும் குற்றம்தான்.
 
அவர்கள் நபிகளாரின் பெயர் கொண்டு அழைக்காமல் “யாரஸூல்லாஹ், யாஹபீபல்லாஹ்”போன்ற கண்ணியத்துக்குரிய வார்த்தைகள் கொண்டு அவர்களையழைத் திருந்தாலும் வெளியே நின்று அழைத்தது அவர்கள் செய்த குற்றமேயாகும்.
 
நபி (ஸல்) அவர்களைக்காண வருபவர்களிற் சிலர் அவர்களைவிடக் கூடுதலாகத் தமது சப்தத்தை உயர்த்திப் பேசுவார்கள்.
 
ஒரு சமயம் மேலே கூறிய தமீம் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் சப்தத்தைவிடத் தமதுசப்தத்தையுயர்த்திப் பேசினார்கள். அப்பொழுது பின்வரும் திரு வசனம் இறங்கியது.
 
“விசுவாசிகளே! நபி பேசும் பொழுது நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் உரக்கப் பேசுவதைப்போல் அவரிடம் சப்தத்தையுயர்த்தி நீங்கள் உரக்கப் பேசாதீர்கள் ஏனெனில் உங்களுடைய நன்மையான செயல்களெல்லாம் பயனற்று விடக்கூடும் இதை நீங்கள் உணர்ந்து கொள்ளமுடியாது”
(திருக்குர்ஆன்: 49-02)
 
இத்திருவசனத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுடைய சப்தத்திற்கு மேலாக யாரும் சப்தத்தையுயர்த்திப் பேசக்கூடாதென்பதும், அவ்வாறு பேசியவர்கள் வழிகேடர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபுடைய மூதாதையர்களான “தமீம்” கூட்டத்தை சேர்ந்தவர்களென்பதும தெளிவாகி விட்டது.
 
இத்திரு வசனத்தின் மேலதிக விபரங்களை “நபி (ஸல்) அவர்கள் நம் போன்ற மனிதனா? என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.
 
உலகில் வழிகெட்டவர்களில் அநேகர் தமீம் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகவேஇருக்கின்றார்கள். வழிகேடர் முஹம்மதும், அவருக்கு உதவி வந்த மன்னன் அப்துல் அஸீஸ்பின் முஹம்மத் பின் சுஊத் என்பவரும் “தமீம்”கூட்டத்தை சேர்ந்தவர்களேயாவர்.
 
இமாம் அஸ்ஸெய்யித் அலவி அல்ஹத்தாத் (றஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
 
“தாயிப் நகரில் சமாதி கொண்டிருக்கும் “ஹிப்றுல் உம்மத்”அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (றழி) அவர்களை ஸியாறத் செய்வதற்காக நான் அங்கு சென்ற பொழுது அல்லாமஹ் அஷ்ஷெய்கு முஹம்மத் ஸுன்புல் அஷ்ஷாபியீ (றஹ்) அவர்கள் மகன் அஷ்ஷெய்கு தாஹிர் ஸுன்புல் அல்ஹனபீ அவர்களைக் கண்டு உரையாடினேன்.
 
வழிகேடர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பற்றியும், அவருடைய கூலியாட்கள் பற்றியும், அவர்களின் வழிகேடான கொள்கை பற்றியும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அவர்களின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து “அல் இன்திசார்லில் அவ்லியாயில் அப்ரார்” என்ற பெயரில் தானொரு நூல் எழுதி வெளியிட்டதாகவும் கூறினார்கள்.
 
மேலும், தனது நூல் வழிகேடர் நஜ்தியின் கொள்கைநுழையாத உள்ளங்களைத் திருத்திவிடுமென்றும், அவருடைய கொள்கை நுழைத்த உள்ளங்கள் வில்லை விட்டும் வெளியான அம்பு மீண்டும் வில்லளவில் மீளாதென்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதுபோல் அவர்கள் ஒரு பொழுதும் நல்வழிக்குத் திரும்பமாட்டார்ளென்றும் என்னிடம் சொன்னார்கள். வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் தவறான கொள்கையுள்ளவராக இருந்தாலும் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த ஒன்றும் தெரியாத மக்களைஒன்று சேர்த்து தொழுகை,நோன்பு போன்ற கடமைகளைச் செய்ய வைத்தும், பாவமான காரியங்ளை விட வைத்தும்,கொள்ளையர்களை திருத்தியும் இருக்கின்றார் ஆகையால் அவரைச் சரி கண்டால்என்னவென்று சிலர் கேட்கிறார்கள்.
 
இவர்களுக்கு சுன்னத் வல்ஜமாஅத்தவர்கள்கூறும் பதில் பின்வருமாறு:
 
இவ்வாறு கேட்பவர்கள் வழிகேடர் முஹம்மதுவின் வழிகேடுபற்றியும், அவர்செய்த அட்டூழியங்கள் பற்றியும் தெரியாதவர்களேயாவர். அவரின் வழிகேடு பற்றி மக்கள் தெரிந்து அதிலவர்கள் விழுந்து விடாமலிருக்கும் பொருட்டு அவரின் வழிகேட்டில் சிலதை இங்கு எழுதுகிறேன்.
 
உலகில் சுமார் 600ஆண்டுகாலமாக வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் “முஷ்ரிக்”இணைவைத்தவர்ளென்று அவர் கூறிய வார்த்தையை விட பெரிய குற்றம் ஒன்ருமிருக்க முடியாது.
 
இதன் விவரமென்னவெனில். ஹிஜ்ரி 1111ல் பிறந்த வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் ஹிஜ்ரி 500க்குப்பிறகுள்ள அனைவரும் “முஷ்ரிக்” குகள் – இணைவைத்தவர்கள் என்று கூறினார்.
 
இவருடைய இக்கூற்றின் படி ஹிஜ்ரீ 500க்குப் பிறகுவந்த இமாம்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் என்றாகிவிடும்.
 
சாதாரண ஒரு முஸ்லிமைக் கூட “முஷ்ரிக்”என்றும் “முர்தத்” என்றும் கூறுவது மிகப் பெரிய பிழையாகவும், பாரிய குற்றமாகவுமிருக்கும் பட்சத்தில், அவ்லியாக்கள், இமாம்கள், நாதாக்கள் முதலானோரை “முஷ்ரிக்” குகள் என்றும் “முர்தத்” துகள் என்றும் சொல்வது மிகப்பெரிய குற்றமும், நாதாக்களின்’ சாபத்தை அழைத்துக் கொள்வதுமாகும்.
 
இன்னும் வழிகேடர் நஜ்திசாஹிபு செய்த வழிகேடு என்னவெனில் “பிக்கு” என்னும் மார்க்கச் சட்ட நூற்களையும், மற்றும், ஹதீஸ், அவ்ராது போன்ற இமாம்களால் எழுதப்பட்ட நூற்களையெல்லாம் எரித்துச் சாம்பராக்கி விட்டதாகும்.
 
இந்த வழிகேடருக்கு இமாம்களைப்பிடிக்காது ஏனெனில் இமாம்கள் என்போர் இவருடைய கொள்கைக்கு மாறானவர்களாயிருந்தபடியால் அவர்கள் எழுதிய நூற்களையெல்லாம் எரித்துச் சாம்பராக்கிவிட்டார். இதுவும் அவர் செய்த அட்டூழியங்களில் ஒன்றாகும்.
 
இன்னுமவர் செய்த மிக மோசமான அட்டூழியமென்னவெனில் தனது கொள்கைக்கு மாறாகவிருந்த உலமாக்கள், இமாம்கள், நல்லடியார்கள் போன்றவர்களையெல்லாம் கொலை செய்ததும், அவர்களுடைய சொத்துக்கள் ஹலால் எனக்கருதி அவற்றை அபகரித்துக் கொண்டதுமாகும்.
 
இன்னும் அவருடைய வழிகேடு என்னவெனில் அல்லாஹ் சடமுள்ளவன் என்றுமட்டும் நம்பினதும், சொன்னதுமாகும்.
 
இன்னும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் செய்த வழிகேடு யாதெனில் நபீமார்கள், றசூல்மார்கள், அவ்லியாக்கள், ஆகியோர்களை தரக்குறைவாகப் பேசியிருப்பதும், அவர்களுடைய கப்றுகளைத் தோண்டித் தரைமட்டமாக்கியிருப்பதுமாகும்.
 
சவூதி அரேபியாவில் “ஹஸ்ஸர்” எனுமூரிலிருந்த அவ்லியாக்களின் கப்றுகளை உடைத்து தரைமட்டமாக்கிவிட்டு அவற்றையெல்லாம் மலசல கூடமாக மாற்றியதும் அவர் செய்த பயங்கரமார்க்கதுரோகமாகும்.
 
“தலாயிலுல் கைறாத்”என்ற உலகப்பிரசித்தி பெற்ற ஸலவாத், அவ்றாத் அடங்கிய நூலைப் படிக்க வேண்டாமென்று மக்களை தடைசெய்ததுடன் அதை எரித்துச் சாம்பராக்கினதும் அவர் செய்த மோசமானமார்க்கதுரோகமாகும்.
 
இந்நூலில் அஷ்ஷெய்கு முஹம்மதிப்னு சுலைமான் அல்மக்ரிபீ அல்ஜஸூலி (றஹ்) அவர்களால் இயற்றப்பெற்றது. இப்பெரியார் அறிஞர் இப்னு ஹாஜிப் (றஹ்) அவர்கள் எழுதிய நூலை மனனம் செய்திருந்தார்.
 
சூபிஸ ஞானக்கலையில் பலநூல்கள் எழுதியுள்ளார்கள். மொரோக்கோ நாட்டின் கடலோரங்களில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் இறைவணக்கத்தில் நிலைபெற்றிருந்தார்.
 
தினமும் பகல் நேரத்தில் மட்டும் பதினாலாயிரம் தரம் “பஸ்மலா” (பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று) ஓதுவதுடன் தாங்கள் எழுதிய “தலாயிலுல் கைறாத்”சலவாத்தை இரு தடவைகள் ஓதியும் முடிப்பார்கள்.
 
இரவு நேரத்தில் மட்டும் “தலாயிலுல் கைறாத்”தை ஒருதரமும் திருக்குர்ஆனில் நூலில் ஒரு பகுதியையும் ஓதி முடிப்பார்கள்.
 
இவர் ஹிஜ்ரி 870ம் ஆண்டு றபீஉனில் அவ்வல் மாதம் ஆறாம்நாள் இறையடி சேர்ந்து “ஸூஸ்” எனும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
 
இவர் அடக்கப்பட்டு 77 ஆண்டுகள் கழிந்தபிறகு, ஈரான் நாட்டிலுள்ள “ஸூஸ்” எனுமிடத்திலிருந்து மொரோக்கோநாட்டிலுள்ள “மர்ராகிஸ்” என்னுமிடத்துக்கு இவரை மாற்றியடக்க வேண்டிய நிலைமையேற்பட்டது.
 
அவரைத் தோண்டியெடுத்து அடக்கம் செய்தார்கள் அப்பொழுது அவர் அன்று மரணித்து அடக்கப்பட்டவர் போல் இருந்தார் என்றும் அவருடைய உடலில் எவ்வித மாற்றமும் இருக்கவில்லையென்றும் கூறப்பட்டுள்ளது.
 
இத்தகைய சிறப்புக்களுடைய இமாம் ஜஸூலி (றஹ்) அவர்கள் எழுதிய “தலாயிலுல் கைறாத்”எனும் நூலைத் தான் வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் எரித்துச் சாம்பராக்கினார். இதுவும் அன்று அவர்செய்த மாபெரும் சன்மார்க்க துரோகமாகும்.
 
இமாம்கள், அவ்லியாக்களால் கோர்வை செய்யப்பட்டு வௌ்ளிக்கிழமையிரவுகளில் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வீடுகளிலும் பள்ளிவாயல்களிலும்ஓதி வருகின்ற – செய்து வருகின்ற “ராதிப்” ஒதக் கூடாது என்று அவர் தடை செய்தவுடன் அத்தகைய நுல்களை எரித்துச் சாம்பராக்கியதும் அவர் செய்த மார்க்கத் துரோகமாகும்.
 
இன்னும் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடப்பட்ட மௌலிதுகளும் அவ்லியாக்களை புகழ்ந்து பாடப்பட்ட மௌலிதுகளும் மார்க்கத்துக்கு முரணானவை என்று கூறி அவற்றை தடைசெய்ததும், அவற்றைத் தீயிட்டு அழித்ததும் அவர் செய்த மார்க்கத் துரோகமாகும்.
 
ஐங்காலத் தொழுகைக்காகவும் பாங்கு சொன்ன பிறகுநபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லும் வழக்கம் இருந்துவந்தது. இவர் இதையும் தடைசெய்ததுடன், இதற்கு மாறாகச் செயல்பட்டு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னவர்களைக் கொலை செய்தார்.
 
தனது கிராமத்துப்பள்ளி வாயலொன்றில் ஐங்காலத் தொழுகைக்காகவும் பாங்கு சொல்லிக் கொண்டிருந்த“முஅத்தின்” ஒருவரை பாங்கு சொல்லி முடிந்த பின் நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லவேண்டாம் என்று தடைசெயதார். அவர் விதித்த தடையை மீறி அவர் வழமைப்படி “ஸலவாத்” சொன்ன பொழுது அவரைக் கொலைசெய்தார்.
 
காத்தான்குடி பள்ளி வாயல்களில் தொழுது கொண்டிருந்த அப்பாவி மக்களை மிருகத்தனமாக சுட்டும், வெட்டியும் கொலைசெய்த பயங்கரக் காபிர்களை விடவும் கொடியவர்தான் நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்”சொன்னதற்காகப் பள்ளி முஅத்தினைப் படு கொலைசெய்த வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் பயங்கரவாதியாவார்.
 
விபச்சாரியின் வீட்டில்தங்குவது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்சொல்வதைவிடப் பாவம் குறைந்தது என்று சொல்லியுள்ளார்கள்.
 
வழிகேடரின் இக்கூற்று இஸ்லாத்தை முழுமையாகத் தகர்த்துவிடக் கூடிய ஒன்றாகும் இவருடைய இக்கூற்று போ ன்று இவருக்கு முன் வந்த வழிகேடர்களில் எவரும் செய்யவுமில்லை, சொல்லவுமில்லை.
 
தன்னை பின் பற்றினவர்களில் விரும்பினவர்கள் அவரவர் புத்திக்கும், விருப்பத்திற் கேற்றவாறும் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கலா மென்று இவர் சொன்னார்.
 
இவ்வாறு அவர் சொன்னவுடன் ஒன்றுமறியாதவெர்களெல்லாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
 
திருக்குர்ஆனை ஓதத்தெரியாதவர்கள் அதை ஓதத்தெரிந்தவர்களிடம் ஒதச் சொல்லி விட்டு அவர்கள் விளக்கம் கூறுவார்கள். இந்த அளவுக்கு திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் விவகாரம் மிக மோசமாகப் போய்விட்டது.
 
திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் திறமை தரமான இமாம் களுக்கு மட்டும்தான் உண்டு.திருக்குர்ஆன் அறபு மொழியில் இறக்கப்பட்டிருந்தாலுங்கூட அந்த மொழி தெரிந்தவர்களெல்லாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லிவிட முடியாது.
 
திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் ஒருவர் குறைந்த பட்சம் தப்ஸீர்கலை, ஹதீஸ்கலை, சட்டக்கலை, மொழியிலக்கணம், சொல்லிலக்கணம், இலக்கியம், வரலாறு, தர்க்கவியல் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவராயும் இவையல்லாத ஏனைய கலைகளில் அறிவுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
 
எனினுமந்த வழிகேடர் முஹம்மத் தனது ஆதரவாளர்களுக்கு அவரவரின் சிந்தனை அறிவிற்கேற்ப திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூறலாமென்று கூறியவுடன் எழுத வாசிக்கத்தெரியாதவர்களும், அறவே மார்க்க ஞானமில்லாதவர்களும் திருமறைக்கு விளக்கம் கூற முன்வந்தனர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments