Friday, May 17, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

தொடர் – 07

ஆதாரங்கள்

ஒன்று– அல்லாஹ் தஆலா ஆதம் அலை அவர்களைப் படைக்குமுன் அமரர்களிடம் ஒரு ​பேச்சுவார்த்தைநடத்தினான்.

அவர்களிடம்; ” நான் பூமியில் ஒரு ‘கலீபா’ பிரதிநிதியை ஆக்கப்போகிறேன் “என்று கூறினான்.

அதற்கவர்கள்; “நாங்கள் உன் புகழ் கொண்டு உன்னைத் ‘தஸ்பீஹ்’ செய்தவர்களாயும், உன்னைத் தூய்மைப் படுத்தினவர்களாயும் இருக்கும் போது குழப்பத்தையுண்டு பண்ணி இரத்தங்களை ஓட்டக்கூடியவர்களையா பூமியில் ஆக்கப் போகிறாய்” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ் தஆலா; “உங்களுக்குத் தெரியாதவை யெல்லாம் எனக்குத் தெருயுமென்று கூறினான். நபியே! அந்த நேரத்தை நீங்கள் நினைத்துப்பாருங்கள்.
திருக்குர்ஆன்:02 – 03

இந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் மனித இனத்தில் ஒருவன்கூடப் படைக்கப்பட்டிருக்கவில்லை. ஆதம் நபியும் இருக்கவில்லை. அண்ணல் நபியும் இருக்கவில்லை. அமரர்கள் மட்டுமே இருந்தனர்.

அல்லாஹ்வுக்கும் அமரர்களுக்கும் நடந்த அந்தச் சம்பவத்தை திருக்குர்ஆன் மூலம் நபியவர்களுக்குச் சொல்லிக் காட்டிய அல்லாஹ் “வஇத்கால றப்புக” என்ற வசனம் மூலம் நபியே அந்தச் சம்பவத்தை நினைத்துப்பாருங்கள். என்று கூறியுள்ளான்.

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய “முபஸ்ஸிரீன்”கள்“வஇத்கால” என்ற வசனத்துக்கு “வத்குர் இத்கால” அந்தச்  சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். என்று விளக்கம் எளுதியுள்ளார்கள்.

ஒருவனிடம் நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பார் என்று சொல்வதாயின் அவன் நடந்த அச்சம்பவத்தின் போது இருந்திருக்கவேண்டும்.

ஒரு சம்பவத்தில் கலந்து  கொள்ளாதவனிடமும், அச்சம்பவத்தின் போது ஆஜராகி இருக்காதவனிடமும் அதை நினைத்துப்பார் என்று சொல்ல முடியாது.

எனவே, இதிலிருந்து அச்சம்பவத்தின்போது அங்கு நபி (ஸல்) ஆஜராகியிருந்துள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

அவர்கள் முதல் சிருஷ்டியாயிருப்பதால் அவர்களுக்குப் பிறகு படைக்கப்பட்ட சிருஷ்டிகளுக்கு  நடந்த நடக்கின்ற சம்பவங்கள் அவர்களுக்குத் தெரியாமல்  போக முடியாது.

நபி (ஸல்) அவர்களுக்கு எதார்த்தமுமில்லை; பதார்த்த முமில்லை யென்றும்; அவர்களின்  வயது அறுபத்துமூன்றேயல்லாமல் வேறில்லையென்றும் தெருக்கூச்சலிடும் வஹ்ஹாபியர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இவர்கள் சொல்வது போல் கி.பி. 570ல் நபி (ஸல்) அவர்கள் பிறந்திருந்தால் அதற்கு முன் நடைபெற்ற சம்பவம் அவர்களுக்கு எவ்வாறு தெரிய வந்தது? அதை  நினைத்துப் பாருங்கள்ளென்றும் அல்லாஹ் அவர்களுக்குச் சொல்வதும் எவ்வாறு?

இரண்டு ஆதம் நபி (அலை) அவர்களுக்கு “ஸூஜூது” செய்யுமாறு நாம் அமரர்களுக்குச் சொன்னோம். அவர்கள்அனைவரும் “ஸூஜூது” செய்தனர். “இப்லீஸ்” என்றவனைத் தவிர. அவன் பெருமையடித்து மறுத்து விட்டான். அதனால் அவன் காபிராகி விட்டான். நபியே! இந்த வரலாற்றை நினைத்துப் பாருங்கள்.
திருக்குர்ஆன்:  02-24

இச்சம்பவம் நிகழ்ந்து நேரத்தில் மனுக்குலத்தில்முதல் மனிதன் நபி ஆதம் (அலை) அவர்கள் மட்டும் தான் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களும் இருக்கவில்லை. வேறெந்த மனிதனும் இருக்கவில்லை.

இச்சம்பவத்தை திருக்குர்ஆன் வாயிலாக நபி (ஸல்) அவர்களுக்குச் சொல்லிக் காட்டிய அல்லாஹ், “நபியே! அச்சம்பவத்தை நினைத்துப் பாருங்களென்று கூறியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள்  கி.பி. 570ல் தான் பிறந்தார்கள்.அதற்குமுன் அவர்களுமிருக்கவில்லை. அவர்களின் ஒளியிருக்கவு மில்லையென்று கூறும் மூடர்கள் மேற்குறித்த திருமறை வசனங்கள் பற்றி நன்கு சிந்திக்க வேண்டும்.

குறித்த செம்பவம் நிகழ்ந்த நேரத்தில் நபி ஸல் அவர்கள் இருந்த தினால்தான் அதை நினைத்துப் பாருங்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

மூன்றுநபி மூஸா (அலை) அவர்கள் தங்களின் கூட்டத்தாரிடம் நீங்கள் காளை மாட்டை தெய்வமாக ஆக்கிக் கொண்டதினால், நீங்கள் உங்களுக்கு அநீதி செய்து கொண்டீர்கள். எனவே உங்களுடைய இறைவனளவில் மீளுங்கள்.“தவ்பாச் செய்யுங்கள்”  உங்கள் நப்ஸுகளைக் கொலைசெய்யுங்கள். உங்களின் இறைவனிடம் அதுதான் சிறந்தது. அவன் உங்களை மன்னித்துக் கொள்வான். அவ் இரக்கமுடையோனும், பாவத்தை மன்னிப்பவனுமாவான் என்று சொன்னதை நபியே நீங்கள் நினைத்துப்பாருங்கள்.
திருக்குர்ஆன்02–54

நபி மூஸா (அலை) அவர்கள் தூர்ஸீனா எனும் மலைக்கு அல்லாஹ்வுடன் வசனிப்பதற்குச் சென்ற பொழுத, தங்களின் தம்பி ஹாரூன் (அலை)அவர்களைத் தங்களின் இடதில் அமர்த்தி விட்டுப் போனார்கள்.

நாற்பது நாட்கள் கழித்து நபி மூஸா (அலை) அவர்கள் திரும்பி வந்த பொழுது, தங்களின் கூட்டத்தவர்கள் காளை மாட்டை வணங்கிக் கொண்டிருந்தது கண்டு வேதனை அடைந்தவர்களாக மேற்கண்டவாறு கூறினார்கள்.

இந்தச் சம்பவத்தை திருக்குர்ஆன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குச் சொல்லிக்காட்டிய அல்லாஹ் “நபியே! அச்சம்பவத்தை நினைத்துப் பாருங்களென்று கூறியுள்ளான்.

இதிலிருந்து இச்சம்பவத்தின் போதும்  நபி (ஸல்) அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இவை போன்ற இன்னும் பல ஆதாரங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. விரிவையஞ்சி அவற்றை விட்டு விட்டேன்.

அண்ணல் நபியின் வயது அறுபத்து மூனறல்ல என்ற தலைப்பு இதுவரை நான் கூறிவந்த ஆதாரங்கள் மூலமும், விவரங்கள் மூலமும் படைப்பு வெளியான காலத்திலிருந்தே நபி (ஸல்) அவர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களின் வயதை எவராலும் எத்தனையென்று மட்டிட்டுக் கூற இயலாது. அவர்கள் தாயின் வயிற்றிலிருநது கி.பி. 570ல்  இவ்வுலகில் வெளியாகினாலும் கூட அவர்களுக்கு முன்தோன்றிய அனைத்து நபிமார்களுக்கும் நடந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் அவர்களும் பங்கு பற்றியுள்ளார்கள் என்பன போன்ற உண்மைகள் தெளிவாகிவிட்டன.

நபி (ஸல்) அவர்கள்  கி.பி. 570பிறந்தவர்களேயன்றி அவர்களுக்கு எதார்த்தமுமில்லை, பதார்த்தமுமில்லை என்று அர்த்தமில்லாமல் கூறுவோர்களின் வலையில் மாட்டி ஈமானை இழந்து விட வேண்டாமென்று முஸ்லிம் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலே எழுதிக்காட்டிய வரலாறும் நபி(ஸல்) அவர்கள் நம்போன்ற மனிதனல்லை என்பதை தெளிவாக விளக்குகிறது.

மன்னர் நபியும் மறைவான செய்தியும்:

எழுதுவதற்கு எத்தனையோ தலைப்புக்கள் இருக்க இப்படியொரு தலைப்பை தெரிவு செய்தது வால் முறுக்குவோரின் வாலை ஒட்ட நறுக்குவதற்கேயாகும்.

ஏனெனில் இவர்கள் இஸ்லாம் அனுமதித்த எத்தனையோ விஷயங்களைக் கூடாதென்று சொல்லி வருவதுபோல் நபிமார்களுக்கும், வலிமார்களுக்கும் “இல்முல்கைப்” எனப்படும்மறைவான செய்திகளும் மறைந்துள்ள விஷயங்களும் பற்றிய அறிவுகளும் இல்லையென்று சொல்லி வருகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு கூறும் கருத்துக்கள் உண்மைக்கு மாறான முழுப்  பொய்யாக இருந்தாலும் கூட அவை காட்டுத் தீ பரவுவதுபோல் வெகு வேகமாக நாடெங்கும் பரவி விடுகிறது. இதனிமித்தம் பாமர மக்கள் மிக எளிதாக அத்தீயவர்களின் கருத்துக்களை நம்பி வழிகேட்டிலாகி விடுகின்றனர்.

இதற்குக் காரணம் இவர்களின் வெளிவேஷமேயன்றி  வேறொன்றுமில்லை. தமது கருத்துக்களை மக்கள் நம்பிவிட வேண்டு மென்பதற்காக இவர்கள் கண்டுபிடித்துள்ள ஒரேயொரு ஆயுதம் வெளிவேஷம் ஒன்றுமட்டும்தான்.

ஒருவன் வெறும் வெங்காயமாக இருப்பான். அவனுக்கு ஆனாவும் தெருந்திருக்காது. அலிபும் தெருந்திருக்காது, எழுத வாசிக்கவும்  தெருந்திருக்காது, அரசியலும் தெருந்திருக்காது, ஆன்மீகமும் தெருந்திருக்காது, குறைந்த பட்சம் தனது தாய் மொழியில் கூட பேசத் தெரிந்திருக்காது.

“அவாம்” எனும்பாமரனின் மன நிலைக்கும், படித்தவர்களின் மன நிலைக்கும், வித்தியாச முண்டு.படித்தவன், ஒருவனின் உடலைக் கொண்டோ, அல்லது அவனின் உடையைக் கொண்டோ, அவனின் அறிவைக் கவனிக்க மாட்டான். எனினும் அவனுடன் சில மணிநேரம் உரையாடுவது கொண்டும், அவனின் அறிவை அளந்து பார்ப்பது கொண்டும் அவனை எடை போடுவான். இது படித்தவர்களின் நிலை.

அவனின் அந்தரங்கம் புரியாத அப்பாவி அவாம்கள் அவனிடம் திருமறைக்கும், திரு நபியின் நிறைமொழிக்கும் விளக்கம் கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் தெரியா தென்றால் பட்டம் பறந்து விடுமென்றும், தனது வேடத்திற்கு மதிப்பில்லாமற் போய் விடுமென்று பயந்து தான் நினைத்தவாறெல்லாம் மார்க்கச் சட்டம் சொல்வதற்கும், திருக்குர்ஆன் விளக்கம் கொடுப்பதற்கும் துணிந்து விடுகிறான்.

இப்படியான விளையாட்டுக்களைத் தீனுடைய “கித்மத்” செய்பவர்களிடம் காணலாம்.

எனவே இத்தகையவரின் வஷப்பற்களை பிடிங்கியெறிந்து இவர்களின் வண்டவாளங்களை வையகத்தில் வெளிப்படுத்தி வைக்கும் நோக்கத்திலே தான் இதை எழுதினேன்.

இல்முல்கைப்

இத்தலைப்புக்கு முந்தின  “அண்ணலின் வயது அறுபத்து மூன்றல்ல” என்ற தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் காலத்தில் இருந்தார்களென்றும், அதனால் அந்த நபிமார்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் அவர்களுக்குத் தெரியுமென்றும் எழுதியுள்ளேன்.

“இல்முல்கைப்” என்ற இத்தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் காலத்தில் இருக்கவில்லை யென்றும், அதனால் அவர்களுக்கு அந்த நபிமார்களுக்கு நடந்த சம்பவங்களை எல்லாம் “வஹி” மூலம் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான் என்று எழுதியுள்ளேன்.

இவ்விரு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் போல் வாசகர்களுக்குத் தென்படும் என்று நான் எண்ணுகிறேன். அவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாமல் “அண்ணலின் வயது அறுபத்து மூன்றல்ல” என்ற தலைப்பில் நான் எழுதிய விஷயம் “அல் ஹகீகதுல் முஹம்மதிய்யஹ்”என்னும் நபி(ஸல்) அவர்களின் அகமியத்தையும், எதார்த்தத்தையும் கருதி எழுதிய தென்றும்“இல்முல் கைப்” என்ற தலைப்பில் எழுதிய விஷயம் நபி (ஸல்) அவர்கள் தாயின் வயிற்றிலிருந்துகி.பி. 570ல் பிறந்தார்கள் என்றதைக்கவனித்து எழுதிய தென்றும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் அகமியத்தையும், எதார்த்தத்தையும் பொறுத்து அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் காலத்தில் இருந்து அவர்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் அறிந்தார்களென்றும், அவர்களின் திருவுடல் ஆமினாவின் வயிற்றிலிருந்து வெளியானதைப் பொறுத்து அவர்கள் அந்நேரம் இருக்கவில்லையென்றும, அதனால் “வஹீ” மூலம் அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்றும் கருத்துக்கொள்ளுதல் வேண்டும்.

அல்லாஹ் தவிர வேறு யாருக்கும் “இல்முல் கைப்” எனும் மறைவான செய்தியொன்றும் தெரியாதென்றும், ஒரு நபிக்கோ அல்லது ஒரு வலிக்கோ அது தெரியுமென்று சொல்வது “ஷிர்க்” இனைவைத்தலாகுமென்றும் வழிகேடர்களான வஹ்ஹாபிகளும், அவர்களின் வாடைபட்ட உலமாக்களும் கூறிவருகின்றனர்.

“இல்முல் கைப்” எனும்மறைவானசெய்திகள் பற்றிய அறிவு இருவகைப்படும். ஒன்று –“தாதீ” என்றும், மற்றது “அதாயீ” என்றும் சொல்லப்படும்.

“தாதீ” என்றால்அது அவனுக்கு  இன்னொருவரால் வழங்கப்படாமல் அவனிலேயே சுயமாக உள்ள தனக்குத் தானான அறிவாகும். இதுதான் “தாதீ” என்றழைக்கப்படும். இவ்வகை அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பதால் அவனின் சிருஷ்டிகளில் எந்த ஒரு சிருஷ்டிக்குமே இவ்வகை அறிவு இருக்காது. இருக்கவும் முடியாது. அவ்வாறிப்பது அசாத்தியமானதாகும்.

சிருஷ்டிகளுக்கு இல்முல்கைப் மறைவான செய்திகள் தெரியுமென்று நம்புவது “ஷிர்க்” இனைவைத்தலை ஏற்படுத்தாது. ஆனால் “தாதீ” என்ற சுயமான அறிவு உண்டென நம்புதல் “ஷிர்க்” எனும் இனைவைத்தலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நம்பினவன் சந்தேகமின்றி “முஷ்ரிக்” இணைவைத்தவனாக விடுவான்.

ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான அம்சங்களில் ஒன்று சிருஷ்டிகளுக்கு உண்டென்று நம்புதலானது பொதுவாக “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றேயாகும்.

“அதாயீ”என்றால் அல்லாஹ்வினால் ஒருவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக்குறிக்கும்.

நபிமார்களினதும், றஸூல்மார்களினதும் வலிமார்களினதும் அறிவுகள்அவரவர்களின் தராதரத்தைப் பொறுத்துச் சக்தி கூடியதாகவும் குறைந்ததாகவுமிருந்தாலும் அவர்கள் அனைவரின் அறிவும் “அதாயீ” என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.அதாவது அல்லாஹ்வினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுகளேயன்றி அவர்களின் சுயமாக உண்டான “தாதீ” அல்ல.

நபிகட்கரசர் முஹம்மத் (ஸல்) அவர்களாயிருந்தாலும், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களாயிருந்தாலும், ஞானிகட்கரசர் இப்னு அறபியாக இருந்தாலும், “முபஸ்ஸிரீன்” களின் தலைவர் இப்னு அப்பாஸாக இருந்தாலும் அவர்கள் அனைவரின் அறிவும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட “அதாயீ” யான அறிவே யன்றி அவர்களில் சுயமாக உண்டான “தாதீ” யான அறிவல்ல.

அல்லாஹ் தவிர வேறொருவருக்கும் “இல்முல்கைப்” என்னும் மறைவான செய்திகள் பற்றிய அறிவு இருக்கின்தென்று நம்புதல் “ஷிர்க்” இணைவைத்தல் என்ற​ வழிகேடர்கள் சொல்வதற்குக் காரணம் மேலே நான் விவரித்துக் கூறியுள்ள “தாதீ – அதாயீ” எனும் இருவகை அறிவுகள் பற்றிய விளக்கம் அவர்களுக்கு இல்லாமலிருப்பதேயாகும்.

நபிமார்களும், வலீமார்களும் “இல்முல்கைப்” எனும் மறைவான செய்திகள் பற்றிய அறிவுள்ளவர்களென்று ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடையோர் கூறுவதாலும், நம்புவதாலும் நபிமார்களுக்கும் அவ்லியாக்களுக்கும் “தாதீ” எனும் சுயமான அறிவு உண்டென்ற கருத்து ஒருபோதும் வந்துவிடாது. மேலும் இவ்வாறு கூறுவதாலும், நம்புவதாலும் வழிகேடர்கள்சொல்வது போல்  “ஷிர்க்” எனும் நிலையும் உருவாகிவிடமாட்டாது.

ஏனெனில் “ஸுன்னத்வல்ஜமாஅத்” கொள்கையுடையோரில் எவருமே நபிமார்களுக்கும், வலிமார்களுக்கும் “தாதீ” சுயமான அறிவு உண்டென்று சொன்னதும் கிடையாது, நம்பியதும் கிடையாது.

மறைவான செய்திகளை நபிமார்களும் அறிவார்களென்ற விபரத்தைப் பின்னால் எழுதுகிறேன்.

மறைவான செய்தியை அல்லாஹ் அறிவதற்கும், நபிமார்கள், வலிமார்கள் அறிவதற்குமிடையில் வேறுபாடு உண்டு. அல்லாஹ் ஒரு செய்தியை சுயமாக அறிந்து கொள்வான். அதாவது அது பற்றிய அறிவு அவனில் சுயமானதாகவே இருக்கும். அது அவனுக்கு இன்னொருவரால் வழங்கப்பட்டதாக இருக்காது.

ஆனால் நபிமார்களும், வலிமார்களும் அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பது கொண்டே மறைவான செய்திகளை அறிந்து மக்களுக்குச் சொல்கிறார்கள். அவர்கள் “அதாயீ” என்ற அடிப்படையில் மறைவான செய்திகளை அறிகிறார்களே யன்றி அல்லாஹ் அறிவதைப் போல் “தாதீ” என்ற வகையிலில்லை.

“அதாயீ” என்ற அடிப்படையில் வலிமார்கள் மறைவான செய்திகளை அறிவார்கள் என்பதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளன. விரிவையஞ்சி விட்டுவிட்டேன். மேலதிக விபரம் தேவையானோர் எனது “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலைப் பார்த்துக்  கொள்ளவும், எனினும் சுருக்கமாக இங்கு எழுதுகிறேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments