Saturday, May 4, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் –03  

 
நாலாவதுஅம்சம் – மௌலித் ஓதுவதிலுள்ள நாலாவது அம்சம் அங்குகலந்து கொள்பவருக்கு சாப்பாடு இனிப்புப்பண்டங்கள் பழவகைகள் வழங்குதலாகும். 
 
மனிதர்களுக்கு சாப்பாடு வழங்குவது ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்டதா? இல்லையா? என்று ஆராய்ந்தறியத்தேவையில்லை. இதற்கு ஆதாரம்கூறவேண்டிய அவசியமும் இல்லை. மனிதா்களுக்கோ மிருகங்களுக்கோ உணவுவழங்குவது நல்லகாரியமென்பது சுருதிப்பிரமாணங்கள் மூலமும் யுக்திப் பிரமாணங்கள் மூலமும் எல்லோராலும் பகிரங்கமாக அறியப்பட்டவிடயமாகும். மாற்று மதத்தினர் கூட இது நல்லகாரியமென்றே சொல்வார்கள். 
 
ஐந்தாவது அம்சம் – மௌலித் ஓதுவதிலுள்ள ஐந்தாவது அம்சம் அதில் கலந்துகொள்ளும்மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதாகும். 
 
இந்த அம்சமும் நாலாவது அம்சம்போல் இ்ஸ்லாம் வரவேற்கும் அம்சமேயன்றி எந்த வகையிலும் ஷரீஅத்துக்கு முரணானதல்ல. இதையும் ஆதாரங்கள் கூறி நிறுவத்தேவையில்லை. 
 
எனவே மௌலித் ஓதுவதிலுள்ள ஐந்துஅ ம்சங்களில் ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வுசெய்தால் ஐந்து அம்சங்களும் இஸ்லாம் அனுமதித்த திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் அதாரமுள்ள அம்சங்களென்பது தெளிவாகும். 
 
ஆகையால் இஸ்லாம் அனுமதித்த ஐந்து அம்சங்கள் கொண்ட மௌலித் ஓதுதல் என்பது எந்தவகையிலும் இஸ்லாமிய ஷரீஅத்துக்கு முரணானதல்ல 
என்பது தெளிவான விடயமாகும். 
 
மூதேவியே!
 
மௌலித் ஓதுவதற்குத் திருக்குர்ஆனிலிருந்தும் நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரம் கேட்கும் நீ முன்பு நான் சொன்ன ஐந்து அம்சங்களில் ஒவ்வொன்றையும் உனது கவனத்திற்கெடுத்து ”ஷரீஅத்” என்ற தராசில் நிறுத்துப்பார். குர்ஆன்ஹதீது என்ற உரைகல்லில் உரைத்துப்பார். அவற்றில் எது ஷரீஅத்துக்கு முரணானதோ அதைவிட்டுவிடு. அவற்றில் ஒன்றுகூட அதற்கு முரணாகவில்லையானால் அனைத்தையும்செய். அதாவது மௌலித் ஓது. எ ல்லா அம்சங்களுமே முரணானதாயிருந்தால் மௌலிது ஓதுவதை நிறுத்து. 
 
மூதேவி: மௌலித் ஓதுவதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் தெளிவான, நேரடியான ஆதாரம்உண்டா?சுற்றிவளைக்காமல் நேரடியான ஆதாரமிருந்தால் கூறு. 
 
சீதேவி: திருக்குர்ஆனிலும்,ந பீமொழிகளிலும் تجوز قراءة المولد மௌலித் ஓதுவது ஆகுமென்று தெளிவாக வந்துள்ளதா? என்றுதானே நீ கேட்கிறாய். உன்னுடைய இக்கேள்வி வட்டிலப்பம் சாப்பிடுவதற்கும்பு ரியாணிசாப்பிடுவதற்கும் திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் தெளிவான நேரடியான ஆதாரம்உண்டா? என்று கேட்ப துபோலிருக்கிறது. மேற்கண்ட இரண்டும் சாப்பிடலாமென்பதற்கு திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் தெளிவான நேரடியான ஆதாரமுண்டா? என்று நான் உன்னிடம்கேட்கிறேன். உன்னால் ஆதாரம்கூற முடியுமா? உன்னால் கூறமுடியாது போனாலும் உன்னுடைய இந்திய முஜத்திதாலேனும் கூறமுடியுமா?நீயோ அவரோ திருக்குர்ஆனையும் நபீ மொழிகளையும், எவ்வளவுதான் ஆழமாக ஆராய்ந்தாலும் மேற்கண்ட இரண்டையும் சாப்பிடலாம்எ ன்பதற்கு தெளிவான நேரடியான ஆதாரம் காணவே முடியாதென்பதைப் புரிந்துகொள். இவ்விரண்டும் சாப்பிடலாமென்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ ஆதாரம் இல்லவே இல்லை. இவற்றைச் சாப்பிடலாமென்பதற்கு இவ்விரண்டிலும் தெளிவான, நேரடியான ஆதாரம் இல்லாதிருந்தும் அவற்றை நீயும் சாப்பிடுகிறாய். அவரும் சாப்பிடுகிறார்.. ஆனால் மௌலித் ஓதும் விடயத்தில் மட்டும் நீயும் ஆதாரம் கேட்கிறாய். அவரும் ஆதாரம் கேட்கிறார். ஆனால் வட்டிலப்பம் , புரியாணிசாப்பிடும் விடயத்தில் நீயும் மௌனியாகஇருக்கிறாய். அவரும் மௌனியாக இருக்கிறார். ஏன்இந்தநிலை! 
 
மூதேவியே! ஒன்றைத் தூயமனதோடு விளங்கிக்கொள். அதாவது வட்டிலப்பம் என்பது ஓர் இனிப்பான பண்டம். இது சீனி, பால், முட்டை போன்றவற்றால் செய்யப்படுவது. இம்மூன்றும் சேர்ந்ததே வட்டிலப்பம் எனப்படும். இம்மூன்றும் சாப்பிடுவது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டவையாயிருப்பதால் இவை கொண்டு தயாரிக்கப்பட்டதும் ஆகுமானதே. எனவே வட்டிலப்பம் சாப்பிடலாம் என்பதற்கு திருக்குர்ஆனிலோ நபீ மொழிகளிலோ ஆதாரம் தேடத்தேவையில்லை. இவ்வாறுதான் புரியாணியின் கதையுமாகும். புரியாணிஎன்பதுஅரிசி, இறைச்சி, இஞ்சி, மிளகாய் போன்றவற்றால் செய்யப்படுவதாகும். இவையாவும் சேர்ந்ததே புரியாணி எனப்படும். இவையாவும் சாப்பிடுவது மார்க்கத்தில் ஆகுமாக்கபட்டவையாயிருப்பதால் இவை கொண்டு தயாரிக்கப்பட்ட புரியாணி சாப்பிடுவது ஆகுமானதே. ஆகையால் புரியாணிசாப்பிடுவது ஆகுமென்பதற்கு திருக்குர்ஆனிலோ நபீ மொழிகளிலோ ஆதாரம்தேடத் தேவையில்லை. தேடினாலும் கூட புரியாணிசாப்பிடுவது ஆகுமென்று தெளிவான ஆதாரம்காணமுடியாது. வட்டிலப்பம், புரியாணி என்பதற்கான அறபுச் சொற்கள் குர்ஆனிலும், ஹதீதிலும் வரவே இல்லை. 
 
எனவே, மௌலித் ஓதுவது ஆகுமென்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ தெளிவான ஆதாரமுண்டா? எனக்கேட்டு அடம்பிடிப்பது அறியாமையாகும். அல்லது பிடிவாதமாகும். வாதத்துக்கு மருந்தும், மருத்துவமனையும் உண்டு. ஆனால் பிடிவாதத்திற்கு அல்லாஹ்வின்பிடியே மருந்து. 
إن بطش ربك لشديد 
 
பலவஸ்த்துக்கள்கொண்டுதயாரிக்கப்பட்டஒன்றுக்குவட்டிலப்பம்என்றும்புரியாணிஎன்றும்சொல்லப்படுவதுபோல்நான்முன்புசொன்னஐந்துஅம்சங்கள்கொண்டஒன்றுக்குமௌலித்என்றுசொல்லப்படுமென்பதைநீதெரிந்துகொண்டாய். 
 
மூதேவி:நமது உரையாடலுக்கிடையில் ஒரு குறுக்குக் கேள்வி கேட்க வேண்டும் போல் தோணுகிறது. கேட்கலாமா? 
 
சீதேவி:குறுக்குக் கேள்வியோ, முறுக்குக் கேள்வியோ எந்தக் கேள்வியாயினும் அதற்கு விடை உண்டு. கேள். தாராளமாகக் கேள். ஏராளமாகவும் கேள். 
 
மூதேவி:சமீபத்தில் நமதூரான காத்தான்குடியில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியானது. அதை இந்திய “முஜத்தித்” அவர்களின் கொள்கை வழி வாழும் என்னுடைய நண்பர்கள் வெளியிட்டிருந்தார்கள். அதில் மௌலித் ஓதலாம் என்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் தெளிவான நேரடியான ஆதாரம் காட்டினால் இரண்டு மில்லியன் ரூபா தருவதாகக் கூறப்பட்டிருந்ததே! நீ ஒன்றும் கூறாமல் மௌனியாக இருந்ததேன். மௌலித் ஓதுவது பற்றி இப்படி விரிவான விளக்கம் கொடுக்கும் நீ அந்த பிரசுரத்துக்குப் பதிலடி கொடுத்து இரண்டு மில்லியனையும் கைப்பற்றியிருக்கலாமல்லவா? 
 
சீதேவி: இரண்டு மில்லியன் அல்ல. இரண்டு பில்லியன் தருவதாக அவர்ககள் சொல்லியிருந்தாலும் கூட நான் அதற்கு பதில் கொடுத்திருக்கமாட்டேன். காரணம். ஒன்று அவர்கள் போல் எனக்கு பணவாசை இல்லை. இரண்டு السكوت عن الجاهل جوابه மடையன் கேட்கும் கேள்விக்கு விடை சொல்லாமல் மௌனமாயிருப்பதே அவனுக்கு விடை. இவ்விரு காரணங்களினாலுமே நான் விடை கூறவில்லை. 
 
மூதேவி:மௌலித் ஓதுவதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் தெளிவான, நேரடியான ஆதாரம் கேட்பவன் மடையனா? 
 
சீதேவி: அவன் மடையன் மட்டுமல்ல பைத்தியகாரனும் கூட ஏன் தெரியுமா? துரியான் பழம் சாப்பிடலாம், பலாப்பழம் சாப்பிடலாம், பெட்டிஸ் சாப்பிடலாம், கட்லட் சாப்பிடலாம், சிக்னல் கொண்டு பல் துலக்கலாம், லக்ஸ் சோப் பாவிக்கலாம், மொபைல் பாவிக்கலாம் என்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ தெளிவானதும், நேரடியானதுமான ஆதாரம் இல்லவே இல்லை. மேற்கண்ட இவ்வஸ்துக்களின் பெயர் குறிப்பிட்டு திருக்குர்ஆன் வசனம் வரவுமில்லை. நபீ மொழிகள் வரவுமில்லை. ஆகையால் மேற்கண்டவை சாப்பிடலாம், பாவிக்கலாம் என்பதற்குத் திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீதுகளிலிருந்தும் நேரடியான ஆதாரம் கேட்பவன் மடையனா? புத்திக்காரனா? பைத்தியக்காரனா? 
 
மூதேவி: நீ சொல்வது சரிதான். இப்போதுதான் அவ்வாறு கேள்வி கேட்பவன் கல்லாத வம்பன், பொல்லாத வம்பன், அறிவில்லா வம்பன். ஒரு காசும் பெறாத வம்பன் என்பது எனக்கு விளங்குகிறது. அல்ஹம்துலில்லாஹ். எனக்கு ஒரு சந்தேகம். மௌலித் ஓதுவது கூடாது என்று சொல்லாவிட்டாலும் அதற்கு பதிலாக அது ஓதும் நேரத்தில் திருக்குர்ஆன் ஓதுவது சிறந்ததென்று நினைக்கின்றேன். ஆகையால் சிறப்புக் குறைந்ததை செய்வதை விடச் சிறப்புக் கூடியதைச் செய்வது நல்லதல்லவா? 
 
சீதேவி: நீ நல்லவன் தான். ஆனால் உனது மூளையைச் சற்று சலவை செய்யவேண்டும் போல்எ னக்குத் தோணுகிறது. திருக்குர்ஆன் ஓதுவதைவிட மௌலித் ஓதுவது சிறப்புக்குறைந்ததென்று உனக்குச் சொல்லித்தந்தது யார்? நீயாகக் கற்பனை செய்து சொல்கிறாயா? அல்லது யாராவது உனக்கு சொல்லித்தந்தாரா? 
 
மூதேவி: மௌலவீமார்கள் பள்ளிவாயல்களில் அவ்வாறு பயான் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். 
 
சீதேவி: நீ பொய் சொல்லவில்லை. கேட்டுத்தானிருப்பாய். ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல. சிவப்பெல்லாம் நெருப்பல்ல என்பது உனக்குப் புரியாதா? 
 
மூதேவி: சரி சொல்லு. புரிகிறது. கி.பி 570ம் ஆண்டு நபீ ஸல் அவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு கிப்லாவுக்குப் பின்னால் பிறந்தார்கள் என்று விளக்கம் சொன்ன ஒரு மௌலவீயையும் நான் கண்டுதான் இருக்கிறேன். 
 
சீதேவி: நீ சொல்வது போல் சிறப்புக் குறைந்ததைச் செய்யாமல் சிறப்புக் கூடியதைச் செய்ய வேண்டுமென்று யாரோ ஒரு ஸாஹிபு பேசியதைக் கேட்ட சில பள்ளிவாயல் நிர்வாகிகள் நமதூரில் மௌலித் ஓதாமல் அதற்கு பதிலாக குர்ஆன் ஓதி இருக்கிறார்கள். இந்த விடயத்துக்கு விரிவான விளக்கம் கூறி உன்னைத் திருப்திப்படுத்த முடியும். ஆயினும் குறுகிய நேர இச்சந்திப்பில் விரிவான விளக்கம் கூற முடியவில்லை. மெளலித் தொடர்பாக ஒரு நூல் விளக்கமாக எழுத நான் நாடியுள்ளேன். அதில் விரிவான விளக்கம் பெற்றுக் கொள். இங்கு சுருக்கமாகச் சொல்கிறேன். செவிமடு. செயல்படு. திருக் குர்ஆன் ஓதுவதிலும், மௌலித் ஓதுவதிலும் எது சிறப்புக் கூடியது? எது சிறப்புக் குறைந்தது? என்று நீ சிந்திக்காமல் இரண்டையும் செய்வதே சிறப்பு என்ற முடிவுக்கு வா. மௌலிதும் ஓது. குர்ஆனும் ஓது. மௌலித் என்பது எல்லா நேரமும் எல்லா நாளும் ஓத வேண்டிய ஒன்றல்ல. முஹ்யித்தீன் மௌலித் என்பது வருடத்தில் ஒரு தரம் அவர்களின் நினைவு தினத்தில் ஓதப்படுகின்ற ஒன்று. ஸுப்ஹான மௌலித் என்பது நபீ ஸல் அவர்கள் பிறந்த மாதம் ஓதப்படுகின்ற ஒன்று. புர்தஹ் என்பது வாரத்தில் ஒரு தரம் ஓதப்படுகின்ற ஒன்று. வித்ரிய்யஹ் என்பது வருடத்தில் ஒரு தரம் ஓதப்படுகின்ற ஒன்று. ஆனால் திருக்குர்ஆன் இவ்வாறானதல்ல. அது எல்லாக் காலமும், எல்லா நேரமும் ஓதப்படுகின்ற ஓதப்பட வேண்டிய ஒன்று. ஆகையால் எது சிறப்புக் கூடியது எது சிறப்புக் குறைந்தது என்று ஆராய்ந்து சிறப்புக் கூடியதை மட்டும் செய்ய வேண்டும் மற்றதை விட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்யாமல் இரண்டையும் செய்வதே சிறந்ததாகும். குர்ஆன் ஓதுதல், ஸலவாத் சொல்லுதல் திக்று செய்தல் இம்மூன்றில் எது சிறப்புக் கூடியதென்று ஆராய்ந்து அதை மடடும் செய்து கொண்டிருக்காமல் மூன்றையும் செய்ய வேண்டும். 
 
திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ திருக்குர்ஆனை ஓதுவது மட்டும் ஏனைய நல்லமல்களை விடச் சிறந்ததென்று சொல்லப்படவில்லை. திருக்குர்ஆன் ஓதுதல் ஒரு வகையில் சிறந்தது. திக்ர் செய்தல் இன்னொரு வகையில் சிறந்தது. ஸலவாத் சொல்லுதல் பிறிதொரு வகையில் சிறந்தது. பொதுவாக எல்லா அமல்களும் சிறப்புள்ளவைதான். சிறப்புக் கூடியதை மட்டுமே செய்ய வேண்டுமென்று ஒரு நியதி இருக்குமாயின் ஒருவன் அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதும். அதோடு ஏனைய அமல்கள் மார்க்கமாக்கப்பட்டிருக்கவும் தேவையில்லை. 
 
திருக்குர்ஆன் ஓதுவதால் கிடைக்கின்ற நன்மை பற்றிக் கூறிய நபீ ஸல் அவர்கள் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மையுண்டு என்று சொல்லியுள்ளார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளதால், ஓர் எழுத்துக்குப் பத்துக்குக் குறையாத நன்மைகிடைக்குமென்பதைப் புரிந்து கொள்ளவேண்டுமே தவிர திக்று, ஸலவாத், ஸுன்னத்ஆன தொழுகை போன்ற வணங்கக்களுக்கு பத்துக்கும் குறைந்த நன்மையே கிடைக்கும் என்ற கருத்தைப் புரிந்து கொள்ளக்கூடாது. 
 
மௌலித் ஓதுதல் என்பது ஒரு நபீயை, அல்லது ஒரு வலீயைப் புகழ்வதாயும், அவரின் வாழ்க்கை வரலாறைச் சொல்வதாயுமிருப்பதால் ஒரு வகையில் மௌலித் ஓதுவதால் திருக்குர்ஆன் ஓதுவதற்கு சமமான நன்மை கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. அல்லது அதை விடக்கூடுதலான நன்மை கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. ஒருவன் முசம்மில் என்பவனைப் புகழ்வதால் அவனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியை விட முசம்மிலின் அன்புக்குரிய மனைவியைப் புகழ்வதால் முசம்மிலுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுவதுமுண்டு. 
 
ஆகையினால் மௌலித் ஓதுவது சிறப்புக்கூடியதா?திருக்குர்ஆன் ஓதுவது சிறப்புக்கூடியதா? என்று சிந்திக்காமல் இரண்டையும் செய்வதே சிறந்தது. 
 
கி-பி.க்கு விளக்கம் தெரியாதலபனுக்கும் – லபினுக்கும் வித்தியாசம் புரியாத ஒரு சில மௌலவீமார் சொல்வது போல் எல்லாவணக்கங்களை விடவும் திருக்குர்ஆன் ஓதுவதேசி றந்ததென்றிருந்தால் ஸலவாத் சொல்லுங்கள், திக்று செய்யுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கத் தேவையில்லை. மூதேவியே விஷயம் புரிகிறதா?. 
 
மூதேவி: ஆம் புரிகிறது. உண்மை விளக்கம் இவ்வாறிருக்க ஒரு சில மௌலவீமார் இதற்கு மாற்றமாகக் கூறுவதேன். 
 
சீதேவி: ஒன்றோ அறியாமையின் வெளிப்பாடு. அல்லது மின்னல் ஹபீப் கொடுக்கும் போதையின் உளறல். அவ்வளவுதான். 
 
மூதேவி: இன்னொரு சந்தேகம். மௌலித் என்பது நபீ (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ செய்யாத ஒன்றாயிருப்பதால் அது பித்அத் ஆகாதா? பித்அத் எல்லாம் வழிகேடு என்ற கருத்தின் படி அது வழிகேடாகாதா?வழிகேடெல்லாம் நரகத்திற்குரியவை என்ற கூற்றின் படி மௌலித் ஓதுதல் நரகத்திற்குரிய செயலாகாதா? 
 
சீதேவி: இது கேட்க வேண்டிய கேள்விதான். 
 
كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة فى النار 
 
இப்படியொரு சரியான நபீ மொழி இருப்பதும் உண்மைதான். இந்த நபீ மொழிக்கு விளக்கம் சொல்லுமுன் ஒரு விடயத்தை உனது சிந்தனைக்கு தருகிறேன். மௌலித் என்பது ஒருவரைப் புகழ்வதும் அவரின் வாழ்க்கை வரலாறை எடுத்துரைப்பதுமென்ற அடிப்படையில் திருக்குர்ஆன் ஓதுவதும் ஒரு வகையில் மௌலித் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆனில் நபீமார், வலீமார்களைப் புகழ்ந்துள்ளான். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்தியம்பியுள்ளான். இந்த அடிப்படையில் திருக்குர்ஆனும் ஒரு வகையில் மௌலித் என்பதை தெளிவான அறிவுள்ள எவரும் மறுக்க மாட்டார். இந்த விளக்கத்தின் படி திருக்குர்ஆன் ஓதுகின்ற அனைவரும் மௌலித் ஓதுகின்றார்கள் என்று முடிவு செய்ய வேண்டும். நபீ ஸல் அவர்கள் திருக்குர்ஆன் ஓதினார்களா? இல்லையா? ஓதினார்கள் என்று நீ ஏற்றுக்கொண்டால் அவர்களும் மௌலித் ஓதியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸஹாபாக்கள் திருக்குர்ஆன் ஓதியிருப்பதால் அவர்களும மெளலித் ஓதியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நீ பின்பற்றுகின்ற இந்திய முஜத்தித் திருக்குர்ஆன் ஓதுகிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. அவர் ஓதியிருந்தால் அவரும் மௌலித் ஓதியுள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த விளக்கத்தின் படி மௌலித் ஓதுதல் நபீ ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் செய்ததே தவிர அது “பித்அத்” இல்லை என்பதைப் புரிந்து கொள். 
 
மூதேவி: நீ சொல்லும் விபரம் யாவும் “மௌலித்” என்பதற்கு நீ சொன்ன விளக்கத்தையும் வரைவிலக்கணத்தையும் தழுவியதாகவே இருக்கிறது. உன்னுடைய விளக்கத்தை விட்டுவிடுவோம். பொதுவாக “மௌலித்”என்பது நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டதென்ற அடிப்படையில் அது“பித்அத்”ஆகாதா? 
 
சீதேவி: நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்ட யாவும் “பித்அத்”என்பது உண்மைதான். ஆனால் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று முடிவு செய்வதே பிழையானது. 
 
மூதேவி: நபீ ஸல் அவர்கள் “குல்லு பித்அத்தின் ழலாலதுன்” பித்அத் எல்லாம் வழிகேடென்று தெளிவாகச் சொல்லியிருக்க நீ அதற்கு மாறாக “பித்அத்” எல்லாம் வழிகேடென்று முடிவு செய்வது பிழை என்று சொல்கிறாயே! இது நபீ ஸல் அவர்களின் பேச்சுக்கு முரணானதல்லவா? அவர்களின் பேச்சு பிழையாகுமா? 
 
சீதேவி: நான் சொன்னது நபீ ஸல் அவர்களின்பேச்சுக்கு முமரணானதுமல்ல. அவர்களின் பேச்சு பிழையானுதுமல்ல. ஆனால் “பித்அத்” எல்லாம் வழிகேடென்ற நபீ ஸல் அவர்களின் ஆழமான நாகரீகமான பேச்சை நீ சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். 
 
மூதேவி: நீ என்ன சொல்கிறாய்? சற்று விளக்கமாகக் கூறு பார்க்கலாம். 
 
சீதேவி: நீ சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் இஸ்லாமிய அகீதஹ் கொள்கைக்கு முரணான பல ஆட்சேபனைகள் ஏற்படும். அவற்றை எவ்வாறு சமாளிப்பது? அவற்றுக்கு எவ்வாறு விடை சொல்வது.? 
 
ஒன்று – நபீ ஸல் அவர்களின் தோழர்களிற் பலர் வழிகேடர்களென்று கொள்ள வேண்டி வரும். இது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணானது. நபீ ஸல் அவர்களின் தோழர்கள் யாவரும் நேர் வழி பெற்ற நல்லடியார்களாவர். இதுவே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையாகும். நீ சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று கொண்டால் நபீ தோழர்களிற் பலர் வழிகேடர்களென்று கொள்ள வேண்டிவரும். (அல்லாஹ் என்னையும் உன்னையும் காப்பாற்றுவானாக!) நபீ ஸல் அவர்கள் செய்யாத பல விடயங்கள் அவர்களின் தோழர்கள் செய்துள்ளார்கள். அவற்றின் விபரம் பின்னால் சொல்வேன். 
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي 
 
எனது வழிமுறையையும், எனக்குப் பின்னுள்ள நல்வழிபெற்ற கலீபஹ்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். – பின்பற்றுங்கள் என்று நபீ ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள். இக்கூற்றிலிருந்து நபீ தோழர்கள் நபீ ஸல் அவர்கள் செய்யாத பல விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பது புலனாகிறது. ஏனெனில் நபீ ஸல் அவர்கள் செய்ததையே தோழர்களும் செய்திருந்தால் எனது வழி முறைகயைப் பின்பற்றுங்கள் என்று மட்டும் சொல்லியிருப்பார்கள். எனக்குப் பின்னுள்ள கலீபஹ்களின் வழி முறையையும் பின்பற்றுங்கள் என்று சொல்லியிருக்கமாட்டார்கள். மேற்கண்ட நபீ மொழியை இலக்கண இலக்கியத்தோடு ஆய்வு செய்தால் இவ்வுண்மை தெளிவாகும். 
 
எனவே நபீ தோழர்களும் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி “பித்அத்” செய்துள்ளார்களாயாகையால் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று கொள்ளும் போது நபீ தோழர்களும் வழிகேடர்களென்று கொள்ள வேண்டி வரும். இது இஸ்லாமிய அகீதஹ் – கொள்கைக்கு முரணானது. இது முதலாவது ஆட்சேபனை. 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments